Pages

  • RSS

29 November, 2011

நினைவில் நிறைந்தவர்க்கு!!

முதலில் மீண்டும் ஒரு முறை இலங்கையில் ஈழப்போரில் உயிர் நீத்த அத்தனை மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அஞ்சலிகளும், வணக்கங்களும்.

இம்முறையும் அஞ்சலிக்கும், அதன் பின்னான நிகழ்வுகளுக்கும் போக மனம் வரவில்லை. கேளிக்கைகள் பிடிக்கவில்லை. இவர்களின் தேவையில்லாத கொள்கைகள் பிடிக்கவில்லை. போயிருந்து மனம் வெதும்பி வருவதைவிட மனதார வீட்டிலேயே வணங்கினோம்.

 

புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை நவம்பர் 27 மாலை 6 மணிக்கு எல்லோரும் ஒன்றுகூடி அஞ்சலி செய்வோம். பின்னர் மண்டபம் கிடைப்பதைப் பொறுத்து ஒரு சனிக்கிழமை கலை நிகழ்வுகள் நடைபெறும். இப்போது??இவர்களுக்குள்ளேயே கொள்கை வேறுபாடுகள், குழுப் பிரிவுகள். நாடுகடந்த அரசமைப்போம் என்று ஆளுக்கொரு தலைமையின் கீழ் நாட்டுக்கு நாடு அரசு அமைக்க முயல்கிறார்கள். பிடிக்கவில்லை. ஒதுங்கிவிட்டோம்.

சிங்களவர் எல்லோரும் கெட்டவர் இல்லை. தமிழர் எல்லோரும் நல்லவர் இல்லை. அதனால் தான் இலங்கையில் ஈழப்போரில் உயிர் நீத்த என்று சொன்னேன். அப்பாவித் தமிழரோடு உயிரிழந்த அப்பாவிகளையும் சேர்த்து. எத்தனையோ தமிழர் உயிரைக் காப்பாற்றிய சிங்களவர் இருக்கிறார்கள். தமிழரையே காட்டிக்கொடுத்துக் கொலைக்குக் காரணமான தமிழர் இருக்கிறார்கள். இங்கே நான் இராணுவம், போராளி என்று பிரித்துச் சொல்லவில்லை.

சிறுவயதில் பார்த்த அப்பாவின் நண்பன் ரட்ணவீரா மாமாவின் கறுத்த நெடிய உருவமும், வெள்ளைப் பல் சிரிப்பும் இப்போதும் நினைவிருக்கிறது. பாதிக் காதை மூடியதாகப் படிய வாரிய முடியோடு வீரா மாமா கல்யாணம் செய்து கூட்டி வந்த ஆண்ட்டியும் நினைவில் இருக்கிறார். கந்தளாயில் அப்பாவோடு வேலை செய்தவர்களின் கதைகள் மட்டும் நினைவில்.

83 கலவரம். அப்போது சித்தியும் சித்தப்பாவும் பண்டாரவளையில் ஆசிரியப் பணியில் இருந்தார்கள். தமிழர் என்று தெரிந்த நொடி உயிரோடு கொழுத்தப்பட்ட காலம். இராணுவ வீரன் வீட்டிலேயே வாடகைக்கு இருந்தார்கள். இரவில் வீட்டின் மீது கல்வீசப்படும். காலையில் வீட்டம்மா அவர்கள் வீட்டு பஷன் ஃப்ரூட் பழம் வீழ்ந்ததாய் சொல்லி நிலமையை இலகுவாக்குவார். முதலில் என்னைக் கொன்றே உங்களை நெருங்க முடியும் தைரியமாய் இருங்கள் என்று சொல்லி இருவரையும் ஊருக்கு உயிரோடு அனுப்பி வைத்த அதே இராணுவ வீரன். அக்காச்சி ஊருக்குப் போனபோது சந்தித்த இராணுவ வீரர்கள். அண்ணாவிடம் வைத்தியம் பார்க்கும் போலீஸ். எல்லோரும் நல்ல சிங்களவர்கள்.

மாமியாரின் தென்னந்தோட்டத்தில் இளநீர் களவாகப் பிடுங்கும் இராணுவத்தினர் ’பசிக்குது அம்மா’ என்னும்போது இன்னும் இரண்டைப் பறித்துப் போடச்சொல்லிவிட்டு அடுத்த தடவை கேட்டுப் பிடுங்கவேண்டும் என்று சொல்வார்களாம். இருந்தாலும் அவ்வப்போது பசித்தவர்கள் பழங்கணக்கும் பார்க்கும்படியாக இருக்கிறது திருடர்களின் அட்டூழியம். விடுதலைப் புலிகள் இருந்தபோது அடங்கி இருந்த திருடனெல்லாம் இப்போது பகலிலேயே திருடும் தைரியத்தோடு இருக்கிறானாம். அவ்வப்போது ’அவங்கள் இருக்கேக்க’ என்று நம் மக்கள் அங்கலாய்க்கத்தான் செய்கிறார்கள்.

வீடுவீடாக வந்து மாவீரர் தினத்தன்று விளக்கேற்றக் கூடாதென்று சொல்லப்பட்டதாம். கோவிலில் கூட விளக்கு அணைக்கப்பட்டதாம். போகட்டும். எங்கள் உணர்வுகளால் அவர்கள் ஆத்ம சாந்திக்கு ஆயிரம் என்ன லட்சம் தீபங்கள் ஏற்றுவோம்.

என்னதான் இராணுவம் அன்பாய் இருந்தாலும் அடிமனதில் ஒரு பயம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எங்களுக்கும். அங்கே இருக்கும் அவர்களுக்கும். எத்தனை நாளைக்கு இந்த வாழ்வு?? இன்னொரு போரைத் தாங்கும் சக்தி அவர்களிடம் இல்லை. ஏனென்றால் அத்தனை இழந்திருக்கிறார்கள். உயிர்ப் பயம் இப்போதும் இருக்கிறது. குண்டுச் சத்தம் கேட்பதில்லை. அந்த அளவில் நிம்மதியாக ஒரு வாய் உண்டு, உறங்குகிறார்கள். ஏன் கெடுக்க வேண்டும்??

இழப்பை அநுபவித்தவர்க்குத் தெரியும் வலியின் அருமை. கடந்த மாதம் சானல் 4 இல் ஒளிபரப்பிய கடைசிக்கட்டப் போர் பற்றிய டாகுமெண்ட்ரியை இங்கே ஒரு சானலில் ஒளிபரப்பினார்கள். இன்னமும் வலிக்கிறது. பார்த்த எனக்கே இத்துணை வலியென்றால் அங்கே உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிய என் உறவுகளுக்கு எப்படி இருக்கும்?? இங்கிருந்து வீரம் பேசலாம். நாளை ஒன்றென்றால் நம்மில் எத்தனை பேர் நாட்டுக்குப் போவோம் உறவுகளின் உயிர் காக்க?? போயிருக்கிறார்கள். இல்லை என்கவில்லை. என் அண்ணன்களைக் காக்கவென்று நான் போவேனா?? சாத்தியம் இல்லாதபோது பேசக்கூடாது. அப்படியும் பேசுபவர் கேட்பது பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போக வேண்டும். போய்விட்டோம்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவையேனும் நல்லவையாக அமையட்டும்.

பிரார்த்திப்போம்!!

maaveerar

15 November, 2011

மீசை முகம் மறந்து போச்சே..

போன திங்கள் நான் லீவ் போட்டேன்னு கவலையா, சந்தோஷமா தெரியலை. தரை/தலை தொட்டுக்கொண்டே இருக்கிறது மேகம். அழகாகவும், பயமாகவும், ஆபத்தாகவும் கூட இருக்கிறது. நாள் முழுவதும் இருந்தாலும் நேரத்துக்கேற்ப அடர்த்தியும், இருளும் கூடிக்குறைகிறது. இந்த அழகில் வீதியில் கறுப்பு உடையில் செல்லும் மக்களை என்னதான் செய்ய. பிள்ளைகளை பள்ளி கூட்டிப் போகும்போதும், வரும்போதும் அவளவு கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. பள்ளி போகும்போது சது எடுத்த படங்கள் கீழே.

002 003

006

பால்கனியில் இருந்து ரசிக்க மனமும் இல்லை, குளிரும் விடவில்லை. அவ்வப்போது ஜன்னல் வழி எட்டிப் பார்ப்பதோடு சரி.

045 046 

@@@@@

halloween. இப்போ இரண்டு வருஷமாகத்தான் பசங்க தாங்களாகவே கேண்டி கலெக்‌ஷன் கோதாவில் குதித்திருக்கிறார்கள். முன்னெல்லாம் நானும் கூடவே போக வேண்டும். புல்லுக்கும் ஆங்கே பொசியும் என்றாலும் எலும்பை உறைய வைக்கும் குளிரில் போவது கொஞ்சம் கஷ்டம்தான். ஒரே ஒரு தடவை கூட வந்த மாம்ஸ் பின்னர் எஸ். இப்போதும் வீட்டில் இருப்பதும் ஒன்றும் நிம்மதியான விஷயம் அல்ல. விதவிதமாக வந்து மிரட்டுவார்கள். சிலருக்கு தூர நின்றே கேண்டியை கொடுத்துவிட்டு ஓடி வந்து விடுவேன்.

வீட்டுக்கு வெளியே லைட் போட்டிருந்தாலோ, மெழுகுவர்த்தி ஏற்றி இருந்தாலோ அந்த வீட்டில் கேண்டி கிடைக்கும் என்று அர்த்தமாம். trick or treet என்ற கலெக்‌ஷன் மந்திரத்தை இங்கே knask eller knep என்கிறார்கள். இங்கு வந்த வருடம் விஷயம் தெரியாமல் வெளியே லைட்டை போட்டுவிட்டு பயத்தோடு பல்ப்பும் வாங்கிய நினைவு பசுமையாக இருக்கிறது. நாங்கள் கலெக்‌ஷனுக்கு போவது போலவே வருபவர்களைப் பார்த்து மிரள்வதும், கேண்டி கிடைத்த மகிழ்வில் குதிக்கும் குழந்தைகளைப் பார்ப்பதுவும் சந்தோஷமே. எங்கள் வால்கள் உரிமையோடு இரண்டு முறை கலெக்‌ஷனுக்கு வந்தார்கள். போகும்போது போணி. பின்னர் வீடுகளின் வரிசைக்கிரமம்.

077 நண்பர் மகனுக்கு அம்மு மேக்கப் போடுகிறார். நாலு மணிக்கு நான் ஆஃபீஸால் வர அனைவரும் ரெடி. ஆறு மணிக்குத்தான் (பேய்)உலா தொடங்கும் என்பதால் காத்திருந்து கலைந்த மேக்கப்பை மீண்டும் டச்சப் செய்து விட்டார்.

 

 

084 a நம் வீட்டு வால்கள் இருகரையும், நடுவில் நண்பர் பிள்ளைகள்.

 

 

 

 

 

026 எனக்கு கிடைத்த மிச்ச சொச்சம் இவளவே. பெஸ்ட் சாக்லெட் மாம்ஸ் லண்டன் போனபோது இதற்கென்றே நான் சொல்லிவிட்டு வாங்கி வந்ததுதானாம். என்ன செய்ய. இக்கரை சாக்லெட்டுக்கு அக்கரை சாக்லெட் இனிமை.

 

 

@@@@@

018 வேறொரு நண்பர் மகளின் பர்த்டேக்கு வழக்கம்போல் ஐஸிங் செய்தேன். கதவு திறந்து கேக்கை பார்த்த குட்டிம்மா சொன்னார் ‘கிக்கி’ (கிற்றி). அக்காச்சி சொன்னது போல் கேக் சக்ஸஸ். அதாகப்பட்டது பிள்ளை கேக்கில் உள்ள உருவத்தை அடையாளம் காணவேண்டும். கண்டுவிட்டது. இந்த வயது குழந்தைகளிடம் ஹலோ கிற்றி பிரபலமாக இருக்கும்வரை எனக்கும் வேலை குறைவு. கண், மூக்கு, வாய், தலையில் ஒரு பூவோ, ரிப்பனோ கட்டிவிட்டால் முடிந்தது ஐஸிங். ஆனால் வழக்கம்போல் கிற்றிக்கு இம்முறையும் மீசை வைக்க மறந்துவிட்டேன். நண்பியிடம் சொன்னபோது

‘அதானே அதெப்டி ஒவொரு தடவையும் மறக்கறிங்க’ என்றார்.

‘அதில்லைங்க.. இங்க மீசை இல்லாத ஆம்பளைங்களையே பாத்திட்டு இருக்கிறதுல மீசையே மறந்து போச்சுங்க’ என்றேன்.

சிரிப்பில் வீடு ஆடி அடங்கியது. அங்கே நாங்கள் இருந்த அவளவு நேரமும் பர்த்டேக்குட்டி ஒவொரு செருப்பாகப் போட்டு நடப்பதும், விழுந்து எழுவதுமாக இருந்தார். இந்தக் குழந்தைகளுக்கு பெரியவர் செருப்புகளில்தான் எவளவு ஆசை. இத்தனூண்டு காலுக்குள் பென்னாம்பெரிய செருப்பையோ ஷூவையோ மாட்டிக்கொண்டு தானே நடக்கமாட்டாமல், அதையும் இழுத்துக்கொண்டு விழுந்தெழுந்து அவர்கள் போடும் கூத்து இருக்கிறதே. செம சிரிப்பு. நாங்கள் சிரிக்கிறோம் என்று தெரிந்ததும் இன்னமும் நடையின் வேகம் கூடும். கடைசியில் என் செருப்பை அவரிடம் இருந்து வாங்கி வர கொஞ்சம் கெஞ்ச வேண்டி இருந்தது.

028

09 November, 2011

ஹாய்.

#####                                                                                                                           #####

முன்போல் இல்லை நீ

நானும் தான்.

solsikke blomster

#####                                                                                                                          #####

ஒன்று

இன்னொன்று

மற்றொன்று

மொட்டுகள் திறக்கும்வரை

தாவத்தான் செய்யும்

வண்ணத்துப் பூச்சி.

sommerfugle 1

 

 

 

 

 

 

 

#####                                                                                                                            #####

எதுவுமே இருப்பதில்லை

எதுவோ ஒன்று ஆகிறது

காதல் என்பதாய்.

sky

#####                                                                                                                           #####

குளிர் காய்ச்சல்

ஜலதோஷம்

இருந்துவிட்டுப் போகட்டும்

ஐஸ்வண்டி பார்த்ததும்

அடம்பிடிக்கும் குழந்தையாய்

அழும் என் மனதை

என்னதான் நான் செய்ய

உன்னைப் பார்த்த நொடி

கேட்கிறது

லவ் யூ சொல்லு

இறுக்கிக் கட்டிக்கோ

உம்மா கொடு..

33892_119613398099607_100001528424389_133933_4362116_n

 

 

 

 

 

 

 

#####                                                                                                                           #####

எப்போதும் அமைவதில்லை

இப்போதும் இனிக்கின்ற

வாழ்வின் சில கணங்கள்.

kissing babies

#####                                                                                                                           #####

06 November, 2011

மாமி ராக்ஸ்ஸ்ஸ்..

’ஃபோன் ஃபோன்.. புள்ளை எடூஊஊஊஊ.. லச்சு ஃபோன் எடூஊஊஊ.. எட ஃபோன் அடிக்குது எங்கயெண்டும் தெரியேல்ல.. புள்ளை.. எந்த ஃபோன் அடிக்குது.. தம்பீஈஈஈஈஈஈஈ (சதுவ).. புள்ளை எடுக்கிறியளே..’

மாம்ஸ் தவிர வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இப்படியாகச் சொல்லிக்கொண்டே ஃபோன் வரும் ஒவொரு சமயத்திலும் மாமியார் கீழுக்கும் மேலுக்குமாக ஓடித் திரிவார்கள். நான் எப்போதும் என் பக்கத்தில் இதற்காகவே ஒரு ஃபோனை வைத்திருப்பேன். குளிக்கும்போதோ, எங்காவது பசங்க தூக்கிப்போய் வைத்துவிடும்போதோ இப்படி ஆகி விடுகிறது. யாராவது எதுவும் முக்கிய விஷயம் சொல்ல கூப்பிடுவார்களாம். ஒரு தடவை வந்திருந்தபோது படியேறி ஓடி வந்து தடுக்கி வீழ்ந்து காலில் காயம். மாம்ஸ் வீட்டிலிருக்கும் போது சமத்தாக இருந்துவிட்டு அவர் தலை மறைந்ததும் மீண்டும் ‘ஃபோன் ஃபோன்..

#####

அலாரத்தில் அலறி எழுந்தேன். அசந்து தூங்கும் அரிதான நாட்களில் எல்லாம் அலாரச் சத்தத்தில் இப்படியாகத்தான் எழ நேர்கிறது. படபடத்த இதயத் துடிப்பை ஆழ் மூச்செடுத்து ஆசுவாசப்படுத்தியபடி வலப்பக்கம் கையை நீட்டினேன். பதட்டம் போக பக்கத்தில் படுத்திருப்பவரை தொட்டுப்பார்ப்பது க.முவிலும், அணைப்பது க.பியிலும் வழக்கமான ஒன்று. தேடிய கையில் யாரும் தட்டுப்படவில்லை என்றதும் தள்ளிப் படுத்திருக்கிறாரோ என்று எட்டித் துளாவினேன். இல்லையென்றது கை. திடீர் விழிப்பால் எரிந்த கண்களில் வலக்கண்ணை பாதி விரித்துப் பார்த்ததில் அய்.. ஜாலி.. மாம்சை யாரோ மோகினி கட்டிலோட ச்சே.. போர்வை தலையணை சகிதம் தூக்கிட்டு போய்ட்டா என்றது காட்சி. சரி பொழுது விடிஞ்சாச்சு திரும்ப கொண்டு வந்து படுக்கையில விட்டிட்டு போகத்தானே போறா. அவங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நான் இன்றாவது ட்ராஃபிக்கில் நெரியாமல் ஆஃபீஸ் போவோம் என்று வெளியே வந்தேன். கைப்பைக்குள் மொபைல் வைக்கப் போனவளுக்கு அடுத்த அதிர்ச்சி. சோஃபாவில் மாம்ஸ்.

'நைட்டு மூணு மணிக்கே வெக்கையில தூங்க முடியாம நான் இங்க வந்து படுத்திட்டேன். நீ நல்ல்ல்லா தூங்கினே போல' என்றார்.

அப்போ காபி ஆர்டர் பண்ணியதும், வாசம் வந்ததும், கம்பியூட்டர்ல லைட் எரிஞ்சா என்னம்மா நீங்க பாட்டுக்கு தூங்குங்க அதுவும் ஸ்லீப்பிங் மோட்ல போய் தூங்கிடும், மத்த லைட் இன்டர்நெட் சிக்னல்மா அத ஒண்ணும் பண்ணமுடியாதுனு பேச்சு சத்தம் கேட்டதெல்லாம் கனவாஆவ்வ்வ்வ். காலையிலேயே இரண்டு ஏமாற்றம்!!

#####

தீபாவளிக்கு முதல் நாள் மாமியார் பெட்டுக்கு கவர் மாற்றிக் கொண்டிருந்தேன். சீரியல் இடையே ஆட். நாளை தீபாவளி தினத்தை முன்னிட்டு.. என்று தொடங்கி அன்றைய ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னவென்று அவர்கள் சொல்ல எது எது பார்க்கும்படியாக இருக்கும் என்று மாமியார் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

'நல்லா பாடுவாள் போல கிடக்கு ஆனா ஆறு மணிக்கு ஆர் எழும்பி பாக்கிற' இது மகதியின் கச்சேரி.

'ம்ம்.. இது பாக்கலாம் நல்லாருக்கும்.. பாப்பான்ர பிரசங்கம்' இது சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம்.

'அடப் போங்கடா பேயன்களே.. சும்மா புதுப்படம் புதுப்படம் எண்டிட்டு பழைய படத்தையே போடுங்கோ' என்றார்கள்.

'புதுப் படத்தை இப்பவே போட்டா அவங்களுக்கு நட்டம் வந்திடுமெல்லே.. அதான் தியேட்டர்ல ஓடி முடியப் போடுவாங்கள் மாமி' என்றேன்.

'ம்க்கும்.. பின்ன ஏன் புள்ளை உலகத்திலையே முதல் முறையா புதுப்படம் எண்டு சொல்ல வேணும்.. எங்களை ஆகலும் பேக்காட்டக் கூடாது கண்டியோ' என்றார்கள். அவ்வ்வ்வவ்.. அன்று காலை சிங்கம். நைட் வேட்டைக்காரன் போட்டார்கள்.

*பேயன்கள் = முட்டாள்கள். பேக்காட்டல் = ஏமாற்றல்.

#####

மாமியார் வந்த நாள் முதல் அவ்வப்போதும் இப்போது எப்போதும் ஹீட்டர் வேலை செய்கிறது. இன்னமும் விண்டரே வரவில்லை இப்பவே குளிர்ர்ர்ருது என்றால் கொஞ்சம் கண்ணைக்கட்டத்தான் செய்கிறது. சமயத்தில் வீடு சூடாகி நாங்கள் அவனில் வைத்த கோழி போல வேகிப் போகிறோம். சாக்ஸ், ஸ்வெட்டர் எல்லாம் குளிர் விரட்டும் என்று சொன்ன பின்தான் எடுத்துப் போடுகிறார். அவ்வப்போது திருட்டுத்தனமாக ஹீட்டரை ஆஃப் செய்த ஐந்தாவது நிமிஷம்

'என்ன புள்ளை.. இண்டைக்கு இவளவு குளிரா கிடக்கு'

என்பவர் காதுக்கு சீரியலையும் மீறி ஹீட்டர் வேலை செய்யாத சத்தம் எப்படித்தான் கேட்கிறதோ. இது கூடப் பரவாயில்லை தலைக்கு/குளித்து விட்டு வெளியில் நின்று உலர்த்திவிட்டு ஒரு மணி நேரம் குளிரால் போர்வைக்குள் சுருண்டு படுக்கிறார். சற்றே சூர்யா எட்டிப் பார்த்ததும் ஜன்னல் திறந்து வரவேற்றுவிட்டு மூட மறந்துவிடுகிறார். ஹீட்டர் அப்பீட்டாவென்று சந்தேகத்தோடு குளிர் காற்று வரும் வழி பிடித்துப் போனால் திறந்த ஜன்னல் ஜில்லென்று வரவேற்கிறது. நேற்றும் கால்வலியால் அவஸ்தைப்பாட்டார்கள். சாக்ஸ் போடாததும் காரணம். என்று சொன்னதும்

'அவனிட்ட சொல்லிப் போடாதை பேசுவான்'

என்றவர் ஓடிப் போய் எடுத்துப் போட்டுக் கொண்டார். அவரிடம் சொல்லமாட்டேன் ஆனால் இப்படியே சாக்ஸ் போடாமல் கால் வலித்தால் டாக்டர்ட்ட போறது தவிர வேற வழி இல்லையென்று சொல்லி(மிரட்டி) இருக்கிறேன். அவர்களுக்கு ஹாஸ்பிடல்/டாக்டர் அலர்ஜி என்று தெரிந்ததாலும் வேறு வழி இல்லாமலும்.

02 November, 2011

மஷ்ரூம் பீஃபும் சோயா மட்டனும்.

'அம்மா.. தங்கா பெரியம்மா வீட்ல ஃபோறிகோல் சாப்டோம்மா.. அவ்வ்வவ்ளோ டேஸ்ட்ட்ட்ட்டா இருந்ததும்மா.. நீங்களும் செஞ்சு குடுக்கரிங்களா'

அப்டின்னு பசங்க ஒரு சேரக் கூறி(வி)னார்கள். அது ஒண்ணும் அவளவு கஷ்டமான ரெசிப்பி இல்லைங்க. கஷ்டம்னா கூட அது சாப்டுறவங்களுக்குதானே, செய்ற எனக்கு என்ன வந்தது. ஆனால் கோவா (முட்டைக்கோஸ்) + மட்டன்.. பார்க்க சூப் போல இருந்தாலும் மெயின் டிஷ்ஷே அதுதானாம். காம்பினேஷன் நல்லா இல்லையேன்னு விட்டிட்டன். இவங்க கேட்டதும் சரின்னு கூகிளாண்டவரிட்ட matpirat.no என்று வேண்டினேன்.. அவர் இதையா வேண்டினே சரியா பாருன்னு குட்டினதும் பார்த்தா pratக்கு பதில் piratனு டைப்பிட்டன். சரின்னு வேண்டப்பட்ட பொருளெல்லாம் லிஸ்ட் எழுத வேண்டியது இல்லாம ரோல்ஸ் செய்ய வாங்கி வச்ச மட்டன் கூடவே கோவான்னு பிரிஜ்ஜை திறந்ததும் சிரித்தன. வேறென்ன வேண்டும்?? ஓ.. என்னென்ன வேண்டும் என்று சொல்ல வேண்டுமோ?? நோட்டிக்குங்க.

fårikål (எ) mutton stew.

நாலு பேருக்கு.

1 1/2 கிலோ மட்டன்

1 1/2 கிலோ கோவா

4 ts முழு மிளகு

2 ts உப்பு

3 dl தண்ணீர்

உருளைக்கிழங்கு தேவைக்கு ஏற்ப.

 

063 பாத்திரம் கொஞ்சம் பெருசா இருக்கட்டும். இப்டிக்கா பெரிய துண்டா, எலும்பு இருக்கிறதா இருக்கணும் மட்டன். இங்க இப்டியே கிடைக்குது. கோவாவையும் இப்படியே பெரிய துண்டாக வெட்டிக்கொள்ளுங்க.

 

 

 

 

064 இடையிடையே மிளகையும் தூவிக்கணும். நான் 4 க்கு பதில் 8 டீ ஸ்பூன் சேர்த்தேன்.

 

 

 

 

 

 

067 அப்படியே முழுவதையும் கலந்து கட்டி அடுக்கிவிட்டு உப்பு சேர்த்து, தண்ணீரையும் ஊத்திக்கணும். இனி அதுபாட்டுக்கு  இரண்டு மணி நேரம் குறைஞ்ச தீயில வேகட்டும். இப்போ உருளைக்கிழங்கை தனியா வேக வைத்துக் கொள்ளுங்க. அது முடிய நீங்க வேற வேலை இருந்தா பாத்திட்டு வாங்க. சிம்ல இருக்கிறதால அடிப்பிடிக்க வாய்ப்புகள் குறைவு.

 

070 ஒன்றரை மணி நேரம் அவிந்ததும் நான் மேலும் காலிஃப்ளவர், புரோக்கலி, காரட் என சில பல சேர்த்துவிட்டேன். ஆனால் இவற்றை இறக்குவதற்கு ஒரு பத்து நிமிடம் இருக்கும்போது சேர்த்தாலே போதும். அரைமணி நேரமாக ஓவர் குக் ஆகிவிட்டது.

 

 

073 நம்பி சாப்பிடலாம்!! சுள்ளென்று மிளகு அவ்வப்போது கடிபட ம்ம்..

பாதியிலவே வாசனை வாயூற வைத்தது. வீட்டில் ஆரும் இல்லை. ஆசையாகக் கேட்ட பசங்க இல்லாமல் தனியே சாப்பிட மனமில்லாமல் அடிக்கடி கிச்சனுக்குப் போய் வாசனை பிடித்துக்கொண்டு மட்டும் இருந்தேன். நாலு மணிக்கு மேல் ஓவர் பசியாகி பாதி சாப்பிடும்போது வந்தார்கள். மீண்டும் வெளியே போக வேண்டி இருந்ததாலும், போன இடத்தில் எதுவோ சாப்பிட்டு விட்டதாலும் வந்து சாப்பிடுவதென்று மாம்ஸ் தீர்ப்பை வழங்கினார். திடீரென தடதடவென்று படியேறினார் அம்மு.

'எங்கம்மா போறீங்க.. கிளம்பலாம்' என்ற மாம்ஸ்க்கு

'அப்பா ஃபோறிகோல் மறந்திட்டேன்' என்ற பதில்தான் படியிறங்கிப் போனது. தடதடவென்று சது படியேறி வந்த சத்தத்தில் அம்முவின் 'ம்ம்..' கரைந்து போனது. இருவருக்குமே மீதியை ஊட்டிவிட்டு

'யம்மன் கொத் அம்மா.. நீங்கதான் ஃபோறிகோல் செய்றதில பெஸ்ட்' என்ற சர்ட்டிபிக்கேட்டோடு கிளம்பினோம். வரும்போது

'அது என்னடி ரெண்டு மணி நேரம் சமைச்சதா சொன்னே.. சூப் போல இருக்கு.. அதான் சாப்பாடா இன்னைக்கு' என்ற மாம்சுக்கு

'உங்கூர்ல சூப் ரெண்டு மணி நேரமா சமைப்பாங்களா' என்றதோடு நான் நிறுத்த சுவையின் புகழ் பரப்பினார்கள் நான் பெற்ற மக்கள். வந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

'அடியே.. பெரிய பீசா தூக்கிட்டு வந்தா அது கோவா.. இப்டியா என்ன ஏமாத்துவே நீ' என்று மாம்ஸின் குரல் கேட்டது.

நான் போன போது எனக்கு நிறைய்ய்ய முழு பெப்பரும், நான்கைந்து கோவா பீசும், பாதி பொட்டாட்டோவுமே இருந்தது. அப்பாவியாய் பார்த்த எனக்கு

'அதான் நீங்க அப்போவே சாப்டிங்களே' என்று பதில் வந்தது அதே நான் பெற்ற மக்களிடம் இருந்து. இங்கே இலையுதிர்காலக் குளிருக்கு இதமாகவும், பனிக்காலக் குளிருக்கு உடலைத் தயார்ப்படுத்தத்  தேவையான கொழுப்பைச் சேர்க்கவும் என இது ஃபோறிகோல்  சீஸனாகிவிடுகிறது. அக்காச்சிக்கு இந்த ரிசிப்பி சொன்னேன்.

’செய்லாம்டி எங்க.. சஜோபனுக்கு இப்டியான டிஷஸ் பிடிக்காது. கருண் குட்டிமாமா செஞ்சு குடுத்த பிளாக் சிக்கன் தவிர வேற சாப்டாது. சேரன் எடுவை எடுத்திட்டு இருக்கும். அப்பாவுக்கு செஞ்சு குடுக்கறேன்’ என்றார்.

‘அது என்ன குட்டிமாமா செஞ்ச ப்ளாக் சிக்கன்?? ரஜி எப்போ இப்டிலாம் சமைக்க ஆரம்பிச்சான்??’ என்று ஆச்சரியமானேன்.

’அது நாங்க அங்க போயிருந்தப்போ ரஜி பறவை மீன பொரிச்சுக் குடுத்தான். மீன்னு சொன்னா கருண் சாப்டாரேனுட்டு சிக்கன்னு சொன்னேன்.. அது கருப்பா இருந்ததால அதுக்கு பிளாக் சிக்கன்னு கருண் பேர் வச்சிட்டார்' அப்டின்னா.

நான் கூட மஷ்ரூம் சமைச்சுட்டு பீஃப்னு சொல்லி வெள்ளிக்கிழமைல இவங்களுக்கு குடுத்திட்டு இருந்தேன். மாமியார் இது மஷ்ரூம் ஆனா பீஃப்னு சொல்லி அம்மா தருவாங்கன்னு சொல்லின நாளில இருந்து அவங்க உஷாராயிட்டாங்க. சமைக்க முடியலை. அப்புறம்தான் தெரிஞ்சது மாமியாருக்கு மஷ்ரூம் உவ்வேன்னு. ஆனால் சோயாமீட் மாமியாருக்கு பிடித்தம்ன்றதால இன்றுவரை வெள்ளில மட்டன்னு போயிட்டு இருக்கு.