Pages

  • RSS

30 June, 2010

கணக்கு.

sad-woman

இருப்பதாய் நீ சொன்னபோது

உண்மையாய் உணர்ந்ததாலோ என்னவோ

இல்லவே இல்லையென்ற போது

அழத் தோன்றவில்லை எனக்கு

நீதான் பொய் பேசுவதில்லையாமே

சொல்லி இருக்கிறாய்.

@ @ @ @ @

                   இனிமேல் என் கதைகள்

                   கேட்கக் காதுகளில்லாமல்

                   அலையப் போவதில்லை

                    இல்லாத ஒன்றைப் பற்றி

                    இனியும் கதை சொல்லமாட்டாள்

                    இந்தக் கதைகாரி.

@ @ @ @ @ @ @ @ @ @

                                         நீ நிம்மதியாய் இருப்பாய்

                                         என்ற ஒன்றுதான்

                                         என் நினைவாக இப்போது

                                         குற்ற உணர்வு

                                         உனக்கு இது வரை இருந்ததாய்

                                         என் மனது அறியவில்லை

                                         கொஞ்சமேனும் இருந்திருந்தால்

                                         இன்றோடு அதுவும்

                                         இல்லை என்பதாய் எடுத்துக்கொள்

                                         மகிழ்வாய் இரு.

@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @

                                                                 சந்தேகம்

                                                                 +

                                                                 பயம்

                                                                 x

                                                                 சுயநலம்

                                                                 /

                                                                 பிடிவாதம்

                                                                 =

                                                                நான்.

                                                               கணக்காளன்

                                                               என்னைப் புரிந்து கொண்ட

                                                               நீயானதால்

                                                               பதில்

                                                               தப்பாய்ப் போக

                                                               வாய்ப்புக்கள் இல்லவே இல்லை!!

@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @

                                                                                      j 019

27 June, 2010

ஆகஸ்ட் 18..

நான் நடந்தால் அதிரடி.. போன புதன் கிழமை. 12:20 க்கு ஆஃபீஸ்ல வேலையில மூழ்கி இருந்த என் மொபைல் பாடிச்சு.

”என்னம்மா..”

“அம்மா நாங்க அரோஷா (பாகிஸ்தான் பொண்ணு, அம்மு க்ளாஸ் மேட்) வீட்டுக்கு போலாமா.. அப்பா கேக்க சொன்னார்”

“அப்பாவும் சரினு சொன்னா போங்க. சேர்ந்து போய்.. சேர்ந்து வரணும். சரியா”

12:50 க்கு மறுபடி நான் நடந்தா..

”அம்மா நாங்க அரோஷா வீட்டுக்கு வந்திட்டோம்”

போய் சேர்ந்ததும் சொல்லணும்கிறது எழுதாத சட்டம்.

14:06 நான் நடந்தா..

“என்னடாம்மா”

”அம்மா நான் சது பேசறேன். அரோஷா இல்லை.. அவங்க என்ன விளாட்டுல சேர்த்துக்க மாட்டாங்களாம். என் கூட சண்டை போடறாங்க”

“ஓ.. அக்காச்சி எங்கப்பா”

“அவங்க அரோஷா கூட இருக்காங்க”

“சரி. அவங்க கிட்ட ஃபோன குடுங்க”

கரபுர கரபுர சத்தம் + பேச்சு சத்தம்.

“அம்மா.. என்னம்மா”

“தம்பி கூட அரோஷா சண்டை போடறாங்களாம். என்னாச்சு”

“இல்லம்மா.. அவங்க சண்டை போடலை.. தம்பிதான் அவ,,”

ஃபோன் பிடுங்கப்பட்டு..

“இல்லம்மா.. அக்காச்சி பொய் சொல்றாங்க. அரோஷாதான் முதல்ல திட்னா”

பின்னணியில அரோஷா + அம்மு குரல் மறுப்பாய்..

நேரம் பார்க்கறேன்.. 14:20. ஆணிய பார்க்கறேன். கொஞ்சம் குவியல்தான்.

“தம்பி. அம்மா ஒண்ணு சொல்றேன். கேக்கரிங்களா. அப்டியே ஃபோன கட் பண்ணிட்டு ரெண்டு பேரும் முதல்ல வீட்டுக்கு போங்க. சரியா”

”சரிம்மா”

14:26. நான் நடந்தா..

“என்னம்மா”

“அம்மா.. தம்பி அரோஷா கூட ஃப்ரெண்ட் ஆயிட்டார். நாங்க இன்னும் கொஞ்ச நேரம் விளையாடவா. ப்ளீஈஈஸ்..”

“ம்ம்”

14:31. நான் நடந்த்..

”என்ன்னம்மா”

“அம்மா நான் தம்பி.. அரோஷா இல்லை.. அவ மறுபடி சண்டை போடறா”

“தம்பி.. முதல்ல ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க சரியா.. அம்மா வேலை முடிக்கணும். ஓக்கே.. கிளம்புங்க.. பை”

14:36. நான் ந..

“வீட்டுக்கு போயாச்சா. சைக்கிள்ள போனிங்களா என்ன”

“இல்லம்மா நாங்க இன்னும் போல. அரோஷா அவ அண்ணா கிட்ட சொல்லி எனக்கு அடிக்க சொல்வாங்களாம்”

அவருக்கு 20 வயசு. Polandல படிச்சிட்டு இருக்கார்.

“தம்பி இன்னும் நீங்க வீட்டுக்கு போலையா.. அம்மால்ல போக சொன்னேன்”

“இல்லம்மா.. நாங்க எப்டி போறது. சாவி கொண்டு வர்லையே”

“எதுக்கு சாவி விட்டு போனிங்க. சரி அப்பா வந்திருப்பார்ல. போங்க”

“அப்பா இன்னும் வர்லையாம். கடைக்கு போயிருக்காராம்”

“சரி பரவால்ல. அம்மா வந்திடுவேன். நீங்க முதல்ல கிளம்”

“நீங்க வர ட்ராஃபிக்ல லேட்டானா??”

“லேட்டானா என்ன. வெளிய ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க. அம்மா இல்லை அப்பா வந்துடுவோம்”

“அதெப்டி.. வெளிய வெயிட் பண்ணா கால் வலிக்கும்”

“அதான் வெளிய பெஞ்ச் இருக்கில்ல அதில உக்காருங்க”

“அதில எவ்ளோ நேரம்னு உக்கார்ரது.. போர்மா”

”இதோ பாருங்க.. முதல்ல.. ரெண்டு பேரும்.. வீட்டுக்கு.. கிளம்புங்க.. புரியுதா..”

“அம்மா.. இல்லம்மா..”

“அம்மாச்சி.. அம்மா வேலை முடிச்சு மூணு மணிக்கு கிளம்பிறதா இருக்கேன். ஓக்கே.. வீட்டுக்கு போங்க.. வேற பேச்சு வேண்டாம். நாங்க வர வரைக்கும் ஒண்ணு பெஞ்ச்ல இருங்க.. இல்லை சைக்கிள் ஓட்டுங்க.. அம்மா சொல்றது கேக்குதில்ல.. ஃபோன வச்சிட்டு அம்மா சொன்னத செய்ங்க”

கட் பண்ணிட்டு, மொபைல டெஸ்க்ல வைக்கிறத்துக்குள்ள கலீக்ஸ் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் ங்ஙேஏஏஏ..

“பரவால்லையே இன்னைக்குத்தான் ஒரு அம்மா ஸ்ட்ரிக்டா நடந்துக்கிட்டத நாங்களும் கேட்டோம்”

“ஹிஹிஹி.. கேட்டிங்களா”

”ஆமாம்.. முதல் நாளே இப்டின்னா ஆகஸ்ட் 18 வரைக்கும் என்ன பண்ண போறே”

அவ்வ்வ்வ்..

போன வெள்ளிக்கிழமை. இரவு 8 மணிக்கு பக்கத்து வீட்டு பொண்ணு அமாலிய வந்தாங்க.

“நான் உங்க வீட்ல இன்னைக்கு தூங்கலாமா”

“ஓ.. தாரளமா”

உடனவே என் வாரிசுங்க..

“எத்தன நாள் அவங்க இங்க தூங்கலாம்??”

நான் கிர்ர்ர்ர்ர்..

“இல்லம்மா. ஆகஸ்ட் 18 வரைக்கும் நிறைய்ய்ய நாள் இருக்கே. சொல்லுங்க.. எத்தன நாள்??”

ஆவ்வ்வ்வ்

~~  ~~  ~~  ~~  ~~

boy-girl-balloons

வேற ஒண்ணும் இல்லைங்க.

ஆத்தா எங்களுக்கு லீவு உட்டாச்சூஊஊஊஊஊ..ங்கிறத பசங்க கோரசா இப்டி ஃபோன்ல சொன்னாங்க.. ”அம்மாஆஆஆ.. எங்களுக்கு லீவு விட்டாச்சு.. வீட்டுக்கு போயிட்டிருக்கோம்” காதுல புகையோட கேட்டுட்டு இருந்தேன். அவங்களுக்கு போன புதன் ஸ்கூல் லீவு விட்டாச்சு.. இன்னும் எத்தனை மாசம், வாரம், நாள், மணி, நிமிஷம், செக்கன் இருக்கு லீவுக்குன்னு எண்ணிப் பாத்து என்னய நொந்து போக வச்சிட்டாங்க. அன்னிக்கு.. அதாங்க புதன் கிழமை.. பதினோரு மணியோட பள்ளி முடிஞ்சுது. எனக்கு ஃபோன் வந்தது 11:10 க்கு. அதுக்கப்புறம் நடந்தது தான் மேல சொன்னது.

என்ன செய்ய. பள்ளி விடுமுறைன்னா பாட்டி வீட்டுக்கோ, உறவுக்காரங்க வீட்டுக்கோ அனுப்பி வைக்க முடியுமா எங்களால. இப்டித்தான் சமாளிக்க வேண்டியதா இருக்கு. இங்க சம்மர்ல ஸ்கேட்டிங், கராத்தே, ஸ்விம்மிங்னு  எந்த அக்டிவிட்டிசும் கிடையாது. இனி ஸ்கூல் தொடங்கும்போதுதான் எல்லாம் தொடங்கும். சம்மர் காம்ப் கூட கிடையாது. நான் வீட்டுக்கு வரதுக்கும் அவர் வேலைக்கு கிளம்புறதுக்குமான இடைவெளியில பக்கத்து வீட்டு பசங்க கூட இருக்காங்க. கொஞ்சம் வளந்துட்டதால பயமில்லாம நிம்மதியா இருக்கு.

மக்கள்ஸ்.. வெயிட் பிளீஸ்.. பசங்களுக்கு லீவு விட்டாச்சுங்கிற ஒற்றை வரிய.. இவ்ளோ பத்தி பத்தியா எழுதின என்ன திட்ட முடியாது நீங்க. எல்லாத்துக்கும் காரணம் சின்ன அம்மிணிதான். இல்லையா அம்மிணி.. நீங்கதானே கமண்ட்ல சொன்னிங்க

//இதையெல்லாம் சேமிச்சு வையுங்க. பெரியவங்க ஆனப்பறம் அவங்களாலயே நம்ப முடியாது.//

அப்டின்னு. இப்டி சேமிச்சா கரெக்டுங்களா?? இல்லைன்னா சொல்லுங்க. இன்னும் ரெண்டு பத்தி சேர்த்துடலாம்.

வர்ட்டா..

24 June, 2010

4-3, 4-0, 4-1, 4-2.

 voss cup போன வீகென்ட் சதுவுக்கு Voss Cup football tournament நடந்துது. Voss ங்கிற இடத்தில. எங்க வீட்ல இருந்து 120 கி.மீ தூரத்தில இருக்கு. 6 – 12 வயசு பசங்களுக்கான போட்டி. இந்த வருஷத்தோட போட்டிகள் ஆரம்பிச்சு இருபது வருஷம் ஆகிடுச்சு. வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாளும் போட்டிகள் நடக்கும். ஒரு அணிக்கு நாலு போட்டிகள். போன வருஷம் நாங்க காட்டேஜ் வாடகைக்கு எடுத்து தங்கினோம். இந்த வருஷம் புக்கிங் லேட்டானதால ஒண்ணு பெருஸ்ஸ்ஸா இல்லை ரொம்ம்ப அழுக்கா தான் கிடைச்சுது. பெருசு வாடகை கைய கடிக்கும். மத்தது சுத்தம் பண்ணவே ஒரு மாசம் ஆகும் போல. இதில எப்டி மூணு நாள் தங்குறதுன்னு தினமும் கார்ல போய் வரலாம்னு முடிவாச்சு. அம்மு இஷ்டம் இல்லைனு சொன்னதால நாங்க வீட்ல. கண்ணாளன் விஜய் அண்ணானு ஒரு ஃப்ரெண்ட் கூட போனார். 

வெள்ளி ரெண்டு மணிக்கு அப்புறம் எல்லாரும் வொஸ்க்கு போவாங்க.  ஞாயிறு மாலை திரும்புவாங்க. அதனால போக்குவரத்து பயங்கர நெரிசலா இருக்கும். இந்த தடவை இவங்க ஏஜ் குரூப்கு சனி ரெண்டு, ஞாயிறு ரெண்டு மேச்கள். அதனால தினமும் போய் வர கூடுதல் வசதி ஆச்சு. காலநிலையும் அளவான வெயிலோட தன் பங்குக்கு உதவி செஞ்சது. இந்த வருஷம் மொத்தம் 675 குழுக்கள், 7000 வீர வீராங்கனைகள், 25 மணி நேரத்துக்குள்ள 1354 போட்டிகள். இருபதாவது வருஷ நிறைவுக்கு ஏற்றாற்போல ரெக்கார்ட் ஆகியிருக்கிறதுல ஒழுங்கமைப்பாளர்களுக்கு திருப்தி.

சதுரோட ஃபுட்பால் க்ளப்ல இவங்க ஏஜ் குரூப்ல ரெண்டு டீம் இருக்காங்க. டீமுக்கொரு வீராங்கனையும் இருக்காங்க. இவங்க டீம்ல இருக்கிறவங்க பேரு மறியா. விளையாடுறது தவிர எல்லாம் பண்ணுவாங்க. பாடல், ஆடல், சண்டை, கீழ உக்காந்து புல்லு பிடுங்குதல், சமயத்தில நடு கிரவுண்ட்ல படுத்துட்டு கூட இருப்பாங்க. இதில கொடுமை என்னன்னா பசங்கள வம்புக்கு இழுத்துட்டு அவங்க பதிலுக்கு திட்னதும் ஊர கூட்டி அழுவாங்க. இப்டியான பல தொல்லைகள் குடுக்குறதால அத்தனை பையன்களும் அவங்க மேல கொலை வெறில இருக்காங்க. நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு விளையாடினாலும் தோல்விதான் அதிகமா கிடைக்கும். மறியாவால.. அப்டிங்கிற ஒரு எண்ணம் தானாவே இவங்களுக்கு இருக்கு. 

பாக்கும்போது சிரிப்பு வந்தாலும் கடைசி நேரத்தில ஒரே ஒரு கோல் வித்யாசத்தில தோத்து போயி வரும்போது பாவமா இருக்கும். இதே எண்ணத்தோட தான் காலேலவும் பை சொல்லிட்டு போனார். எப்டியாவது ஜெயிக்கணும்கிற ஆர்வம் இருந்ததாலையோ என்னமோ நாலு மேச்லவும் ஜெயிச்சிட்டாங்க. ஸ்கோர்தான் தலைப்பா எழுதி இருக்கேன்னு உங்களுக்கு எப்பவோ புரிஞ்சிருக்கும். அதனால அத மறுபடி டைப்பல. இந்த டூர்ணமென்ட்ல டீம் ரேங்கிங், பெஸ்ட் ப்ளேயர்லாம் கிடையாது. எல்லாருக்கும் ஒரு ட்ராஃபி, சர்டிஃபிக்கேட், டீஷர்ட் கிடைக்கும்.

Bilde002 (2) Bilde003

குட்டிப் பசங்களா இருந்தாலும்  விளையாடும் போது அவ்ளோ டென்ஷனா இருக்கும். அவங்க ஜெயிக்கணுமேன்னு. அவங்களும் கிரவுண்ட்ல இறங்கிட்டா தங்களை ஒரு பெக்காமாகவோ ஹென்றியாகவோதான் நினைச்சுப்பாங்க. நாங்க பெத்தவங்க, உற்றவங்க, நண்பர்கள் போடற உற்சாக கூச்சல்ல எதிர் அணிக்காரங்க மிரண்டுடுவாங்க. ஒரு மேச்ல ஒருத்தர் சொன்னார் இங்க என்னமோ லிவர்பூல், யூனைட்டட் மேச் நடக்குதோனு நினைச்சேன்னு. அவளவு  ஈடுபாடு எங்களுக்கும் தானாவே வந்திடும். ஒவொரு குட்டி வீரரும்  தன்னால முடிஞ்ச அளவுக்கு திறமையா விளையாடும்போது  எங்களுக்கு என்னமோ அவங்க உலகக் கோப்பைய ஜெயிச்சு வந்த சந்தோஷம் தான் கிடைக்கும்.

வர்ட்டா..

22 June, 2010

நாங்களும் பூவு குடுப்போம்ல..

Vijay அக்காச்சி கிட்ட இருந்து இந்தப் படம் எனக்கு மெயில்ல வந்திருந்துது. அடடடடா.. என் உபியோட அன்பே அன்பு. எனக்காக இவ்ளோ செய்த அவளுக்கு என்ன செய்யலாம்னு நினைச்சுக்கிட்டே படத்தில இருக்கிறவர கொஞ்சூண்டு சைட் அடிச்சிட்டு.. அப்டியே படத்துக் கீழ எழுதி இருந்தத படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் அதுக்காக அவள என்ன செய்யலாம்னு நினைச்சுக்கிட்டே மறுபடி படத்தில இருக்கிறவர சைட் அடிக்காமலே பாத்தேன். பல்ப்.. இது அந்த பல்ப் கிடையாது. ஐடியா பல்ப். ஜகஜ்ஜோதியா எரிஞ்சுது தலைக்கு மேல. இப்போ கண்டிப்பா நீங்க அவ என்ன எழுதி இருந்தானு படிச்சிருக்க முடியாது. ஏன்னா நாந்தான் படத்துக்குக் கீழ இத டைப்பிட்டேனே. அப்டியே அடுத்த பத்திக்கு வாங்க. அவ என்ன எழுதி இருந்தான்னு சொல்றேன்.. சாரி.. டைப்புறேன்.

”ஏய்ய்ய்ய்.. நேத்து செமையா ஒரு கனவுடி. அதில விஜய்  வந்தாரு..  ஜாலியா பேசினாரு.. பூல்லாம் குடுத்தார்டி.. என்ன பேசினோம்னு நினைவில்ல..  ஹைய்ய்ய்ய்ய்யோஓஓஒ.. எனக்கு அது கனவு மாதிரியே தோணலை. நீதான அவரோட பரம ரசிகை. அப்புறம் எப்டி?? நார்வேக்கு பதில் கனடாக்கு டிக்கட் போட்டுட்டார் போல. இருந்தாலும் உன்னை நினைச்சா பாவமா இல்லை.. ரெம்ம்ம்ப பாவமா இருந்துதா.. அத்தோட உனக்கு இப்போ கோவம், வயித்தெரிச்சல்னு கலவையா ஒரு பீலிங்ஸ் வரும்னு தெரிஞ்சுதா.. அதான் இத ஃபோன்ல சொல்லை.. உன் ஆறுதலுக்காக இந்த படம். கோச்சுக்காத பூக்குட்டி..”

அவளோட இந்த பூக்குட்டி ஐஸுக்கும் ஒரு பின்னணி இருக்கு. பயம் வேண்டாம் மக்கள்ஸ். அத இன்னொரு நாளைக்கு சொல்றேன். இப்போ நான் அவளுக்கு ஒரு படம் அனுப்பி, அதுக்கு மேல இத எழுதினேன்.

“போக்காச்சி.. உன்னால திரையுலகமே ஆஆஆடிப் போயிருக்காம். பின்ன.. இருக்காதா. அவர் பாட்டுக்கு யாருக்கும் சொல்லாம உனக்கு பூக் கொடுத்துட்டு போயிட்டாரு. சொல்லி இருந்தா நாங்களும் வந்திருப்போமேன்னு மத்த ஹீரோஸ் ஆளாளுக்கு சண்டை போடறாங்களாம். இப்போ தினமும் ஒருத்தர் வரதா முடிவாகி சீட்டுப் போட்டுப் பாத்ததில இவர் இன்னைக்கு வருவார்னு உளவுத்துறை தகவல் சொல்லியிருக்கு. உன் முன்னாடி சொதப்பல்ஸ் கூடாதுனு அவர் கண்ணாடி முன்னாடி பூ குடுக்கிறாப்ல ரிஹர்சல் பாத்தத மொபைல்ல சுட்டு எனக்கு அனுப்பி இருக்காங்க. நேத்து மாதிரி முழிக்காம சமத்தா நடந்துக்கோ.  ஓக்கேவா.. ரெடியா இரு மினிம்மா..”

அவளோட பதில் மெயில்ல இருந்த திட்டுக்கள் பப்ளிக்கா நாட் அப்ளிக்கபிள்.. அதனால கடைசி லைன மட்டும் எழுதறேன்.

“.. இருந்தாலும் உனக்கு இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ வயித்தெரிச்சல் ஆகாதுடீஈஈஈஈஈ.. நல்லாரு!!!”

நான் என்ன சொல்ல.. நல்லதுக்கு காலமில்லாத நானிலத்துல பிறந்து தொலைச்சிட்டேன். ஹூம்.. சரி போகட்டும் விடுங்க. அப்டியே நீங்க இங்க போய் அந்த பூக்காரன் யாருன்னு பாத்துக்கோங்க.

# # # # # # # # # #

இளைய தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் பிறந்த நாள் பரிசா எங்க ஊர்ல முதல் முதலா உள்ளூர் ரயில் சேவை ஆரம்பமாகுது. இந்த நாட்டு ராணி சோன்யா வந்து ஆரம்பிச்சு வைக்கப் போறாங்க. நிகழ்வுகள் பகல் பனிரெண்டு மணிக்கு ஆரம்பமாகுது. எல்லாரையும் திருட்டு ஃப்ளைட் ஏறியாவது வந்து கலந்து சிறப்பிக்குமாறு யாவரும் நலம் சார்பாக அன்பாகவும், பண்பாகவும், தாழ்மையாகவும் வேண்டிக் கொள்கிறேன்.

வர்ட்டா..

20 June, 2010

டவல் ஃப்ரீ..

நான் இங்க வந்ததுக்கு அப்புறம் இது வரைக்கும் ரெண்டு தடவை ஊருக்கு போய் வந்திருக்கேன். சொந்த ஊருக்கு போற சுகம் இருக்கே.. அப்பப்பா.. என் அக்காச்சி கனடா போனதுக்கு இது தான் முதல் தடவை ஊருக்கு போயிருக்கா. அவள விட எனக்குத்தான் டென்ஷன். அத எடுத்தியா இத எடுத்தியானு தினமும் கேப்பேன். கடைசி நேரம் அவள பிடிக்கவே முடியலை. அதுவும் கிளம்பின அன்னைக்கு பசங்களுக்கும், அத்தானுக்கும் (நாங்க அக்கா புருஷன அப்டித்தான் சொல்வோம்), அம்மாவுக்கும் ஹாப்பி ஜர்னி சொல்லியாச்சு. அதுக்கும் மேலவும் இருந்தா அடுத்த நாள் நான் வேலைக்கு போக முடியாதுங்கிறதால நைட்டு ஒண்ணரை மணியோட தூங்க போய்ட்டேன். அவ மொபைல வேற வீட்ல வச்சிட்டு போய்ட்டா.

அம்மா போனாங்கன்னும் சொன்னேன்ல. அதை ஏங்க கேக்கறிங்க. போறதா பேச்சு தொடங்கின அன்னையில இருந்து அப்பாவ எப்டிம்மா தனியா விட்டு போறது. பாவம் சரியா சாப்டுவாரோ. தூங்குவாரோ. இன்னும் சில பல ரோக்கள்தான் அவங்க பேச்சா இருந்துது. என்னம்மா நீங்க அப்பா என்ன குழந்தையா. அவர் பாத்துப்பார். நீங்க முதல்ல போய் அண்ணன்கள பாத்துட்டு வாங்கன்னு சொன்னா.. இல்லடாம்மா நான்னா நேரத்துக்கு எல்லாம் செஞ்சு குடுப்பேன். சாப்பாடு சரியா எடுத்து போக மாட்டார் வேலைக்கும்பாங்க. உங்க வளர்ப்பு சரி இல்லைம்மா. ஒரு அவசரத்துக்கு செய்யும்படியா இதெல்லாம் கத்துக் குடுத்திருக்கணும்னு நான் சொல்ல.. அப்டியா அப்போ நீங்க உங்க அவர சரியா வளர்க்கறிங்களானு அவங்க கேக்க சிரிப்போட பேச்சு ட்ராக் மாறும்.

ஏர்போட்ல அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். லக்கேஜும் வெயிட் ஜாஸ்தினு கொஞ்சம் சிக்கலாகி பசங்களோட ஃபீடிங் பாட்லவும் மறந்துட்டு ஃப்ளைட் ஏறிட்டாங்க. அப்பா ஆஃபீஸ்கு காலேல ஃபோன் பண்ணி சொன்னார். வீட்டுக்குப் போனதும் ஸ்கைப்ல கால் பண்ணேன். அப்பா எதுனா கூத்து பண்ணுவார்னு தெரிஞ்சு ரெடியா கைல ஒரு டவல நீட்டிக்கிட்டே சோகமா உக்காந்திருந்தேன். அங்க அவர் தாடையில கை வச்சுட்டு என்ன விட சோக ஃபீலோட உக்காந்திருந்தார். இத எதிர் பார்க்காததால சிரியோ சிரினு சிரிச்சார். அப்டியே அம்மா கேக்க சொன்ன சாப்டிங்களா, தூங்கினிங்களா கேள்விகளையும் கேட்டேன்.

நைட்தான் அண்ணா ஸ்கைப்ல வந்தார். இங்கயும் அங்கயுமா எல்லாரும் ஓடிட்டு இருந்தாங்க. அக்காச்சிய காணோம். குளிக்கறாளாம். ஆளாளுக்கு ஒரு வணக்கத்த வச்சிட்டு மறுபடி ஓட்டம். அண்ணா அப்பப்போ வந்து லைன்லவே இருடி.. யாரு ஃப்ரீ ஆகராங்களோ அவங்க வருவாங்கனு சொல்லிட்டு கேமரா ஆங்கிள் சேஞ்ச் பண்ணிட்டு போனார். எல்லாரையும் பாக்கும்படியா. ரஜி சாப்டுட்டு இருந்தான். அக்காச்சியோட மூத்த வாரிசு ஓடி வந்து ஷித்தி.. நான் பெரிய மாமா வீட்ல இருக்கேன்னு பேசிட்டு இருந்தார். அண்ணன் பசங்க அத்தைனு ஒரு சவுண்டு விட்டுட்டு ஓடிட்டாங்க. அக்காச்சியோட ரெண்டாவது பூனைக் குட்டி பின்னாடி.  அண்ணா  சொன்னார் ஏர்போர்ட்ல இருந்து வெளிய வந்ததுமே ஒரு சொறி நாய பாத்து டோகினு கத்த ஆரம்பிச்சவர் இப்போ கிற்றினு ஓடறார்னு.

அத்தான் சாப்டுட்டு இருந்தார். பக்கத்தில மாமி (அத்தானோட அம்மா). அம்மா வந்து பேசிட்டு சாப்ட போனாங்க. ரஜி சாப்டு வந்து பேசிட்டு இருந்தான். என்னடா பண்ணா அக்காச்சி பாத்ததும்னேன். அதை ஏண்டி கேக்கறே.. ரொம்ப வருஷம் ஆச்சில்லையா பிரிச்சு எடுத்து.. போதும்காச்சி.. எல்லாரும் பாக்கறாங்கனு சொல்ற அளவுக்கு அழுகை. அம்மா பத்தி உனக்கே தெரியும்னு சொல்லி கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டு இருந்தோம். என்னடா.. கிணத்து தண்ணி முடிச்சுத்தான் ஆள் வருவா போலனு நானும் சொல்ல அவளும் கடைசிய தூக்கிட்டு வந்து இருடி இவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு வரேன். யார் கிட்டவும் போக மாட்டேங்கறான்னா. அவர் என்ன ஒரு லுக்கு விட்டதோட சரி. ரஜி கூட பேச்சு தொடர்ந்துது. முடி வெட்னத கிண்டல் பண்ணான். எங்க வெக்கேஷன் பத்தி பேசினான். மேச் பாத்திட்டு இருந்த என்னவர் கிட்டவும் பேசினான்.

இப்போ திரும்பி வந்த அக்காச்சி ஏய் இங்க பார்டினுட்டு உக்காந்துட்டு இருந்த ரஜிய பின்னாடி இருந்து கட்டிக்கிட்டு ஒரு உம்மா குடுத்தா.. எனக்கு என்ன ஆச்சுன்னு தெரிலங்க.. அவ்வ்வ்வ்.. பொலு பொலுனு கண்ணீர்.. ரஜி முகத்தில எதுவோ ஒண்ணு முன்னாடியே தெரிஞ்சது எனக்கு. அவனுக்கும் அந்த நேரம் நானும் அங்க இல்லாதது கஷ்டமா இருந்திருக்கு. என்னடி நீ.. அழாதடி.. இதோ பாரு.. அக்காச்சி பாவம்ல.. எத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கா.. அண்ணா இவள வந்து பாருண்ணா என்ன பண்றானு.. சாப்டுட்டு இருந்த அண்ணாவ கூப்டான். அவர் சொன்னா நான் கேப்பேன்னு தெரியும். ஏய்.. இப்போ பாரேன்னா அக்காச்சி. கண்ணீருக்குள்ளால மங்கலா தெரிஞ்சுது.. அண்ணாக்கு உம்மா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வீட்ல இருந்த அத்தனை பேரும் டெஸ்க் டாப் முன்னாடி. அத்தை எதுக்கு அழறாங்க.. அழறீங்க.. அழாதிங்க.. don’t cry shithi.. எதுக்கும்மா அழறே.. அம்மாச்சி அழாதடானு ஏகப்பட்ட குரல்.

கேக்கக் கேக்க கண்ணீர் பெருகிச்சுதே தவிர குறையிறதா காணோம்.. பாவம் அவங்கள எதுக்கு கஷ்டப்படுத்தணும்னுட்டு கண்ணாளன பேச சொல்லிட்டு ஒரு பாட்டம் தூரப் போயி அழுது முடிச்சேன். வந்தவ அக்காச்சிய கூப்டு மறுபடி ரஜி, அண்ணாக்கு மட்டுமில்லாம அண்ணிங்க, பசங்க, அத்தை(அப்பா தங்கை) எல்லாருக்கும் ஒரு உம்மா என் சார்பா குடுக்க வச்சிட்டுத்தான் அவள சாப்டவே விட்டேன். என் கண்ணீர்ல உப்பு மட்டுமில்ல.. கொஞ்சம் கவலை, கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் கோவம், நிறைய்ய சந்தோஷம் சேர்ந்து ருசிச்சுது.

இது ஆச்சா.. எல்லாம் சரியாதாங்க இருந்திச்சு.. இங்க பாரு உன்னையனு அண்ணாவோட குட்டிப் பொண்ணை அக்காச்சி மடில வச்சிட்டு இருந்தா. அவ ஆறு வயசில நான் இருந்தது போலவே இருக்கா. ரஜியோட குட்டிப்பொண்ணு அப்டியே அக்காச்சிதான். அண்ணாவோட ரெண்டாவது பையன் வந்தார். அத்தை.. எதுக்கு நீங்க அழுதிங்க.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ.. நான் என்னங்க செய்ய.. அது தானா வருது.. அழுகையச் சொன்னேன்.

அப்பா கேக்கறார்.. யாரோ எனக்கு டவல் குடுத்தாங்கம்மா.. அவங்களுக்கு என்ன பெட் ஷீட் கிடைச்சுதான்னு. இப்போ ஆளாளுக்கு ஃபோன், ஸ்கைப், சாட்னு பல வழிகள்லவும் டவல் டவலா அனுப்பிட்டு இருக்காங்க. அதுக்கே ஒரு வீடு வாங்கணும் போல. உங்களுக்கு யாருக்காவது பார்சல் அனுப்பணும்னா உடனவே ஒரு மணியார்டர் அனுப்புங்க. போஸ்டல் செலவு போதும்.. டவல் ஃப்ரீஈஈஈஈஈ..

handkle_spa

வர்ட்டா..

17 June, 2010

சுளீர்..

மனம் முழுவதும் வெறுமை

பொய்த்துப் போய்விட்ட கசப்பு

ஏமாற்றத்தின் அழுத்தம்

என் மீது எழுந்த அருவருப்பு

ஓயாது உள்ளே கதறும் குரல்

அசிங்கம் நான்!!!

தோற்பது புதியதல்ல

ஒரே விதமான தோல்வி

என்றும் எதிர்பார்த்திரா அடி

தட்டி எறிந்து விட்டு

என் வழியே எழுந்து விட்டேன்

முதல் முறை

வழியே இல்லாத படி

அத்தனையும் அடைத்து விட்டேன்

இம் முறை

வேண்டாம்

இன்னொரு சுய தேற்றுதல்

வலிக்கட்டும்

சாவின் பின்னும் உணர வேண்டும்

இந்த உயிர் வலியின்

சாட்டை அடியை..

Ø Ø Ø Ø Ø

                                                     sad woman 

Ø Ø Ø Ø Ø

”அழுது முடிச்சியா?”

தெரிந்து கொண்டே கேட்கிறாய்

என் அன்பைப் போலவே

கண்ணீரும் அளவில்லாதது

இரண்டு நிமிடத்தில் முடிந்திட

அது என்ன உன் அன்பா??

16 June, 2010

சூரியனுக்க்கே லைட்டா..

இந்த வருஷமும் ஸ்ட்ரைக். ஆசிரியர்கள் உட்பட. பசங்க ஜாலியா வீட்ல இருந்து கும்மாளமோ கும்மாளம். வேலைல இதுக்குனு தனியா லீவெல்லாம் கிடையாதுனுட்டாங்க. முன்னல்லாம் என் கூட வேலைக்கு வருவாங்க. இல்லை அப்பா கூட போவாங்க. இல்லைனா என் ஆஃபீஸ் கிட்ட ஒரு ஃப்ரெண்டு இருக்காங்க. அவங்க வீட்ல விட்டுட்டு போம்போது கூட்டிப் போவேன். இந்த தடவை எங்க வீட்டு கிட்ட இருக்கிற ஒரு ஃப்ரெண்டு வீட்ல நின்னாங்க. ரெண்டு ஃப்ரெண்ட்சுக்கும் இவங்க வயசில பசங்க இருக்கிறதால ஒத்துப் போகும்.

streik

எங்க ஊரோட சேர்த்து ஒன்பது நகரங்களில ஸ்ட்ரைக் பண்ணாங்க. ஒரு நாளைக்கு 10,5 மில்லியன் குரோனர் சேமிச்சாங்களாம் அரசாங்கம். அதனாலயே ஒரு தீர்வும் சொல்லாம கொஞ்ச நாளைக்கு இழுத்தடிப்பாங்க. இந்த தடவை கொடுமை என்னனா முனிசிபாலிடி ஆளுங்க ஸ்ட்ரைக் பண்ணதுல குப்பை எடுக்க ஆளில்லாம ஊரே நாற ஆரம்பிச்சிடுச்சு. நல்ல வேளை டெம்ப்ரேச்சர் +15 கு மேல போகாததால நாற்றம் கம்மி. எங்க வீட்ல இந்த ரெண்டு வாரமும் சமையல் பெருசா செய்யலைங்கிறதால  தப்பிச்சோம்.  பெரிய அளவில போகாம கடவுளேனு ஒரு வழிக்கு வந்திட்டாங்க. இப்போ ஏர்போட் செக்யூரிட்டி திங்கள்ள இருந்து குதிக்க போறாங்களாம்.

søppel

டீச்சருங்க பத்தாவது எக்சாம் சமயமும், முனிசிபாலிடி ஆளுங்க வெயில் நேரமும், ஏர்போர்ட்காரங்க இப்போ எல்லாரும் சம்மர் வெகேஷன் போற சமயமும்னு கரெக்டா தான் பிளான போடறாங்கப்பா.

00000            

மானாட மயிலாட பாத்துட்டு இருந்தோம் நானும் சதுவும். ப்ரேக் வந்த காப்ல நான் இதை டைப்பிக் கிட்டிருந்தேன். ”இதில எந்த பொண்ணுப்பா அழகா இருக்காங்க”ன்னேன். கேள்வி முடியிறத்துக்குள்ள பதில் தெறிச்சு விழுந்துது. ”யாருமே இல்லம்மா”னு. ”ரம்பா, நமிதா இவங்க கூடவா அழகா இல்லை??”ன்னேன். “ம்ஹூம்.. யாருமில்ல.. நீங்கதான் அழகு” (அவ்வ்வ்..) கேக்க சந்தோஓஓஓஓஷமா இருந்தாலும் கேட்டேன் “ஏம்பா அப்டி சொல்றிங்க??”னு. “பாருங்க அத்தனை பேருமே நிறைய்ய்ய்ய்ய மேக் அப் போட்டிருக்காங்க.. (என் தோள்ல சாஞ்சுட்டு இருந்தவர் தலை தூக்கி என் முகத்த ஒரு லுக் விட்டார்) நீங்க எதுவுமே போட்டுக்காததால அழகா இருக்கிங்க”ன்னார். (ஆவ்வ்வ்..) குஞ்சுக் காக்காக்கும் அம்மாக் காக்கா பொன் காக்காவா?? சரி சரி.. விடுங்கப்பா.. காசா பணமா.. கொஞ்சூண்டு சந்தோஷப்பட்டுக்கிறேனே.

00000

ஆஃபீஸ் முடிஞ்சு வரும்போது வழியில ஒரு ரெண்டு கிமீ தூரத்துக்கு எதுத்தாப்ல வர வண்டிங்க சிலது ஹெட் லைட் போட்டு காமிச்சதுங்க. யாரோ நமக்கு தெரிஞ்சவங்க வேலை முடிஞ்சு போறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். இருந்தாலும் இத்தனை பேரா ஹாய் சொல்வாங்க.. வீட்ல இருந்து கிட்டத்தட்ட ரெண்டு கிமீ தூரத்தில மறுபடி ஹெட் லைட். ட்ராஃபிக் இல்லாததால ட்ரைவர் சீட்ல யார்னு உத்துப் பாத்தேன். யார்னே தெரில. நாம பிளாக் எழுதுற விஷயம் ஊருக்குள்ள பரவிடுச்சோ?? ஆட்டோகிராஃப் கேட்டு வண்டிய நிறுத்தாத வரைக்கும் சரினு நினைக்க சந்தோஷமா இருந்துது. அதையும் மீறி ஸ்பீட் ப்ரேக்கர்ல வண்டி ஏறி இறங்கும்போது லைட் பவரா தெரிஞ்சிருக்கலாம்னு நினைச்சுட்டு விடமுடியாத படி இது அடுத்தடுத்த நாட்கள்லவும் தொடர்ந்துது. “என்னப்பா இது.. எதுக்கு எனக்கு இவ்ளோ பேர் ஹெட்லைட் போட்டு காட்றாங்க”ன்னு என்னவர் கிட்ட முறைப்பட்டேன். “முதல்ல லைட் போட்டிருக்கியானு பாரு” பஸ் ஸ்டாப்ல வண்டிய ஓரங்கட்டி பாத்துட்டு சொன்னேன். “போட்டிருக்குப்பா.. எரியுது” “அப்புறம் என்ன.. சரி நான் வீட்டுக்கு வந்ததும் பாக்கறேன்” பாத்தார். லைட் எரியுது. ஆனாலும் அடுத்த நாளும் ஹெட் லைட் சிக்னல் தொடர்ந்தது. கடுப்பாயிட்டேன். பதிலுக்கு நானும் ஹெட் லைட் போட்டுட்டே வீடு வந்து சேர்ந்தேன். அதுக்கு கூட ஃபைன். நல்ல வேளை மாட்ல.

அப்புறம் தான் விஷயம் புரிபட்டுதுங்க. இங்க விண்டர்ல இருட்டும், சம்மர்ல மிஸ்ட்டும் அதிகம். அதனால வண்டி ஓடும்போது கட்டாயம் ரன்னிங் லைட்ஸ் போட்டிருக்கணும்ங்கிறது எழுதப்பட்ட சட்டம். இல்லேன்னா ஃபைன் 2000 குரோனர்கள். Low beam, high beam, signal lights ல எதுனா பிழை இருந்தா கூட இந்த ஃபைன் செல்லுபடியாகும்.

mangler ett frontlys இப்டி ஒரு லைட் போட்டு போனாலும் ஃபைன்தான்.

யாராவது லைட் போடாம வண்டில போனா எதிர்ல வரவங்க அவங்க ஹெட் லைட் போட்டு சிக்னல் குடுப்பாங்க. தெரிஞ்சவங்க ஹலோ சொல்றத்துக்கு சமயத்தில ஹெட் லைட் போட்டு காமிக்கிறதும் உண்டு. இந்த வருஷ கொடுங்குளிரால பாட்டரி சிக்கல் குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. மெக்கானிக் ஷெட்ல அப்பாயிண்ட்மெண்ட் அடுத்த வாரம். அதனால பாட்டரி சார்ஜ் இறங்காம இருக்கனு லைட் auto ல செட் பண்ணி வச்சிருந்தார் என்னவர். ஷெட்ல இருந்து வண்டி வந்தப்புறமும் அத மறந்தாச்சு. இப்போ லைட்டா வெளிச்சம் வர ஆரம்பிச்சிடுச்சா.. மத்த இடங்கள்ல பிரச்சனை இல்லை. நான் சொன்ன ரெண்டு இடங்கள்லேம் கார் வரும்போது கரெக்டா சூரியன் எதுக்க வந்திடுவாரா.. சூரியனுக்க்க்க்கே லைட்டான்னுட்டு காரோட லைட்ஸ் ஆட்டோமேடிக்கா ஆஃபாய்டும். அதனாலதான் அவங்க அக்கறையோட சிக்னல் குடுத்தது. இப்போ நீங்க சிக்னல் குடுக்கிறது நல்லாவே புரியுதுங்க. இத்தோட வணக்கம் வச்சுக்கிறேன்.

வர்ட்டா..

13 June, 2010

பரம ஃபுட்பால் ரசிகர்!!

mann ser fotball

- மேச் இருக்கிற நாள்ல குத்துக்கல்லாட்டம் இருக்கிற எனக்கு உடம்புக்கு முடியாம போய்டும். அதனால அவர் லீவ் போட்டுட்டு என்னையும் பசங்களையும் கவனிச்சுக்கணும்.

- கோல்னு கத்தற சத்தத்தில தூங்கிட்டு இருக்கிற பசங்க அலறி அடிச்சுட்டு எந்திரிச்சு என் தூக்கம், இல்லை வேலை கெட்டுப் போகும்.

- அப்டியே ஸ்லோமோஷன்ல எந்திரிச்சுட்டு கோல்னா ஒரு குதி குதிக்கிறது, மிஸ்ஸாச்சுன்னா அதையும் விட ஸ்லோவா உக்காந்துக்கிறது.

- சோஃபா நுனிக்கு வரதும் போறதும் பத்தாதுனு முகத்தில எக்கச்சக்க எக்ஸ்பிரஷன்ஸ் வேற.

- கீழே உள்ளது மாதிரியான சில பல காட்சிகள் மாமியார் வந்து நிக்கும்போது நடந்திருக்கு.

காட்சி 1 : யாருக்கோ எதுவோ ஆய்டுச்சாம்மா.. இல்லையே மாமி. ஏன் கேக்கறிங்க? இல்லம்மா.. இவன பாரு,, ஃபோன்ல யார் கிட்டவோ சோகமா பேசிட்டு இருக்கான்.

காட்சி 2 : நீ என் கிட்ட எதுவுமே சொல்றதில்லை. என்ன மாமி சொல்றிங்க? பாரு.. அவனுக்கு எதுவோ பிரச்னை. சண்டை போட்டுட்டு இருக்கான் ஃபோன்ல.

காட்சி 3 : உனக்கு நான் இங்க வந்தது ரொம்ப செலவாயிடுச்சு இல்லைப்பா.. அதோட இப்போ இந்த மருந்து செலவு வேற.. என்னம்மா சொல்றிங்க? நீங்க வரது எனக்கு செலவா என்ன?? பின்ன.. நேத்துலருந்து ஒரு மாதிரியா இருக்கே.. நீ சரியா பேசவும் மாட்றே.. என் பேச்சையும் சரியா கேக்க மாட்றே..

காட்சி 4 : ரூம்ல தூங்கிட்டு இருக்கிற மாமியார் அலறி அடிச்சுக்கிட்டு மாடிக்கு ஓடி வருவாங்க.. என்னம்மா, என்னப்பா ஆச்சு.. வீட்ல திருடன் வந்துட்டானான்னு கேட்டுக்கிட்டே.

- நாம யாரு.. கிங்குல்ல.. ரேஞ்சுக்கு நூற்றுக் கணக்கான ஃபோன்கள்.. சிரிப்பு + சத்தமா. அதுவே தோத்துட்டாலும் நூற்றுக் கணக்கான ஃபோன்கள். சோகம் + சத்தம் கம்மியா. இப்போ என்ன ஆச்சு?? இதில்லன்னா அடுத்த மேச்ல பாத்துக்கலாம்னு. தோக்கணும்.. அப்போதான் இன்னும் நல்லா விளாடுவாங்க. விளையாட்டுன்னா வெற்றி தோல்வி ஜகஜமப்பானு தத்ஸ் வேற.

- மேச் பாத்துட்டு இருக்கும்போது நானோ, பசங்களோ எது கேட்டாலும் மண்டைய ஆட்டிட்டு.. அப்புறமா நான் எப்போ சொன்னேன்னு அப்பாவியாட்டம் முழிக்கிறது.

- இவங்க (சமயத்தில நண்பர் குழாமும் கூட்டு சேர்ந்துக்கும்) கூச்சல் போதாதுனு டிவி சத்தம் அடுத்த ஊருக்கே கேக்கும்.

- ஃபுட்பால் பிடிக்காதவங்க மேச் டைம்ல வீட்டுக்கு வந்தா வேற வழியில்லாம அவங்களும் மேச் பாக்கணும்.

- நாங்க விசிட் போற வீட்டுக்காரங்க ஃபுட்பால் பிடிக்காதவங்கன்னா அன்னிக்கு நான் எவ்ளோ லேட்டா ரெடியானாலும் நோ கமண்ட்ஸ். இல்லைன்னா தெரியாதா இவ ரெடியாக லேட்டாச்சு, பசங்க கொஞ்சம் டயர்டா இருந்தாங்கன்னு  லேட்டா வந்தத்துக்கு சமாளிஃபிக்கேஷன்.

- டிவி ரிமோட் அவர் கண்ட்ரோல்லவே இருக்கும்.

- லைவ் மேச், ஹைலைட்ஸ், டெக்ஸ்ட்னு ஒரே மேச் பத்தி வித விதமா அலுக்காம பாக்குறது.

- மொபைல், லேண்ட்ஃபோன் எல்லாம் சுத்தி வச்சுக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட அப்பப்போ பேச்சு. அப்போ எனக்கு கால் வந்தா ஒண்ணு நான் வீட்ல இருக்கமாட்டேன் இல்லை குளிச்சிட்டு இல்லை தூங்கிட்டு இருப்பேன்னு சொல்லப்படும்.

- யார் பெத்த பிள்ளைங்களோ.. சரியா ஆடலேன்னா அநியாயத்துக்கு திட்டு வாங்குங்க. (கெ வா லாம் அள்ளு கொள்ளையா கேக்கும்)

- என்னமோ நான் அவர் பக்கத்துல உக்காந்த ராசிதான் அவங்க தோத்துட்டாங்கங்கிர மாதிரி என் கிட்ட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிறது.

- நான் மேச் ரிசல்ட் பத்தி பேசும்போது மட்டும் அட என் பொண்டாட்டி சமத்துங்கிறா மாதிரி பெருமையா ஒரு லுக்கு.

- ஃபுட்பால் மேச் டெலிகாஸ்ட் பண்ற அத்தனை  டிவி சானலும் வச்சிருக்கிறது பத்தாதுனு செண்டிங் க்ளியரா இல்லைன்னா கொடும் காலநிலைலவும் பப்ல போயி பாக்கிறது.

- மேச் பாத்துட்டு சமயத்தில டிவி ஆஃப் பண்ணாம தூங்கிடுறது, பல சமயம் நான் தூங்கிட்டு இருக்கும் போது மேச் போயிட்டு இருக்கும். அவங்க கமண்ட்ரி ஹை பிச்ல போம்போது கனவில நம்மள யாரோ கொலைவெறியோட துரத்திட்டு வர மாதிரியே இருக்கும்.

- வேலைல இருந்து அக்கறையா கால் பண்ணி சொன்னபடி மேச் டீகோடர்ல ரெக்கார்ட் பண்ண போட்டேனா, இல்லை அவர் செட் பண்ணிட்டு போன டைமர் வொர்க் ஆகுதா, இல்லை சானல் ஒழுங்கா வருதான்னு கேக்கிறது.

man-united

[ [ [ [ [ O ] ] ] ] ]

அன்பே.. ஆருயிரே.. என் அத்தான்.. முழுக்க முழுக்க உங்களுக்காகவே இன்றைய பதிவ எழுதி இருக்கேன். Football World Cup ஆரம்பிச்சும் நீ எனக்கு பிடிச்சது பத்தி எழுதலையேடின்னு நாளைக்கு நீங்க கேட்ர கூடாதுப்பா. அதான். சந்தோஷம்தானே.. எதோ நம்ம அறிவுக்கு எட்டின ஃபுட்பால் பத்தின விஷயங்கள எழுதி இருக்கேன்.

ManU-bilde இதானே ஃபுட்பால்.. மேச்னா இத சுத்தி ஆளுங்களும், அவங்கள சுத்தி இன்னும் நிறைய்ய்ய்ய்யா ஆளுங்களும் இருப்பாங்க. அவ்ளோதானே.. எனக்குத்தான் தெரியுமே..

 

எதாவது விட்டு போயிருந்தா சொல்லிடுங்க. இந்த வருஷம் மேல சொன்னதையும் விட புதுசா எதுனா நடந்தா அதையும் சேர்த்து இன்னொரு பதிவு எழுதிடறேன். அப்புறம் பாரதி அக்கா நேத்து ஃபோன் பண்ணி இருந்தாங்க.. நாளைக்கு ஈவ்னிங் ஷாப்பிங் போலாமான்னு.  உங்களுக்கே உங்களுக்கான இந்த ஸ்பெஷல் பதிவுக்கான அன்பு பரிசு எவ்ளோன்னு மட்டும் சொல்லிடுங்க. இவங்களுக்கு ஒரு பை சொல்லிட்டு வரேன் முதல்ல..

வர்ட்டா..

09 June, 2010

கலைந்த கனவு..

இது நடந்தது நான் விண்ணைத் தாண்டிய அன்று. அப்போ ஏன் அப்போவே சொல்லலன்னு நீங்க சொல்றது கேக்குது. அப்டியே நீங்க சொல்லலைன்னாலும் கூட நான் சொல்ல வேண்டியது ஒரு பதிவரா (அப்டின்னா??) என்னோட தலையாய கடமை. அதனால சொல்லிடறேன். (ஸ்ஸ்ஸப்பா.. ஒரு பத்தி ஆச்சா)

படம் முடிஞ்சு அழுது வீங்கின கண்களோட கூட்டத்தை விடுத்து.. தப்பி ஓட வழியில்லாம ஒரு ஃப்ரெண்டுக்காக வெயிட் பண்ண வேண்டிய கட்டாயம், அன்னிக்கு எனக்கு.  தெரிஞ்சவங்க தள்ளி நின்னுட்டு இருந்தாங்க. அவங்களுக்கும் இசை பிடிக்கும்னு தெரியும்.

”எப்டிங்க பாட்லாம் அசத்தல் இல்லை” இது நானு.

“ஆமா.. பைத்தியம் பிடிச்சிடுச்சு.. ஆனா ஒரு பாட்டு படத்தில வர்ல. எனக்கு அது ரொம்ப பிடிக்கும்” இது அவங்க.

“அப்டியா.. ம்ம்ம்.. எல்லாமே வந்துதே.. என்ன பாட்டு அது”

“கனவெல்லாம்னு.. செம பாட்டுங்க”

”கனவெல்லாமா.. அப்டி ஒண்ணு நான் வி தா வ ல கேட்டதே இல்லையே”

“இல்லை.. நீங்க யூ டியூப்ல பாருங்க.. அதையும் சேர்த்திருக்கலாம். வேற எதுனா இழுவை சீன கட் பண்ணிட்டு”

பேச்சு தொடர்ந்து, முடிந்து வீட்டுக்கு வந்து மறந்தே போய்ட்டேன். இன்னைக்கு மன்னிப்பாயா கேட்டு மனசு கனத்துப் போயி இருக்கும்போது இது திடீர் நினைவு வந்து ஆராய்ச்சிய பண்ணேன். யப்பா.. என்ன ஒரு பாட்டு. ஃப்ரம் திலிப் வர்மான்னு இருக்கு. யார்னு தெரில. ஆனா வீடியோல ப்ரசண்ட் பை எஸ். ஜனஹன்னு இருக்கு. ரெண்டு பேருக்குமே நன்றிகள். படத்தோட ஸ்டில்ஸ் ஸ்லைட்ல போது. அதனால தான் அவங்க இது வி தா வனு நினைச்சிருக்காங்க. பாடல் வரிகள், இசை ரெண்டுமே மனசை பிசையுதுங்க. கேட்டுட்டே இருக்கேன். அவ்வ்வ்..

நான் கேட்டத எழுதி இருக்கேன். அதாவது என் காதில வரிகள் இப்டித்தான் கேட்டுது.

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்

நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே

பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே

அந்த நேரம் வரும்பொழுது என்னை வதைக்கின்றதே

--

சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை விழி பார்த்தேன்

நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப் பூவாய் நீ குறுக

எனை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி

நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன்

காதல் ஞாபகங்கள் தினம் தினம்..

அப்படியே கண் மூடி ரசிச்சுட்டு இருக்கும்போது மியூசிக் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இல்லாமலே போயிடுது. இது காதல் தோல்வியில பாடினதா இல்லை காதலிகிட்ட தன் காதலோட ஆழத்தை சொல்ற மாதிரி பாடினதா தெரில. ஆனா வரிகள் மனதில பதிஞ்சு போகுது. பாடகரோட குரல் கொஞ்சமே உன்னி கிருஷ்ணன நினைவுபடுத்தும் விதமா இருக்கு. எனக்கென்னமோ இது காதலி நினைவில காதலன் பாடினதாத்தான் இருக்கும்னு தோணுது. ஏன்னா கேக்கும்போது ஒரு விதமான வலி  தானா உருவாகுது. அப்டியே ஒரு ஜோடி மைண்ட்ல நிழலா வராங்க. அவங்களுக்கு இடையிலான காதல், பிரிவு, வேதனைனு காட்சிகள் ஆட்டோமேட்டிக்கா பிளே ஆகுது.. நின்று போகும் இசையோடு சேர்ந்து காட்சிகளும் கலைஞ்சு போகுது.. எனக்குள்ள.. ஆவ்வ்வ்..

அவங்களுக்கு என்ன ஆயிருக்கும்னு தெரிஞ்சுக்க மீதியும் கேட்டே ஆகணும்னு மனசு அடம்பிடிக்குதுங்க.. எங்கு போவேன்.. யாரைக் கேப்பேன்னெல்லாம் தவிக்கலைங்க நானு. அதான் நீங்க இருக்கிங்களே.. யாராவது இந்த பாட்டு முன்ன பின்ன கேட்டிருந்தா சொல்லுங்க. நீங்க.. உங்க குடும்பம்.. உங்க நட்பு.. உங்க தெரு.. உங்க ஊர்.. ஏன் உங்க நாடே நல்லாருக்கும். நீங்களும் பாருங்க, கேளுங்க மக்கள்ஸ்..

வர்ட்டா..