Pages

  • RSS

28 September, 2009

என் செல்லக் கண்ணனுக்கு...

நாளைக்கு  என் குண்டுக் கண்ணனுக்கு பிறந்த நாள். நான் வேறு சில காரணங்களுக்காக லீவில வீட்ல இருக்கிறதுல அவருக்கு கூடுதல் கொண்டாட்டம்.  எனக்காகவா  லீவ்  போட்டீங்கன்னு துளைச்சு எடுத்திட்டார்.

அவர் ஒரு அம்மா செல்லம். பிறக்கும்போதே அம்மாவுக்கு ஜாஸ்தி கஷ்டம் குடுக்காதவர். அவர் பிறந்த அன்னிக்கு காலேல இருந்தே எனக்கு ஒரு மாதிரியா இருந்துது. சாயந்தரம் வரை வலி எடுக்கல. இருந்தாலும் ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணி பேசினப்போ உடனவே வரசொன்னாங்க. குணா மான்செஸ்டர் யுனைட்டட் மாச் பாத்துட்டு இருந்தாரு. இதோ முடிஞ்சிரும் போயிரலாம்னு கடைசீல மாச் முடிஞ்சு, ஹை லைட்ஸ் பாத்து, ஃப்ரெண்ட்ஸ் கூட ப்ளேயர்ஸ்  திறமைய பத்தி பேசி, அதுக்கும் மேல ஷேவ் செஞ்சு (தேவையே இருக்கலை. அன்னிக்கு எந்த அழகான நர்சுமே வரலை) ஒருவழியா போனப்போ நேரம் இரவு 20:50 சொச்சம். அவங்க கடுப்பாயிட்டாங்க. உனக்கு டெலிவரீல ப்ராப்ளம் இருக்குன்னு தெரியும்ல இப்டியா அசண்டையா இருப்பேன்னு கேட்டப்போதான் எனக்கு குளிர் எடுத்திடுச்சு. அப்புறம் பொண்ண ஒரு ஃபிரண்ட் மூலமா வீட்டுக்கு அப்பா கிட்ட அனுப்பி வச்சுட்டு, (ஏன்னா சாதாரண செக் அப்னு அவங்களையும் தூக்கிட்டு போய்ட்டோம்)  நேரா ஆபரேஷன் தியேட்டர் போயாச்சு. சரியா 21:38 க்கு ஹேய்ய் உங்களுக்கு ஒரு baby boy கிடையாது  ஒரு boy baby யா வந்து பொறந்திருக்குன்னு குறுக்க போட்டிருந்த திரைக்கு மேலால எட்டி பாத்து சொன்னாங்க. 4570g + 52cm ல பிறந்த என் கண்ணன நர்ஸ் கொண்டு வந்து காட்டினப்போ தான் எனக்கு போன உயிர் திரும்பி வந்துது.

என் மறுபிறவி... அந்த நிமிடம்.... அவரை என் கைகளில் ஏந்திய நொடி... பிசுபிசுன்னு இருந்த என் கண்ணனோட நெத்தியில நான் கொடுத்த முதல் முத்தம்... 
என் பிறவிப் பயன்!!!


இவர் என்ன மாதிரி கொஞ்சம் சாஃப்ட் காரக்டர். அடுத்தவங்க மனசு நோகாம நடக்கணும்கிற அக்கறை இப்பவே இருக்கு. மன்னிப்பு, நன்றி ரெண்டும் இவர் அகராதியில ரொம்ப முக்கியம். அவரும் சொல்றதோட அடுத்தவங்களும் சொல்லணும்னு அதிகம் எதிர் பார்ப்பார். உலகத்திலேயே அதி புத்திசாலியாவும்  (அவருக்கு தெரியாதத சொல்லும்போது) அதி முட்டாளாவும் (மறுபடி மறுபடி சொல்லும்போது)  சிலவேளை நான் இருக்க வேண்டியதிருக்கும். அன்பா அவருக்கேத்தா மாதிரி சொன்னா எதுவும் எடுபடும். கத்தல், கோபம்னு போனா ஒரு வாரம் கழிச்சு கூட கேப்பார் அன்னிக்கு நீங்க அப்டி என்னைய திட்டினீங்க உங்களுக்கு எம் மேல அன்பில்லையான்னு.

அம்மா இந்த பொட்டு உங்களுக்கு நல்லால்ல, இந்த ட்ரெஸ் உங்களுக்கு நல்லாருக்குன்னு அக்கறையோட சொல்ற ரெண்டாவது ஆள் அவர்தான். செல்லமா முகத்த வச்சுகிட்டு ஏதாவது கேக்கும்போது கடவுளே என்னால மறுக்கவே முடியாது... கூடவே ஒரு ப்ளீஸ் வேற. என்ன பண்ண அவர் நன்மைக்காக சிலதுக்கு மறுப்பு சொல்ல வேண்டி வருதே.  உடனேயே அப்பா செல்லம் ஆய்டுவார்.

பேசும்போது விஷயத்த சொல்லி முடிச்சு ஒரு பத்து இருபது செகண்ட்ஸ்  கழிச்சு அம்மா ன்னு அழுத்தமா சொல்வார். அதில இதுக்கு என்ன செய்யப் போறீங்கன்ற கேள்வியோட நான் சொன்னது புரிஞ்சுதாங்கிற கேள்வியும் சேர்ந்து இருக்கும். அக்கா ஸ்கூல் தவிர மீதி நேரம்லாம் தம்பின்னுதான்   கூப்டணும்னு ஆர்டர் போட்டுருக்கார். ஸ்கூல்ல எல்லாரும் தன்ன தம்பின்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்களாம்.

அவருக்கு பிடிச்ச கிஃப்ட் லிஸ்ட் போட்டு போன வாரமே குடுத்துட்டார். அதில எது நாங்க வாங்கி இருப்போம்னு தனக்கு இப்பவே தெரியுமாம்னு  காலேலையே  சொல்லியாச்சு. கட்டாயம் தூங்கியே ஆகணுமா, பனிரெண்டு மணி வரைக்கும் முழிச்சு இருக்க கூடாதா, எனக்கு தூக்கமே வரலை, நான் டயர்டாவும் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தவர் இப்போ அசந்து  தூங்கிட்டு இருக்கார். இனி அவர எழுப்பி நாங்க வாழ்த்தப்போறோம்.

என் செல்லக் கண்ணன் எல்லா சீரும் பெற்று, சிறப்போட மன நிறைவா வாழணும்னு என் பிள்ளையாரை வேண்டிக்கிறேன். நீங்களும் வாழ்த்துங்க.

அவர் ஒரு விஜய் விசிறி. வெக்கேஷனுக்கு கார்ல ட்ராவல் பண்ணப்போறோம்னு சொன்னா  அம்மா எனக்கு விஜய் படம் எடுத்து வச்சீங்களான்னுதான் முதல்ல கேப்பார்.  வீடியோ சாங் போடுறதில சிக்கல் இருக்கிறதால அவர் கேட்ட ராமா ராமா சாங் (எனக்கு மட்டும் இல்லைன்னு தோணுது) போட முடியலை. அதனால விஜய் ஸ்டில் மட்டும் போடறேன். முடிஞ்சா புலி உறுமுது பாட்ட ஒரு தடவை கேளுங்க அவருக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.





22 September, 2009

எல்லோரும் கொண்டாடுவோம்...

இப்போ கொஞ்சநாளாவே என் மெயில் பாக்ஸ் நிரம்பி வழிய ஆரம்பிச்சிடுச்சு. கேள்வி இதுதான் தலைவி என்ன செய்யப் போறீங்க? அதுதாங்க நம்ம கலை என்ன அனைத்துலக கார்க்கி ரசிகர் மன்ற தலைவீன்னு அறிவிச்சதால வந்த வினை. நல்லாருங்க கலை!!! முன்னாடியே உங்களுக்கு சொல்லி இருந்தேனே மன்ற வேலைகள் இருக்குன்னு. ஞாபகம் இருக்கில்ல? மன்றத்தோட திட்டங்கள ஒழுங்கா நடைமுறை படுத்திடணும் தம்பி. இல்லேன்னா கொபசெ பதவியில இருந்து தூக்கிடுவேன்.

இனி விஷயத்துக்கு போவோமா..

நம்ம பதிவுலக பிரபலம்,
மொக்கைகளின் சாமி,
சினிமா சின்னசாமி,
அப்பப்போ சீரியஸ் சாமி,
புட்டிக் கதைகளின் புகலிடம்,
அஞ்சா நெஞ்சன்,
ஏழுவை வாழ வைக்கும் தெய்வம்,
சிறுகதை, கவிதை, விமர்சனம், காதல், அரசியல் என்று கலந்து கட்டி அடிக்கும்
காக்டெயில் கார்க்கி
சாரி.. சாளரம் கார்க்கியின் பிறந்த நாள்....

அதை பதிவுலகமே அதிரும்படியா கொண்டாட
வேண்டாமா? வேண்டாமா? வேண்டாமா?

கொண்டாடிடுவோம்!


நிகழ்வுகள் பின்வருமாறு.

-மொக்கை குட்டி சாமி, வருங்கால பிரபல பதிவர் பப்லுவ சந்திச்சு கூட நின்னு போட்டோ எடுத்து அவரோட ஆட்டோக்ராஃப் வாங்கிக்கலாம். (இதுக்கு மட்டும் கட்டணம் கிடையாது)

-ஏழுவ சந்திச்சு பேசி அப்புறம் நீங்க ஏழரையோட வீட்டுக்கு போகலாம்.

-சைடு வாங்கிகிட்டு நிக்கிற கார்க்கியோட கட் அவுட்டுக்கு (இப்போ வேற ஃபோட்டோ போட்டிருக்காரா பிரஃபைல்ல) பால் அபிஷேகம்(?) பண்ண வசதியா சைடாவே ஏணி கட்டப்பட்டிருக்கும். மத்தபடி கொலைவெறியோடு வரும் ரசிகர்கள் அழுகின தக்காளி, முட்டை போன்ற 'தேவைப்பட்ட' பொருட்களை தாங்களே எடுத்துட்டு வரணும். இதுக்கான தனி வழி + கட்டண விபரம் அறிய கொலைவெறி கொபசெ வை அணுகவும்.

-அவர் உயிரை வாங்கிய காஜல் அகர்வால கூப்டா கார்க்கிய மறந்து கூட்டம் அங்க போய்டும்னு எச்சரிக்கப் பட்டதால அந்த திட்டம் அமுலாகலை. பதிலுக்கு ஷக்கீலா டக்கீலாவோட வந்து ஒரு குத்தாட்டம் போடுவாங்க.

-ஆண்ட்ரியா வந்து பாடினா இவர் ரெக்கை முளைச்சு பறந்து விடும் அபாயம் இருக்கிறதுனால பறவை முனியம்மா தேனீ குஞ்சரம்மாவோட சேர்ந்து கும்மி அடிச்சு குலவை பாடுவாங்க.

-ஆதி எடுத்த நீ எங்கே படம் முழு நாளும் தொடர்ச்சியா திரையிடப்படும். இது பார்க்காம யாரும் எஸ்கேப் ஆக முடியாது என்பது பின் குறிப்பு.

-முக்கியமா விழாவுக்கு வரும் அனைவருக்கும் குடும்பத்துக்கு ஒண்ணு படி ஒரு சாளரம் இவர் நினைவா குடுக்கப்படும்.

-குறிப்பா பாதுகாப்பு பொறுப்ப மன்றத்தோட தானை தளபதி என்ற ரீதியில என் கண்ணாளன் குணாளன் பாத்துப்பார்.

பி.கு- நான் அடுத்த பதிவு போடும்வரை கொண்டாட்டம் நடைபெறும்.
பி.கு டூவு - மக்கள் கொண்டு வரும் பரிசுகளும் பணமுடிப்பும் தலைவிக்கே சொந்தம். மத்த பிற டேமேஜுகள் விழா நாயகனையே சேரும்.
பி.கு மூணு-ஒரு பாட்டு அவருக்காக மன்றம் சார்பா போட்டிருக்கேன். இஷ்டப்பட்டவங்க பாத்துக்குங்க.
பி.கு லாஸ்ட்டு - அப்டியே அவங்க அவங்க பர்த்டே எப்பன்னும் மறக்காம பின்னூட்டத்தில போட்டுட்டு போங்க. உங்கள வாழ்த்திர சாக்கில நானும் ஒரு பதிவு போட்டுடுவேன் இல்ல... (நீ சமத்துடி சுசி விருதுக்கும் வாழ்த்துக்குமே பதிவ போட்டுடுரே.. கீப் இட் அப்.)

இப்போ இன்று பிறந்தநாள் காணும் விழா நாயகன் கார்க்கி அவர்களை சாளரம் வழியே ஜம்பி வந்து புட்டிய ஓபன் பண்ணி சாரி.. ரிப்பன கட் பண்ணி விழாவை தொடக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
சென்னையின் சிங்கமே ஹைதையின் தங்கமே வாங்க கார்க்கி வாங்க....


15 September, 2009

அவரும் நானும்....

எல்லோரும் நலம்தானா ?

நானும் நலமே.


நான் பதிவு எழுத ஆரம்பிச்சதில இருந்து இந்த குணாவுக்கு என் மேல ரொம்ப பொறாமை வந்திடுச்சுங்க. என் எழுத்துத் திறமை என்னை உலகளாவிய ரீதியில் பிரபலம் ஆக்கியிருப்பது அவருக்கு பொறுக்கலை. விடுங்க விடுங்க. பிரபலமானா சில பல பிரச்சனைகள், போட்டி பொறாமைகள் வந்துதானே தீரும்.


வாரம் ஒரு பதிவு போடவே நான் படற கஷ்டம் அவருக்கு எங்க புரியப் போது. சும்மா அத படிக்கிற உங்க கஷ்டத்த பத்தி மட்டுமே பேசினா எப்டி? நானும் எதோ கொஞ்சம் மனசாட்சி உள்ளவங்கிரதாலதானே தினமும் எழுதலை. அநியாயத்துக்கு என் மேல குத்தம் சொல்ல கூடாதில்லையா.


அது மட்டுமா பொட்டி முன்னாடி உக்காந்தா போதும். அப்போதான் அவருக்கும் பசங்களுக்கும் நான் ஒருத்தி வீட்ல இருக்கேங்குற ஞாபகம் வரும். அம்மா அது, சுசி இதுன்னு எத்தனை தடங்கல்.. இதையெல்லாம் தாண்டி நான் எழுதுரத்துக்குள்ள எழுத வந்த விஷயம் மறந்து போய்டும். அது யாரது இல்லேன்னா மட்டும்னு இப்போ நினைச்சது? ஓ என் மனசாட்சியா...


இந்த சண்டே ஒரு பர்த்டே பார்ட்டி போயிருந்தோம். பெரும்பாலும் பேச்சு என்னை சுத்தியே இருக்க ரெண்டு காரணங்கள். ஒண்ணு கேக் ஐசிங் செஞ்சது நான். அதுக்கு சீரியஸா முகத்த வச்சுக் கிட்டு என்னமோ தான்தான் செஞ்சா மாதிரி குணா குடுத்த பில்டப்புல நீங்களும் இருக்கீங்களேன்னு சில மனைவியர் கணவன்மாரை கடும் பார்வை பாத்துக்கிட்டாங்க. நான் குணாவ கொடும் பார்வை பார்த்தது வேற விஷயம்.

அடுத்தது நான் இளைச்சுட்டேனாம். டாக்டர பாத்தீங்களா, டயட்ல இருக்கீங்களா, ஏதாவது பிரச்சனையா இப்டீன்னு ஏகப்பட்ட கேள்விகள். என் மேல அவங்களுக்கு இருந்த அக்கறைய பாத்து எனக்கு அழுகையே வந்துடிச்சு. குணா கிட்ட கேட்டப்போ அவளுக்கு புதுசா இப்போ ஒரு வெட்டி வேலை கிடைச்சிருக்கு அதான்னு சொல்லிட்டு சரிதானேங்கிற மாதிரி என்னை ஒரு பார்வை பார்த்தார்.. நான் சொன்னேன் இல்லை எனக்கு கவலைகள் சிலதிருக்கு அதான்னு. அது சொ.செ.சூ ஆயிடிச்சு. நிஜம்தாங்க, பாவம். இத்தனை நாள் என்ன கொடுமைப்படுத்தினது அவளுக்கு பெருசா தோணலை. ஆனா இப்போ ஒட்டுமொத்த பதிவுலகத்தையே கொடுமைப்படுத்தும்போது அவளுக்கு கவலையா இருக்குன்னார். இது ரொம்ப ஓவரு. என் பதிவை அவ்ளோ பேர் படிக்கிறதில்லைன்னு எனக்கு தெரியாதா என்ன.ஏங்க அவ்ளோ கொடுமையாவா இருக்கு நான் எழுதுறது????

என்னமோ போங்க. இத கேட்டத்துக்கு அப்புறம் இனி நாளுக்கொரு பதிவு போடலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். பாக்கலாம்.

மீண்டும் சந்திக்கிறேன் ஒரு நல்ல முடிவுடன்.

04 September, 2009

விருதும் வாழ்த்தும்...

நலமா உறவுகளே... நானும் நலமே.







பாத்தீங்களா வருஸ்ஸையா மூணு விருதுங்க. அத எல்லாருக்கும் பிரிச்சுக் குடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில நான் இருக்கேன். பணமுடிப்பு, பொற்கிளின்னா விஷயம் வேற.

முதலில் எனக்கு பட்டாம் பூச்சி விருதை தந்த கார்த்திகேயனுக்கும், சுவாரஸ்ய பதிவர் விருது தந்த காயத்ரிக்கும், நட்பு வட்டத்துக்குள் என்னையும் சேர்த்துக் கொண்ட வசந்துக்கும் நிறைய நன்றிகள்.

இதில் பட்டாம்பூச்சி விருதை
இது நம்ம ஆளு பாரதியார்
இவங்களுக்கு குடுத்துடுறேன்.

சுவாரஸ்ய பதிவர் விருதை
சாளரம் கார்க்கி
வடலூரான் கலையரசன்
தமிழ்த்துளி டாக்டர் தேவா
இவங்களுக்கு குடுத்திடுறேன்.

அடுத்துதான் ரொம்ப கஷ்டம். கரெக்டா பத்து ஃப்ரென்ட்ஸ சொல்லணுமாம். இருந்தாலும் என் ஃப்ரெண்ட்ஸ் உங்க ஃ ப்ரெண்ட்ஸ், உங்க ஃப்ரெண்ட்ஸ் என் ஃப்ரெண்ட்ஸ், அவங்க ஃப்ரெண்ட்ஸ் நம்ம ஃப்ரெண்ட்ஸ்னு சுருக்கமா சொன்னா எல்லாருமே ஃப்ரெண்ட்ஸ்தான் இல்லையா.
இது நம்ம ஆளு பாரதியார்
இது என்னோட இடம். தமிழ்பிரியன்
சாளரம் கார்க்கி

இவங்களோட என் பதிவை படிக்கிற எல்லாருமே என் நண்பர்கள்தான்.
ஆணிய புடுங்கிகிட்டே பதிவையும் எழுதுறதால நட்பு சம்பந்தமான பாட்டோ படமோ போட முடியலை. உங்களுக்கு பிடிச்ச பாட்டை நீங்களே ஒரு வாட்டி பாடிக்குங்க. ஆஃபீஸ்ல செக்யூரிட்டி சிஸ்டம் ரொம்ப மோசம். நெட் அக்செஸ் குடுக்காம ஒரு பதிவரோட வளர்ச்சிக்கு தடையா எவ்ளோ அநியாயம் பண்றாங்க பாத்தீங்களா?

அடுத்ததா வாழ்த்து.... என் கூட ஃபோன்ல ரொம்ப அட்டகாசம் பண்ணிட்டு இருக்கிற ரெண்டு பேருக்கு.
ஒருத்தர் பெரியண்ணனோட மூணாவது வாரிசு ஊர்ல இருக்கார். கொஞ்சம் சாது. என்கிட்டே அப்பா பூஷு ம்மா பப்புன்னு கொஞ்ச நேரம் சமத்தா பேசிட்டு போய்ட்டே இருப்பார்.

அடுத்தவர் கானடால இருக்கார். அக்காவோட மூணாவது வாரிசு. ரொம்ப வாலு. அப்பப்போ குடும்ப உறப்பினர்கள் இவரால வீங்கின தலையோட அலைய வேண்டியதிருக்கு. எது கிடைச்சாலும் எடுத்து அடுத்தவங்க மண்டை மேலேயே அடிக்கிறது இவர் ஸ்டைல். நான் பேசும்போது மட்டும் கண்ணை விரிச்சுக் கிட்டே கேட்டுட்டு இருப்பாராம். அம்மாவோ அக்காவோ பேசுடி கேட்டுட்டே இருக்கார்னு அப்பப்போ சொல்லலேன்னா அவர் லைன்ல இருக்காரான்னே தெரியாது. எனக்கென்னமோ சித்தி கிட்ட பேச வச்சிடுவேன்னு சொல்லி அவர அக்கா மிரட்டி வச்சிருக்காளோன்னு லைட்டா டவுட்டு.

இருந்தாலும் எப்ப பாத்தாலும் ஷித்தி ஷித்தின்னே அவர் சொல்லிட்டு இருக்கிறதுல அக்கா ரொம்பக் கடுப்பிலேயும் மாமா அதீத ஆனந்தத்திலேயும் இருக்கிறதா தகவல்.

செல்லக் கண்ணன்கள் ரெண்டுக்கும் இந்த மாசம் ஒரு வயசு ஆகுதுங்க. அவங்க என்னிக்குமே சந்தோஷமா நீடூழி வாழணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.

அப்புறம் என்ன. அடுத்த பதிவில உங்க எல்லாரையும் சந்திக்கிறேன். அது வரை நலமா இருங்க.