Pages

  • RSS

21 April, 2014

நலமா??

ஆத்தா எனக்கு லீவ் உட்டாச்சேய்ய்ய்ய்ய்.. புதன்கிழமை இப்படித்தான் குதித்தது மனம்.. அன்றே இதை எழுதி வைத்துவிட்டாலும் இன்றுதான் பகிர்ந்துகொள்கிறேன்.. இதனை மனதில் கொண்டு நாளைக் கணித்துத் தொடர்ந்து வாசியுங்கள்.. இது கட்டளை அல்ல.. வேண்டுகோள்..

வெள்ளியே ஈஸ்ரருக்காகப் பலர் விடுப்பில் போக ஆஃபீஸில் ஈயாடியது.. ஒரு கலீக் பிள்ளைக்கு சுகமில்லையென்று வரவில்லை.. 'சீக்கிரமா ஆணியப் புடுங்கினிங்கனா சீக்கிரமா ஊட்டுக்குப் போகலாம்'என்று டீம் லீடர் சொன்னது காதில் தேனாய்ப் பாய்ந்தது.. நானும் மற்ற கலீகும் பம்பரமாகி பனிரெண்டுக்கெல்லாம் கிளம்பிவிட்டோம்.. இன்று வேலை நேரம் 8 - 13 என 5 மணி தான்.. ஆனால் நான் 7:30க்கே அட்டென்ஸைப் போட்டுவிட்டேன்.. லேட்டாக வந்த டீலீ அதே தேனைக் காதில் பாயவிட்டாள்.. என்னைப் போலவே சுறுசுறுப்பான கலீக் லீவ்.. மற்றவன் சாக்குமாடு அரக்க்க்கி அரக்கி வேலையை இழுத்ததில் ஆணிகள் தேங்கிவிட்டன.. 

80%ஐ நானே முடித்ததில் ஒருவழியாகப் 11 மணிக்கு ஒழிந்தன ஆணிகள்.. அப்படியே டீலி தந்த ஈஸ்ரர் சாக்லெட்டையும் வாங்கிக் கொண்டு க்ரோஸரிக்கு வண்டியைக் கட்டினேன்.. அங்கே போனால் பிதுங்குது கூட்டம்.. மூடி இருந்த ஒரு கவுண்டரில் வந்தவர் கார்ட் பேமெண்ட் மட்டும் இங்க வாங்க என்றதும் மறுபடி காதில் தேன்.. டர்ர்ர்ர்ரென்று இரண்டு ட்ரொலிகளையும் பலம் கொண்ட மட்டும் தள்ளிக்கொண்டு முதல் ஆளாய்ப் போனேன்..
 
வாங்கிய எல்லாம் வண்டிக்குள் திணித்துவிட்டுப் பார்த்தால் பிள்ளைகளுக்கு ஈஸ்ரர் கேண்டிக்கான முட்டை வாங்கவில்லை.. பொலிதீன் பையில் போட்டு சமாளிப்போம் என்றால் 'அம்மா.. påskeeggக்குள்ள masssse snop வாங்கிப் போட்டுத் தாங்கோ' என்று முட்டை போலவும் நிறைப்பது போலவும் பிள்ளை அபிநயித்தது நினைவு வந்தது.. அங்கு போய் பார்க்கிங் இல்லாது போனால் மீண்டும் இந்த இடம் கிடைப்பது உறுதி இல்லை என்றது மூளை.. சரி என்று காரை க்ரோஸரி முன்னேயே காரை விட்டுவிட்டுப் பக்கத்து மோலுக்கு நடையைக் கட்டினேன்.. வழியில் சுழட்டி அடித்த காற்றின் குளிர் எலும்பு வரை துளைத்தது.. 
அங்கே போனால் எல்லாக் கடைகளும் அட்டையில் செய்த முட்டை விற்றுத் தீர்ந்ததாய்க் கையை விரித்தார்கள்.. வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மோலுக்குப் போகும் எண்ணத்தைக் கூட்ட/வாகன நெரிசல் விரட்டி அடித்தது.. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூத் துவையலாகக் கண்ணில்பட்ட இரண்டு மஞ்சள் நிறப் ப்ளாஸ்ரிக் கிண்ணங்களை வாங்கி வந்தேன்.. 

ஈஸ்ரருக்கு நான் அவளவாக வீட்டை அலங்காரம் செய்வதில்லை என்றாலும் மஞ்சள்ப்பூ மட்டும் வாங்க ஆசையாக இருந்தது.. 
5 நாள் விடுமுறை இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டது.. இவ் வருடமும் எங்காவது ஒரு காட்டேஜ் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஈஸ்ரர் விடுமுறைக்குப் போகவேண்டுமென்ற நினைப்பு மட்டும் இருந்தது.. இந்த விடுமுறைக்குச் செய்து முடிக்கவேண்டுமென்று பலதிட்டங்கள் போட்டாயிற்று.. ஆனால் அலாரம் இல்லாமல் நிறைய நேரம் தூங்குவதென்பதை மட்டும் ஒழுங்காகச் செய்துவிடுவேன்.. 

நீண்ண்ண்ண்ட இடைவெளியின் பின் இங்கே வந்ததையிட்டு மிக மகிழ்வாக உணர்கிறேன்.. இனி வாரம் ஒருமுறையேனும் ஏதாவது பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.. எவளவுக்கு சாத்தியம் ஆகிறதென்று பார்ப்போம்..


எல்லோருக்கும் ஈஸ்ரர் விடுமுறை இனிதே அமையட்டும்.. இறை அருள் நிறையட்டும்!!

5 நல்லவங்க படிச்சாங்களாம்:

கோபிநாத் said...

இறை அருள் நிறையட்டும் ;))

ராமலக்ஷ்மி said...

விடுமுறை இனிதாக அமையட்டும்.

வாரம் ஒருமுறை... எழுதுங்கள். வாசிக்கக் காத்திருக்கிறோம்:)!

அமுதா கிருஷ்ணா said...

ஒரு வருடம் கழித்து வரீங்க போல..வெல்கம்..

ILA (a) இளா said...

..ட்டும்

சுசி said...

கோபி :)

--

ரொம்ப நன்றி அக்கா.. எழுதணும்.. எழுதுவேன் :))

--

ஆமாம் அமுதா.. நன்றி :)

--

இளா.. வார்த்தைப் பஞ்சமோ?? :)