Pages

  • RSS

31 March, 2010

விண்ணைத் தாண்டிய தமிழ் அவதாரம்..

அன்னிக்கும் பயங்கர ஸ்னோ.. இருந்தாலும் அதையும் தாண்டி ரொம்ப எதிர்பார்ப்போட போனேன். கண்ணாளன வேற உசுப்பேத்தி கூட கூட்டிட்டு போயாச்சு. அதே க்ரூப். அதாவது எங்க நண்பர்கள் வட்டம். ஒருத்தர் இது பசங்களுக்கு புரியாத படம் அதனால அவங்கள நான் bowling center கூட்டிப் போறேன்னு சதுவ பொறுப்பெடுத்தார். லச்சும்மா அவங்க ஃப்ரெண்டி வீட்டுக்கு போனாங்க. தியேட்டர் உள்ள போனா எந்த தமிழ் முகத்தையும் காணோம். இருங்கப்பா இவ்ளோ மோசமா ஸ்னோ கொட்டும்போது எல்லாரும் நம்மள மாதிரியே சீக்கிரமா வர நினைச்சிருக்க மாட்டாங்கனு  என்னவர் பார்வைய தவிர்த்து பதில் சொன்னேன்.

 

கொஞ்சம் ஆளுங்க வந்தாங்க. வந்தவங்க என்ன கேட்ட கேள்வி பெரும்பாலும் இப்டியா இருந்துது. தெரிஞ்சேதான் அந்தப் படத்துக்கு வராம இதுக்கு அதுவும் சீக்கிரமா வந்திருக்கீங்க இல்ல.. நல்லாருங்க. யாரும் நம்ப மாட்டேங்கராங்க. அவ்ளோ ஏன் நீங்க கூட நம்பாம என்ன திட்னீங்க இல்ல.. சரி விடுங்க.. ஒரு ஃப்ரெண்டோட அம்மா வராங்க வாங்க அவங்க கிட்ட பேசலாம்.

 

ஹாய் ஆண்டி.. எப்டி இருக்கீங்க?

நல்லா இருக்கேம்மா..

எப்டி போச்சு இந்தியா பயணம்லாம்?

நல்லா போச்சும்மா.. என்ன எல்லாருக்கும் உடம்புக்கு முடியாம போச்சு.. அதான் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டோம்.. இங்க வந்தா இந்த ஸ்னோ இப்டி கொல்லுது.. இப்போ கொஞ்சம் பரவால்லடா..

(இப்டியே கொஞ்ச நேரம் அவங்க பயணம் பத்தி பேச்சு போயி படங்கள் பக்கம் வந்து நின்னிச்சு)

இங்க என்ன படம்லாம் போட்டாங்கம்மா?

குட்டி, கோவா.. ஆயிரத்தில் ஒரு..

அப்பாடா.. ஓடி முடிஞ்சுதா அந்த படம்.. தப்பிச்சேன்.

ஏன் ஆண்டி.. அப்டி சொல்றீங்க?

அது ஒரு கருமம் பிடிச்ச படம் போல.. ட்ரெய்லர் பார்த்தே நான் பயந்துட்டேன்.

நான் நீங்க இந்தியால பாத்திருப்பீங்கனுல்ல நினைச்சேன்..

ஏம்மா.. எற்கனவே உடம்புக்கு முடியல.. அதில இது வேறயா..

 

அப்டியே டிக்கட் குடுக்க ஆரம்பிச்சாங்க. உள்ள போய்ட்டோம். இருந்தாலும் என் மைண்ட்ல ஒரு கேள்வி சுத்திட்டே இருந்துது. கருமம் படமா இல்ல பாத்தவங்களா இல்ல பாக்காமலே திட்டு வாங்கிறவங்களா??

 

17:30 ஷோ.. சீட் நம்பர்லாம் கிடையாது நீங்களே போய் இஷ்டத்துக்கு உக்காருங்கன்னாங்க. நடு ரோல வசதியா, வரிசையா உக்காந்தோம். என்ன கூட்டம் கம்மியா இருக்கு. பின்ன கடசியா பாத்த படம் அப்டி.. ரொம்ப மிரண்டிட்டாங்க போல.. பாவம்ல மக்கள்.. இந்த வகையில பேச்சு அடிபட்டுது. நான் எதுவும் சொல்லவும் இல்லை. கேக்கவும் இல்லை. நோட் பண்ணிக்கோங்க. என் இடப் பக்கம் கண்ணாளன். வலப் பக்கம் கொலைவெறி கொஞ்சம் கம்மி ஆயிட்ட அக்கா. நான் வரதால நல்ல படமா இருக்கும்னு நம்பி வந்திருந்தாங்க.

 

ரொம்ப நேரமா பாத்துட்டு இருந்தோம். வந்திச்சு பாருங்க இண்டர்வல்.. அடப்பாவிகளா இப்போதான் இண்டர்வலா? சொன்னது என்னவர். அதுவும் கொஞ்சம் சத்தமா.. பக்குனு எல்லாரும் சிரிச்சிட்டாங்க. அன்னிக்குனு காஃபி மெஷின் கூட ரிப்பேர். தியேட்டர் எதிர்க்க இருந்த காஃபி ஷாப்ல வாங்கிட்டு வந்தது குளிர்ல ஜில்னு ஆயிடிச்சு. வேற வழி.. மறுபடி உக்காந்தோம்.

 

போகும்போதே என் ஃப்ரண்டுக்கு ஒரு பிரச்சனைனு மனசு சரியா இருக்கல. படம் இருந்த வலிய அதிகம் ஆக்கிடிச்சு. பாடலும் காமராவும் கட்டிப் போடலேன்னா எப்பவோ எந்திரிச்சு போயிருப்பேன். பொறுமைய இழுத்து பிடிச்சிட்டு இருந்த என்னவர் கூடவே வந்திருப்பார்.

 

- சிம்பு ஒவொரு தடவையும் அந்த கேள்விய கேட்டப்போ எல்லாரும் சிரிச்சாங்க. நான் மட்டும்    ரசிச்சேன்.. அது நான் என் கண்ணன எப்போதும் கேக்கற கேள்வியாச்சே :))

- சிம்புவும் த்ரிஷாவும் பார்க்ல உக்காந்து பேசறப்போ உதடு துடிக்க சிம்பு பேசிட்டு இருந்தார். என் கண்ணில தூசி.. அவ்வ்.. மத்தவங்க குசுகுசுனு ஆரம்பிச்சு இப்போ சத்தமாவே பேசிட்டு இருந்தாங்க.

- இந்த வலி இவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நினைச்சுப் பாக்கலன்னு த்ரிஷா சொன்னப்போ ஆவ்வ்..

 

இனி வெளிய வந்து பேசிக்கிட்டது.

- என்னங்க இந்த படத்துக்கு போயெல்லாம் அழுவீங்களானு என் மூஞ்சிய பாத்து கேட்டவங்களுக்கு பக்கத்தில இருந்தவங்க சொன்னாங்க அவங்க இந்த படத்த பாத்தோமேங்கிற கஷ்டத்தில அழுதாங்கப்பானு.

- ஒருத்தங்க சொன்னாங்க எனக்கு கௌதம் மேனன் எடுத்த படத்த விட சிம்பு எடுத்த படம்தான் பிடிச்சுதுங்கனு.

- ஒருத்தங்க சரி விடுங்கப்பா அதான் த்ரிஷாவே சொல்லிட்டாங்களே மூவ் ஆன் னு.. அப்புறம் என்னன்னு சொன்னாங்க.

- ஒருத்தங்க ரொம்ப இழுவ்வ்வ்வையா இருந்திச்சுல்லன்னாங்க.. நான் சொன்னேன் விண்ணைத்தாண்டணும்னா சும்மாவா.. அவ்ளோ தூரம் போணும்ல.. அதான்..

 

என்னப் பொறுத்த வரைக்கும் பாடல்கள் சொன்ன அளவுக்கு படம் காதலை சொல்லைங்க. காட்சிகள் தனித்தனியா பார்க்க நல்லா இருக்கு.. படத்தில திணிச்சா மாதிரி இருந்துது. ட்ரெயின்ல நடந்தது.. வா ஆ ட்ரெயின் சீன்ல இருந்தே நான் இன்னும் வெளிய வரல.. இது அத விட நல்லா இருந்திருக்கணும். த்ரிஷா வீட்ல கல்யாணம் நின்னப்போ சிம்பு பாக்க போவாரில்ல.. திரை பின்னாடி அவர கூட்டிப் போய் உக்கார வச்ச சீன் தேவை இல்லாத ஒண்ணு.. இது மாதிரி நிறைய. இத எல்லாம் ஏன் சொல்றேன்னா இதெல்லாம் இல்லாது இருந்திருந்தா காதல் இன்னும் அழகா இழுவை இல்லாம சொல்லப்பட்டிருக்கும். எதிர்பார்ப்பு கம்மியாகி த்ரிஷா இத தான் சொல்லப்போறாங்கனு முன்னாடியே யூகிக்க முடிஞ்சது ஆர்வத்தை குறைச்சிடுச்சு.

 

பசங்கள பிக் அப் பண்ணிட்டு வர வழில லச்சு கேட்டா யாரெல்லாம் வந்தாங்கனு. அவ க்ளாஸ் பையன் ஒருத்தர் வந்திருந்தார்னும் சொன்னேன். கதை என்ன. சொன்னோம். படம் நல்லா இல்லையானு அடுத்த கேள்வி. நானும் அவரும் அர்த்தமுள்ள ஒரு பார்வை பரிமாற்றம் செய்து கொண்டோம். இல்லடா ஓக்கேதான். ஆனா கொஞ்சம் பிடிக்கலை. அப்டினா எந்திரிச்சு வந்திருக்க வேண்டியதுதானேன்னா. அம்மாவுக்காக நானும் உக்காந்திட்டு இருந்தேண்டான்னார் என்னவர். பாவமா இருந்துது. எனக்கும் ஒரு வகையில அந்த காதலோட வலி பிடிச்சிருந்துது. அதான் வர்லனு சொன்னா அவங்களால புரிஞ்சுக்க முடியாதேனு நான் எதுவும் சொல்லல. வீட்டுக்கு வந்ததும் சாட்ல அந்த பையன் கிட்ட பேசிட்டு வந்து சொன்னாங்க.. அம்மா அவருக்கு படம் ஒண்ணுமே புரியலையாம். நல்ல வேளை நாங்க வர்ல. என் உடன் பிறப்பு பேசிச்சு. என்னடி டல்லா இருக்கே. இல்லக்கா படம் பாத்துட்டு வந்தோம். அதான். ஃபோனப் புடுங்கி தன்னோட ஆதங்கத்த வெளிப்படுத்தினார் என்னவர். ஊர்ல இருக்கும்போது எங்கள மகளிர் மட்டும் பாக்க வச்சீங்க இல்லை.. உங்களுக்கு நல்லாவே வேணும்ணா.. எல்லாம் கேட்டுட்டு சந்தோஷமா சொல்லிச்சு என் உ.பி.

 

அடுத்து தமிழ்ப்படம் பார்த்து சிரிரிரிரிரிரிச்சோம்.

 

அவதார்.. நானே ஒரு அவதாரம் அப்புறம் எதுக்கு அத போயி பாக்கணும்னு என்னவர் வர்ல. நான் பசங்க அதே நண்பர்களோட போனோம். ரசிச்சு பாத்துட்டு வந்தோம்.

 

இப்போ போன வாரம் கலைஞர் + ஐங்கரன் டிவி ஒளிபரப்பின போர்க்களம் பாக்க போறேன். ரெக்கார்ட் செஞ்சு வச்சிருக்கேன்.

இடையில ஒரு விஷயம் கேள்விப்பட்டு என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணேன்.

வர செவ்வாய் பையா போடறாங்களாம் அக்கா.. போலாமா..

இனிமே வருவேனு நினைக்கிறீங்க உங்க கூட படம் பாக்க? காமடி பண்ணாம வேற எதுனா பேசுங்க.. இல்லேனா ரணகளம் ஆயிடும்..

படம் எடுத்தவங்கள விட்டிட்டு என் மேல இவ்ளோ கொலைவறி ஆகாதுனு அவங்களுக்கு நான் எப்டி புரிய வைப்பேன். பாவம் நான்.

 

வர்ட்டா..

24 March, 2010

அணைக்க மறந்து போகிறேன்..

என் புது வீட்ட பாத்தீங்களா மக்கள்ஸ்..
என் உயிர் நட்பு கட்டிக் கொடுத்துது.. நல்லாருக்குதுங்களா?? எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு. அதனால அதுக்காக இன்னைக்கு வழக்க விரோதமா ஒரு ஸ்பெஷல் போஸ்ட்.. ஏற்கனவே எழுதி கிடப்பில இருந்த ஒண்ணுதான். இப்போ அவசரத்துக்கு உதவுது. எல்லாருமா சேர்ந்து ஜோரா அதுக்கு ஒரு நன்றி சொல்லிடலாம். நான் தனியா சொன்னா திட்டும். ஏற்கனவே உனக்கு நன்றி சொல்லணுமான்னு கேட்டு திட்டு வாங்கிட்டேன். எப்டி இருக்குனு சொல்லுங்க. அதுவும் படிச்சு தெரிஞ்சுக்கட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 hug
நீட்டிய உன் கைகளுக்குள்
ஓடி வந்து ஒளிந்து கொள்கிறேன்
உன் நெஞ்சோடு அப்படியே
ஒண்டிக் கொள்கிறேன்
என் மனதின் சுமைகளை
அங்கேயே இறக்கி வைக்கிறேன்
உன் அணைப்பின் சூட்டோடு
பஞ்சாய் வெளி வருகிறேன்
அதனால்தான்
சமயத்தில் பதிலுக்கு
உனை அணைக்க
மறந்து போகிறேன் கண்ணா..

*******************************************************************************************************************
hugging

முத்தம் கேட்டு
கன்னம் காட்டினான்
ஆவ்.. கொஞ்ச கேட்டா
கடிச்சு வைக்கிறே..
செல்லமாய் முறைத்தவன் காதில்
மெல்லமாய் சொன்னேன்
ஆப்பிளை கடிச்சுதாண்டா
கண்ணா சாப்டணும்
தெரியாதா உனக்கு??

22 March, 2010

கொஞ்சம் குறைச்சுக்கோங்க..

மழைக்கும் மலைக்கும் பெயர் போன ஊருங்க எங்க ஊர். நான் இங்க வாழ வந்த இந்த பதினொரு வருஷத்தில இவ்ளோ கொடுமையான ஒரு விண்டர் சீஸன் இந்த வருஷம்தான் அனுபவிச்சிட்டு இருக்கேன். ஸ்னோ கொட்டும். ஒரு வாரம் இருக்கும். அப்டியே ஒரு மழை வந்து எல்லாம் கரைஞ்சு போய்டும். மறுபடி ஸ்னோ.. மழை..னு குளிர்ல இருந்து தப்பிடுவோம். நார்வேல இருந்து வந்துட்டு இங்க குளிருதுனு சொல்றீங்களேனு மத்த நாட்டுக்காரங்க கேப்பாங்கனா பாருங்களேன். யார் கண்ணு பட்டுதோ.. இந்த தடவை மழை பெய்வேனா பாருனு அடம் புடிக்குது. 1879 ஆம் வருஷத்துக்கு அப்புறம் வந்திருக்கிற ரொம்ப ட்ரையான வின்ரர் சீஸன் இதானாம். விளைவு??

 

எங்கள தண்ணீர சிக்கனமா மட்டுமில்லாம கொதிக்க வச்சும் பாவிக்க சொல்லி இருக்காங்க.

 

இந்த ஊருக்கு Gullfjell  ங்கிற ஒரு மலையில இருந்து தண்ணீர் சப்ளை பண்ணிட்டு இருந்தாங்க. மழை இல்லாததுனால சம்மர்க்குனு ரிசர்வில இருக்கிற நீரையும் பாவிக்க வேண்டியதாயிடுமோனு பயந்து Storavatnet ங்கிற இடத்தில இருந்து சப்ளை ஆரம்பிச்சாங்க, போன செவ்வாயில இருந்து. பிரச்சனை என்னன்னா என்னதான் நாங்க குளோரின் போட்டு சுத்தம் செஞ்சாலும் தண்ணீர் அவ்ளோ சேஃப் கிடையாது. நீங்க கொதிக்க வச்சு பாவிங்கனு சொல்லிட்டாங்க. பல் துலக்க, காய்கறி, பழங்கள் கழுவ, அடுப்பில செய்யாத சமையலுக்கு  எல்லாம் சுட வச்ச தண்ணிய பாவிக்க சொல்லி இருக்காங்க. குளிக்கும்போது வாய மூடிக்கிட்டே குளிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கொதிக்க வைக்கிற கரண்ட் செலவுக்கு பாட்டில் தண்ணி செலவு கம்மியா இருக்கும்கிறதால அததான் வாங்கறோம். நாளையில இருந்து வழக்கம்போல பாவிக்கலாம்னு அவங்க சொன்னாலும் இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்க வீட்ல பாட்டில் தண்ணிதான்னு முடிவு செஞ்சிருக்கோம்.

 

அம்மா இந்த தண்ணி நல்லாவே இல்லைனு பாட்டில் தண்ணி குடிக்க பசங்க பண்ற அடம் தாங்கல. எந்த நேரமும் பைப் தண்ணி குடிச்சிடுவாங்களோனு பயத்திலவே சுத்த வேண்டியதா இருக்கு. அதனால நானும் என் பங்குக்கு சிக்கனமா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

 

- வெள்ளை நிறமுள்ள ஆடைகள தனியா துவைச்சாதான் வெள்ளையா இருக்கும்னு இனிமே தனியா வாஷிங் மெஷின்ல போட்டு துவைக்க மாட்டேன்.

 

- டிஷ் வாஷர் ஃபுல் ஆகாம ஸ்டார்ட் பண்ண மாட்டேன்.

 

- குளியலோட நேரத்த குறைச்சுக்கணும். முக்கியமா பாத் டப்ல குளிக்க கூடாது. போன வாரம் 200 லீட்டர் டாங்க்ல இருந்த சுடுதண்ணி தீர்ந்து போச்சு என் உல்லாசக் குளியலால. பசங்க அய்யா ஜாலி, குளிக்க வேணாம்னாங்க. ஃபுட்பால் விளையாடிட்டு வந்த கண்ணாளன்  குளிக்க முடியாம போனதால வெளிய போறதா இருந்த ப்ளான் ஊத்திக்கிச்சு.

 

- இது கண்ணாளன் கவனிக்க வேண்டியது. கார் வாஷ். ரோட் ஃப்ரீஸ் ஆகாம இருக்க உப்பு போடுவாங்க. அதுவும் ஸ்னோவும் சேர்ந்து கருப்பா பிடிச்சுக்கும். சமயத்தில இது நம்ம வண்டிதானானே டவுட் ஆகிற அளவுக்கு வண்டியோட நிறம் மாறி இருக்கும். கொஞ்ச நாளைக்கு கார் வாஷ் பண்ண கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கு ஊராட்சி.

 

ஒரு நாள் ஃப்ரிஜ்ல தண்ணீர் பாட்டில வைக்க மறந்துட்டேன்னு ஆஃபீசுக்கு ஃபோன போட்டு குடும்பமே கூட்டு சேர்ந்து திட்டித் தீர்த்திடுச்சுங்க. என்னதான் ஃப்ரிஜ்ல வச்சு குடிச்சாலும் பாட்டில் தண்ணி நல்லாவே இல்லைங்க. ஜில்லுனு டப்ல எடுத்து குடிக்கிறா மாதிரி இல்லை. மலைல இருந்து வர அருவியில நேரா அள்ளிக் குடிச்சாப்ல இருக்கும் எங்க ஊர் தண்ணீர்.

Gullfjell னா தங்க மலைனு அர்த்தம். தங்கத்தோட நிலை தண்ணிக்கும் வந்திட்டா?? இப்போ ஸ்னோ இருக்கிறதால அத உருக்கியாவது பாவிக்கலாம். சம்மர்ல?? காலநிலை தாறுமாறா மாறி வேற இருக்கு. காலப் போக்கில தண்ணீர் தீர்ந்து போய்டிச்சின்னா?? ஸ்னோவும் இருக்காதே.. நிறைய இல்லைனாலும் கொஞ்சூண்டாவது எல்லாரும் யோசிக்கலாம்ல.. அப்டியே நம்மால முடிஞ்சதையும் செய்லாம்ல.. வாங்க எல்லாருமா எதுனா செய்லாம்..

 

ராமலக்ஷ்மி அக்காவோட இந்த பதிவ படிச்சுப் பாருங்க. எப்டி சிக்கனமா தண்ணீர பாவிக்கலாம்னு நல்லா சொல்லி இருக்காங்க. கீழ இருக்கிற படத்த உங்க வலைப்பக்கத்தில சேர்த்தும் பங்களிப்பு செய்யலாம்னு அக்கா சொல்லி இருந்தாங்க.

அப்புறம் என்னங்க.. வரட்டா..

 

vann 2010 kopi bildet

14 March, 2010

உனக்கு நேரம் சரி இல்ல..

நான் இன்னமும் பாக்கலை. பாக்காம எழுதக் கூடாதுங்கிர வைராக்கியத்தோட இருந்தேன். என்னையும் எழுத வச்சிட்டாங்க. பாக்க கூடாதுனு நினைக்கலங்க. பாக்க முடியாம போச்சு. எப்டியோ தட்டிப் போச்சுனும் சொல்லலாம். பாக்கணும்னு நிறைய எதிர்பார்ப்பு இருந்துச்சு. பாக்கலாம்னு முடிவானப்போ வேணாம்னு  தோணிச்சு. ஆனா அத நான் வேணும்னு செஞ்சதா நினைச்சிட்டாங்க. அதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.

 

இங்க வந்ததில இருந்து பழகறவங்க. என் மேல சொன்ன குற்றச்சாட்டுக்கள் நியாயமானு நீங்களே சொல்லுங்க. ரொம்ப கம்பல் பண்ணாங்க பாக்க போலாம்னு. இப்போ முத பத்தியோட மூணாவது லைன்ல இருந்து படிச்சுட்டு வாங்க.. என் சொல் பேச்சு கேட்டு போய் மறுபடி படிச்சவங்களுக்கு நன்றி.. இப்போ இந்த பத்திய முதல்ல இருந்து மறுபடி படிக்காமலே உங்களுக்கு புரிஞ்சிருக்கும், நான் விட்ட இடத்திலேர்ந்து சொல்லறேன்னு.. பாத்திட்டு வந்ததில இருந்து என் கிட்ட பேசல. ரெண்டு வாரம் கழிச்சு எங்க வீட்டுக்கு வந்திருந்தவங்க கிட்ட எப்டிக்கா படம்னு ரெண்டு வார்த்தைதான் கேட்டேங்க.. பொங்கிட்டாங்க போங்க.. கிச்சன்ல நின்னு கேட்ட என் தப்ப உணர்ந்து உயிர்ப் பயத்தோட நான்.. இனி அவங்க சொன்னது இல்ல இல்ல.. கொலைவெறியோட சொன்னது..

ரொம்ப எதிர்பார்ப்போட போனேன் தெரியும்ல உங்களுக்கு. அங்க போனா தியேட்டர் காத்தாடுது.. படம் ஆரம்பிச்சுதா.. பாத்துட்டே இருந்தோமா.. கொஞ்ச நேரம் ஆனதும் என் அக்கா சிரிக்க ஆரம்பிச்சுட்டா.

ஏங்கா.. காமடி சீனா..

நீங்க காமடி பண்ணாதீங்க. எதுவும் புரியலப்பா.  என் பொண்ணு அப்பப்போ அவங்கள பாத்து முறைக்க ஆரம்பிச்சுட்டா. அவ கண்டுக்கணுமே.. இப்டியே போனா வந்தாரு பாருங்க பார்த்திபன். பேசினாரு பாருங்க ஒரு தமிழ்.. அதுக்கு அப்புறம் அக்கா சிரிச்ச சிரிப்பில பொண்ணு கடுப்பாகி வேற சீட்ல போய் உக்காந்துட்டா. அவங்கள பாத்து நானும் சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். அவங்க அப்டி சிரிச்சு அன்னிக்குதாம்பா பாத்தேன்.

யாரும் திட்டலையா உங்கள?

எங்க அவங்களும் புரியாம தான் பாத்துட்டு இருந்தாங்க போல.. எங்க கூட  சிலர் கூட்டு சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்கப்பா.

இல்லக்கா.. இது புது விதமான கதைனு சொல்றாங்க..

எவன் சொன்னான்? கூட்டிட்டு வாங்க என் முன்னாடி. இந்த படம் இந்தியால இப்பவும் ஓடுதுன்னு சொல்லுங்க இனிமே நான் வாழ்க்கேல படம் பாக்கல. 

இல்லக்கா.. ஓடிட்டு இருக்காம்..

(இப்போ ஒரு லுக்கு விட்டாங்க பாருங்க.. என்னத்த சொல்ல)

அப்டினா போய்ப் பாருங்க எங்கள மாதிரி அறியாம போய் மாட்டிக்கிட்டவங்க தான் பாத்திட்டு இருப்பாங்க.

பார்ட் டூவும் எடுக்க போறாராம் செல்வா..

(இப்போ முன்னய விட கேவலமா ஒரு லுக்கு)

வேணாம் என்ன கொலைகாரி ஆக்கிடாதீங்க சொல்ட்டேன்.

அப்போ காமடிக்குனு யார் வந்தாங்க?

அதான் அவரு கார்த்தி வந்தாரே. அவருதான் பெரிய காமடி பீஸு.

கார்த்தி ட்ரெய்லர்ல பாக்கும்போது ஒரு மாதிரி தலைய குனிஞ்சுட்டே போறாறே.. அது என்ன சீன்?

அவர் படம் பூரா அப்டிதான் போறார். இதில எதனு நான் சொல்ல. நீங்க இந்த படத்த டிவிடில கூட பாத்துடாதீங்கப்பா. அப்டியே பாக்குறதுனா கூட நான் வர நேரம் என் கண்ல படற மாதிரி வச்சிடாதீங்க. சொல்ட்டேன்.

பாட்டுக்கா.. ஆனா மாலை நேரம் வர்லயாமே..

உங்களுக்கு எப்டி தெரியும்?

அது சும்மா நெட்ல மேயும்போது படிச்சேன்..

இந்த குழப்பத்தில அத யாரு கேட்டா. அன்னிக்கு ஒரு படம் பாக்க வான்னீங்க. விஜய பிடிக்காத நானே அவ்ளோ என்ஜாய் பண்ணி பாத்தேன். அது உங்களுக்கு பொறுக்கல இல்ல. ஏம்பா.. ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே.. வேற என்ன படிச்சீங்க..

இல்லக்கா.. நீங்க சொன்ன எல்லாமே படிச்சேன்.

(இங்கனதான் வசமா மாட்டிக்கிட்டேன். அவ்ளோ கோவமா அவங்கள நான் பாத்ததே இல்ல) ஆனா நான் வேணும்னு வராம விடலக்கா.. அது உங்களுக்கே தெரியும்.. அவர் மாட்டேனுட்டார்.. பசங்களுக்கும் புரியாது..  நான்  தனியா வரலாம்னா இந்த ஸ்னோல ரிஸ்க் எடுத்து ட்ரைவ் பண்ண பயமா இருந்துது..

(இத சொல்லிக்கிட்டே மெதுவா அவங்கள கிச்சன விட்டு ஹால் பக்கம் கூட்டிட்டு வந்துட்டேங்க. கரண்டி எடுத்து வீசினா பரவால்ல.. கத்தி எடுத்து வீசிட்டா??)          

படம் பாக்காமலே எனக்கு வந்த நிலைய பாத்தீங்களா?? என் சித்தி ரெண்டு நாள் பொண்ணு மேல கடுப்பாவே இருந்தாங்க. அவங்கதான் அடம் பிடிச்சு கூட்டிப் போக சொன்னாங்களாம். அப்பா சொன்னார் யாம் பெற்ற துன்பம் நீயும் பெறணும்டாம்மா.. கண்டிப்பா நீயும் பாருன்னு. இதுக்கப்புறம் ஒருத்தர் கிட்ட கூட நான் மறந்தும் கேக்கல.

நீங்க ஆயிரத்தில் ஒருவன் பாத்தீங்களாஆ??

aayirathil-oruvan கார்த்திக்குப் பதில் செல்வாவ இங்க நிக்க வச்சிருக்கணுமோஓ??

அப்பப்போ என் கண்ணன் சொல்றதுதான் இப்போவும் என் நினைவுக்கு வந்துதுங்க. அதான் தலைப்பா போட்டுட்டேன். கரெக்டா இருக்குதுங்களா??

வரட்டுங்களா..

09 March, 2010

திட்டாதீங்கப்பா..

வேற ஒண்ணும் இல்லீங்க.. வி தா வ நானும் பாத்துட்டேன். அது பத்தி எழுதிட்ட்ட்ட்ட்ட்ட்டே இருக்கிறதால இப்போதைக்கு என் பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையா, நெட்ல தேடி பிடிச்சு சில நாட்களே ஆன புத்தம் புதிய ஒரு படத்த வச்சு..

ஒரு குட்டிப் பதிவு.

படிச்சிட்டு தலைப்ப படிங்க. அப்டியே படம் பாத்ததும்.. அட அந்த படத்த சொல்லலைங்க.. இங்க நான் போட்டிருக்கிற படம்.. உங்க மைண்ட்ல தாண்டுற.. சாரி.. தோன்றுற வரிகளை கவிதையா கமண்ட்ல பொழிஞ்சிட்டு, தீட்டிட்டு, வடிச்சிட்டு, வரைஞ்சிட்டு.. ரைட்டு விடுங்க.. எழுதிட்டு போங்கங்க.. படத்துக்கு பெருமையா இருக்கும். மறுக்கா சொல்றேன் இந்தப் படத்துக்கு.

வரட்டுங்களா..

j 014

விண்ணையும் தாண்டி விடலாம்

என் அருகே நீ இன்றி

உன் நினைவுகளோடு

வாழ்வதை விட.

-----------------x-----------------

பாதம் மண்ணை தீண்ட வில்லை...
காதலி நினைவில்...

-நன்றி சீமான் கனி.

-----------------x-----------------

உன்னைத் தாண்டியே
இன்னும் வரவில்லை
விண்ணைத் தாண்டி வருவது
அப்புறம்

-நன்றி சங்கர்.

--------------x---------------

ஆளற்ற ரோட்டில் நடந்து கொண்டியிருந்தேன்
உன் நினைவுகளேடு
பயனற்ற பயணங்கள் முடியாமல் போகின்றது
உன் பிரிவைப் போல
சோகங்களோடு சுகங்களும் சேர்ந்து சுமக்கின்றேன்
உன்னை என் நெஞ்சில் தாங்குவதைப் போல

-நன்றி சுதாண்ணா.

------------------x-----------------

விழியெட்டும் தூரம் வரை
இலக்குகளற்று நீளும்
இந்த தார்ச்சாலையில்
என்னை தனியே நடக்கவிட்டு
கையசைத்து சென்றவளே..
உற்றுப்பார்.
உன்
புறங்கையில் தெரியும்
புன்னகைக்கும் என் முகம்.

-நன்றி கார்க்கி.

-------------------x----------------

என்னோடு
நீ வருவதாய் இருந்தால்
இந்த சாலையின் நீளம்
போதாது எனக்கு

-மீண்டும் நன்றி கார்க்கி.

-------------------x------------------

விண் தாண்டி

உன்னிடம் வந்துவிட்டேன்

இரு வழிப் பாதை

இருந்தும்

திரும்பி வர மனமில்லை.

-நட்புக்கு நன்றி.

--------------------x----------------