Pages

  • RSS

11 June, 2009

அயன் - நெஞ்சே நெஞ்சே....


ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்.....

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் என் சேர்கிறாய்..
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே....

கண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானும் இம் மண்ணும் பொய்யாக கண்டேனே
அன்பே பேரன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே
வெயிற் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீழும்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் மலராகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே

கள்வா என் கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே
காத்து நம் பூமி தனை விட்டு போகாதே
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போக கூடாது
ஏய் மஞ்சள் தாமரையே என் உச்ச தாரகையே
கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் வைகிறாய்

ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்..... ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்.....

படம் : அயன்
பாடியவர் : ஹாரிஸ் ராகவேந்திரா, மகதி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பி.கு:- குளிர்மையான காட்சிகள், மகதியின் இனிமையான குரல், எல்லாத்துக்கும் மேல ஹாரிஸின் இசை என எல்லாம் சேர்ந்து இந்த பாடலை ரசிக்க வைத்தது.

0 நல்லவங்க படிச்சாங்களாம்: