Pages

  • RSS

13 May, 2009

மனிதம் எங்கே இந்த நாட்டில்?


ஏன் இந்த கொடுமை?
இவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?
எத்தனை உயிர்கள்......

அரும்புகள், மலர்கள், காய்கள், கனிகள் ஏன் காய்ந்த சருகுகளைக் கூட விடவில்லையே....
ஒரு சுனாமி வந்து காவு கொண்டது போதாதா?
இன்னும் வேண்டுமா கொடியவனே உனக்கு?
என்று தணியும் உந்தன் இன வெறி ஆசை?
என்று முடிப்பாய் இந்த போரை?

அம்மா வயிற்றில் ஆனந்தமாய்
ஒரு சிசு இருப்பது கூட உனக்கு பிடிக்கவில்லையே....
அதனால் தான் அது உலகைப் பார்க்க முன்னமே
பிய்த்துப் போட்டாயா?
ஒரு தமிழ் தாய் வயிற்றில் கருவானதற்கு
உன் தண்டனை இதுதானா?

ஏன் இந்த கொடுமை?
இவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?
எத்தனை உயிர்கள்.......


(ஒன்னும் இல்லைங்க! இங்க தீஈபம்னு ஒரு டிவில ஜெயா டிவி உங்களில் யார் அடுத்த பிரபு தேவா பார்த்தனா அதில போன வாரம் சிலோங்காரங்க பிரச்சன பத்தின டான்ஸ்.... தாங்க முடில... நா வேற ரொம்ப நல்லவளா.. அழுதிட்டேன் போங்க. அதோட ராமோட ப்லக்லேம் இத பத்தி பாத்தேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் இல்லையா? ரொம்ப சென்டியா டச் பண்றேனோ? பாவம்க. ஏதோ நம்மால முடிஞ்சது. ஒரு நிமிஷம் அவங்களுக்காக பிரார்த்தனை பண்ணலாமில்ல? ப்ளிஇஸ்.....)


(இது காயத்ரிக்கு... ரொம்ப காண்டி ஆயிட்டேன். நினச்சத எழுத முடில. எப்டிதான் நீங்கல்லாம் தமிழ்ல பின்னி பிடல் எடுக்கரிஇங்கோ மக்கா?)

0 நல்லவங்க படிச்சாங்களாம்: