Pages

  • RSS

24 July, 2009

டேக் சுவீட்டு, அண்ட் டான்சு...

ஹலோ ஹவ் ஆர் யூ பீப்பில்ஸ்.... நல்ல ஹாப்பியா இருக்கீங்களா? அதை இன்னும் கூட்ராப்ல ஒன் மாட்டர்.

ஆத்தா எனக்கு லீவு உட்டாச்சு..................

அப்டீன்னு இன்னைக்கு ஒர்க் முடிச்சு வீடு ரிட்டேனிங்க்போது கத்திக்கிட்டே வந்தேன். சுசிக்கு லீவு. சேம் டூ யூ. ஒய்னா சுசியை லண்டன் பிக்சிட்டி இருகரம் நீட்டி வரவேண்டாம் ப்ளீஸ்னு கெஞ்சிக் கிட்டிருக்கு. அதுக்குன்னு போகலேன்னா எப்டி? இதுக்கெல்லாம் ஒரி பண்ணிக்கிற ஆள்னா பதிவுலகத்துக்க ரைட் லெக்க வச்சு வந்திருப்பேனா? டூ வீக்ஸ்தான். மறுபடியும் வந்திருவேன். யாருக்காவது மைல்டா அட்டாக்? பரவால்ல டெல் மீ, டெல் மீ.

அதுக்குன்னு சும்மா படிச்சிட்டு போலாம்னுதானே நினைச்சீங்க? ஞாயிறு ஈவ்னிங்க்தான் ஃப்ளைட்டு. அது வரைக்கும் இங்கனவே கண்ண வச்சிட்டு சுத்திக்கிட்டே இருப்பேன். கமென்ட் போடலேன்னா? டூரு கான்சல்! சொல்ட்டேன்.

சுசிக்கு எதனா ஆகி நாம எஸ்கேப்பிக்கலாம்னு நினைச்சு நீங்க இந்த தேங்கா உடைக்கிறது, மண் சோறு, தீ மிதிக்கிறது, மொட்டை போடறது, காவடி எடுக்கிறதுன்னு சிலபல வேண்டுதல்களை ப்ளாக்காண்டவருக்கு வைப்பீங்க. எத வேணா வைங்க மக்கா. ஆனா பொட்னு போறா மாதிரி செஞ்சுருங்க. அது சாட்டர்டே நடக்காமலும் பாத்துக்குங்க.

அப்புறம் கைவசம் டென் அவார்டுங்க இருக்கு. வந்ததும் குடுத்து கௌரவிச்சிடுறேன். அப்புறம் லண்டன்லேர்ந்து என்ன கொண்டு வந்தீங்கன்னு நீங்க கேக்கக் கூடாதில்ல.

வேற என்னங்க? ரொம்ப டாங்க்சு. உங்க கிட்ட டாக்கினது மூலமா மை இங்கிலிபிஸ்ஸும் இம்ப்ரூவ் ஆயிட்டதுல மீ டூ ஹாப்பி.

அ.... பை பை,

அ.... சி யூ...

அ... டாட்டா.....

நோ ஃப்ளையிங் கிஸ்ஸு. அத மானாட மயிலாடவில போய் சண்டே வாங்கிக்குங்க.

22 July, 2009

சுசி போட்ட ரிவர்ஸ்....

எல்லாரும் நலமா மக்களே!

ஓகே. அப்டீன்னா அப்டியே பதினேழாம் தேதி வெள்ளிக் கிழமைய நோக்கி ரிவர்ஸ்ல வாங்க.

வந்திட்டீங்களா? இப்போ மணி நாலு முப்பது. பொட்டிய மூடி வச்சிட்டு வீட்டுக்கு கிளம்பறேன். கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் கழிச்சு வீட்டு முன்னாடி வண்டிய நிறுத்தி ரிமோட் எடுத்து garage கதவ திறக்கிறேன். ஒரு வழியா லாரிய நண்பர்கள் எங்க வண்டிக்கு வச்ச செல்லப் பெயர் உள்ள ஏத்தினதும்தான் ஞாபகம் வந்திச்சு. அடடா நாளைக்கு barbecue party க்கு நண்பர்கள கூப்ட்ருந்தோம், எதுவும் வாங்கலையேன்னு. சரி இப்பவே அதையும் முடிச்சிரலாம்னு ரிவர்ஸ போட்டு பின்னாடி எடுத்.. டமார் படார்னு கலவையா ஆனா பயங்கரமா ஒரு சவுண்டு. சுருக்கமா #"@#$%^&*@#$$%!@#$%^&*இப்டி.

ஒண்ணும் இல்லீங்க உள்ள வந்ததுமே வழக்கம்போல ரிமோட்ட அழுத்திட்டேன். கதவு அதுங் கடமைய செய்றதுக்காக மூட ஆரம்பிச்சிருக்கு. நான் ரிவர்ஸ்ல வர்றேன்னு அதுக்கு தெரியுமா என்ன! உடனடி நடவடிக்கையா ரிமோட்ட மறுபடி அழுத்தினதால லாக் ஆகி கதவு நின்னிடுச்சி. நல்லவேள ஸ்டெப்னிக்குள்ள கதவு மாட்டிக் கிட்டதால சேதாரம் கொஞ்சம் கம்மி. மிட்சுபிஷி பஜீரோ இப்போ பிஞ்சரோ ஆய்டிச்சு. சம்பவ நேரம் குணாவும் பசங்களும் வீட்ல இல்ல. இவ்ளோ பெரிய சமாசாரத்த சூ மந்த்ரகாளி போட்டா மறைக்க முடியும்? வந்ததும் குணா பாத்திட்டாரு. கதவுதான் மறுபடி மூட மாட்டாம நிக்குதே.கேள்வி நம்பர் ஒண்ணு.ஏய் என்னடி ஆச்சு? அது வந்துப்பான்னு ஆரம்பிக்கும்போதே கேள்வி நம்பர் ரெண்டு நெனப்ப எங்க வச்சிட்டு வந்தே? ..................................................................................................................... இருங்க, குணா திட்டும்போது சுசி எதுவும் பேச மாட்டா. அவர் திட்ற டைம்ல நாம நெனப்ப நான் எங்க வச்சேன்னு பாத்திர்லாம். 15 min. ரிவர்ஸ்ல வாங்க.

புறப்படறதுக்கு சற்று முன் அக்கா கிட்ட இருந்து ஒரு மின்னஞ்சல். மவளே இன்னிக்கும் நீ எனக்கு கால் பண்ணலன்னு வச்சுக்கோன்னு ஆரம்பிச்சு தங்கச்சீங்கிரதினால கெட்ட வார்த்தை எதுவும் போடலை எக்கச்சக்கமா எழுதி இருந்தா. கட்டாயம் கால் பண்ணனும்னு நெனச்சேன். படிச்ச பதிவுக்கெல்லாம் மறக்காம பின்னூட்டம் போட்டேனான்னு நினச்சேன். அப்போ பாத்து Byonce Knowels பாடின Halo ப்ளே ஆச்சா அப்புறம் எந்த நினைவும் இல்ல. எத்தன வாட்டி சொல்றது பாட்ட போட்டுக் கிட்டு டிரைவ் பண்ணாதேன்னு. அது அலறலேன்னா இசை ரசிகர்கள் குணாவை மன்னிக்கட்டும் கதவு மூடுற சத்தம் கேட்டிருக்கும் இல்ல. சின்னதா ஒரு பாயின்ட் இருக்குதோ?

நான் ஏன் குணா திட்டும்போது கம்னு இருக்கேன்னு நீங்க கேக்கலேன்னாலும் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?
கேட்டுக்குங்க. ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு அவர் சந்தோஷப்படுவார். ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப் ஆயிடுவார். மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு எனக்கும் ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

இவ்ளவுக்கும் சுசி ஸ்டேடியாதான் இருந்தா. கடைசீல ஒண்ணு சொன்னார் பாருங்க. அப்போதான் லைட்டா கண்ல தூசி. மத்தபடி தப்பு பண்ணினா சுசி அழமாட்டா. லண்டன் போம்போது நகைக்கடைக்கு போணும்னு சொல்லிட்டிருந்தே இல்ல ன்னு மனச் சாட்சியே இல்லாம சொல்லிட்டாரு. ரெண்டு நாளா நான் அவர்கூட பேசல. நீங்க நினைக்கிறாப்லையே அவர் ஓவர் நிம்மதியா இருக்காரேன்னுட்டு மறுபடி பேச ஆரம்பிச்சிட்டேன். அதுவும் இன்னைக்கு பன்றிக் காய்ச்சலோட அறிகுறி என்னன்னு பன்றிக்கறி சாப்டுக் கிட்டே அவர் கேட்டப்போ நான் சொன்ன பதிலோட லைஃப் பழைய ஃப்ளோல போக ஆரம்பிச்சிடிச்சு.

அப்டியே நீங்க நிம்மதியா இருக்கிறதா பதிவாண்டவர் சொன்னாரா அதான் மனசு கேக்கலை. என் பதிவ போட்டுட்டன்.வரட்டுமா உறவுகளே!

20 July, 2009

சுசிக்கும் விருது....

எல்லாரும் நல்லா இருக்கீங்களா உறவுகளே? நான் நல்லாவே இல்ல. ஏன்னு இப்போ கேக்காதீங்க. அழ எல்லாம் மாட்டேன். எழுதீருவேன் அப்புறம் நீங்க அழுவீங்க. மேல படீங்க.

சுசிக்கும் விருதாமே.... ?! நம்பவே முடியவில்லை.

நன்றி சந்ரு. எனக்கு பதிவுலகில் கிடைத்த முதல் அங்கீகாரம். நான் பாட்டுக்கு ஏதோ எழுதிக்கிட்டு இருக்கேன். உருப்படியாவும் ஏதாவது எழுதணும்னு நினைக்க வச்சிட்டீங்க. என்னோட எழுத்துக்காக இல்லேன்னாலும் சின்ன வயசுல சின்னண்ணன் பிடிச்ச பட்டாம்பூச்சீங்களை எல்லாம் அவன் கூட கட்டிப் புரண்டு சண்டை போட்டு பறக்க விட்டு உயிர் காத்த சமூக சேவைக்காக வேணா கட்டாயம் ஏத்துக்கிறேன். மீண்டும் நன்றிகள் சந்ரு.

குறிப்பா நான் இன்னைக்கு இருக்கிற மனநிலைக்கு எனக்கு இது பெரிய ஆறுதல்.

சந்ரு மொத்தம் ஆறு பட்டாம்பூச்சீங்கள என் பக்கமா பறக்க விட்டாரு. இதில ஒண்ண மட்டும் வச்சிக்கிட்டு மத்த அஞ்சையும் யார் கிட்டயாவது கொடுத்திரணும்னு சொல்லி இருக்காரு. அத நானும் ரிப்பீட்டே.

நான் ஒண்ண சாளரம் கார்க்கிக்கு வழங்கிக்கிறேன். இவர் ஒரு ஐடியா திலகம். விளையாட்டுத்தனமா பதிவுகள போட்டாலும் திடீர்னு சிந்திக்கவும் வச்சிடுவார். சண்டைக்கு அஞ்சாதவர். எனக்கு பின் பிறவா என் தம்பி.

இன்னொண்ண பிரியமுடன்......வசந்த் க்கு வழங்கிக்கிறேன். படம் போட்டே சமூகத்தில விழிப்புணர்வ ஏற்படுத்திக் கிட்டு வர்றாரு. சில படங்களைப் பாத்து மிரண்டதில என் தூக்கம் பறிபோன பாவத்துக்கு சொந்தக்காரர்.

இன்னொண்ண இது என்னோட இடம். தமிழ் பிரியனுக்கு வழங்கிக்கிறேன். சின்னதா ஒரு சோக டச்சிங்கோட எழுதுவாரு.என்ன அன்போட அக்கான்னு கூப்ட என் முதல் பதிவுலக தம்பி.

இன்னொண்ண பிரிவையும் நேசிப்பவள்.. காயத்ரிக்கு வழங்கிக்கிறேன். காதல் கவிதை அதுவும் ரொம்ப பீலிங்கோட இவங்க எழுதுவாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.

இன்னொண்ண சொல்லரசன் க்கு வழங்கிக்கிறேன். எலக்சன்னாலே சக பதிவர்களுக்கு இவர் ஞாபகம்தான் வருமாம். சமுதாய சிந்தனைகளோட பதிவு எழுதுவார்.

அப்புறம் என்ன? ஸ்வீட் எடுத்து கொண்டாடி மறக்காம எனக்கும் அனுப்பி வச்சிடுங்க.
மீண்டும் சந்திக்கிறேன்.

14 July, 2009

இளமைக் காலங்கள் தொடர்கின்றன....

எல்லாரும் நல்லா இருக்கீங்களாங்க? அப்போதான் நான் நல்லா இருக்க முடியும். ஆபீஸ்ல என் பிராஞ்ச்ல என்னத் தவிர எல்லாரும் லீவில போய்ட்டாங்கங்க. அட இந்த காப்ல பதிவா போட்டுத் தாக்கலாம்னா மத்தவங்க விட்டாதானே. ஹேய் சூஷீ! நீ தனியாவா இருக்கேன்னுட்டு வந்து ஆளாளுக்கு மொக்கையா போட்டுத் தாக்கராங்கங்க. நான் என்ன செய்யட்டும்? அலப்பரய பாரு இந்தப் புள்ளைக்கு. அது உன் நல்ல நேரம்டி. இல்லேன்னா அதுக்கப்புறம் உன் மொக்கைப் பதிவுப் பக்கம் யாருமே தல வச்சும் படுத்திருக்க மாட்டாங்கடியோய் ஏங்க இப்போ எதாவது உங்களுக்கு கேட்டிச்சு? ஏதும் கிராஸ் பதிவா இருக்கும். சரி நான் எங்க விட்டேன்?

முதலாம் வகுப்புக்கு போன முத நாளே அம்மா ஆர்டர போட்டுட்டாங்க. அட என் அம்மாவ சொன்னேங்க இனி தாத்தால்லாம் சைக்கிள்ள வச்சு மிதிக்க முடியாது. சின்னண்ணன் கூட சமத்தா நடந்து வந்துடு என் செல்லக் குட்டீன்னு. முதலாம் வகுப்பு வந்ததும் நடைங்கிறது எங்க வீட்ல எழுதாத சட்டம். இவ்ளோ நாள் ஜாலியா சைக்கிள்ள போகும்போது எதுவும் தெரீல. நடக்கும்போது எத்தன தொல்லை? ஊர்ல உள்ள ஆடு,மாடு,நாய்,பஸ்சு,லாரி,பெருசா மீச வச்ச ஆளுங்க,தடி தடியா பொம்பளைங்க எல்லாரும் என் எதிர்க்கவே வரணுமா என்ன? அதுவும் ரெண்டாவது வாரமே பஸ்சுக்கு ஒதுங்கறேன் பேர்வழின்னு கொஞ்சம் ஓவரா ஒதுங்கிட்டேன் குளத்தில முங்கி சாகப் பாத்தேன். சின்னண்ணன் மட்டும் சவுண்டு குடுக்கலேன்னா ஆள் க்ளோஸ். ஜஸ்ட்டு மிஸ்ஸு. இது நான் முன்னாடி சொன்ன கண்டம். இங்க டீச்சர் பேரு தேவி. சின்னண்ணனுக்கு அவங்க டீச்சர் சில சமயம் எக்ஸ்ட்ராவா ஒரு மணி நேரம் டியூஷன் வைப்பாங்க. அப்போ நான் அவன் பக்கத்தில உக்காந்துக்க எனக்கு பர்மிஷன் குடுத்தாங்க. சின்னண்ணன் ரொம்ப நோண்டி. ரெண்டு வாட்டி ஸ்கேலால அவன் கையில டீச்சர் நல்லாவே கவனிச்சு கிட்டாங்க. பொறுத்துக்கிட்டேன். மூணாவது வாட்டி அடிச்சதும் நான் அவ்வ்வ்வ்வ்... வீட்ல போயும் ஒரே அவ்வ்வ்.. என் க்ளாசிலேயும் அவ்வ்வ்வ்... அப்புறம் சின்னண்ணன் தான் இனிமே சமத்து பிள்ளையா அடி வாங்காம இருக்கேன்னு சொல்லி, அப்பா அம்மா டீச்சர் கிட்டயும் பேசி, டீச்சர் இனிமே அவனுக்கு வலிக்காம அடிக்கறதா என்கிட்ட சொல்லி ஒரு வழியா கண்ணீர் காண்டம் முற்றும்.

இனி எல்லாரும் ரெண்டாம் வகுப்புக்கு போவோமா. இங்க எல்லாரும் ரொம்ப சமத்தா சுசி மாதிரியே இருக்கணும். ஏன்னா புதுசா வந்த குறள்தாசன்கிற பிரின்சிபால்தான் நமக்கு டீச்சர். இப்பவும் இவருக்கு என் மேல ரொம்ப அன்பு. சின்னண்ணன் இப்போ இவர் ஸ்கூல்லதான் டீச்சரா இருக்கான்.சமீபத்துல நடந்த பள்ளி விழாவில சின்னண்ணன் பொண்ண பாத்திட்டு அப்டியே என்ன பாக்றா மாதிரி இருந்ததாவும் தான் எப்பவும் என்னோட ரசிகன்னும் பாராட்டி பேசினாராம். நம்பலைல்ல? எடுங்க சூடத்த!

மூணாம் வகுப்பு ஒரு வித கிலியோடவே முடிஞ்சுது. காரணம் ஸ்கேல் புகழ் சுகுணா டீச்சர். மறந்திட்டீங்களா? வேணா இன்னொரு தடவ எழுதிடட்டுமா? ஓகே ஓகே.... தொடர்ந்து படீங்க.

நாலாம் வகுப்பு நல்ல வகுப்பு. சுகந்தீன்னு ஒரு தேவதையே டீச்சரா வந்தாங்க. ரொம்ப நல்ல மிஸ். அவங்க மிஸ் ங்கிரதனாலயோ என்னமோ ரொம்ப அன்பா இருப்பாங்க எல்லார்கிட்டயும். கல்யாணம் ஆகிப் போயும் ஊருக்கு வர்றப்போ என்ன வந்து பாக்கும்படி சொல்லி விடுவாங்க. அவங்களோட பிரியமான மாணவி நானாக்கும்.

அஞ்சாவது கணேஷ்வரி டீச்சர், குறள்தாசன் சார், சுகந்தி டீச்சரோட ஜாலியா போய்டிச்சு. இப்போ எனக்கு யசோ,லதா, மலர், மின்னி, சுமதி, ராஜி,மதாங்கினி, ரட்ணம், குமார், ஆதி, செந்தில்னு ஒரு நெருங்கின நண்பர் கூட்டம் உருவாய்டிச்சு. சுமதி கூட ஏன்னு தெரியாமலே ப்ளஸ் டூ முடியிற வரைக்கும் பேசிக்கலை. அப்புறமா நாங்க டீச்சிங் இண்டர்வியூ போனப்போதான் பேசிக்கிட்டோம். அவளுக்கும் காரணம் என்னன்னு தெரீலன்னு சொன்னா. இதில இப்போ யசோ,செந்தில் ஊர்ல இருக்காங்க. சுமதி கானடா, லதா லண்டன், ஆதி ஆஸ்த்ரேலியான்னு போய்ட்டாங்க. அட பொருத்தமாத்தான் பயபுள்ளக போயிருக்கு மத்தவங்க எங்கன்னு தெரீல. ரட்ணம் எங்களை விட்டு ஒரேயடியா போய்ட்டான். எட்டாவது படிக்கும்போதே ஸ்கூல விட்டு நின்னுட்டான். நாங்க பத்தாவது வந்தப்போ அவன் உயிரோட இல்ல.
பொழுது போக்குன்னா பாட்டி வீடுதான். எப்பவும் தனியாதா விளையாடுவேன். ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து சாப்டு பாட்டி வீடு போனேன்னா ரொம்ப இருட்டானத்துக்கு அப்புறமாதான் மறுபடி வீட்டுக்கு வருவேன். அதுவும் தாத்தா என்ன முதுகு மேல சுமந்துகிட்டு போவாரு. அஞ்சாவது வந்ததும் தாத்தா லைட்டா மூச்சு வாங்கறத பாத்ததும் நானாவே இறங்கி அவர் கைய்ய இறுக்கி புடிச்சு கிட்டே பக்கத்தில நடந்து போவேன். என் தைரியத்த பத்தி மறுபடி எழுத வேணாமேன்னு பாக்கிறேன்.
விளையாட்னா சுசிக்கு ரஸ்க்கு, போட்டீன்னா ரொம்ப ரிஸ்க்கு. அதென்னமோ தெரீலீங்க வரிசையா விட்டுட்டு பிகில ஊதினாங்கன்னா எனக்கு உதறும். எப்டியோ சிலபல மூணாவது பரிசுகள வாங்கி வச்சிருக்கேன்.

கலை எனக்கு கை வந்த கலை. சித்திரம் கைப் பழக்கம் வரல. அப்போ அதுமட்டும் கலை கிடையாதோ? ஆடல்,பாடல், நாடகம்னா கூப்டு சுசியம்பாங்க.

எனக்கு நினைவு தெரிஞ்சு இவ்ளோ வருஷத்திலேம் ஒரே ஒரு வாட்டி ஹோம் ஒர்க் பண்ணலேன்னு தோப்புக் கரணம் போட்ருக்கேன். நண்பர்கள காப்பாத்தப் போயி ஒரே ஒரு வாட்டி அடி வாங்கி இருக்கேன். யாரும் என்னைய அடிச்சதில்ல, நானும் யாரையும் அடிச்சதில்ல. சின்ன சின்ன வாய்ச் சண்டைகள் போட்டதுண்டு.இப்ப சொல்லுங்க நான் நல்லவளா கெட்டவளா?

நெஜமா நான் சந்ருவுக்கு நிறைய நன்றி சொல்லணும். அம்மாடி... இத தான் மலரும் நினைவுகள்ம்பாங்களா... மறுபடியும் அந்தந்த வயதில வாழ்ந்து பாக்கணும் போல ஆசையா இருக்கு. அது மட்டுமா? எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரியண்ணன், அக்கா, சின்னண்ணன், தாத்தா, பாட்டி மத்த உறவுக்காரங்க, ஊர்க்காரங்கன்னு எல்லாரோடான நினைவுகளும்....

அவ்வ்வ்வ்.... ரொம்ப பீலாயிட்டேன். சத்யமா சொல்றேங்க இன்னைக்கு என்னால தூங்க முடியாது. ரொம்ப அழுகாச்சியா இருக்கு....


இப்போ நான் யாரையாவது கோத்து விடணும்ல. தயவு செஞ்சு இத சாதாரணமா நினைக்காதீங்க. அனுபவிச்சு பாருங்க... நிச்சயமா புரியும். ஏய் போதும்டி உன் புலம்பல். யாரையாவது கூப்பிடுற வழிய பாரு பார்ரா, மறுபடியும் எனக்கு ஏதோ கேக்றாப்லையே இருக்கு. வாஸ்து சரியில்ல, டெம்ப்ளேட்ட மாத்தணும்.

அத்துக்கு மின்னே இத்த படீங்க.
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தாங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்

இது சுசியோட விதி : நான் அழைப்பவர்கள் முதலிலேயே இதை எழுதி இருந்தால் உடனடியாக எனக்கு பின்னூட்டத்தில் அறியத் தர வேண்டும். நான் அடுத்தவரை கோர்க்க சாரி அழைக்க இது உதவியாக இருக்கும்.

முதலாவதா நான் அழைக்கிறவர் என்னோட முதல் பதிவுக்கு, முதல் பின்னூட்டம் போட்டவர் என்னும் மதிப்பிற்குரியவர் ஏதோ சொல்கிறேன்! புகழ் திரு நாகை சிவா அவர்கள்.

இரண்டாவது கவிதை முத்துக்களை கோர்த்து எமக்கு தரும் முத்துச்சரம் புகழ் ராமலக்ஷ்மி அக்கா அவர்கள்.

மூணாவதா கொளுத்திப் போடுறதில வல்லவரான இது என்னோட இடம். புகழ் தமிழ் பிரியன் அவர்களை கூப்பிட்டுக்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸப்பா... ஜில்லுன்னு ஒரு சோடாவ உடச்சு கொண்டு வாங்கப்பா. எவ்ளோ எழுதி குவிச்சிட்டேன்.

அப்றமென்ன கிடைக்கிற காப்ல முட்டையும் பாலுமா உடம்பைத் தேத்திக்கிறேன். வந்து கும்மிய போட்டுட்டு போங்க மக்கள்...

12 July, 2009

இளமைக் காலங்கள்.....

எப்டீங்க? எல்லாரும் நலமா இருக்கீங்களா? அதான் நீ வந்திட்டியே இனி எங்க இருந்து அப்டீங்கரவங்க தொடர்ந்து படீங்க. என் பதிவை படிச்சத்துக்கு அப்புறமும் ஒழுங்கா இருக்கீங்கன்னா நீங்க ஸ்ட்ராங் பார்ட்டீங்கதான். இப்போ சொல்லுங்க நீங்க ஸ்ட்ராங் தானே?

இனி விஷயத்துக்கு வருவோமா. இப்போதான் வரவே போறியா, வெளங்கும். முன்னம் ஒரு காலத்தில சந்ருன்னு ஒரு சக பதிவர் என்னய ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாரு. அதுக்காக அவர் ரொம்ப வருத்தப் படப் போறாருங்கோ அவருக்கே ஞாபகம் வருதோ என்னவோ. இன்னிக்கு அத எழுதிர்லாமேன்னுட்டு களத்தில குதிச்சிட்டேன். உங்க கெட்ட காலம்
என்னோட கல்விப் பயணம் நான் ரெண்டு வயசா இருக்கும்போதே ஆரம்பிச்சிடுச்சாம். என் முன்னாடி பிறந்த மூணு வாலுங்களும் பள்ளி போறது பெரும் அக்கப் போராம், என்னால. அவங்க கைய பிடிச்சுக் கிட்டு நானும் கூல் வாடேன் அப்டின்னு கிட்டு அடம் பிடிப்பேனாம். அப்புறம் அம்மா ஏதாவது பண்ணி என்ன அப்புறப் படுத்தினதும் அவங்க கிரேட் எஸ்கேப். அப்றமா ரொம்ப நேரத்துக்கு வெளி கேட்ட பாத்தாப்லையே வாசப் படீல உக்காந்திட்டிருப்பேனாம். அங்கனையே தூக்கம் கூட உண்டாம். அதனால அம்மா தொல்லையே இல்லாம வீட்டு வேல எல்லாம் முடிச்சிருவாங்களாம்.


இப்போ நான் உக்காந்து முழிச்சிட்டிருக்கேன். வாசப் படீலன்னு அவசரப் பட்டு நினைச்சிடாதீங்க. எனக்கு நாலு வயசு ஆய்டிச்சு. நர்சரி ஸ்கூல் மர பெஞ்சில கிட்டத்தட்ட ஒரு இருபது வாலுங்க புடை சூழ உக்காந்து அழலாமா வேணாமான்னு யோச்சுகிட்டு இருக்கேன்.அவனவன் போடற சௌண்ட பாக்கும்போது தப்பா ஆசப் பட்டுட்டோமோ, ஸ்கூலுன்னா ஏதோ எசகு பிசகா நடக்குமோன்னு லைட்டா பயம் வந்திச்சு. மூத்த வாலுங்க ஒரு வார்த்த சொல்லாம விட்டாங்களேன்னு அவங்கள திட்டினேன். அம்மாவும் அப்பாவும் ரொம்ப பெருமையா பாத்திட்டு நின்னாங்களா சரி போனா போகுதுன்னு உக்காந்திட்டேன். ராஜினின்னு ஒரு பொண்ணுதான் என் பெஸ்டு பிரென்ட். அவ அம்மாதான் டீச்சர். என் தாத்தாதான் எனக்கு இலவச டாக்சி. டீச்சர் பேரு தெரீல. ராஜினி அம்மான்னுதான் சொல்லுவேன். இப்டி ஒரு நெலம வரும்னு தெரிஞ்சிருந்தா அறிஞ்சு வச்சிருப்பேன். இப்போ அம்மாவுக்கு ஃபோன போட்டு கேட்டேனா அவங்க பேரு பவளராணின்னு சொன்னாங்க. அது மட்டுமா! ஏண்டாம்மா நேத்து கூட நல்லா தானே பேசினே. மறுபடியும் ஜூரமான்னு கூடவே ரெண்டு கேள்விய சேத்துக் கேட்டாங்க. அவங்களுக்கு தெரியுமா என் நிலை?

அடுத்து எல்கேஜி. டீச்சர் பேரு கணேஷ்வரி. அம்மாவோட உறவுக்காரங்க. ராஜினி க்ளாஸ்ல மிஸ்ஸுங்கறதால ஸ்டார்டிங் கொஞ்சம் ப்ராப்ளம் ஆயிடிச்சு. அவ என்ன விட ஒரு வயசு கம்மி, டீச்சர் பொண்ணுங்கறதால அங்க வந்தாங்கிறது இப்போ மாதிரி அப்போ புரியலையே. நான் சமத்தா எல்லாம் எழுதி முடிச்சிடுவேன். அதனால மிச்ச நேரம் பூரா மத்தவங்கள சும்மா பாத்துகிட்டே இருப்பேன். சுசி நீ ரொம்ப சமத்து குழந்தடி திடீர்னு டீச்சர் ஒரு புது டெக்னிக்க கொண்டு வந்ததும் மறுபடி ப்ராப்ளம். ஸ்கூல் போக மாட்டேன்னு ஒரே அடம். டீச்சர் மணல தர மேல பரப்பிட்டு அது மேல விரலால அ, ஆ ன்னு எழுத வைப்பாங்க. விரல் எல்லாம் சிவந்து போய் அவங்க அடிக்கடி கைய உதறிக்கிறத பாக்க முடியாத நான், வேற என்ன? அவ்வ்வ்வ்வ்வ்... தான்.அப்புறம் டீச்சர் என்ன ஏதுன்னு விசாரிச்சப்போ ஏன் டீச்சர் எங்கிட்ட நல்லா, அன்பா நடந்துக்கறீங்க மத்தவங்கள அழ விடறீங்க. நீங்க நல்லவளா கெட்டவளான்னு கேட்டேன். ஐய்யய்யோ! அடிப் பாவி மகளே ஏண்டி அப்டி கேட்டே. டீச்சர் அடி பின்னீருப்பாங்களே அப்டீன்னு அவசரப் பட்டு நினைக்கப்படாது. டீச்சர் ரொம்ப பீலாகி ரொம்ப நேரம் என்ன மடி மேல உக்காத்தி வச்சிட்டு இருந்தாங்க. என்ன சொன்னாங்கன்னு நினைவில இல்ல. ஆனா நெறைய சொன்னாங்க. அதோட அந்த பனிஷ்மேண்டும் அப்றமா இல்ல. என் சமூக சேவை அப்போதான் ஸ்டார்ட் ஆச்சு. ரொம்ப புகழாதீங்க. பதிலுக்கு மேல படிச்சிட்டே போங்க.

இப்போ முதல் வகுப்பு. இங்கேதான் எனக்கு அடுத்த கண்டம் + அடுத்த கண்ணீர் காண்டம். என்னன்னு அறிய இன்னும் ஒரு கொஞ்சநாள் பொறுத்துக்கோங்க. சத்தியமா தொடர்ந்து எழுதுவேன். தண்டனைய ஒரே தடவேல குடுக்க கூடாதில்ல. அப்புறம் நீங்க எங்கிட்டவே ரிப்பீட்டு போட்ற மாட்டீங்க. அதாங்க... சுசி எங்க பதிவுக்கு பின்னூட்டம் போடும்போது கொஞ்சூண்டு(?) எழுதுறே. உன் பதிவுன்னா மட்டும் இவ்ளோ எழுதிறியே. நீ நல்லவளா கெட்டவளா???
மீண்டும் சந்திப்போமுங்க... அது வரை நலமா இருங்க.

01 July, 2009

இது ரெம்ப அநியாயம்...

குடி உடல்நலத்துக்கு கேடானதுங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். தெரிஞ்சும் (குணா உட்பட) ஏன் குடிக்கிறீங்க என்பது எனக்கு புரியாத புதிர். இருந்தும் ஏன் இந்த பதிவு சுசீன்னு நீங்க கேக்கறது எனக்கு கேக்குது. கார்க்கி கார்க்கின்னு ஒருத்தர் எழுதின (சத்யமா ஒருத்தர்தான். ரெண்டு கார்க்கிய பூமி தாங்காது) இன்னைய பதிவ படிச்சதோட விளைவு இது. போனாப் போவுது யாருக்காவது யூஸ்புல்லா இருக்கட்டுமேன்னுட்டு போடறேன்.

பி.கு:- முன்னாடியே இத பாத்தவங்க கடுப்பாயிடாதீங்க. ஏன்னா இது எனக்கு ஈ மெயில்ல கிடைச்சது. இதுக்கு எந்த விதத்திலேம் நான் உரிமை கொண்டாடப் போறதில்ல. உரிமை உள்ளவங்க மன்னிச்சுக்கோங்கோ....

பின் குறிப்புக்கு பி.கு:- அவரோட பதிவு படிக்காதவங்க இங்க சொடுக்குங்க....

http://www.karkibava.com/2009/07/blog-post.html

இனி அநியாயத்த பாருங்க....







பின் குறிப்புக்கு பின் குறிப்புக்கு பி.கு:-
இப்டி ஒரு பதிவ போட்டுட்டு உங்க கிட்ட நலம்தானான்னு கேக்க மனசே வரலங்க... அவ்வ்வ்வ்.......