Pages

  • RSS

30 June, 2011

உன்னுள் வாழ்கிறேன்..

எங்கிருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் பாட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆஃபீஸில் என் காதுகளுக்கு மட்டும். ’சீக்கிரமே உனக்கு காது அவுட்டாகப் போது பாரு` என்று சக ஊழியர்கள் கிண்டல் செய்தாலும் ஐபாட், இயர்ஃபோன் மறந்து போகும் நாள் எனக்கு சாபக்கேடு. என் நண்பர்களுக்கும். நல்லதா ஒரு பாட்டு சொல்லு என்று அடம்பிடிப்பேன். அவர்கள் சொல்லும் பாட்டின் வரிகள் மறந்துவிட்டால் கூகிளாண்டவர் துணையோடு மனதுக்குள்ளும், தனியாக இருக்கும்போது முணுமுணுத்தும் பாடிக்கொண்டிருப்பேன். என்னை எங்கோ இழுத்துச்செல்லும் பாடல்களில் ஒன்றை இன்று எஃப் எம் உதவியோடு கேட்க நேர்ந்தது. இன்னமும் வெளிவர முடியாமல் அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். அல்லது வர விரும்பாமல் உள்ளேயே இருக்கிறேன் என்றும் சொல்லலாம்.

முதல் முதல் கேட்டபோதே மனதை அழுத்திய பாடல் இது. அதன் பின் எப்போது கேட்டாலும் கனம் குறைவதில்லை. எதுவோ ஒரு சோகம், பாரம், தவிப்பு இப்படிக் கலவையாய் ஒரு உணர்வு வந்து போகும். காலையிலிருந்து இப்போது இந்தக் கணம் வரை திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.  கொஞ்சம்  தனிமை.  நிறைவாய்க் கண்ணீர். இந்த மன அழுத்தம் போக தேவையாய் இருக்கிறது. உடனேயே உனக்கென்ன இப்போ என்று கேட்காதீர்கள். எனக்கு எதுவும் இல்லை. சில நேரங்கள் அப்படித்தான். ஏதோ ஒன்று எதுவோ ஒன்றின் காரணமாய் தேவைப்படுகிறது. தேவைப்படுத்திக் கொள்கிறேன். தொடர்பே இல்லாமல், என்னவென்றே புரியாமல். சிரிப்பும், அழுகையும் எதுவோ ஒன்றின் நினைவுபடுத்தலாய் வருவது வாழ்வில் இயல்பே.

பாடலைக் கேளுங்கள். யுவன், நா.முத்துக்குமார் சேர்ந்து படைத்த அற்புதம். ஷ்ரேயா கோஷலின் குரல். இது தமிழில் அவரின் ஆரம்ப காலப் பாடலாக இருக்க வேண்டும். எனக்கு சரியாகத் தெரியவில்லை. உச்சரிப்பைக் கவனியுங்கள்.  7G, ரெயின்போ காலனி படத்திலிருந்து என்னைத் தின்றுகொண்டிருக்கும் பாடல்.

நினைத்து நினைத்துப் பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்..

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு..

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்..

26 June, 2011

சிங்கம் ஒன்று புறப்பட்டதே..

மாம்ஸ் லண்டன் போயிருக்கிறார். ஃப்ரெண்ட்ஸ் வாலிபால் விளையாடலாம் வாடா மச்சான்னு கூப்டிருக்காங்க. நேற்று ஈவ்னிங் போனவர் நாளை நைட் வருவார். கிளம்பும் சமயம் கால் செய்த உள்ளூர் ஃப்ரெண்டுக்கு அவர் சொன்னது.

‘ஆமா. சிங்கம் கிளம்பிட்டே இருக்கு. என்னமோ பழைய ஃபார்ம்ல இருப்பேன்னு நம்பி வரச் சொல்லி இருக்காங்க. அங்க போய் பார்த்தாத்தானே தெரியும். வின் பண்ணா ட்ராஃபியோட வரேன். இல்லேன்னா டியூட்டி ஃப்ரீல வாங்கற டாஃபியோட வரேன்’

நான் நினைச்சேன். அவர் சொல்லிட்டார். அவரை பஸ்ஸேத்தி விட்டு வரும் வழியில் மாம்ஸ் ஃப்ரெண்ட் பசங்களோடு விளையாட அம்மு, சதுவை ட்ராப் பண்ணினேன். அதே அபார்ட்மெண்டில் இருக்கும் இன்னொரு குட்டிப் பையன் ஓடி வந்து சதுவின் காலைக் கட்டிக்கொண்டார். இவர் அப்படியே அவரைத் தூக்கி ஒரு தட்டாமாலை சுற்றி இறக்கினார். குட்டிப் பையன் கையில் இருந்த ஸ்வெட்டரை கொடுத்து போட்டு விடச் சொல்லிக் கேட்டதும் இவர் போட்டுவிட்டார். நன்றியாக அவர் மீண்டும் காலை இறுக்கிக்கட்டிக் கொள்ள சது என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு விட்டார் பாருங்க. எப்போதும் அவர் கேட்பது போல ஒரு குட்டித் தம்பி இருந்திருக்கலாமோ??

உடம்பு சரியாக இல்லாவிட்டாலும் ஏர்போர்ட்டுக்கு நானே வரேன்னு மாம்ஸ்ட்ட சொல்லிட்டேன். என்னவோ இம்முறை மாம்ஸ் என்னை பரிதாபமாகப் பார்க்கும் அளவுக்குப் பிரிவுத் துயர் கண் நிறைத்தது. அதற்கும் அவரே தீர்வொன்று செய்துவிட்டார். அவரின் நண்பர் ஒருவர் புது வீடு வாங்கி இருந்தார். வீடு கைக்கு வருமுன்னர் பழைய வீடு விற்று குறித்த தேதிக்குள் கொடுக்கும்படி ஆயிற்று. ஒரு மாத வாடகைக்கு வேறு ஒரு வீடு எடுத்திருந்தார்கள். அதற்கும் உரியவர்கள் வந்துவிட பகலில் அவரின் மாமனார் வீட்டில் தங்குவதும், இரவில் மனைவி தவிர அவரும் 3 பிள்ளைகளும் வேறு உறவினர் வீட்டில் தங்குவதுமென்ற முடிவில் இருந்தார்கள். மாம்ஸ் பிள்ளைகளை இரவில் எங்கள் வீட்டில் தங்கச் சொல்லி இருக்கிறார். இதோ நேற்றே வந்துவிட்டார்கள். ஹாலில் தூங்க அடம்பிடித்தவர்களை ரூமில் தூங்கச் சொன்னேன். நாங்க தூங்கிடுவோம் உங்களால தனியா, பயமில்லாம தூங்க முடியுமான்னு பயமில்லாம வில் அழுத்தம் கொடுத்து அம்மு கேட்டபோது வேறு வழியில்லாமல் ஹாலில் 2 air mattress போட்டு அதில் நால்வரும், சோஃபாவில் நானும் அவர்களில் ஒருவரும் எனப் படுக்கையை ஒழுங்கை செய்தோம். 

010 016 k

22 ஆம் தேதியில் இருந்து பள்ளி மூடியாயிற்று. எங்களுக்குத் திண்டாட்டம் தொடங்கியாயிற்று. நேற்று காலிங் பெல் கேட்டு பால்கனிக் கதவு வழியாக ஹலோ என்றால் யாரையும் காணோம். பக்கத்திலே படி வழியாக மேலே ஏறிக் கொண்டிருந்த பையன் அதோ அந்தாள் தான் பெல் அடிச்சார் என்று பக்கத்து வீட்டை நோக்கிக் கையில் காகித அட்டைகளோடு போய்க் கொண்டிருந்த ஒருவரைக் கைகாட்டினார். நான் பெல் அடிச்சியான்னு கேட்டும் அவர் திரும்பிப் பாராமல் போய்க் கொண்டிருந்தார். எனக்குப் பகீரென்றது. ஆள் வேறு ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக இருந்தார். இது திருடர்களின் ஒரு தந்திரம். அட்டைகளில் வரைந்த ஓவியங்களோடு கூடவே படிக்க வந்திருக்கேன், பண உதவி செய்ங்கன்னு ஒரு கடிதமும் வச்சிட்டு பள்ளி விடுமுறை காலத்தில வீடு வீடாகப் போய் நோட்டம் விடுவது. எங்கோ ஓரிரண்டு திருட்டுத்தான் நடந்திருக்கிறது என்றாலும் பயமே. எங்கள் அயலில் பெரும்பாலானவர் வெக்கேஷன் போய்விட்டார்கள். மீதி எம்மைப் போல வேலைக்குப் போனால் மூன்று மணிக்கு மேல்  திரும்பிவருபவர்கள்.   பகலில் வெளியே பறவைகளும், வீடுகளில் பிள்ளைகளும் தவிர யாரும் இல்லை.  அவர்கள் தைரியமாய் இருக்கிறார்கள். எமக்குத்தான்.. பிள்ளையாரப்பா பாத்துக்கோ.

என்னமோ எனக்கு பிடிச்சவங்க சந்தோஷமா இருந்தா நான் சோகாச்சியாவோ இல்லை சுகக்கேடாவோ இருக்க வேண்டியதா இருக்கு. இந்த வருஷம் விஜய்க்கு வாழ்த்துப் பதிவு போட முடியாத அளவுக்கு  ஆகிப்போச்சு. பல்லுல ஆப்பரேஷன். 5 ஸ்டிச்சஸ். அதுவும் அவர் பர்த்டே அன்னைக்கே. ஆனா அவர் பர்த்டேக்கு முதல் நாள் எங்க வீட்ல நடந்தது இது. சது ரூம்ல அவருக்கு போன வருஷம் வாழ்த்தாக கிடைச்ச விஜய் படம் ஒட்டி வச்சிருக்கார். முதல் தடவையா வீட்டுக்கு வந்த அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் இது உன்னோட அப்பா டீனேஜ்ல எடுத்த ஃபோட்டோவான்னு கேட்டாராம். இவர் இல்லைன்னு சொல்லி தான் அவரோட ரசிகன்னு சொன்னாராம். வாழ்த்து அனுப்பி வச்ச நட்புக்கு நன்றி.

sathu 

எனக்குப் பிடித்த விஜயின் பாடல் மாம்ஸ்க்குப் பிடித்த ஷ்ரேயாவோடு.