Pages

  • RSS

22 December, 2009

ஹைய்.. ஜாலி..

மார்கழி மாசம் வந்தாலே நத்தார் கொண்டாட்டம் எல்லார் வீட்லையும் களை கட்ட ஆரம்பிச்சிடும். வீட்டுல இண்டு இடுக்கு விடாம அலங்காரம் தூள் பறக்கும். இந்த வருஷம் white christmas வந்ததுல இங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. தேவைக்கு அதிகமாவே ஸ்னோ கு....விஞ்சு போய் கிடக்கு. இந்த ஸ்னோ இருக்கே அது ஒரு அழகான ஆபத்துங்க. போக்குவரத்துக்கு ரெம்ப தொல்லை பண்ணும். நடந்து போறவங்களும் ஸ்னோல வழுக்கி விழுந்து கைய கால உடைச்சுக்குவாங்க. நான் லீவுங்கிறதால பத்ரமா வீட்டுக்குள்ள இருக்கேன். என் கண்ணன தொல்லை பண்ணிக்கிட்டு.

எல்லோரும் எந்த வித இன மத நிற வேறுபாடும் இல்லாம வாழ்த்துக்கள் சொல்லிக்குவோம். பசங்களுக்காகவே நாங்களும் கிறிஸ்துமஸ் தடபுடலா கொண்டாடுவோம். திசம்பர் முதலாம் தேதிலேர்ந்து நத்தார் தினமான 25 ம் தேதி வரைக்கும் காலண்டர் கிஃப்ட்னு தினமும் காலேல பசங்களுக்கு குடுக்கணும். அத விட ஸ்பெஷல் கிஃப்ட் ஒண்ணும் வாங்கி வச்சிக்கணும். சரியா 24 ம் தேதி நள்ளிரவு பனிரண்டு மணிக்கு பரிசு பிரிச்சு மேயும் படலம் ஆரம்பமாகும். அத்தோட அன்பர்கள், ஆதரவாளர்கள் குடுக்கிற கிஃப்ட்டுகளும் கில்லி ஆடப்படும். (ஆஹா..நம்ம விஜய். சூப்பர்டி சுசி) ஆனந்த கூச்சல், ஏமாற்றம், பொறாமை, சில சமயம் அழுகைன்னு கிடைக்கிற பரிசுகளுக்கு ஏற்ப விதவிதமான பாவனைகள் வெளிப்படும். என்ன கிஃப்ட் வேணும் உங்களுக்குன்னு கேக்கவே தேவை இல்லை. இங்க இருந்து உங்கூர் நீளத்துக்கு ஒரு 'குட்டி' லிஸ்ட் எழுதி வச்சிருப்பாங்க.

வீட்டுக்குள்ள தேராட்டம் ஒரு கிரிஸ்த்மஸ் மரத்த அலங்காரம் பண்ணி அது கீழ அத்தன பரிசுகளையும் அடுக்கி வச்சுடுவோம். அடிக்கடி தங்களோட பங்கு சரியா இருக்கான்னு செக்கிங் வேற நடக்கும். அப்பப்போ ஏன் நாம முன்னாடியே பிரிச்சு பாக்க கூடாது. அது ஒண்ணும் தெய்வ குத்தம் கிடையாதேன்னு கேள்வி வேற. நாங்க வந்ததிலேர்ந்து பழகற, கொஞ்சம் க்ளோசா பழகற ரெண்டு நண்பர்கள் குடும்பங்கள் சேர்ந்துக்குவோம். வருஷத்துக்கு ஒருத்தர் வீட்ல ஒண்ணு கூடுவோம். ட்ரடிஷனல் நார்வேஜியன் சாப்பாடுகள், நம்மூர் சாப்பாடுகள் ரெண்டையும் கலந்து..கட்டுவோம். ரெண்டு நாளைக்கு எல்லாருமா ஒரே வீட்ல தங்கி செம ஜாலியா இருக்கும். இந்த வருஷம் ஒரு நண்பர் வீட்ல. நீங்களும் தாராளமா வந்து கலந்துக்கலாம்.

உங்க அனைவருக்கும் என்னோட இனிய நத்தார் வாழ்த்துக்கள். அப்டியே எங்க வீட்டு பால்கனில இருந்து நான் போட்டா புடிச்ச இயற்கை காட்சிகள் சிலத போட்டிருக்கேன் பாத்து ரசிச்சு மகிழுங்க. அப்டியே நத்தார் பரிசுகளையும் மறக்..காம அனுப்பி வச்சிடுங்க.

ரொம்ப எதிர்பார்ப்போட இருந்த, ஆவலோட பார்த்துட்டு இருந்த, ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருந்த இன்னும் சிலபல இருந்தவான.. ஒரு விஷயம் இன்னைக்கு நிறைவேறப் போது. அதனால உங்கள வபோ கஷ்டப்படுத்த மனசு வர்ல. குட்டியா முடிச்சுக்கிறேன். சந்தோஷம்தானுங்களே.. வரட்டுங்களா..



15 December, 2009

திசம்பர் 10.

திசம்பர் 10.
என் வாழ்க்கேல ரெண்டு முக்கிய, மறக்க முடியாத நிகழ்வுகள நடத்திய நாள்.


எனக்கு டைரி எழுதுற பழக்கம் (இப்பவும்) இருந்திருந்தா திசம்பர் பத்து அன்னிக்கு இப்டி எழுதி இருந்திருப்பேன். ஒண்ண சொன்னேன்னா என் கண்ணன் கோச்சுக்குவான். சோ.. இன்னொண்ண மட்டும் சொல்றேன்.


திசம்பர் பத்தோட சரியா ரெண்டு வருஷமாச்சு நான் வேலைக்கு சேர்ந்து. என் திறமைக்கும்(?) அவங்க பொறுமைக்கும்(!) இடையில ரெண்டு வருஷம் எப்டி போச்சுன்னு தெரீலிங்க. இப்போ ரெண்டு வாரம் லீவ் எனக்கு. உண்மைய சொல்லணும்னா வெள்ளி வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர மனசே வரல. வேலைக்குப் போம்போது எப்படா லீவ் கிடைக்கும்னு இருக்கும். லீவுன்னு வந்ததும் லைட்டா ஒரு ஃபீலிங் எட்டிப் பாக்கத்தான் செய்யுது. இனி கொஞ்ச நாள் இங்க வர முடியாதேன்னு. என் டெஸ்க்ல வச்சிருக்கிற ஆர்கிட்டுக்கெல்லாம் (ஆர்குட் இல்லப்பா) டாட்டா  சொல்லி  பத்ரமா பாத்துக்க சொல்லி ஒரு கலீக்  கிட்ட  பொறுப்பு  குடுத்திருக்கேன்.


ஒருத்தங்க லீவ்ல போராங்கன்னாவே என்னமோ நாமளே லீவ்ல போறா மாதிரி இருக்கும். இன்னும் எத்தனை நாள்ல உனக்கு லீவுன்னு தினமும் நாட்களை எண்ணிக் கிட்டே இருப்போம். இனிமே கிறிஸ்துமஸ் முடிஞ்சுதான் ஆபீஸ் போவேங்கிரதால கலீக்ஸ்  அன்ப கொஞ்சம் அதிகமாவே  காமிச்சாங்க. பல் வலின்னு போனவளுக்கு டென்டிஸ்ட் கண்ட மேனிக்கு ஊசிய குத்தி ட்ரீட்மென்ட் செஞ்சதில கன்னம் வீங்கி செம  வலி. அதையும் மறந்து ஆ கோ ல அதே கன்னத்தில இறுக்கி முத்தம்  குடுத்துட்டு  சாரி சொல்லி அப்பாவியா அவங்க முழிச்சப்போ வலி மறந்து சிரிக்க  ஆரம்பிச்சிட்டேன். (பட்ட கால்ல மட்டும் படாதோ? பழமொழிய மாத்த  சொல்லணும்)  அதோட  சிலபல பறக்கும் முத்தங்கள், அணைப்புகள்னு எனக்கு மட்டும் இல்லாம கண்ணாளன் + பசங்களுக்கும் குடுக்க சொல்லி கிடைச்சுது. அப்டியே கிரிஸ்த்மஸ் பரிசு  பரிமாற்றங்களும். 


முதல்ல ட்ரெய்னியா ஆபீசுக்குள்ள ரைட் லெக்க வச்சப்போ  நல்லாவே  கககாவி மாதிரி இருந்திச்சு. எங்க ரூம விட்டு வெளிய வந்தா மறுபடி போக தெரியாம  சுத்தி   சுத்தி வந்திருக்கேன். எல்லா ரூமையும் ஒ..ரே ப்ளான்ல கட்டி வச்சிருக்குதுங்க.   (இப்போ புதுசா வர்றவங்களுக்கு நான் வழிகாட்டி).  அதிலயும் என் நிறப் பிரச்சனை சிலரால இன்னமும் ஒத்துக்க முடியாத ஒண்ணு. (அதுக்குன்னு நாம சிவாஜி ரஜினி சார் மாதிரியா   பண்ண  முடியும்)  பாக்க பிடிக்கலேன்னா அது அவங்க பிரச்சனை இல்லையா. எங்க டிபார்ட்மெண்டுக்கு  இண்டர்நஷனல் டிபார்ட்மெண்டுன்னு செல்லப் பேரு. எங்க ஏழு பேர்ல ரெண்டு பேர்தான் நார்வேஜியன்ஸ். மீதி அஞ்சு பேரும் அஞ்சு நாட்டுக்காரங்க. ஜெர்மன், சிலி, சவுத் ஆபிரிக்கா, செச்சீனியான்னு மத்தவங்களுக்கு  ஒன்லி  இனப்  பிரச்சனைதான். நமக்குதான் இனம் + நிறம்.


குடுக்கிற வேலைய ஒழுங்கா செய்றவ, சிரிச்ச முகத்தோட(?) வளைய வர்றவ, பழக இனிமையானவ, அன்பானவ, கலர் கலரா டிரஸ் பண்ணி  அதுக்கு பொருத்தமா  ஆக்சசரீஸ் போடரவ, என்னதான் நாட்டுக்கேத்தா மாதிரி இருந்தாலும் தான் வளர்ந்த விதம் மறக்காம தன்னோட எல்லை எதுன்னு தெரிஞ்சவ இப்டி  நிறையா சொல்லி இருக்காங்க கலீக்ஸ் என்னப் பத்தி (ம்க்கும். படிக்கிறவங்க இங்க வரமாட்டாங்கங்கிற தைரியம்.. நடத்து நடத்து)  எல்லாத்துக்கும் மேல என் கோபத்த இதுவரை யாரும் பாக்கலையாம் (நல்லவேளை.மனசுக்குள்ள கெ.வா லாம் சொல்லி திட்டுறது  யாருக்கும் கேக்கல சாமியோவ்) இதாவது தேவலைங்க சமயத்துல ஏன் உன் கன்னம் திடீர்னு சிவந்திருக்குன்னு கேட்டு ஒரு வழி பண்ணிடுவாங்க. அதுக்கு காரணம் என் கண்ணன்னு எப்பூடி சொல்வேன்.. அவ்வ்வ்..


சில பதிவுகள,  கமன்ட்ஸ  படிச்சிட்டு டங்குன்னு தலைய டெஸ்க்ல மோதும்போதும் (என் பதிவ எழுதுறதோட சரி, நான் அத மறுபடி படிக்கிறதில்ல. சோ.. அவசரப்பட்டு கமன்ட ரெடியாக வேண்டாம்) லைட்டா ஃபீலாகி உக்காந்திருக்கும்போதும், கெக்கேபிக்கேன்னு சிரிக்கும்போதும் கொஞ்சம் இல்ல நல்லாவே மிரண்டு போயிடறாங்க. அப்புறம் சாரி சொல்லி விஷயத்த விளக்க வேண்டியதாயிடுது. நெட்ல மேயிறத்துக்கு சம்பளம் குடுக்கல பரவால்ல. ஆனா இப்டி ட்ரான்ஸ்லேஷன்லாம் செஞ்சு விளக்கம் குடுக்கிறதுக்கு எதுனா தரணும் இல்ல? அடுத்த PDD ல பேசணும்.. மறக்காம.


மொத்தத்தில ரொம்ப நல்ல ஆபீஸ், திருப்தியான வேலை, அன்பான கலீக்ஸ். இவளுக்கு போயி இங்க வேலையான்னு நம்ம மக்களிடையே பொறாமை வர்ற அளவுக்கு ஆகிப்போச்சு. குறிப்பா கண்ணாளன். 09:00 - 14:00 தவிர மீதி நேரம் என் இஷ்டத்துக்கு போய் வர்றது, நினைச்சதும் மட்டம் போடுறது, ஜன்னலோரம்  உக்காந்து  தெருவ  வேடிக்கை  பாக்குறது (ஏங்க ஜன்னலாண்டை என் டெஸ்க்  இருந்தா  அப்பப்போ வெளிய என்ன நடக்குதுன்னு பாத்து பொது  அறிவ  வளர்க்கிறதும்   தப்புங்களா?)  மூணும் அவர கடுப்பேத்துற விஷயங்கள்ல அடங்கும்.


கடவுள் அருளால எந்த பிரச்சனையும் எனக்கோ, என் ஆபீசுக்கோ வரலேன்னா தொடர்ந்து அங்கனவே குப்பைய கொட்டலாம்னு முடிவு பண்ணிட்டேங்க. ஏன் ஆணி புடுங்கலாம்னு சொல்லலைன்னு பாக்கறீங்களா? அதாம்பா ஆபீசும், கலீக்சும்  என் குடும்பம் மாதிரி ஆயிடிச்சுன்னு ஜிம்பலக்கடியா சொல்றேன்.
வரட்டுங்களா.. 

06 December, 2009

அம்மாவாய் எனக்கு ஒரு தோழி..

சிட்டுக்குருவியாய்  சிறகடித்துப் பறந்தாள்  பதினைந்து வயது வரை ஒரு சின்னப் பெண். முதல் காதல் கை கோர்க்க ஊரைச் சுற்றியது அந்த அழகு தேவதை பதினெட்டு வயது வரை.  பெற்றவரால் நடாத்தப்பட்ட கட்டாயக் கல்யாணம். கைவிரலில் மோதிரத்தோடு  கால்களிலும்  சங்கிலியை  மாட்டினான் கணவன். அடுத்தடுத்து இரண்டு பிள்ளைச் செல்வங்கள், ஆணொன்றும்   பெண்ணொன்றுமாய். சிறிதளவேனும் வாழ்வில் பிடிப்பு வந்ததே அதன்பின்தான். ஆனாலும் சித்ரவதைகள் குறையவில்லை. பொறுத்துக் கொள்ள முடியாத எல்லையை அடைந்த பின்னர் தோழியின் உதவியோடு நாட்டை விட்டே வெளியேறினாள்.

அயராத உழைப்பு + தன்னம்பிக்கையால் பிள்ளைகளுக்கு நல்ல நிலையைக் கொடுத்து தனக்கும் ஒரு துணையை தேடிக் கொண்டாள். துணைக்கு வந்தவன் தொல்லை செய்ய ஆரம்பித்தான் சுயநலமாய். அவ்வப்போது பத்திரங்கள் நீட்டப்பட்டன, முடிவு செய் நானா பிள்ளைகளா என்ற கேள்வியுடன். ஒவொரு தடவையும் ஒப்பமிட்டு முகத்தில் எறிவாள். மிரட்டமட்டுமே தெரிந்தவன் மறுபடி துணையாவான்.

மகனுக்கு வந்தது தொல்லை மருமகள் வடிவில். அவர்கள் சண்டை நாட்களில் பேரன் பாட்டி வீட்டில் தூங்க  ஆரம்பித்தான். பிள்ளை என்ற நூலால் கட்டப்பட்ட வாழ்க்கை தொடர்கிறது அவர்களிடையே. அறுந்து போகாமல் முடிச்சை இறுக்கிப் போடும் முழு முயற்சியில் இவள்.

இவளைப் போலவே தைரியசாலி மகள் என்ற இவளின் பெருமிதத்துக்கு இடியாய் அழுதபடி வந்தாள் மகள். எத்தனை சித்ரவதைகள் அனுபவித்திருக்கின்றது அந்த இருபத்து மூன்று வயதுப் பெண். எட்டு வயது முதல் ஒன்றாகப் படித்தவர்கள் வாழ்விலும் இணைந்து  கொண்டதற்கு அந்த மனிதமிருகம் கொடுத்த பரிசுகள் அத்தனையும்.  பிள்ளைகளுக்காக கொலையும் செய்ய தயங்கமாட்டாள் இவளென்று புரியாத அந்த மிருகம் கொலை மிரட்டல் விடுகிறது இவளுக்கே.

*************************************************
இது என்னோட ஒரு தோழியோட நிலை. அவங்க பேச்சுல எப்பவும் இருக்கிறது பிள்ளைங்க, பேரப் பிள்ளைங்கதான். அந்த மிருகம் தவிர அத்தனை பேரையும் நான் சந்திச்சிருக்கேன். ஒரு தடவை ஆபீஸ் பக்கத்தில இருக்கிற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல கண்ணில, கன்னத்தில வீக்கத்தோட அவங்க மகளை பாத்தேன். நான் என்னன்னு கேக்காமலே பல்வலின்னு சொன்னா. அவ்ளோ குட்டியா இருப்பாங்க. எப்டி மனசு வந்துது அந்த ராட்சஷனுக்கு. மனசால,உடலால எவ்ளவு சித்ரவதைகள அனுபவிச்சிருக்கா. இத்தனை வருஷமா ஒரு வார்த்தை கூட ஏன் சொல்லலைன்னு கேட்டத்துக்கு நீங்க அனுபவிக்கிறது போதும்மா. நானும் குடுக்க வேண்டாம்னு பாத்தேன். ஆனா இதுக்கு மேல என்னால முடியலம்மான்னு இவங்கள கட்டிக்கிட்டு அவ அழுதப்போ எப்டி வலிச்சிருக்கும் இவங்களுக்கு.. இந்த அம்மாவோட கண்ணீருக்கு கண்டிப்பா அந்த மிருகம் பதில் சொல்லி ஆகணும்ங்க.

எங்க ஆபீஸ்லையே ரொம்பத் தைரியமான பொண்ணுன்னு பேரெடுத்தவங்க பலசமயம் என்னால இதுக்கு மேல முடியலன்னு சொல்லி அழும்போது.. தனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குதுன்னு கேக்கும்போது.. அவ மனசுக்கு ஆறுதலா பேசி,  அழுகையும் சில சமயம் மனச இலகுவாக்கும்கிரதால கொஞ்சமா அழ விட்டு, அவ கண்ணீரைத் துடைச்சு, சிரிக்க வச்சுட்டுதான் அவ ரூம விட்டு மறுபடி என் இடத்துக்கு போவேன். இப்போ ஃப்ரீயா ஃபீல் பண்றேம்பா.. ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லி இறுக்கி  அணைச்சுக்குவா. கண்ணீரால கலைஞ்சு போன மேக்கப்ப சரி செஞ்சு, லிப்ஸ்டிக்கோட சிரிப்பையும் சேத்து பூசிக்கிட்டு அடுத்த நொடி அவ வேலை பாக்க ஆரம்பிக்கும்போது இவதானா கொஞ்சம் முன்னாடி அழுதான்னு மலைப்பா இருக்கும்.

அவ கிட்ட அவளோட மனத்திடம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சதே. என் உறவுகள நினைச்சு நான் தவிச்சப்போல்லாம் எனக்கு அவ்ளோ ஆறுதலும், நம்பிக்கையும் குடுத்தா. அவ பேரன்கள் ரெண்டு பேரும் என்கூட ஒட்டிக்கிட்டதில ரொம்ப சந்தோஷப்படுவா. மூணு வருஷம் முன்னாடி அவங்கள விட்டுப் போன அம்மா செஞ்சு குடுத்த ஷால் ஒண்ண அவங்க ஞாபகமா எனக்கு பிரசன்ட் பண்ணி இருக்கா.

ஒண்ணு மட்டும் சொல்றேன் சுசி, என் பொண்ண அவன் எதுனா பண்ணினான்னா அவன கொல்லவும் தயங்கமாட்டேன்னு சொல்லும்போது அவ கண்கள்ல கவலையையும் மீறி அப்டி ஒரு திடம் தெரியும்.  அப்டீல்லாம் ஆகாது, அவன் அந்தளவுக்கு போகமாட்டான்னு சொல்லி பேச்ச மாத்துவேன். அவன் இவங்களையும் நேர்லயும், ஃபோன்லையும் நிறைய தடவை மிரட்டி இருக்கான். என்னதான் போலீஸ், சட்டம்னு எல்லாம் பக்காவா இருந்தாலும் உயிருக்கு ஒண்ணு ஆனத்துக்கு அப்புறம் எதுவும் தேவை இல்லையே. அந்த அன்பான அம்மா நிம்மதியா இருக்கணும்னா பசங்க வாழ்க்கை சரி ஆகணும். பொண்ணோட மனசு சரியாகி எல்லா துன்பங்கள்ள இருந்தும் வெளிய வரணும். அதுக்காக எப்பவும் கடவுள வேண்டிக்குவேன்.

ஒருத்தங்களோட சந்தோஷத்தில இல்ல, துக்கத்தில பங்கெடுத்திக்கிறது தான் ரொம்ப பெரிய விஷயம்னு என் உயிர் நட்புகிட்ட  சொல்வேங்க. குட்டியா ஒரு அணைப்பு, கையில், தோளில்   சின்னதாய் ஓர் அழுத்தம், முதுகில் ஒரு வருடல், ஆறுதலாய் ரெண்டு வார்த்தை, புரிதலாய் ஒரு பார்வை.. இப்டி எத்தனையோ விதத்தில அடுத்தவங்க துக்கத்தில நாமளும்  பங்கெடுத்துக்கலாம்ங்க. செஞ்சு பாருங்க, அனுபவிச்சுப் பாருங்க.. நான் சொன்னது சரிதான்னு நீங்களும் சொல்வீங்க..
வரட்டுங்களா..

29 November, 2009

அடிப்பாவி....

நவம்பர் மாதம் வந்தாலே மனதில் ஒரு பாரம் தானாக வந்து அமர்ந்து விடும். இம் முறை வேறு விதமாக.

உங்கள் தியாகத்துக்கு ஈடாக
ஏதேனும் வார்த்தைகள் கிடைக்குமென்றால்
அவற்றால்
உங்கள் தியாகத்தை விபரிப்பேன்
மாவீரர்களே....

கார்த்திகை 27.....வழக்கம்போல் இல்லாமல் இம் முறை வீட்டிலேயே சரியாக மாலை ஆறு மணிக்கு இது வரை ஈழ மண்ணில் உயிர் நீத்த அத்தனை உறவுகளுக்காகவும் ஒற்றை மெழுகுவர்த்தியை ஏற்றி அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து கொண்டோம். இனிமேலாவது அங்கே சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டுமென்று மனதார வேண்டிக் கொள்ளவும்  தவறவில்லை. முட்டி மோதும் எண்ண அலைகளிலிருந்தும்,  அவை தரும் வலிகளிலிருந்தும் தப்பிக்க முடியாமல் நான். என்னை தேற்றுவதற்காக தன்னை காட்டிக் கொள்ளாத என் கண்ணாளன். அவர் வேலைக்கு புறப்பட்ட போது என் தைரியத்தையும் கூடவே கொண்டு போய் விட்டதாய் உணர்ந்தேன். பிள்ளைகளால் சிறிது நேரம் சிந்தனை திசை மாற்றப்பட்டது. உடைந்து போய் விடாமல் இருப்பதற்காக யாருடனும்  பேசப் பிடிக்கவில்லை. உயிர் நட்பைத் தவிர.

********************************************************************************

மறுபடியும் இங்க வெள்ளமுங்க. கண்ணன் கூட எல்லாம் சரி ஆனத்துக்கு அப்புறமும் வெள்ளத்துக்கு முழுக் காரணம் இயற்கை தான். என் பர்த்டேவுக்கு முதல் முறையா எனக்கு ஒரு கண்பானை கிஃப்டா வேணும்னு கேட்டிருந்தேன். அதுவும் பர்த்டேக்கு ரெண்டு வாரம் முன்னாடியே கேட்டாச்சு. இந்த வாரம்தான் கிடைச்சுது. ரெம்ப நாள் மூஞ்சிய உம்முன்னு வச்சுக்கிட்டு சுத்துறது பாக்கிற அவருக்கு மட்டுமில்லாம எனக்கும் கஷ்டமா இருந்தாலும் விடல நான்.  கடசீல மறந்துட்டாரோங்கிற முடிவுக்கு நான் வந்தப்போ குடுத்தார். இத்தனை நாள் கழிச்சா குடுப்பாங்க. "நானே போய் வாங்கிக்க தெரியாம இல்ல. எப்பவும் என்கூட இருக்கப் போறது. என் கண்ணாளன் ப்ரெசென்ட் பண்ணினதுன்னு கேக்குறவங்களுக்கு 'பெருமையா' சொல்லணும் இல்ல. அதான் உங்ககிட்ட கேட்டேன்"னேன். சொன்ன விதத்தில சிரிச்சாலும்  பாயிண்ட புரிஞ்சு கிட்டார். இதுவரை எனக்கு இன்ன  கிஃப்ட்தான்  வேணும்னு கேக்காத நான் அதிசயமா கேட்டதுனால பெஸ்டா குடுக்கணும்னு தேடி அலைஞ்சாராம் (?!)

*******************************************************************************

செவ்வாய் கிழமை ஆபீசுக்கு  நிமிஷத்துக்கு ஒரு ஃபோன் பண்ணி பொண்ணும் பையனும் மாறி மாறி  எப்போ வீட்டுக்கு வருவீங்கம்மான்னு கேட்டுட்டு இருந்தாங்க. கராஜ்ல கார விட்டதும் அப்டியே என்ன மடக்கி மூணாவது வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாங்க. குனியச் சொல்லி கண்ண வேற மூடியாச்சு. அங்க போய் பாத்தா அவங்க வீட்டு பசங்க கைல ஒரு குட்டி முயல். பிரவுன் கலர்ல. பேர் அமாண்டுஸ். அவ்ளோ ஸ்வீட்டா... என்னக் கேக்கணுமா? உடனவே ஃப்ரென்ட் ஆய்ட்டேன். புஸ்ஸு புஸ்ஸுன்னு கழுத்துக்குள்ள மூச்சு விட்டுக் கிட்டே என் தோள்ள படுத்திருப்பார். ஒவொரு தடவையும் கூட்டுக்குள்ள விடும்போது ஏனோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். பசங்க தங்களுக்கும் வேணும்னு ஒத்தக் கால்ல நின்னாங்க. அப்பாவுக்கு அலர்ஜிம்மான்னு சொன்னதும் அப்பாவுக்குத்தானே எங்களுக்கு இல்லையேன்னு சொன்ன பொண்ணு, அவ கேட்டத்துக்காக அமாண்டுஸ் கூட விளையாடின அப்பா நாள் பூரா நச்சு நச்சுன்னு தும்மலோட அவஸ்தைப் பட்டத பாத்ததும் இப்போ அவர வீட்டுக்கு கொண்டு வரத நிறுத்திட்டா. இப்டியே எல்லா விஷயங்களையும் பசங்க புரிஞ்சு கிட்டாங்கன்னா பெத்தவங்களுக்கு எவ்ளோ நல்லா இருக்கும்.... ஆனா வீட்டுக்குள்ளே ஒரு ஜீவன கூட்டுக்குள்ளே அடைச்சு வச்சிருக்கிறதா... என்னால முடியாதுப்பா.

********************************************************************************

கஸின் கூட ஃபோன்ல பேசிட்டிருந்தப்போ நீ பாதி நான் பாதி கண்ணா... பாட்டு கேட்டுது அவ வீட்டு ரேடியோல. ஹேய்... சூப்பர் பாட்டுடி. கேட்டு ரொம்ப நாளாச்சுன்னேன். ஏன்னு கேட்டா. இல்ல.. இப்டியான பாட்டுகள கேக்கும்போது பழைய காதல்களோட ஃபீலிங்க்ஸா போய்டுது. அதான்னேன். நீங்க வேற அந்த ஃபீலிங்க்ஸ்லாம் போய்டக் கூடாதேன்னுதான் நான் கேக்குறதேன்னா. அப்போ நான் அவளுக்கு சொன்னத இத படிச்சத்துக்கு அப்புறம் அவ எனக்கு சொல்லப் போறா.

அது என்னன்னு தெரிஞ்சிக்க உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் குடுக்கறேன். ஒண்ணு நீங்க மறுபடி தலைப்ப படிக்கணும்... டூவு நீங்க விவெல் சோப் ஆட் பாக்கணும். இதில்லாமலே நாங்க கண்டு பிடிச்சிட்டோமேன்னு  பொய்லாம்  பேசப் படாது. ஓக்கே...
வரட்டுங்களா....

22 November, 2009

(பாவ) மன்னிப்பு...

வணக்க்....கம் மக்களே.... நலமா?
போன பதிவு போட்டதிலேர்ந்து கொஞ்சம் ஓவராத்தான் அழுதிட்டேன் போல இருக்கு. என்கூட சேர்ந்து கிட்டு இயற்கையும் மழையா அழுது தீர்த்திடிச்சா... தெருவெங்கும் வெள்ளம்... போக்குவரத்து சிக்கல்... மழை ரெஸ்ட்ல போய்ட்டாலும் என் அழுகை நிக்கல. கண்ணன் கூட இன்னமும்... அவ்வ்வ்வ்.... அது ஒரு புறம்னா இன்னைக்கு நான் எழுதப் போற விஷயம் மறு புறம். என் பதிவுகள படிக்க வச்சு உங்கள கொடுமைப்படுத்தி, உங்க பொன்னான நேரத்தையும் மண்ணாக்கறேன் இல்ல... ரெம்ப உறுத்துதுங்க. ஏற்கனவே மனசு சோர்ந்து போயிருக்கிற நேரத்தில அழுகை பொங்குது... நான் பதிவு எழுத வந்த கதைய சொல்லி உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு உறுத்தலே இல்லாம கொடுமைய கண்டினியூ பண்றத்துக்கு அருமையான சர்ந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்த என் அன்புத் தம்பி கோபிநாத் உங்களுக்கு கோடி நன்றிகள். நல்லாருங்க தம்பி. ஏய் அடங்குடி... எதுக்கு இப்டி தலைய சுத்தி மூக்க தொடறே பாருங்க... ஒரு வித்யாசமான பில்டப்போட ஆரம்பிக்கலாம்னா .சா முறைக்குது. சரி வாங்க நாம கதைக்குள்ள குதிக்கலாம்.

எல்லாரையும் போலவே எனக்கும் ஃபார்வாட் மெயில் பண்ற ஒரு ஃப்ரெண்டு. அதில சிலபல பதிவுகளுக்கான லிங்கும் இருக்கும். பதிவுலகம் ரொம்ப பயங்கரமானதுங்கிற ஒரு தப்பான எண்ணத்தில நான் இருந்ததால டிலீட்ட அமுக்கிவிட்டுடுவேன். ஒரு நாள் ஃப்ரெண்டோட டார்ச்சர் ஒரு லிங்க போய் பாக்க வச்சிடுச்சு. அதுல பாருங்க கதவு வழியா ரைட் லெக்க வச்சு முறையா பதிவுலகத்துக்க போவேன்னு பாத்தா சாளரம் வழியா தொபுக்கடீர்னு உள்ள விழுந்துட்டேன். அதுதான் பதிவுலகம்னு மறுபடி தப்பா நினைச்சு அங்கனவே சுத்திகிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட எல்லா இடுகைகளும் படிச்சுட்டேன். அவ்வ்வ்வ்.... திடீர்னு ஒரு நாள் இவரெல்லாம் எழுதும்போது நாமளும் ஏன் எழுதக் கூடாதுன்னு (கார்க்கி நோ கோவம், பேசிக் கிட்டத விட இன்னும் போட்டுக் குடுத்திடுறேன். பீ கூல்... ஓகே..) தோணிச்சு. கம்பியூட்டர் கண்ணாம்பா + டெக்னிக்கல் தேனாம்பாவான நான் என்னதான் ரைமிங்கா இருந்தாலும் இப்டி ஒரு பேர் ரெம்ப ஓவருடி அதே ஃப்ரெண்டு துணையோட கொடுமைய ஆரம்பிச்சுட்டேன்.

என்ன எழுதலாம்னு ரொம்பல்லாம் யோசிக்கல. என்னப் பத்தி மட்டுமே எழுதுறதுன்னு உறுதியான முடிவோட இருந்தேன், இருக்கேன். அது தவிர விருதுகளுக்கு, வாழ்த்துக்களுக்குன்னு சிலது. அதையும் தவிர ஏகலைவியா என் குருநாதர் கார்க்கிக்கு குருதட்சணையா சில (டேமேஜ்) பதிவுகள். அம்புட்டுதேன். விவாதங்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள்னு என் அறிவுக்கு சம்பந்தமில்லாத எதையும் எழுத மாட்டேங்க. நானே என் இடுகைகள மறுபடி படிக்கிரதில்லேங்கிரப்போ உங்கள எக் காரணம் கொண்டும் என்னோட பழைய பதிவுகள படிச்சிடாதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிறேன்.

தமிழ்ல எழுதுறத்துக்கு google.com/transliterate/indic/Tamil பாவிக்கிறேன். இப்போ இன்னொரு ஃப்ரெண்டு கிட்ட ஈகலப்பைய வாங்கி வச்சிருக்கேன். இன்னும் சரியா அதில உழவு ஆரம்பிக்கல.

பதிவுலகத்துக்குள்ள வரு முன்னர் நான் இருந்த மனநிலை.... என்ன யார்னே தெரியாத ஒரு இடத்தில போய் ஒளிஞ்சுக்க மாட்டோமான்னு நான் நினைச்சது மனசளவில கை கூடியிருக்கு. உன்னைய ஒரு கிரிமினல் ரேஞ்சுக்கு அவங்க நினைக்கப் போறது உறுதி என் மனதுக்கு இதமாய், என்னை திசை திருப்பி ஒரு புது உலகுக்குள்ள கொண்டு போய் விட்ட பதிவுகள் எத்தனை.... என்னை பார்த்திராத, என் கூட பேசியிராத எத்தனை நண்பர்கள் என் கூட இப்போ... என்னமோ ரொம்ப நாளா பழகின மாதிரி ஒரு உணர்வு. இத்தனை நாளா இப்டியான உறவுகள இழந்திட்டு இருந்திருக்கேனேன்னு நிஜமான கவலை. ஒவொருத்தர் பதிவ படிக்கும்போதும் அவங்க திறமைய பார்த்து அப்டி வியந்து போவேன். பதிவர்களுக்குள்ள இந்த நட்பும் ஒற்றுமையும் என்னைக்கும் நிலைச்சு இருக்கணும்னு என்னை அறியாமலே வேண்டிக்கிற அளவுக்கு பதிவுலகம் என்னை மாத்திடிச்சு. என்றாவது ஒருநாள் உங்களில் யாரையாவது நான் நேரில் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. அவங்களுக்கு இந்தக் கொடுமை வேறயா???

அப்புறம் என்னங்க.. என்னையும் மதிச்சு தொடர் பதிவுகளுக்கு கூப்ட, விருதுகள் வழங்கிய, என்னை பின் தொடர்கின்ற அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றிகள். உங்க யாரையாவது என் பதிவுகள் மூலமா, என் பின்னூட்டங்கள் மூலமா நான் காயப்படுத்தி இருந்தா மன்னிச்சுக்குங்க. இப்போ மாதிரியே எப்பவும் என் கொடுமைய பொறுத்துக் கிட்டு என் கூட நண்பர்களா இருங்க. என்னோட பதிவ படிக்கிற அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்போ நான் இத தொடர்ந்து கொண்டு போறத்துக்கு கூப்பிட போறவங்க இவங்கதான்.

தியாவின் பேனா பேசுகிறது...
பார்த்ததும் படித்ததும் சங்கர்.
பிரியமுடன்......வசந்த்
பித்தனின் வாக்கு சுதாண்ணா.
எடக்கு மடக்கு R.கோபி.
வடலூரான் கலை.
இது என்னோட இடம். தமிழ்பிரியன்.
சொல்லரசன்
சந்ருவின் பக்கம்

பத்து பேருக்குமான சிறு குறிப்பு :- நீங்க முன்னாடியே உங்க கதைய எழுதி நான் அத படிக்காம மிஸ் பண்ணி இருந்தேன்னா கமன்ட்ல கும்மிடுங்க... வரட்டுங்களா...

15 November, 2009

வரலேன்னா குறிச்சிடு...

எல்லாரும் எப்டி இருக்கீங்க? நலம்தானே? நாங்களும் நலம்.

எனக்கும் கவிதை எழுதணும்னு ஆசை வந்திடுச்சுங்க... ஹிஹிஹி... சும்மா... லுல்லுல்லாயிக்கு.... எழுதல. வந்தாதானே... ஆனா நான் படிச்சதில பிடிச்ச சில பல கவிதைகள உடனவே குறிச்சு வச்சுக்குவேன். அதில சிலத இன்னைக்கு எழுதுறேன். படிச்சு அத எழுதினவங்களுக்கு ஒரு சபாஷ போட்டிடுங்க. (சட்டப் பிரச்சனைகளுக்கு முகம் குடுக்க பயந்ததால எழுதினவங்க பெயர்கள் உரு மறைப்பு செய்யப்பட்டுள்ளன) உங்கள படிக்க வச்ச எனக்கு??? வேற என்ன? கமன்ட்தான்.

சொல்ல நினைத்தபோதெல்லாம்
பேச
வாய்த்ததில்லை.
பேசக்
கிடைத்த சில நொடிக்குள்
சொல்லாமல் விட்டதே அதிகம்.
பேசாத சொற்களின் அடுக்கில்
மலையென வளர்கிறது
அன்பு!

வேகக்காற்று
கண்கள் மூடி
முகம் பொத்தி
வெட்கம் கொள்கிறேன்
ஒட்டிக் கொண்ட மணற்துகளாக
நீயனுப்பிய
முத்தங்கள்!

உன்னால் அடைந்த
சந்தோஷங்களுக்கு பதிலாக
எதையுமே தர முடியாத ஏக்கங்களில்
ஆழ வேரூன்றிப் படர்கிறது
அன்பு!

எனக்குள் அடைபடாமல்
வானம் அளக்கும் சுதந்திரம் தந்து
மிகச்சிறிய இதயத்தில்
நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
சிறு ஒளியாக
மிதந்தலைகிறது
அன்பு!

இந்தக் கவிதை படிச்சதும் எனக்கு பிடிச்சிருந்தாலும் ஒரு விஷயம் உடன்பாடில்லை. அன்பான ஒருவர் கொடுக்கும் முத்தம் எப்டி முகத்தில ஒட்டிக்கிற மணற்துகளா ஆகும்? பூவிதழ் பட்டாப்புல, மயிலிறகால வருடினாப்ல இப்டி எதுனா இருந்திருக்கலாமோ???

உன் நினைவுகளில் இருந்து
விடுதலை என்பது
கிடைக்காதா எனக்கென்று
அப்போதும் உன்னையே
நினைக்கிறது என் மனம்.

உன்னால் என் மனதில்
மொட்டவிழ்ந்த பூக்களையெல்லாம்
வாடாமல் வைத்திருக்க
வழியொன்று கண்டு கொண்டேன்

நீ என்னை தவிர்த்து விலகி
தவிக்க விடும் தருணமெல்லாம்
தவறாமல்
தனிமையில்
அழுகின்றேன் கண்ணா..

கண்ணீர்ப் பூக்களாம் தாம்
அவை
பெருமையாய்
சொல்லிக் கொள்கின்றன.

அவங்க கண்ணன் அவங்கள தவிக்க விடக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்.சரிதானுங்களே?

'நீயும் நானும்
ஒண்ணுன்னு சொன்னேன்'
சொன்னவன் நீதானே?
இல்லாத ஒன்றை
உறுத்தலின்றி சொல்ல
எப்படி முடிந்தது உன்னால்??

ஒதுங்கி நீ போக நினைக்கும் வரை
ஒப்பவில்லை என் மனது
ஒன்று என்பதற்கு அர்த்தங்கள் பல என்று!

வேடிக்கையாய் நீயும்
வேதனையில் நானும்
புரிந்து கொள்ளாத நீயும்
புரிதலுக்காய் ஏங்கும் நானும்
தவிர்ப்பதிலே நீயும்
தவித்தபடி நானும்
ஒன்றென்பது இதில்
எங்கிருந்து வந்தது?

நீயும் நானும் ஒன்றுதான்
ஒன்றில் மட்டும்
என்னை ஏமாற்றுவதில் நீயும்
என்னையே ஏமாற்றுவதில் நானும்.

அவ்வ்வ்வ்... அழுகாச்சியா வருது. ஒதுங்கறாங்கன்னு தெரிஞ்சா பிடிக்கலேன்னா போய்கிட்டே இருன்னு போக வேண்டியதுதானே??? ஆனா இந்த மனசு மனசுன்னு ஒண்ணு இருக்கே... அது சிலத அப்டீல்லாம் சுலபமா விட சம்மதிக்காதுங்க. ரெம்ப அடம்புடிக்கும்.சமயத்தில சண்டித்தனம் கூட பண்ணும். அனுபவிக்கிறவங்களுக்குதான் தெரியும், புரியும் அதோட வலி!!!

அவ்வ்வ்.... மறுபடி அழுகாச்சியா வருது... கமன்டிட்டு வாங்களேன் கொஞ்சம் அழுரத்துக்கு கம்பேனி கிடைச்சாப்ல இருக்கும்... அவ்வ்வ்வ்வ்.... ஆவ்வ்வ்வ்வ்...

08 November, 2009

எனக்கும் புடிச்சிடுச்சு.

இந்த வாரம் எதப் பத்திடி மொக்கை போடப்போறே? கூடப் பொறந்தது அக்கறையா இப்டி கேட்டதுமே சட்னு உஷாராகி அதிசயம்னு சொல்லு இல்லேன்னா வ.போ உன்ன டியூப்லைட்னு குட்டியிருப்பா இல்லக்கா சின்ன அம்மிணி என்ன ஒரு தொடர் பதிவுக்கு கூப்டுருக்காங்க, அத எழுதப் போறேன்னேன். உன்னப் போயின்னு ஆரம்பிச்சவ நிறுத்தி எதப் பத்தின்னா. பிடிச்ச பிடிக்காத பத்து எழுதணும். நிறையப் பேர் ரொம்ப சூப்பரா எழுதி இருக்காங்க. நானும் எதுனா வித்யாசமா யோசிக்கிறேன்னேன் . சாப்பாடுன்னா தான் உனக்கு பிடிக்காத ஒண்ண கண்டுபிடிக்கிறது கஷ்டம். அதோட நீ எப்டி எழுதினாலும் அத எழுத்துன்னே சொல்ல முடியாது. மூடிக்கிட்டு போயி முடிஞ்சத எழுதுன்னா. தன் அழகு மேல கண்ணு வைக்காதன்னு என் கிட்ட (கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம) சொன்ன என் நண்பன மாதிரியே என் எழுத்து மேல கண்ணு வைக்காத, இப்போ ஃபோன வைன்னு சொல்லிட்டு எழுத டிவி முன்னாடி உக்காந்துட்டேன் வித் மடிக் கணினி.. எனக்கு சரியா எழுத வராததுக்கு டிவியும் ஒரு காரணமோ??? வாஸ்து சரியில்ல. இடத்த மாத்தணும்

பதிவ தொடர என்ன கூப்டதுக்கு நன்றி அம்மிணி. இன்னொரு நன்றி ரூல்ஸ் எதுவும் போடாததுக்கு.

1. அரசியல் தலைவர்
அரசியலே பிடிக்காது. அப்புறம் தலைவர்கள எங்கிருந்து பிடிக் க/காத.


2. எழுத்தாளர்
பிடித்தவர்
:- ரமணிச்சந்திரன் தொடங்கி அப்டியே என் பதிவ படிக்கிற நீங்க ஒரு பதிவுக்கு சொந்தக்காரர்னா உங்க வரைக்கும் லிஸ்டு நீளும்..
பிடிக்காதவர் :- வேற யாரு இத எழுதினவங்கதான்.

3. கவிஞர்:
எனக்கு கவுஜ கூட எழுத வராதுங்கிரதால எல்லா கவிஞருமே பிடிச்சவங்கதான்.


4. இயக்குனர்:
பிடித்தவர் :- மணிரத்னம்.
பிடிக்காதவர் :- இருங்க யோசிக்கிறேன்.....


5. நடிகர்:
பிடித்தவர் :- எப்போதும்
விஜய்.
பிடிக்காதவர் :- லிஸ்டு கொஞ்சம் பெருசு.


6. நடிகை:
பிடித்தவர் :- ஜோதிகா.
பிடிக்காதவர் :- குணாவுக்கு யார் யார பிடிக்குமோ அவங்க எல்லாம்.


7.இசையமைப்பாளர்:
பிடித்தவர் :- இசைஞானி. இசைப்புயல், ஹாரிஸ், யுவன்.....
பிடிக்காதவர் :- இதுவும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எனக்கு பிடிச்சா மாதிரி ஒரு பாட்டையாவது இசை அமைச்சிடுரதால பிடிக்காதவர் கிடையாது.அம்புட்டுதேன்.

8. பாடகர்:
பிடித்தவர் :- டிம்மி.

பிடிக்காதவர் :- குணா பாடல்லாம் மாட்டார். என்னங்க இது கேள்வி.

9. பாடகி:
என்ன விட நல்லா பாடுரதால எல்லாரையும் பிடிக்குமே...


10. விளையாட்டு வீரர்:
விளையாட்டா? அப்டீன்னா???

இனி அப்டியே அம்மிணி மாதிரியே மூணு பேர கூப்டு விட்டுடுறேன்.

கோபிநாத் என்னதான் நீங்க மாமாங்கத்துக்கு ஒரு பதிவு போட்டாலும் நாங்க அழைப்போமில்ல.

பிரியமுடன்......வசந்த் நீங்க தொடர் பதிவல்லன்னு தானே போட்டீங்க.

பித்தனின் வாக்கு சுதாண்ணா தொடர் கதைக்கு சின்னதா ஒரு பிரேக் குடுங்க.

இது நம்ம ஆளு மறுபடி வெளியூரா? வந்ததும் கண்டினியூ..

அப்பாடா... கரீட்டா மூணு பேர கூப்டாச்சுப்பா. வரட்டா மக்களே? நலமா இருங்க.

மு.கு. :- என் கண்ணாளன் செஞ்ச சதியால நேத்து என்னால பதிவு போட முடியலீங்க. ஃபோன்ல எதோ ப்ராப்ளம்னு நோண்டிக்கிட்டு அடிக்கடி நெட் கனேக்சனையும் கட் பண்ணி ரொம்ப கடுப்பேத்திட்டார். அதனால திங்க கிழமை எப்படா விடியும்னு காத்திருந்து என் பதிவ படிக்க ஆவலா வந்த உங்கள ஏமாத்த வேண்டியதாயிடுச்சு. ஜாரி...

பார்ரா...இப்போ எதுக்கு இவ்ளோ உர்ர்ர்ர்.....நல்ல வேளடி சுசி புத்தியா முன்குறிப்ப கடசீல போட்டே. இல்லேன்னா உன் நிலம... அவ்வ்வ்வ்வ்.....