ம்.. பிறக்கும்போது மூணரை கிலோ, அப்பவே உன்ன விட வெயிட்டு கம்மி 51 cm ல இருந்தாராம்.ரெண்டாவது பையன். அடுத்ததாவது பொண்ணா பிறக்காதான்னு ஏங்கி பஞ்ச பாண்டவர்கள பெத்து போட்டதுதான் மிச்சம்னு அத்தையம்மா இப்பவும் சொல்லி கவலைப்படுவாங்க. இவர் ரெண்டாவது. பெரியண்ணா சின்ன வயசிலேயே வெளிநாடு போக வேண்டிய நிர்ப்பந்தம். மாமாவ காலன் பறிச்சுக்கிட்டான். பதினேழாவது வயசில அம்மா தம்பீங்க இவர் பொறுப்பில. அத்தையம்மா இழப்பில இருந்து மீண்டு வரும் வரைக்கும் முழுப் பொறுப்பும் இவர்தான். தம்பீங்க மூணு பேரும் இன்னைக்கும் சின்னண்ணன் கிட்ட கலந்து பேசித்தான் எதையும் செய்வாங்க. மாமியார் கிட்ட இவர் பேச்சுத்தான் எப்பவுமே எடுபடும். எப்பிடியாவது அவங்கள சமாளிச்சு தன் காரியத்த சாதிச்சுக்குவார்.
கிரிக்கட், ஃபுட்பால், வாலிபால் விளையாடுறதில புலி சிங்கம் ரேஞ்சு. இப்போ கூட யாராவது ஒண்ணு ஃபோன்ல டேய் மச்சான் நீ அந்த மாச்ல அடிச்சியே ஒரு சிக்சர்னு மலரும் நினைவுகள் பேசும். இங்க கிரிக்கட் கிடையாதுங்கிரதால மத்தது ரெண்டும் தொடருது. அதிலேம் ஃபுட்பால் முதல் பொண்டாட்டி லெவலுக்கு போய்டிச்சு.
வேட்டைப் பிரியர். ஒரு தடவை வேட்டைக்கு போன இடத்தில பாம்பு கூட கடிச்சிருக்கு. தான் நினைச்சத செய்து முடிச்சிட்டு தான் அடுத்த வேலை. மனசுல பட்டத மறைக்காம பேசுறதால கொஞ்சம் தலைக்கனம்னு சொல்வாங்க.
நல்ல வேளை சிக்ஸ் பாக் அளவுக்கு போகலேன்னாலும் வெயிட் கிலோ இல்ல கிராம் அளவுக்கு கூட ஏற விடமாட்டார். அண்ணனும் தம்பீங்களும் கொஞ்சம் புஷ்டியா இருப்பாங்களா போட்டு கடிச்சு குதறிடுவார். இந்த சம்மர்ல லண்டன் போறத்துக்கு ஒரு மாதம் முன்னாடியே கடைசி தம்பி சொன்னார் அண்ணி என்னவாவது பண்ணி வரும்போது சின்னண்ணா வெயிட்ட கொஞ்சம் ஏத்திடுங்கன்னு.
சரியான மொக்கைசாமி. இவர் இருக்கிற இடத்தில மொக்கையும் சிரிப்பும் கொடி கட்டிப் பறக்கும். பேச்சால சட்னு அடுத்தவங்கள இம்ப்ரெஸ் பண்ணிடுவார். குறிப்பா எதிர்ப்பாலார.. கடலை மன்னன். அதனால மத்தவங்க மட்டுமில்ல நானும் பொறுக்கீன்னு சொல்லி இருக்கேன். பின்ன என்னங்க. சும்மாவே ஊருக்குள்ள சேத்து வச்சு பேசி கிண்டல் பண்ணுவாங்க. இவர் வேற ரோட்ல எதிர்ல பைக்ல வந்தா சைக்கிள்ள போற எனக்கு ஹாரன் அடிக்கிறது, எங்க வீட்டுக்காங்கிறது, ஊருக்கே கேக்கிறா மாதிரி சத்தமா அண்ணன ரெடியா இருக்க சொல்லுங்க இதோ அஞ்சு நிமிஷத்தில வந்திடறேன் ஊர் சுத்தப் போணும்னு ஏய் அவர் விளையாட போணும்னு சொல்வார்டி... யார் இல்லேன்னா ஆறு மணி விளையாட்டுக்கு நாலு மணிக்கே கிளம்பி மூணு பேர கூட்டு சேத்துக்கிட்டு ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்களாம்? ஊரோட இந்த கோடீலேர்ந்து அந்த கோடி வரைக்கும் ஒரு ரவுண்டு வருவாங்கல்ல. மனச்சாட்சியே மனச்சாட்சி இல்லாம பேச கூடாது சொல்லிட்டேன் முட்டு சந்தில உக்காந்து கிட்டே சவுண்டு குடுக்கிறதுன்னு கொலைவெறி ஆக்கிட்டார். ஒருநாள் வந்த கோவத்தில நேரா அம்மா கிட்ட வந்து ஏம்மா இந்த மாமனார் பேர சொல்லி அங்கிளோட பொறுக்கி அடங்கவே மாட்டுதான்னு ஒரே கத்தல். இப்போ கூட எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. நீ கொட்ற குப்பைய 'பொறுக்கி' எடுக்கப் போறாருன்னு சரியா சொல்லி இருக்கேன்னு.
கோவம் வந்துதுன்னு வச்சுக்குங்க.. அது யாரா இருந்தாலும் நோ எக்ஸ்கியூஸ்... ஊர்ல எனக்கு தெரிஞ்சு ஒரு எட்டு பத்து பேர், இங்க ஒரு நாலஞ்சு பேர்னு இன மத நிற வேறுபாடில்லாம 'கவனிக்கப்பட்டிருக்காங்க'. அதனால மத்தவங்க லைட்டா ரவுடியாட்டம் பாப்பாங்க.
ஒரு இடத்தில சும்மா உக்காந்து இருக்கிறது மட்டும் இவரால முடியாது. லீவ் நாள்ல கூட டான்னு ஆறு மணிக்கு எழுந்து நின்னு எங்க கிட்ட திட்டு வாங்குவார். அதிலையும் பேசாம இருக்கிறது முடியவே முடியாது.
என்னதான் கோவம் வந்தாலும் அத சாப்பாடு மேல காட்றது மட்டும் பிடிக்கவே பிடிக்காது. சாப்பாடு இன்னதுதான் வேணும்னு இல்ல. எண்ணை கம்மியா, தேங்காய் சேர்க்காததுன்னா சரி. ஸ்வீட் பிடிக்காது. white chocolate கொஞ்சம் பிடிக்கும். பிடிக்காத ஒண்ண யாருக்காகவும் செய்ய மாட்டார்.
எப்பவும் கலகலன்னு இருக்கிறவர் சோகமா இருக்கார்னா ஒண்ணு Manchester United இல்ல Brann ங்கிற லோகல் டீம் மாச்ல தோத்திடுச்சுனு அர்த்தம். இசை ஈடுபாடு அவருக்கு இல்லைங்கிரதால பாட்டெல்லாம் போடல.
என் கண்ணாளன் இன்னைக்கு போலவே என்னைக்கும் சந்தோஷமா வாழணும்னு என் அப்பன் விநாயகன வேண்டிக்கிறேன்.
அப்டியே அவருக்காக ரெண்டு க்ளப் படம்ஸ்.... இப்போ ஓக்கேவாப்பா ??? அப்பா.. பாருங்க இப்போதான் சிரிக்கிறார்.