அக்காச்சி கனடா வந்ததுக்கு அப்புறம் நேத்து தான் அண்ணாவ ஸ்கைப்ல பாக்க முடிஞ்சுது. அண்ணாவோட ரெண்டாவது பையன் பேசினார்.
“சஜோபன் எங்க தயான்”
”அவரா அத்தை.. அவங்க எல்ல்ல்லாரும் அவங்க வீட்கு கனடாக்கு போய்ட்டாங்க”
“ஓ.. எப்போப்பா.. சொல்லவே இல்லையே யாரும் எனக்கு”
“அன்னிக்கே போய்ட்டாங்க. தெரியாதா உங்களுக்கு?? அப்பாதான் ப்ளேன்ல கொண்டு போயி விட்டுட்டு வந்தார்”
“ஓ.. உங்க அப்பா ப்ளேன்லாம் ஓட்டுவாரா?? அத்தைக்கு அதுவும் தெரியாதேப்பா”
“அத்தை.. அப்பா ப்ளேன் ஓட்டலை. ப்ளேன் இருக்கிற இடத்துக்கு கூட்டி போய் விட்டாரு. அவங்க ப்ளேன்ல ஏறி போய்ட்டாங்க”
“ஓ.. ரொம்ப நல்லது. உங்களுக்கு என்ன சொல்லிட்டு போனார் சஜோபன்??”
“எனக்கா அத்தை?? டாடா தயான்.. பை பை தயான்.. போய்ட்டு வரேன் தயான்னு சொல்லிட்டு போனார் அத்தை”
2 2 2 2 2
இது போன வாரம். புகழ், தயான் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க. கிரண் ரொம்ப வாலுன்னு போட்டுக் குடுத்துட்டு இருந்தாங்கன்னும் சொல்லலாம்.
“அச்சச்சோ.. அவ்ளோ குழப்படி செய்வாரா கிரண். அப்போ நீங்க சமத்தா தயான்”
“ஆமா அத்தை. எங்க மாடு இருக்கில்ல.. அதுக்கு குடுக்கிற மாவு இருக்கில்ல.. அத எல்லாம் எடுத்து உடம்பு பூரா போட்டுப்பார் அத்தை.. குளிக்கிற மாதிரி”
கேள்விக்குறிய முகத்தில காட்டி அண்ணிய பாத்தேன். அவங்க பதில முகத்தில காட்டி பாத்ததோட மட்டுமில்லாம சொன்னாங்க..
”அது ஒண்ணும் இல்லை மச்சாள். மாட்டுக்கு வைக்கிற புண்ணாக்கு இருக்கில்ல. அத தான் அவர் அப்டி சொல்றார்”
2 2 2 2 2
இதுவும் அதே மாட்டோட இன்னொரு கதை. தயானும் புகழும் டியூஷன் போய்ட்டு வந்தாங்களாம். வரும்போது யாரோ சொன்னாங்களாம். உங்க பின்னாடியே பேய் வரும். திரும்பி பாக்காம வீடு போய் சேருங்கன்னு. பயந்திட்டீங்களான்னு புகழ கேட்டேன். ஆமா அத்தை. ஓடியே வந்துட்டேன், சத்தமா கத்திக்கிட்டேன்னாங்க. தயான கேட்டேன்.
“எங்க மாடு இருக்கில்ல.. அது கன்னுக்குட்டி வச்சிருக்கில்ல.. அதனால அது கோவமா இருக்கும். நான் பக்கத்தில போக மாட்டேன். எனக்கு ரொம்ப பயம். பேய்க்கெல்லாம் எனக்கு பயம் கிடையாது அத்தை. ஏன்னா நான் வீரன்”
அப்டின்னார். அது சரி. நீங்க தான் அப்பப்போ அத்தைய ஸ்கைப்ல பாக்கறிங்க இல்லை. அப்புறம் உங்களுக்கு எப்டி பேய்க்கு பயம் வரும்னேன். அண்ணி விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அண்ணா நோ கமண்ட்ஸ்.
2 2 2 2 2
அக்காச்சி வந்த அடுத்த நாள் அப்பா கிட்ட பேசும்போது பசங்க மூணு பேருமே ரொம்ப நல்லா தமிழ் பேசுறதா சொன்னார். அவங்களுக்கு வாங்க, போங்க, ஆமா, இல்லை மாதிரியான சில சொற்கள் தான் தமிழில பேச வரும். ஆனா நாங்க பேசினா புரிஞ்சுப்பாங்க. இப்படியே தொடர்ந்து பேசினா இனிமே மறக்க மாட்டாங்கப்பான்னு சொன்னேன். அப்டியே அண்ணா கிட்டவும் பேசினேன். சந்தோஷமா இருக்கு அவங்க தமிழ் பேசுறத கேக்கும்போதுன்னேன். அது வெறும் பேச்சில்லடி. தமிழ் அலைன்னார். ஷித்தி.. நான் கனடா வண்டிட்டன். எங்க வீட்ல நிக்கிடன். அம்மா கடைக்க போரிங்க நீங்க.. இப்டி பட படன்னு சஜோபன் பேசுறார். அக்காச்சி கிட்ட சொன்னப்போ சொன்னா அவர் தமிழ் புலமைய பத்தி.
அத்தானோட அப்பா ஃப்ரெண்டு வீட்டுக்கு போயிருந்தாங்களாம். பரவால்லையே. பசங்களுக்கு ரொம்ப மரியாதையான பழக்கம் பழக்கி வச்சிருக்கிங்க. அப்டித்தான் இருக்கணும் அப்டின்னு அவர் ஒரு சான்றிதழ் கொடுத்தாராம். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு.. சஜோபன் அவர பாத்து சொன்னாராம்..
“டேய்.. போய் எனக்கு சோடா எடுட்டுட்டு வாடா”
2 2 2 2 2
ஊர் நேரத்துக்கு சேரன் முழிச்சுக்குவாராம். அம்மாவும் அப்பாவும் அவர மடியில வச்சிட்டு அக்காச்சி தூக்கம் கலையாம இருக்க என் கூட ஸ்கைப்ல பேசிட்டு இருந்தாங்க. சதுர் வந்து என் தோளில சாஞ்சிட்டு பாத்துட்டு இருந்தார். சேரனுக்கு வந்துதே கோவம். டேய்.. எந்திரிடா.. ஷித்தி பாவ்ம். வலிக்கம்.. அடி உனக்கு.. இத சொன்னதும் இல்லாம அப்பப்போ மானிட்டருக்கு அடி, குத்து வேற. எனக்கு வலிக்காம இருக்கன்னு கிட்ட வர சொல்லி வருடி விட்டார். சதுருக்கு ஒரே சிரிப்பா போச்சு.
இன்னமும் கருண் தமிழ் அலையில நான் பாதம் நனைக்கல.
2 2 2 2 2
சமையல் செஞ்சுட்டு இருந்தேன். தங்கா அக்காவங்க சாப்பிட வரதா இருந்தாங்க. சதுர் தண்ணி குடிக்க வந்தவர் அதை விட்டு என் பக்கத்தில வந்தார். எதுவோ கேக்க போறார்னு தெரிஞ்சுது. எதுவா இருக்கும்னு பாத்தா அவருக்கு தேவையான எதுவும் அங்க இருக்கலை. அதிசயமா சமையலுக்கு எடுத்து வச்சிருந்த மசாலா பொருட்களை பாத்தார். அப்டியே கேட்டார்.
“என்னம்மா இது.. மரத்தை எல்லாம் போட்டா சமையல் செய்விங்க.. இத நாங்க சாப்டணுமா.. அஷ்..” (அப்டின்னா அய்யே..)
அவர் கேட்டது கறுவா பட்டை. அவ்ளோ பெருஸ்ஸ்ஸா மரத்துண்டு சைஸ்ல தான் கிடைச்சுது. இங்க இருக்கிற துருக்கிக்காரன் கடையில. தங்கா அக்கா சாப்டும்போது சொன்னாங்க. ”வந்ததும் சொல்ல நினைச்சேன். என்னப்பா இன்னைக்கு இவ்ளோ நல்லா வந்திருக்கு உங்க க்ரேவி.. வாசனையும் தூக்கலா இருக்கு”
பின்ன மரம்லாம் போட்டு சமையல் செஞ்சா சும்மாவா.. நீங்களும் பாருங்க மரத்தை.
வர்ட்டா..