Pages

  • RSS

29 September, 2011

சது இல்லைனா சத்.

‘அம்மா மங்கா தா படமா பார்க்கறிங்க??’

என்ற சது என் சிரிப்பில் வழக்கம் போல் மிரண்டு போனார்.

‘ஓம்.. எப்பிடித் தெரியும் உங்களுக்கு??’ என்றேன்.

‘அப்பம்மா கூட தூங்கறப்போ டிவில மங்கா தா 50ன்னு  வந்திச்சு’ என்றார்.

அவர் Mankatha வை அப்படி படித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தால் மாங்கா தா என்று படித்திருப்பாரோ??

தமிழ் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். கண்ணன் வந்தது என்றார். திணை என்று மிரட்டாமல் இலகுவாகப் புரியவைத்தேன். புரிந்ததை சரி பார்க்க சில உதாரணங்கள் கேட்டேன். இந்த உதாரணம் கேட்டல் சரி பார்த்தல் என்பது சமயங்களில் பல சிக்கல்களில்/சிரிப்புகளில் விட்டுவிடும் என்பது நீங்களும் அறிந்ததே. திருடன் என்றதும் வந்தது என்றார். ஏனென்று கேட்காமலே அவங்க தான் கெட்டவங்க ஆச்சே அவங்களுக்கு எதுக்கு மரியாதை. அதுவே போதும் என்றார். பிள்ளைக்குப் புரிவது திருடனுக்குப் புரிந்தால் எவளவு நன்றாக இருக்கும்.

ஒழுங்காக விளையாடிக்கொண்டு இருந்தார்கள். என் கண்ணே பட்டுவிட்டது போல. அம்மு திடீரென்று பஞ்சாயத்துக்கு கூப்பிட்டார். இருங்கம்மா நான் சொல்றேன் என்று சதுவே ஆரம்பித்தார். அதாகப்பட்டது ஞாயிறன்று டிவி பார்க்கும்போது கொறிக்க வாங்கலாம் என்று அவர் சொன்ன சிப்ஸ் ப(b)ஷ் (அதாங்க.. ஆய்) டேஸ்ட்டா இருக்கும் வேற வாங்கலாம்னு அம்மு சொன்னாங்களாம். அப்டினா அக்காச்சி பஷ் சாப்டிருக்காங்களா?? அப்டி இல்லைனா அவங்களுக்கு எப்டி அந்த டேஸ்ட் தெரிய வந்தது?? இதுக்கு என்ன தீர்ப்பு சொல்ல முடியும்??

அம்முக்கு ஸ்கூல் லேட்டாக முடியும் நாட்களில் வழக்கமாக தனியே வருவேன் அதான் வளந்துட்டோம்ல என்பவர் அன்று முடியாது என்றதால் அவரை ஆஃபீஸில் விட்டுப் போனார் மாம்ஸ். நான் வாங்கி வைத்திருந்த சான்விச், ஜோடா, கேண்டி என நொருக்கியவர் வீடு வரும் வழியில் அதிகம் பேசாது வந்தார். உண்ட களையோ என நானும் கையை வருடிவிட்டபடி பேசாமலே வண்டியை ஓட்டினேன்.

‘அம்மா.. உங்களுக்கு சிறீலங்கா போணும்னு ஆசை இல்லையாம்மா??’

திடீரென்று கேட்டதும் மலைத்து சுதாரித்து ‘ம்ம்.. இருக்குப்பா.. ஏன் கேக்கறிங்க’ என்றேன்.

‘இல்லை எனக்கென்னவோ உங்களுக்கு அங்க போய் எல்லாரையும் பாக்கணும்னு ஆசையா இருக்குமோன்னு தோணிச்சு.. அதான் கேட்டேன்’ என்றார். ஆசை இல்லை பேராஆஆஆசையே இருப்பதைச் சொன்னேன்.

‘அங்க சண்டை இல்லைனா இங்க நீங்க வந்திருக்கமாட்டிங்க இல்லை. நானும் அங்கவே பிறந்திருப்பேன். நான் அங்க பிறந்திருந்தா நீங்க என்ன தமிழ் பேசு, தமிழ் படின்னு சொல்லி இருக்கமாட்டிங்க இல்லை’ என்றார்.

வெயிட்ட்ட்ட்ட்.. நீங்கள் நினைத்ததையே நானும் நினைத்தேன். ஆனால் அவர் தொடர்ந்து சொன்னதை கேளுங்கள்.

‘அதுக்கு பதிலா இங்லிஷ் படி, இங்லிஷ் பேசுன்னு சொல்லி இருப்பிங்க’ என்றார். நான் வேறென்ன சொல்வேன்??அவ்வ்வ்வ் தான்.

முன்போல் ஹக், கிஸ் கேட்டதுமே/கேக்காமலே எல்லாம் இப்போது கிடைப்பதில்லை. தூங்கச் செல்லும்முன் குட்நைட் ஹக் வேணும்னா கீழ வாங்க என்கிறார். இல்லையென்றால் இதோ இப்போது போல குளிச்சிட்டு அப்படியே கீழ தூங்கிடுவேன். மறுபடி மேல வரமாட்டேன் அதான் இப்பவே ஹக் என்று கொடுக்கிறார். சரி அவர் போக்கிலேயே விட்டுவிடலாம் என்றால் கள்ளச்சிரிப்போடு உங்களுக்கு இப்போ என்னவோ வேணும் போல இருக்கே என்று இறுக்கி அணைத்து பெற்ற மனதை இன்னமும் பித்தாக்குகிறார்.

இதை சொல்ல மறந்துவிட்டேன். எப்போதும் இருவர் பெயரையும் முழுதாகவே நானும் மாம்சும் கூப்பிடுவோம். காரணம் அப்போதுதான் பெயரின் பலன் கிடைக்கும் என்பதாயும் இருக்கலாம். அவரை சது என்றோ இல்லை சத் என்றோ கூப்பிட வேண்டுமாம். அவருக்கு அதுதான் பிடிக்குமாம். எனக்கென்னவோ தம்பி, கண்ணா, ஐயா, ஐயாச்சி, ராசா, கண்டுக்குட்டி, செல்லக்குட்டி என்றுதான் வருகிறதே தவிர அந்த சது அல்லது சத் வரவே மாட்டேன் என்கிறது. பார்ப்போம்.

 121 126

002

இந்தப் பிறந்தநாளை ஸ்விம்மிங் பூலில் ஃப்ரெண்டன்களோடு கொண்டாடப் போகிறார். அவரே வந்து தனக்குப் பிடித்த கேண்டீஸ் வாங்கி, தானே பேக் செய்தும் வைத்திருக்கிறார். இதுவரை இது என் வேலையாக இருந்தது. அவர் கேட்ட brownies செய்தாயிற்று. வீட்டில் பார்ட்டி ஒழுங்கு செய்த பின் எல்லாரையும் அழைக்கிறேன்.

என் கண்ணன் என்றும் நலமாய் வாழ என் அப்பன் துணை இருக்கட்டும்.

ஹாப்பி பர்த்டே சத். லவ் யூ கண்ணா.

22 September, 2011

வாழ்க வளமுடன்!!

இப்படி ஒரு ஆத்மார்த்தமான விஜய் ரசிகரை நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கு கார்க்கி என்றதுமே நினைவுக்கு வரும் இரண்டாவது விஷயம் விஜய் என்பதாய்த்தான் இருக்கும். விஜய் பற்றிய அத்தனை தகவல்களும் அப்படியே தெரிந்து வைத்திருக்கிறார். சமயத்தில் விஜயை விட்டுக்கொடுக்காமல் பேசுவது போல் தோன்றினாலும் அவரின் தவறுகள், குறைகளை சொல்லிக்காட்டுவதிலும் கலாய்ப்பதிலும் எப்போதும் முன் நிற்பார். விஜய் பற்றிய ஒரு தொடரை அழகிய தமிழ்மகன் விஜய் என்ற தலைப்பில் 600024.com என்ற என்ற இணையத்தளத்தில் எழுதி வந்தார். புதியதான தகவல்களோடு புதிய படங்களையும் சேர்த்து மிகவும் நன்றாக வந்திருந்தது அந்தத் தொடர்.


காவலனில் ஸ்டெப் ஸ்டெப் பாடல் வந்த பொழுது அதன் காட்சியமைப்பு இப்படியாக இருக்கும் என்று எனக்குள் ஒரு கற்பனை வரும் அளவுக்கு அந்தத் தொடரின் முதல் பாகத்தையே கலக்கலாக எழுதி இருப்பார். படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்.


"சென்னையின் முக்கிய ஏரியாவில் இருக்கிறது அந்தக் கல்லூரி. படிப்பிற்கும் சரி.. மற்ற எக்ஸ்ட்ரா கரிக்குலருக்கும் சரி. பெயர் போன கல்லூரி அது. தமிழ் சினிமாவுக்கு அதிக நன்கொடைகள் வழங்கிய கல்லூரிகளில் முக்கியமானதும் கூட. ஒரு மழைக்கால மாலை வேளையில், பரந்து விரிந்த அந்தக் கல்லூரியின் வளாகத்தில் இருந்து வெளியே வந்தது மொத்தம் நான்கு பேர் கொண்ட குழு. அதில் ஒருவன் மட்டும் பார்க்க படு ஸ்மார்ட். சிறிய கண்கள். முறையாய் வாரப்பட்ட தலை. எளிமையான டிஷர்ட். அதற்கேற்ற ஜீன்ஸ். பார்ப்பதற்கு நம்ம ராஜாவா இவன் என்ற சந்தேகத்தை எல்லோருக்கும் எழுப்பும் உருவம் என்றாலும் ஏதோ ஒரு காந்த சக்தி இருந்தது அவனிடம். குறிப்பாய் அவனது கண்களில
நால்வரும் ஐஐடியில் நடக்கும் மகா மெகா கலை நிகழ்ச்சிக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். ஸ்மார்ட் பாய் தான் குழுத்தலைவன். அப்போது மரண ஹிட்டான ராக்கம்மா கையைத் தட்டு பாட்டிற்கும், மைக்கேல் ஜேக்ஸனின் பீட் இட் பாட்டிற்கும் ஒத்திகை எல்லாம் கனகச்சிதமாக முடித்திருந்தார்கள். முதல் பாதியில் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைலில் பட்டன் திறந்த சட்டையுடனும், எம்.ஜே பாடலுக்கு கருப்பு நிற மெட்டாலிக் உடையுடனும் ஆட திட்டம். மேடையேறும்போது ஒழுங்காய் இருந்த சட்டையை, இசைத்தொடங்கும் போது ஒவ்வொரு பட்டனாக கழட்டி, ரஜினி ஸ்டைலில் ஒரு முடிச்சு போட, அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கியது. 60 வயலின்களும் டன்..டன்ன்ன்டன்ன்ன் என்று தொடங்கிய நேரம் ஸ்மார்ட் பாய் ஆட ஆரம்பித்தான். உடன் இருந்தவர்கள் ஒவ்வொருவராக தொடர கைத்தட்டல் சத்தம் உச்சம் தொட்டது.
ரஜினி மாதிரி ஆடுறாண்டி.. செம ஸ்மார்ட் இல்லை. கண்ணை பாறேன்.. என ஸ்டெல்லா மேரிஸ்களும் எத்திராஜ்களும் கிசிகிசுக்க ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தான். திடிரென அரங்கெமெங்கும் இருள் கவ்வ, ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்ற சத்ததின் நடுவே விளக்குகள் மின்னின. மேடையில் ரஜினி போய் மைக்கேல் ஜேக்சன் வந்திருந்தார். உடன் வேறு யாரும் இல்லை. ஸ்மார்ட் பாய் மட்டும். பீட் இட் பாட்டின் பீட் ஒலிக்க ஆரம்பித்தது. ஸ்மார்ட் பாயின் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் அரங்கம் அதிர்ந்துக் கொண்டேயிருந்தது.
நிகழ்ச்சி முடிந்து பரிசுகள் அறிவிப்பின் போது பிரச்சினை வெடித்தது. வெத்தல் போட்ட சோக்குல என்று ஆடித்தீர்த்த ஒரு குழு தங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைக்க வேண்டுமென்ற சண்டையில் இருந்தனர். அரங்கம் முழுவதும் ஸ்மார்ட் பாயின் பெயரை சொல்லி கோரஸாக கத்த ஆரம்பித்தது. வெறுப்பின் உச்சிக்கு போனவர்கள் ஸ்மார்ட் பாயிடமே யார் ஆட்டம் என்று கேட்டனர். உங்க ஆட்டம்தான் சூப்பர் என்றான். முதல் பரிசு அவர்களுக்கு சென்று விட, இரண்டாம் பரிசு வாங்க மேடைக்கு வந்தவன் சொன்னான் “நான் ஸ்டேஜுல மட்டும்தான் ஆடினேன். அவங்க இறங்கியதக்கப்புறமும் ஆடுறாங்க.அதனால் அவங்களுக்குத்தான் முதல் பரிசு போகணும்”. மொத்த ஸ்டேடியமும் எழுந்தி நின்று கைத்தட்ட ஒரே நாளில் சூப்பர் ஹீரோவாக ஆனவன் சிரித்துக் கொண்டே சென்றான்.அந்தக் கல்லூரி லயோலா. அந்த ஸ்மார்ட் பாய் இளைய தளபதி.
நியாயப்படி விஜய் பற்றிய தொடர் அவரது ஸ்டைலில் இப்படித் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் விஜயின் சினிமாவுக்கு முந்தையை வாழ்க்கை அப்படி இருக்க வில்லை. வகுப்பில் கடைசி பென்ச், மற்ற விஷயங்களில் எதுக்குடா அதெல்லாம் நமக்கு என்ற எண்ணம். படிப்பில் சுமார், பார்க்க ரொம்ப சுமார் என்றே இருந்தார். கலைந்த தலை, ஒல்லியான தேகம், ஜிகினா சட்டை என ரோமியோக்களின் எந்த சாயலும் இல்லாமல் இருந்தார் நம்ம இளைய தளபதி. படிப்பிலும் நாட்டமில்லாமல், சினிமாவுக்கென எந்த தகுதியுமில்லாமல் இருந்த விஜய் எப்படி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமானார்? பார்க்கவும் சுமார், நடித்த அனுபவமும் இல்லை என்ற நிலையில் இருந்து விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை என்றழைக்கும் படி எப்படி வளர்ந்தார்? விஜயின் சினிமா பயணத்தை முடிந்தவரை விரிவாக அலசப்போகிறது இந்த தொடர்."


எனக்கு தியேட்டரில் போய் அந்த பாடல் காட்சி பார்த்ததும் சிறிது ஏமாற்றம் வந்தது பற்றி முன்னாடியே சொல்லி இருக்கிறேன். என்னதான் கதைக்காக அப்படியாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது விஜய் ரசிகையாக என் விருப்பம்.


இப்போதெல்லாம் கார்க்கி அதிகம் எழுதுவதில்லை என்ற குறை அதிகம் இருக்கிறது. ஆனாலும் அதற்கும் சேர்த்து வைத்து நடிப்போடு குறும்படத் தயாரிப்பிலும் கால் வைத்திருக்கிறார். இன்னும் பல வெற்றிகளோடு வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற என் பிள்ளையாரை மனதார வேண்டிக் கொள்கிறேன். அவரின் பிஸி ஷெட்யூலில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கென்று ஒரு முழு நாள் லீவ் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் ஒரு நாள் என்றால் இவருக்கு மட்டும் 23, 24 என இரண்டு பிறந்தநாள்கள். அதனால் ட்ரீட் வேணும் என்பவர்கள் உடனடியாக சாளரத்தைத் தட்டுங்கள். 


இன்று போல் என்றும் உங்கள் மனதில் சந்தோசம் மலர்ந்து நிறையட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்க்கி.

இணைய தளபதிக்கு ஸ்பெஷலாக இளைய தளபதியின் பாடல் பரிசு.

08 September, 2011

என் அடாவடித் தோழிக்கு!

தலைப்பை படிச்சியா. இப்டித்தான் உன்னை சொல்லத் தோணுது விஜி. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தோழிகள்ல என் உயிர் நட்பு தவிர வேற யாரையும் நான் ஒருமையில சொன்னதில்ல. அவளுக்கு அடுத்து நீ தான்.

பதிவுலகம் வந்த புதிதில எப்பவோ உன்னோட ஒரு போஸ்ட் படிச்சேன். அது என்னன்னே மறந்திட்டேன். ஆனா உன்னோட ப்ரஃபைல்ல இருந்த மயில் மட்டும் நினைவிருந்தது. அப்புறம் வேற பதிவுகள்ல உன் கமண்ட்ஸ் பார்த்தேன். மறுபடி எப்போ உன் பதிவு தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்னு நினைவில்ல. திடீர்னு ஒரு நாள் உன் மெயில் ஐடி குடுத்தே. முதல் நாள் சாட் இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது. நான் இங்க எப்டி முழிச்சிட்டு (மிரண்டுட்டுன்னும் சொல்லலாம்) இருக்கேன்னு தெரியாம நீ பாட்டுக்கு நீ, வா, போன்னு பேசிட்டு (டைப்பிட்டு) இருந்தே. ரெண்டு மூணு தடவை மரியாதைப் பன்மையா வழக்கம் போல பேசினேன். அப்புறம் என்னை அறியாமலே நானும் நீ, வான்னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன்.

இத்தனை நாள்ல எவ்ளோ நேரம் சாட்/மெயில் பண்ணி இருப்போம். ஆனாலும் பல வருஷம் நட்பா இருந்த ஒரு உணர்வு தானா வந்திடிச்சு. எல்லாரோடும் பேசினாலும் ஒரு சிலர்ட்ட தான் இந்த உணர்வு வரும். உன்னட்ட பேசின உடனவே உன்னோட கலகலப்பும், குறும்பும் அப்படியே சந்தோஷமா மாறி மனசை நிறைக்கும். எப்பவாச்சும் நீ கொடுக்கிற அட்வைஸ்/டிப்ஸ் கூட சமயத்தில உதவியா இருக்கும்.

பதிவுலகம் (யாருக்கும்) நிரந்தரம் இல்லை. காலம் எப்படி மாறும்னு சொல்ல முடியாது. ஆனாலும் அதுக்கு அப்புறமும் உன் நட்பு தொடரணும்பா. உன் வீடு வந்து, உன் கலாய்த்தல்ல திணறி, பப்புவோட பல்பில பிரகாசமாகி, வர்ஷாவோட டான்ஸ்ல நிறைவாகி, ராம் என்ற புண்ணியாத்மாவை தரிசிச்சு.. உஸ்ஸ்ஸ்(இது நீ சொல்லிக்கோ).. நல்ல நாளதுவுமா உன்னை அதிகம் பயமுறுத்தல. ஆனா உனக்கு என் தொல்லை தொடரும் தாயீன்னு சொல்லி முடிச்சுக்கறேன்.

நல்ல்ல்லா என்ஜாய் மாடி. நிறைய்ய்ய்ய ஐஸ்க்ரீம் முழுங்கு. என்னிக்கும் இதே சந்தோஷத்தோட இரு. கிஃப்ட்ல எதுனா மாந்தளிர் நிறத்தில  கிடைச்சா பாத்திட்டு பத்ரமா எனக்கு பார்சல் பண்ணிடு.

பிள்ளையாரப்பா.. விஜிய மட்டும் காப்பாத்து.. அவ எங்க எல்லாரையும் காப்பாத்துவா!!

ஹாப்பி பர்த்டே டியர் :)