Pages

  • RSS

22 September, 2011

வாழ்க வளமுடன்!!

இப்படி ஒரு ஆத்மார்த்தமான விஜய் ரசிகரை நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கு கார்க்கி என்றதுமே நினைவுக்கு வரும் இரண்டாவது விஷயம் விஜய் என்பதாய்த்தான் இருக்கும். விஜய் பற்றிய அத்தனை தகவல்களும் அப்படியே தெரிந்து வைத்திருக்கிறார். சமயத்தில் விஜயை விட்டுக்கொடுக்காமல் பேசுவது போல் தோன்றினாலும் அவரின் தவறுகள், குறைகளை சொல்லிக்காட்டுவதிலும் கலாய்ப்பதிலும் எப்போதும் முன் நிற்பார். விஜய் பற்றிய ஒரு தொடரை அழகிய தமிழ்மகன் விஜய் என்ற தலைப்பில் 600024.com என்ற என்ற இணையத்தளத்தில் எழுதி வந்தார். புதியதான தகவல்களோடு புதிய படங்களையும் சேர்த்து மிகவும் நன்றாக வந்திருந்தது அந்தத் தொடர்.


காவலனில் ஸ்டெப் ஸ்டெப் பாடல் வந்த பொழுது அதன் காட்சியமைப்பு இப்படியாக இருக்கும் என்று எனக்குள் ஒரு கற்பனை வரும் அளவுக்கு அந்தத் தொடரின் முதல் பாகத்தையே கலக்கலாக எழுதி இருப்பார். படிக்காதவர்கள் படித்துப் பாருங்கள்.


"சென்னையின் முக்கிய ஏரியாவில் இருக்கிறது அந்தக் கல்லூரி. படிப்பிற்கும் சரி.. மற்ற எக்ஸ்ட்ரா கரிக்குலருக்கும் சரி. பெயர் போன கல்லூரி அது. தமிழ் சினிமாவுக்கு அதிக நன்கொடைகள் வழங்கிய கல்லூரிகளில் முக்கியமானதும் கூட. ஒரு மழைக்கால மாலை வேளையில், பரந்து விரிந்த அந்தக் கல்லூரியின் வளாகத்தில் இருந்து வெளியே வந்தது மொத்தம் நான்கு பேர் கொண்ட குழு. அதில் ஒருவன் மட்டும் பார்க்க படு ஸ்மார்ட். சிறிய கண்கள். முறையாய் வாரப்பட்ட தலை. எளிமையான டிஷர்ட். அதற்கேற்ற ஜீன்ஸ். பார்ப்பதற்கு நம்ம ராஜாவா இவன் என்ற சந்தேகத்தை எல்லோருக்கும் எழுப்பும் உருவம் என்றாலும் ஏதோ ஒரு காந்த சக்தி இருந்தது அவனிடம். குறிப்பாய் அவனது கண்களில
நால்வரும் ஐஐடியில் நடக்கும் மகா மெகா கலை நிகழ்ச்சிக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். ஸ்மார்ட் பாய் தான் குழுத்தலைவன். அப்போது மரண ஹிட்டான ராக்கம்மா கையைத் தட்டு பாட்டிற்கும், மைக்கேல் ஜேக்ஸனின் பீட் இட் பாட்டிற்கும் ஒத்திகை எல்லாம் கனகச்சிதமாக முடித்திருந்தார்கள். முதல் பாதியில் சூப்பர்ஸ்டாரின் ஸ்டைலில் பட்டன் திறந்த சட்டையுடனும், எம்.ஜே பாடலுக்கு கருப்பு நிற மெட்டாலிக் உடையுடனும் ஆட திட்டம். மேடையேறும்போது ஒழுங்காய் இருந்த சட்டையை, இசைத்தொடங்கும் போது ஒவ்வொரு பட்டனாக கழட்டி, ரஜினி ஸ்டைலில் ஒரு முடிச்சு போட, அரங்கம் ஆர்ப்பரிக்க தொடங்கியது. 60 வயலின்களும் டன்..டன்ன்ன்டன்ன்ன் என்று தொடங்கிய நேரம் ஸ்மார்ட் பாய் ஆட ஆரம்பித்தான். உடன் இருந்தவர்கள் ஒவ்வொருவராக தொடர கைத்தட்டல் சத்தம் உச்சம் தொட்டது.
ரஜினி மாதிரி ஆடுறாண்டி.. செம ஸ்மார்ட் இல்லை. கண்ணை பாறேன்.. என ஸ்டெல்லா மேரிஸ்களும் எத்திராஜ்களும் கிசிகிசுக்க ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தான். திடிரென அரங்கெமெங்கும் இருள் கவ்வ, ஒய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்ற சத்ததின் நடுவே விளக்குகள் மின்னின. மேடையில் ரஜினி போய் மைக்கேல் ஜேக்சன் வந்திருந்தார். உடன் வேறு யாரும் இல்லை. ஸ்மார்ட் பாய் மட்டும். பீட் இட் பாட்டின் பீட் ஒலிக்க ஆரம்பித்தது. ஸ்மார்ட் பாயின் ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் அரங்கம் அதிர்ந்துக் கொண்டேயிருந்தது.
நிகழ்ச்சி முடிந்து பரிசுகள் அறிவிப்பின் போது பிரச்சினை வெடித்தது. வெத்தல் போட்ட சோக்குல என்று ஆடித்தீர்த்த ஒரு குழு தங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைக்க வேண்டுமென்ற சண்டையில் இருந்தனர். அரங்கம் முழுவதும் ஸ்மார்ட் பாயின் பெயரை சொல்லி கோரஸாக கத்த ஆரம்பித்தது. வெறுப்பின் உச்சிக்கு போனவர்கள் ஸ்மார்ட் பாயிடமே யார் ஆட்டம் என்று கேட்டனர். உங்க ஆட்டம்தான் சூப்பர் என்றான். முதல் பரிசு அவர்களுக்கு சென்று விட, இரண்டாம் பரிசு வாங்க மேடைக்கு வந்தவன் சொன்னான் “நான் ஸ்டேஜுல மட்டும்தான் ஆடினேன். அவங்க இறங்கியதக்கப்புறமும் ஆடுறாங்க.அதனால் அவங்களுக்குத்தான் முதல் பரிசு போகணும்”. மொத்த ஸ்டேடியமும் எழுந்தி நின்று கைத்தட்ட ஒரே நாளில் சூப்பர் ஹீரோவாக ஆனவன் சிரித்துக் கொண்டே சென்றான்.அந்தக் கல்லூரி லயோலா. அந்த ஸ்மார்ட் பாய் இளைய தளபதி.
நியாயப்படி விஜய் பற்றிய தொடர் அவரது ஸ்டைலில் இப்படித் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் விஜயின் சினிமாவுக்கு முந்தையை வாழ்க்கை அப்படி இருக்க வில்லை. வகுப்பில் கடைசி பென்ச், மற்ற விஷயங்களில் எதுக்குடா அதெல்லாம் நமக்கு என்ற எண்ணம். படிப்பில் சுமார், பார்க்க ரொம்ப சுமார் என்றே இருந்தார். கலைந்த தலை, ஒல்லியான தேகம், ஜிகினா சட்டை என ரோமியோக்களின் எந்த சாயலும் இல்லாமல் இருந்தார் நம்ம இளைய தளபதி. படிப்பிலும் நாட்டமில்லாமல், சினிமாவுக்கென எந்த தகுதியுமில்லாமல் இருந்த விஜய் எப்படி தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமானார்? பார்க்கவும் சுமார், நடித்த அனுபவமும் இல்லை என்ற நிலையில் இருந்து விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை என்றழைக்கும் படி எப்படி வளர்ந்தார்? விஜயின் சினிமா பயணத்தை முடிந்தவரை விரிவாக அலசப்போகிறது இந்த தொடர்."


எனக்கு தியேட்டரில் போய் அந்த பாடல் காட்சி பார்த்ததும் சிறிது ஏமாற்றம் வந்தது பற்றி முன்னாடியே சொல்லி இருக்கிறேன். என்னதான் கதைக்காக அப்படியாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது விஜய் ரசிகையாக என் விருப்பம்.


இப்போதெல்லாம் கார்க்கி அதிகம் எழுதுவதில்லை என்ற குறை அதிகம் இருக்கிறது. ஆனாலும் அதற்கும் சேர்த்து வைத்து நடிப்போடு குறும்படத் தயாரிப்பிலும் கால் வைத்திருக்கிறார். இன்னும் பல வெற்றிகளோடு வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற என் பிள்ளையாரை மனதார வேண்டிக் கொள்கிறேன். அவரின் பிஸி ஷெட்யூலில் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கென்று ஒரு முழு நாள் லீவ் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். எல்லோருக்கும் ஒரு நாள் என்றால் இவருக்கு மட்டும் 23, 24 என இரண்டு பிறந்தநாள்கள். அதனால் ட்ரீட் வேணும் என்பவர்கள் உடனடியாக சாளரத்தைத் தட்டுங்கள். 


இன்று போல் என்றும் உங்கள் மனதில் சந்தோசம் மலர்ந்து நிறையட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்க்கி.

இணைய தளபதிக்கு ஸ்பெஷலாக இளைய தளபதியின் பாடல் பரிசு.

6 நல்லவங்க படிச்சாங்களாம்:

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா ;))

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்க்கி

'பரிவை' சே.குமார் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்க்கி.

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்க்கி...உங்களுக்கும் வாழ்த்துகள் ...

கார்க்கிபவா said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி :)

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.


Late-ஆ வந்துருக்கான்னு நினைக்காதீங்க Late-வந்தாலும் Latest-ஆ வருவோமுல்ல