Pages

  • RSS

30 December, 2011

முயற்சிக்கு நன்றி – நேசம்!

நல்லதொரு முயற்சியை முன்னெடுத்த எல்லோருக்கும் முதலில் பாராட்டுகள். மிகத் தேவையான ஒரு விழிப்புணர்வு வர இயன்றதை எல்லோரும் செய்வோம். இதனால் பயன் பெறும் ஒருவருக்கேனும் நாம் வழிவகை செய்து கொடுத்தவர்கள் ஆவோம்.

ஊரில் தெரிந்தவர்கள் ஒருவருக்கு 2000த்தில் என்று நினைக்கிறேன். புற்றுநோய் என்று தெரிந்ததில் இருந்து அவர் அருகில் கூடக் குழந்தைகளைப் போக அனுமதிக்காமல், தனியே பாத்திரம் எல்லாம் கொடுத்து, தனி அறையில் வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் அந்த வீட்டில் கல்லூரிப் படிப்பு முடித்த பெண், ஆசிரியத் தொழில் செய்த ஒரு பெண், அரசாங்க உத்தியோகத்தில் இருந்த மருமகன் என ’அறிவாளிகள்’ இருந்தனர்.

சின்ன வயதில் இருந்து நாங்கள் 88 கலவரத்துக்கு இடம் பெயர்ந்தது வரை ஒரு பாட்டி பிச்சை கேட்டு வருவார். தடையைச் சுற்றித் தலையில் ஒரு வெள்ளைத் துணியால் கட்டி இருப்பார். அவருக்கு புற்றுநோய் வந்ததில் அப்படி ஆனதாக அம்மா சொன்னார். வீட்டில் கடைக்குட்டியானதால் அவருக்கான காசும் கொடுக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. முதலில் முகத்தைப் பார்க்காமல் குடுத்துவிட்டு ஓடி வந்த நான் வளர வளர அந்த முகத்தில் இருந்த புன்னகையைப் பரிசாக வாங்கி வரத் தொடங்கினேன். பின்னர் என்ன ஆனார் என்று தெரியவைல்லை.

இதைப் போல உறவினர், நண்பர், அறிந்தவர், தெரிந்தவர் என்று எத்தனை பேருக்கு புற்று நோய் வந்துவிட்டது. காய்ச்சலாம் என்பது போல சாதாரணமாகச் சொல்கிறார்கள் சிலர். மனம் வெந்து மாய்ந்து நோய் வந்தவரையும் வருத்திக் கொல்கிறார்கள் சிலர். இங்கேயே எத்தனையோ பேர் ஆரம்பக் கட்டத்திலே கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை முடித்து, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்டவரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

கடந்த வாரம் இரத்தப் புற்று நோயால் தெரிந்தவர் ஒருவர் இங்கே இறந்துவிட்டார். முதற் கட்ட ஆபரேஷன் 2005 இல் முடிந்து நன்றாக வாழ்ந்தவரால் போன மாதம் நடந்த இரண்டாவது ஆபரேஷனின் பின் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள முடியவைல்லை. இருந்தாலும் 2005 க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்ததே அவர் குடும்பத்துக்குப் பெரிய விஷயம் இல்லையா. அவர் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தித்தபடியே இந்த நேசக்காரர்களோடு கரம் கோர்த்துக் கொள்ள எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். கீழே உள்ள இணையத்தளத்திற்கு சென்று பாருங்கள். அப்படியே உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பர்களே.

நேசம்.

nesam small

6 நல்லவங்க படிச்சாங்களாம்:

Unknown said...

நன்றி சுசி.

கோபிநாத் said...

நல்ல பகிர்வு! கண்டிப்பாக துணைநிற்போம் !

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய
பண்பு இது
அருமையான ஒரு விழிப்புணர்வூட்டும் பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு தொடக்கம். பகிர்வுக்கு நன்றி சுசி.

கார்க்கிபவா said...

good initiative by the team.Best wishes

விஜி said...

தேங்க்ஸ் சுசி