Pages

  • RSS

29 June, 2009

வாழ்த்து மழையில் அம்மாவும் அப்பாவும்...


எல்லோரும் நலமா உறவுகளே?!
இன்று என்னோட அன்பு அப்பாவுக்கும் ஆசை அம்மாவுக்கும் திருமணநாள். அவங்க இன்னிக்கு மாதிரியே இன்னும் நெற...ய்ய வருஷம் சந்தோஷமா வாழணும்னு வாழ்த்துங்கள்.கூடவே சின்னதா ஒரு தகவலும் குடுத்திருக்கேன். பாருங்க.

Year 1 is Paper Anniversary
Year 2 Cotton Anniversary
Year 3 Leather Anniversary
Year 4 Linen Anniversary
Year 5 Wood Anniversary
Year 6 Iron Anniversary
Year 7 Wool Anniversary
Year 8 Bronze Anniversary
Year 9 Copper Anniversary
Year 10 Tin or Aluminum Anniversary
Year 11 Steel Anniversary
Year 12 Silk Anniversary
Year 13 Lace Anniversary
Year 14 Ivory Anniversary
Year 15 Crystal Anniversary
Year 20 China - porcelain Anniversary
Year 25 Silver Jubilee or silver wedding Anniversary
Year 30 Pearl Anniversary
Year 35 Coral or jade Anniversary
Year 40 Ruby Anniversary
Year 45 Sapphire Anniversary
Year 50 Golden Jubilee Anniversary
Year 55 Emerald Anniversary
Year 60 Diamond Jubilee
Year 65 Blue sapphire Anniversary
Year 70 Platinum Jubilee.
Year 75 Diamond wedding Anniversary
Year 80 Oak wedding Anniversary

27 June, 2009

மழை விட்டும் தூறல் நிக்கல...

என்னப்பா! எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
சுசி மட்டும் நல்லாவே இல்லீங்க. இப்போதான் ஒருபடியா கொஞ்சம் தேறி இருக்கேன். சுசிக்கு பேஸ்மென்ட் மட்டும் இல்லீங்க, பில்டிங்கும் வீக்கு. அவ்ளோ சுலபமா சுசி சீக்காளி ஆனதில்ல. எப்பவாச்சும் ஜலதோஷம் அட்டன்ச போட்டுக்கும். இந்த வாட்டி கொஞ்சம் ஜாஸ்தி ஆய்டிச்சு. பல நோய்கள் கைகோத்துகிட்டு ஒரே சமயத்துல அட்டாக் பண்ணிடிச்சு. அதோட ட்ராவல் பண்ணினதும் ரொம்ப தப்பாயிடிச்சு (அது பத்தி தனி பதிவு எழுதுறேன்)

நா வேற ரொம்ப சீன் காட்டிகிட்டு மலேல ஏறினேனா (இதுக்கும் தனி பதிவு வரும்) நிலம இன்னும் மோசமாயிடிச்சு. ஏங்க எனக்கு மட்டும் இப்டி? ரொம்ப நொந்து போயிட்டேங்க. அதிலையும் டாக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கான அன்டி பயாட்டிக் வேற குடுத்திட்டாரா ஒரே தலைசுத்தும், வாந்தியும். குணா இத நண்பர்கள் மத்தீல என்ன மாதிரி ப்ளே பண்ணார்னு தெரீல, ஆளாளுக்கு போன போட்டு மூணாவதா? சொல்லவே இல்லைங்கிறாங்க. அதில இது வேறயா? ( அப்டியே இருந்தாலும் இத எல்லாம் சொல்லிட்டா செய்வாங்க)

அதிலையும் குணாவோட கவனிப்பு இருக்கே, அட அட அடா... ரெஸ்டாரன்ட் கெட்டுது போங்க. காப்பி கேட்டா ஒரு மணிக்கு அப்பறம். ஜூசின்னா அரை மணி. சாப்பாடு பீசாவும் பர்கரும் (பசங்க காட்ல அடை மழை) சுசி ரெண்டு நாள் பாத்திட்டு பொங்கி எழுந்ததில மெரண்டு போயி கோழி குழம்பும் சோறும் போட்டாரு. அவர் மட்டும் காயகல்பம் சாப்பிட்டிருக்காரா என்ன? அவருக்கும் உடம்புக்கு ஏதும் வரும்ல! (என்ன ஒரு பரந்த மனம் பாத்தீங்களா) அப்போ போடறேண்டி நானும் ரெஸ்டாரன்ட் சாப்பாடு.

முதுகு வலிக்கு திடீர்னு மலை ஏறினதும் காரணாமா இருக்கலாம்னு டாக்டர் சொன்னார். பிசியோதெரபிஸ்ட் சின்னதா எக்சர்சைஸ் பண்ண சொன்னார். அது எங்க கிடைக்கும்னு தெரீலிங்க. அதிலையும் என் சைஸ்ல கிடைக்குமான்னும் தெரீல.

சும்மா சொல்லக் கூடாதுங்க, ஸோபாவும் டீவியுமா பொழுத ஓட்ரதும் சுகம்மாதான் இருந்திச்சுங்க. அதிலையும் இப்போ ஆதித்யா+சன் மியூசிக்கும் நமக்கு வருதா ஒரே ஜாலி. இனி மறுபடியும் வேலைக்கு ஓடுறத நெனக்கவே அலுப்பா இருக்கு. வேற வழி? பசங்களுக்கு கொண்டாட்டம் அம்மா வீட்ல இருக்காங்கன்னு. இந்த குணா இருக்கே... நீ நாளைக்கு வேலைக்கு போறியான்னு கேட்டு அப்பப்போ கடுப்பேத்திட்டே இருப்பாரு (என்னைய பாக்க அவ்ளோ கஷ்டமாவா இருக்கு? ) இப்போ கூட ஒரு டவுட்டாவே சுத்திட்டு இருக்காரு.

அப்புறமா வேற மருந்தோட உங்கள சந்திக்கிறேன். அதுவரை நலமாய் இருங்கள்.

22 June, 2009

விஜய் வாழ்த்து மழையில் - சுசி வருத்த மழையில்....


சுசிக்கு கண்ணு பட்டு போச்சுங்க! குளிர் ஜூரம், உடம்பு பூரா வலி, தலை வலி, தொண்டை நோவு, லைட்டா ஜலதோஷம் அப்புறம் ரொம்ப பசிக்குது, கொடுமை சாப்ட முடில. சிக் லீவ்ல இருந்தாலும் நம்ம விஜய்க்கு சின்னதா ஒரு வாழ்த்து சொல்லிடலாமேன்னு நினச்சேன். சொந்தமா எழுத உடம்பில தெம்பில்ல. அதனால விடுப்பு.காம்ல ஆட்டைய போட்டுட்டேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய். உங்க கொள்கைகள்ல அரசியல்+சினிமாத்தனம் புகாம பாத்துக்கோங்க. வாழ்க நலமுடனும் வளமுடனும்.

இனி சுட்ட பழம்.....



விஜய் பிறந்தநாள் செய்தி !!!

எதிர்பார்த்தபடியே தனது நற்பணி இயக்கத்தை மக்களின் இயக்கம் என அறிவித்துவிட்டார் விஜய்.
விஜய்க்கு இன்று பிறந்தநாள். தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்க, தனது பிறந்தநாள் செய்தியாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

"எனது முதல் படம் வெளியானபோது ரசிகர் மன்றம் ஆரம்பித்து, படிப்படியாக சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்த்தீர்கள். ஏழைகளுக்கு இலவச வேட்டி,சேலை கொடுப்பதில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, இலவச திருமணம் நடத்தி வைப்பது, பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுப்பது, ஏழை பிள்ளைகளை படிக்க வைப்பது போன்ற பணிகளை செய்து சமூக தொண்டர்களாக உயர்ந்து இருக்கிறீர்கள்.

நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி. அதனால் நான் கல்விப் பணியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன். பல நூறு ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதுடன் அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு என் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் 2 இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தொடங்குகிறேன். இந்த கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். இரண்டு இருபதாகி, இருபது இரண்டாயிரமாக வளர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. இதைத்தான் பிறந்தநாள் பரிசாக உங்களிடம் கேட்கிறேன்.

நேற்றைய தொண்டன், இன்றைய தலைவனாக இருக்கிறான். அதேபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும். இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு. இதை ஆழமாக மனதில் பதிய வைத்து மேலும் உங்கள் சமூக பணியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்காக பாடுபடும் ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, வளமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்.

முக்கியமா இவ்ளோ உடம்புக்கு முடியாம போன நெலமேலேம் எனக்கு வாழ்த்து சொன்ன சுசிக்கு என்னோட மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன். அவங்க சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்."

ஏன்.... ஏன்... ஏம்பா.... ஏன் இந்த கொலைவெறி? நமக்குள்ள என்ன. சத்தியம்மா விஜய் இத சொன்னாருங்க. ( என் கனவுல)

19 June, 2009

என் புதிய பதிவுலக நண்பர்களுக்கு....


சென்ஷி, லோகு, சொல்லரசன், பித்தன்!

மீண்டும் நன்றி. லோகு சொன்னாப்ல வேற தளங்களிலேயும் போடனும்னு ரொம்...ப ஆசை. ஆனா இன்னும் கொஞ்சூண்டு திருத்தம் செஞ்சதும் போடலாம்னு இருக்கேன். இன்னும் நெறைய எழுதணும்னு எனக்கும் விருப்பம்தாங்க. ஆனா சேம் பிளட். நேரமே கெடக்கிரதில்ல.


இங்க இருந்து பொட்டி தட்ற நேரம்தான் ஐடியாவா கொட்டுது. வீட்டுக்கு போயி என் வாலுங்க கூட மல்லு கட்டி தூங்க வச்சு, சமயல முடிச்சு, ரெண்டு பேர் கூட (குறைஞ்சது) போன்ல (வம்பு) பேசி, கொஞ்சூண்டு டிவி பாத்து (சத்யமா சீரியல் பக்கம் போறதில்ல. நம்ம கதைய வச்சே நாலு மெகா சீரியல் ஓட்டலாம். இதில அது வேறயா)

எத்....தன வேல.... லொட்டு லொசுக்குன்னு வீட்ல வேலைக்கா பஞ்சம் (இந்த வீட்ல மனுஷன் இருப்பானா. சும்மா உக்காந்தா நீ என் தலமேலயும் எதையாவது வச்சிட்டு போய்ட்டே இருப்பேன்னு சொன்னது உன் புருஷனா? விடு சுசி உனக்குத்தான் தாலி கழுத்துல ஏறும் போதே சூடு சொரண எல்லாம் எறங்கிடுச்சே)

இது எல்லா குடும்ப தலைவீசும் சொல்ல்ரதுதாங்க. வீட்டுக்கு வீடு வாசல் படி இருந்து தானே ஆகணும். என் வீடு மட்டும் விதி விலக்கா என்ன. அதிலையும் ஒரோருத்தர் ப்ளாக பாக்கும் போது தப்பா உள்ள வந்திட்டோமான்னு தோனுது. என்ன்னா எழுத்து, என்ன்னா அமைப்பு.... இதில நம்மளது எல்லாம் எந்த மூலைக்கு. இருந்தாலும் பரவால்ல. அவங்களது மாளிகைன்னா நம்மது குடிசை. ஹோட்டல் + கையேந்திபவன். சரவணா ஸ்டோர்ஸ் + பொட்டிகடை. இப்டி ஏதேதோ சொல்லி என்ன நானே தேத்திக் கிட்டு எழுத வேண்டியதா போச்சு. அட்லீஸ்ட் ஆட்டைய போட்டாவது எழுதிருவோம்ல!


அதோட நான் பதிவர் கணக்கை ஆபீஸ்ல இருந்து உருவாக்கீட்டேனா அது பெரிய தலைவலியா போச்சு. ஆஃபிஸ் மெஷின்ல தமிழ் வரல. அப்பறம் நான் ரொம்ப நோண்டினதில அது மூணு மொழிகளேம் போட்டு குழப்பிடுச்சு. நான் வேற டெக்னிகல் விஷயத்தில அதி மேதாவியா சமயங்கள்ல என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிக்கிறேன். சின்னதா ஒரு உதாரணம். வீட்ல வாலுங்களுக்கு என் மொபைல் + கம்பியூட்டர தொடறதுக்கு அனுமதி கிடையாதுங்க. ஏதாவதுன்னா சமத்தா அப்பாவோடாத விளையாடுங்க கண்ணுங்களான்னு அனுப்பிடுவேன். இப்போ அவங்களுக்குன்னு ரெண்டும் வாங்கி குடுத்ததும் என்ன தெனாவட்டு! உங்க கிட்ட இந்த ப்ரோக்ராம் இருக்கா, இத எப்டி யூஸ் பண்றதுன்னு தெரியுமான்னு ரொம்பவே கடுப்பேத்துறாங்க. நான் பூனைக்கும் ஒரு காலம் வரும்னு சொன்னா என் யானை சொல்லுது அதா நீ பூனைங்கிறது தெரியுமே காலம் வருதான்னு மட்டும் பாருங்குது. எனக்கு எதிரிங்க வெளிய இல்லீங்க.

உங்க ஆதரவு தான் எனக்கு என்னைக்குமே இருக்குமே (இருக்குமா?) நெஜமா சொல்றேங்க இது எனக்கு ரொம்ப புதுமையான + சுகமான அனுபவமா இருக்கு. முகம் தெரிந்தவர்களிடம் முதுகிலும், மனதிலும் வாங்கும் குத்துகளுக்கும் அடிகளுக்கும் இந்த முகம் அறியா நண்பர்கள் வடிகாலா இருக்கப் போறாங்கன்னு என் மனசு சொல்லுது.

எனக்கு எதுவும் தெரியாதுங்கரத சுருக்கமா சொல்லாம கொஞ்சம் ஓவரா பில்ட் அப் குடுத்திட்டேன்னு நல்லாவே தெரியிது. (அதுக்காக விஜயகாந்த் ரேஞ்சுக்கு கண்ணு சிவக்க நீங்க படிக்க கூடாதுங்க. அப்புறம் எங்கேருந்து நலமா இருக்கிறது. பிரஷர் எகிறிடாது?)

எல்லாரும் நல்ல மனசோடயும் நல்ல சுகத்தோடையும் இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன், எப்பவும் போல. மீண்டும் நலம் அறிய வருவேன்....

12 June, 2009

*****************


எல்லோரும் நலம்தானே? சின்னதா ஒரு விளக்கம்.. நான் பாக்கிறதில பிடிச்ச விஷயங்களை, நான் கேட்டு ரசிக்கிற விஷயங்கள, நான் கவிதைங்கிற பேர்ல எழுதுற (?) விஷயங்கள, நான் ருசி பார்த்த விஷயங்கள இன்னும் எத்தனையோ விஷயங்கள உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன்.

உங்களுக்கும் வேற வழி இல்லைங்க. அனுபவிச்சு தான் ஆகணும். எனக்கும் வேற யார் இருக்கா? என் கண்ணாளனுக்கு ரொ....ம்ப சந்தோஷம்க. இந்த பாட்ட கேளுங்களேன், அந்த படத்த பாருங்களேன், இந்த காமெடிக்கு கொஞ்சமாவது சிரிங்களேன்னு தொல்லை பண்ண மாட்டேனாம். பாவம். கொஞ்சூண்டு நிம்மதியாவது மனுஷனுக்கு கிடைக்கட்டுமே.

இனி அப்பப்போ எழுதறேன். பொறுமையோட படிச்சிடுங்க. அப்போதான் யாவரும் நலமா இருக்கலாம்.

மு.கு:-
என்னோட படம் மாத்திட்டேன். அழ...க்கா (வடிவேல் ஸ்டைல்) இருக்கேனான்னு ஒரு வார்த்தை மறக்காம சொல்லிடுங்க....

11 June, 2009

அயன் - நெஞ்சே நெஞ்சே....


ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்.....

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் என் சேர்கிறாய்..
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே....

கண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானும் இம் மண்ணும் பொய்யாக கண்டேனே
அன்பே பேரன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே
வெயிற் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீழும்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் மலராகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே

கள்வா என் கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே
காத்து நம் பூமி தனை விட்டு போகாதே
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போக கூடாது
ஏய் மஞ்சள் தாமரையே என் உச்ச தாரகையே
கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் வைகிறாய்

ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்..... ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்.....

படம் : அயன்
பாடியவர் : ஹாரிஸ் ராகவேந்திரா, மகதி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பி.கு:- குளிர்மையான காட்சிகள், மகதியின் இனிமையான குரல், எல்லாத்துக்கும் மேல ஹாரிஸின் இசை என எல்லாம் சேர்ந்து இந்த பாடலை ரசிக்க வைத்தது.