Pages

  • RSS

24 July, 2009

டேக் சுவீட்டு, அண்ட் டான்சு...

ஹலோ ஹவ் ஆர் யூ பீப்பில்ஸ்.... நல்ல ஹாப்பியா இருக்கீங்களா? அதை இன்னும் கூட்ராப்ல ஒன் மாட்டர்.

ஆத்தா எனக்கு லீவு உட்டாச்சு..................

அப்டீன்னு இன்னைக்கு ஒர்க் முடிச்சு வீடு ரிட்டேனிங்க்போது கத்திக்கிட்டே வந்தேன். சுசிக்கு லீவு. சேம் டூ யூ. ஒய்னா சுசியை லண்டன் பிக்சிட்டி இருகரம் நீட்டி வரவேண்டாம் ப்ளீஸ்னு கெஞ்சிக் கிட்டிருக்கு. அதுக்குன்னு போகலேன்னா எப்டி? இதுக்கெல்லாம் ஒரி பண்ணிக்கிற ஆள்னா பதிவுலகத்துக்க ரைட் லெக்க வச்சு வந்திருப்பேனா? டூ வீக்ஸ்தான். மறுபடியும் வந்திருவேன். யாருக்காவது மைல்டா அட்டாக்? பரவால்ல டெல் மீ, டெல் மீ.

அதுக்குன்னு சும்மா படிச்சிட்டு போலாம்னுதானே நினைச்சீங்க? ஞாயிறு ஈவ்னிங்க்தான் ஃப்ளைட்டு. அது வரைக்கும் இங்கனவே கண்ண வச்சிட்டு சுத்திக்கிட்டே இருப்பேன். கமென்ட் போடலேன்னா? டூரு கான்சல்! சொல்ட்டேன்.

சுசிக்கு எதனா ஆகி நாம எஸ்கேப்பிக்கலாம்னு நினைச்சு நீங்க இந்த தேங்கா உடைக்கிறது, மண் சோறு, தீ மிதிக்கிறது, மொட்டை போடறது, காவடி எடுக்கிறதுன்னு சிலபல வேண்டுதல்களை ப்ளாக்காண்டவருக்கு வைப்பீங்க. எத வேணா வைங்க மக்கா. ஆனா பொட்னு போறா மாதிரி செஞ்சுருங்க. அது சாட்டர்டே நடக்காமலும் பாத்துக்குங்க.

அப்புறம் கைவசம் டென் அவார்டுங்க இருக்கு. வந்ததும் குடுத்து கௌரவிச்சிடுறேன். அப்புறம் லண்டன்லேர்ந்து என்ன கொண்டு வந்தீங்கன்னு நீங்க கேக்கக் கூடாதில்ல.

வேற என்னங்க? ரொம்ப டாங்க்சு. உங்க கிட்ட டாக்கினது மூலமா மை இங்கிலிபிஸ்ஸும் இம்ப்ரூவ் ஆயிட்டதுல மீ டூ ஹாப்பி.

அ.... பை பை,

அ.... சி யூ...

அ... டாட்டா.....

நோ ஃப்ளையிங் கிஸ்ஸு. அத மானாட மயிலாடவில போய் சண்டே வாங்கிக்குங்க.

22 July, 2009

சுசி போட்ட ரிவர்ஸ்....

எல்லாரும் நலமா மக்களே!

ஓகே. அப்டீன்னா அப்டியே பதினேழாம் தேதி வெள்ளிக் கிழமைய நோக்கி ரிவர்ஸ்ல வாங்க.

வந்திட்டீங்களா? இப்போ மணி நாலு முப்பது. பொட்டிய மூடி வச்சிட்டு வீட்டுக்கு கிளம்பறேன். கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் கழிச்சு வீட்டு முன்னாடி வண்டிய நிறுத்தி ரிமோட் எடுத்து garage கதவ திறக்கிறேன். ஒரு வழியா லாரிய நண்பர்கள் எங்க வண்டிக்கு வச்ச செல்லப் பெயர் உள்ள ஏத்தினதும்தான் ஞாபகம் வந்திச்சு. அடடா நாளைக்கு barbecue party க்கு நண்பர்கள கூப்ட்ருந்தோம், எதுவும் வாங்கலையேன்னு. சரி இப்பவே அதையும் முடிச்சிரலாம்னு ரிவர்ஸ போட்டு பின்னாடி எடுத்.. டமார் படார்னு கலவையா ஆனா பயங்கரமா ஒரு சவுண்டு. சுருக்கமா #"@#$%^&*@#$$%!@#$%^&*இப்டி.

ஒண்ணும் இல்லீங்க உள்ள வந்ததுமே வழக்கம்போல ரிமோட்ட அழுத்திட்டேன். கதவு அதுங் கடமைய செய்றதுக்காக மூட ஆரம்பிச்சிருக்கு. நான் ரிவர்ஸ்ல வர்றேன்னு அதுக்கு தெரியுமா என்ன! உடனடி நடவடிக்கையா ரிமோட்ட மறுபடி அழுத்தினதால லாக் ஆகி கதவு நின்னிடுச்சி. நல்லவேள ஸ்டெப்னிக்குள்ள கதவு மாட்டிக் கிட்டதால சேதாரம் கொஞ்சம் கம்மி. மிட்சுபிஷி பஜீரோ இப்போ பிஞ்சரோ ஆய்டிச்சு. சம்பவ நேரம் குணாவும் பசங்களும் வீட்ல இல்ல. இவ்ளோ பெரிய சமாசாரத்த சூ மந்த்ரகாளி போட்டா மறைக்க முடியும்? வந்ததும் குணா பாத்திட்டாரு. கதவுதான் மறுபடி மூட மாட்டாம நிக்குதே.கேள்வி நம்பர் ஒண்ணு.ஏய் என்னடி ஆச்சு? அது வந்துப்பான்னு ஆரம்பிக்கும்போதே கேள்வி நம்பர் ரெண்டு நெனப்ப எங்க வச்சிட்டு வந்தே? ..................................................................................................................... இருங்க, குணா திட்டும்போது சுசி எதுவும் பேச மாட்டா. அவர் திட்ற டைம்ல நாம நெனப்ப நான் எங்க வச்சேன்னு பாத்திர்லாம். 15 min. ரிவர்ஸ்ல வாங்க.

புறப்படறதுக்கு சற்று முன் அக்கா கிட்ட இருந்து ஒரு மின்னஞ்சல். மவளே இன்னிக்கும் நீ எனக்கு கால் பண்ணலன்னு வச்சுக்கோன்னு ஆரம்பிச்சு தங்கச்சீங்கிரதினால கெட்ட வார்த்தை எதுவும் போடலை எக்கச்சக்கமா எழுதி இருந்தா. கட்டாயம் கால் பண்ணனும்னு நெனச்சேன். படிச்ச பதிவுக்கெல்லாம் மறக்காம பின்னூட்டம் போட்டேனான்னு நினச்சேன். அப்போ பாத்து Byonce Knowels பாடின Halo ப்ளே ஆச்சா அப்புறம் எந்த நினைவும் இல்ல. எத்தன வாட்டி சொல்றது பாட்ட போட்டுக் கிட்டு டிரைவ் பண்ணாதேன்னு. அது அலறலேன்னா இசை ரசிகர்கள் குணாவை மன்னிக்கட்டும் கதவு மூடுற சத்தம் கேட்டிருக்கும் இல்ல. சின்னதா ஒரு பாயின்ட் இருக்குதோ?

நான் ஏன் குணா திட்டும்போது கம்னு இருக்கேன்னு நீங்க கேக்கலேன்னாலும் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?
கேட்டுக்குங்க. ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு அவர் சந்தோஷப்படுவார். ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப் ஆயிடுவார். மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு எனக்கும் ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

இவ்ளவுக்கும் சுசி ஸ்டேடியாதான் இருந்தா. கடைசீல ஒண்ணு சொன்னார் பாருங்க. அப்போதான் லைட்டா கண்ல தூசி. மத்தபடி தப்பு பண்ணினா சுசி அழமாட்டா. லண்டன் போம்போது நகைக்கடைக்கு போணும்னு சொல்லிட்டிருந்தே இல்ல ன்னு மனச் சாட்சியே இல்லாம சொல்லிட்டாரு. ரெண்டு நாளா நான் அவர்கூட பேசல. நீங்க நினைக்கிறாப்லையே அவர் ஓவர் நிம்மதியா இருக்காரேன்னுட்டு மறுபடி பேச ஆரம்பிச்சிட்டேன். அதுவும் இன்னைக்கு பன்றிக் காய்ச்சலோட அறிகுறி என்னன்னு பன்றிக்கறி சாப்டுக் கிட்டே அவர் கேட்டப்போ நான் சொன்ன பதிலோட லைஃப் பழைய ஃப்ளோல போக ஆரம்பிச்சிடிச்சு.

அப்டியே நீங்க நிம்மதியா இருக்கிறதா பதிவாண்டவர் சொன்னாரா அதான் மனசு கேக்கலை. என் பதிவ போட்டுட்டன்.வரட்டுமா உறவுகளே!

20 July, 2009

சுசிக்கும் விருது....

எல்லாரும் நல்லா இருக்கீங்களா உறவுகளே? நான் நல்லாவே இல்ல. ஏன்னு இப்போ கேக்காதீங்க. அழ எல்லாம் மாட்டேன். எழுதீருவேன் அப்புறம் நீங்க அழுவீங்க. மேல படீங்க.

சுசிக்கும் விருதாமே.... ?! நம்பவே முடியவில்லை.

நன்றி சந்ரு. எனக்கு பதிவுலகில் கிடைத்த முதல் அங்கீகாரம். நான் பாட்டுக்கு ஏதோ எழுதிக்கிட்டு இருக்கேன். உருப்படியாவும் ஏதாவது எழுதணும்னு நினைக்க வச்சிட்டீங்க. என்னோட எழுத்துக்காக இல்லேன்னாலும் சின்ன வயசுல சின்னண்ணன் பிடிச்ச பட்டாம்பூச்சீங்களை எல்லாம் அவன் கூட கட்டிப் புரண்டு சண்டை போட்டு பறக்க விட்டு உயிர் காத்த சமூக சேவைக்காக வேணா கட்டாயம் ஏத்துக்கிறேன். மீண்டும் நன்றிகள் சந்ரு.

குறிப்பா நான் இன்னைக்கு இருக்கிற மனநிலைக்கு எனக்கு இது பெரிய ஆறுதல்.

சந்ரு மொத்தம் ஆறு பட்டாம்பூச்சீங்கள என் பக்கமா பறக்க விட்டாரு. இதில ஒண்ண மட்டும் வச்சிக்கிட்டு மத்த அஞ்சையும் யார் கிட்டயாவது கொடுத்திரணும்னு சொல்லி இருக்காரு. அத நானும் ரிப்பீட்டே.

நான் ஒண்ண சாளரம் கார்க்கிக்கு வழங்கிக்கிறேன். இவர் ஒரு ஐடியா திலகம். விளையாட்டுத்தனமா பதிவுகள போட்டாலும் திடீர்னு சிந்திக்கவும் வச்சிடுவார். சண்டைக்கு அஞ்சாதவர். எனக்கு பின் பிறவா என் தம்பி.

இன்னொண்ண பிரியமுடன்......வசந்த் க்கு வழங்கிக்கிறேன். படம் போட்டே சமூகத்தில விழிப்புணர்வ ஏற்படுத்திக் கிட்டு வர்றாரு. சில படங்களைப் பாத்து மிரண்டதில என் தூக்கம் பறிபோன பாவத்துக்கு சொந்தக்காரர்.

இன்னொண்ண இது என்னோட இடம். தமிழ் பிரியனுக்கு வழங்கிக்கிறேன். சின்னதா ஒரு சோக டச்சிங்கோட எழுதுவாரு.என்ன அன்போட அக்கான்னு கூப்ட என் முதல் பதிவுலக தம்பி.

இன்னொண்ண பிரிவையும் நேசிப்பவள்.. காயத்ரிக்கு வழங்கிக்கிறேன். காதல் கவிதை அதுவும் ரொம்ப பீலிங்கோட இவங்க எழுதுவாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.

இன்னொண்ண சொல்லரசன் க்கு வழங்கிக்கிறேன். எலக்சன்னாலே சக பதிவர்களுக்கு இவர் ஞாபகம்தான் வருமாம். சமுதாய சிந்தனைகளோட பதிவு எழுதுவார்.

அப்புறம் என்ன? ஸ்வீட் எடுத்து கொண்டாடி மறக்காம எனக்கும் அனுப்பி வச்சிடுங்க.
மீண்டும் சந்திக்கிறேன்.

14 July, 2009

இளமைக் காலங்கள் தொடர்கின்றன....

எல்லாரும் நல்லா இருக்கீங்களாங்க? அப்போதான் நான் நல்லா இருக்க முடியும். ஆபீஸ்ல என் பிராஞ்ச்ல என்னத் தவிர எல்லாரும் லீவில போய்ட்டாங்கங்க. அட இந்த காப்ல பதிவா போட்டுத் தாக்கலாம்னா மத்தவங்க விட்டாதானே. ஹேய் சூஷீ! நீ தனியாவா இருக்கேன்னுட்டு வந்து ஆளாளுக்கு மொக்கையா போட்டுத் தாக்கராங்கங்க. நான் என்ன செய்யட்டும்? அலப்பரய பாரு இந்தப் புள்ளைக்கு. அது உன் நல்ல நேரம்டி. இல்லேன்னா அதுக்கப்புறம் உன் மொக்கைப் பதிவுப் பக்கம் யாருமே தல வச்சும் படுத்திருக்க மாட்டாங்கடியோய் ஏங்க இப்போ எதாவது உங்களுக்கு கேட்டிச்சு? ஏதும் கிராஸ் பதிவா இருக்கும். சரி நான் எங்க விட்டேன்?

முதலாம் வகுப்புக்கு போன முத நாளே அம்மா ஆர்டர போட்டுட்டாங்க. அட என் அம்மாவ சொன்னேங்க இனி தாத்தால்லாம் சைக்கிள்ள வச்சு மிதிக்க முடியாது. சின்னண்ணன் கூட சமத்தா நடந்து வந்துடு என் செல்லக் குட்டீன்னு. முதலாம் வகுப்பு வந்ததும் நடைங்கிறது எங்க வீட்ல எழுதாத சட்டம். இவ்ளோ நாள் ஜாலியா சைக்கிள்ள போகும்போது எதுவும் தெரீல. நடக்கும்போது எத்தன தொல்லை? ஊர்ல உள்ள ஆடு,மாடு,நாய்,பஸ்சு,லாரி,பெருசா மீச வச்ச ஆளுங்க,தடி தடியா பொம்பளைங்க எல்லாரும் என் எதிர்க்கவே வரணுமா என்ன? அதுவும் ரெண்டாவது வாரமே பஸ்சுக்கு ஒதுங்கறேன் பேர்வழின்னு கொஞ்சம் ஓவரா ஒதுங்கிட்டேன் குளத்தில முங்கி சாகப் பாத்தேன். சின்னண்ணன் மட்டும் சவுண்டு குடுக்கலேன்னா ஆள் க்ளோஸ். ஜஸ்ட்டு மிஸ்ஸு. இது நான் முன்னாடி சொன்ன கண்டம். இங்க டீச்சர் பேரு தேவி. சின்னண்ணனுக்கு அவங்க டீச்சர் சில சமயம் எக்ஸ்ட்ராவா ஒரு மணி நேரம் டியூஷன் வைப்பாங்க. அப்போ நான் அவன் பக்கத்தில உக்காந்துக்க எனக்கு பர்மிஷன் குடுத்தாங்க. சின்னண்ணன் ரொம்ப நோண்டி. ரெண்டு வாட்டி ஸ்கேலால அவன் கையில டீச்சர் நல்லாவே கவனிச்சு கிட்டாங்க. பொறுத்துக்கிட்டேன். மூணாவது வாட்டி அடிச்சதும் நான் அவ்வ்வ்வ்வ்... வீட்ல போயும் ஒரே அவ்வ்வ்.. என் க்ளாசிலேயும் அவ்வ்வ்வ்... அப்புறம் சின்னண்ணன் தான் இனிமே சமத்து பிள்ளையா அடி வாங்காம இருக்கேன்னு சொல்லி, அப்பா அம்மா டீச்சர் கிட்டயும் பேசி, டீச்சர் இனிமே அவனுக்கு வலிக்காம அடிக்கறதா என்கிட்ட சொல்லி ஒரு வழியா கண்ணீர் காண்டம் முற்றும்.

இனி எல்லாரும் ரெண்டாம் வகுப்புக்கு போவோமா. இங்க எல்லாரும் ரொம்ப சமத்தா சுசி மாதிரியே இருக்கணும். ஏன்னா புதுசா வந்த குறள்தாசன்கிற பிரின்சிபால்தான் நமக்கு டீச்சர். இப்பவும் இவருக்கு என் மேல ரொம்ப அன்பு. சின்னண்ணன் இப்போ இவர் ஸ்கூல்லதான் டீச்சரா இருக்கான்.சமீபத்துல நடந்த பள்ளி விழாவில சின்னண்ணன் பொண்ண பாத்திட்டு அப்டியே என்ன பாக்றா மாதிரி இருந்ததாவும் தான் எப்பவும் என்னோட ரசிகன்னும் பாராட்டி பேசினாராம். நம்பலைல்ல? எடுங்க சூடத்த!

மூணாம் வகுப்பு ஒரு வித கிலியோடவே முடிஞ்சுது. காரணம் ஸ்கேல் புகழ் சுகுணா டீச்சர். மறந்திட்டீங்களா? வேணா இன்னொரு தடவ எழுதிடட்டுமா? ஓகே ஓகே.... தொடர்ந்து படீங்க.

நாலாம் வகுப்பு நல்ல வகுப்பு. சுகந்தீன்னு ஒரு தேவதையே டீச்சரா வந்தாங்க. ரொம்ப நல்ல மிஸ். அவங்க மிஸ் ங்கிரதனாலயோ என்னமோ ரொம்ப அன்பா இருப்பாங்க எல்லார்கிட்டயும். கல்யாணம் ஆகிப் போயும் ஊருக்கு வர்றப்போ என்ன வந்து பாக்கும்படி சொல்லி விடுவாங்க. அவங்களோட பிரியமான மாணவி நானாக்கும்.

அஞ்சாவது கணேஷ்வரி டீச்சர், குறள்தாசன் சார், சுகந்தி டீச்சரோட ஜாலியா போய்டிச்சு. இப்போ எனக்கு யசோ,லதா, மலர், மின்னி, சுமதி, ராஜி,மதாங்கினி, ரட்ணம், குமார், ஆதி, செந்தில்னு ஒரு நெருங்கின நண்பர் கூட்டம் உருவாய்டிச்சு. சுமதி கூட ஏன்னு தெரியாமலே ப்ளஸ் டூ முடியிற வரைக்கும் பேசிக்கலை. அப்புறமா நாங்க டீச்சிங் இண்டர்வியூ போனப்போதான் பேசிக்கிட்டோம். அவளுக்கும் காரணம் என்னன்னு தெரீலன்னு சொன்னா. இதில இப்போ யசோ,செந்தில் ஊர்ல இருக்காங்க. சுமதி கானடா, லதா லண்டன், ஆதி ஆஸ்த்ரேலியான்னு போய்ட்டாங்க. அட பொருத்தமாத்தான் பயபுள்ளக போயிருக்கு மத்தவங்க எங்கன்னு தெரீல. ரட்ணம் எங்களை விட்டு ஒரேயடியா போய்ட்டான். எட்டாவது படிக்கும்போதே ஸ்கூல விட்டு நின்னுட்டான். நாங்க பத்தாவது வந்தப்போ அவன் உயிரோட இல்ல.
பொழுது போக்குன்னா பாட்டி வீடுதான். எப்பவும் தனியாதா விளையாடுவேன். ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து சாப்டு பாட்டி வீடு போனேன்னா ரொம்ப இருட்டானத்துக்கு அப்புறமாதான் மறுபடி வீட்டுக்கு வருவேன். அதுவும் தாத்தா என்ன முதுகு மேல சுமந்துகிட்டு போவாரு. அஞ்சாவது வந்ததும் தாத்தா லைட்டா மூச்சு வாங்கறத பாத்ததும் நானாவே இறங்கி அவர் கைய்ய இறுக்கி புடிச்சு கிட்டே பக்கத்தில நடந்து போவேன். என் தைரியத்த பத்தி மறுபடி எழுத வேணாமேன்னு பாக்கிறேன்.
விளையாட்னா சுசிக்கு ரஸ்க்கு, போட்டீன்னா ரொம்ப ரிஸ்க்கு. அதென்னமோ தெரீலீங்க வரிசையா விட்டுட்டு பிகில ஊதினாங்கன்னா எனக்கு உதறும். எப்டியோ சிலபல மூணாவது பரிசுகள வாங்கி வச்சிருக்கேன்.

கலை எனக்கு கை வந்த கலை. சித்திரம் கைப் பழக்கம் வரல. அப்போ அதுமட்டும் கலை கிடையாதோ? ஆடல்,பாடல், நாடகம்னா கூப்டு சுசியம்பாங்க.

எனக்கு நினைவு தெரிஞ்சு இவ்ளோ வருஷத்திலேம் ஒரே ஒரு வாட்டி ஹோம் ஒர்க் பண்ணலேன்னு தோப்புக் கரணம் போட்ருக்கேன். நண்பர்கள காப்பாத்தப் போயி ஒரே ஒரு வாட்டி அடி வாங்கி இருக்கேன். யாரும் என்னைய அடிச்சதில்ல, நானும் யாரையும் அடிச்சதில்ல. சின்ன சின்ன வாய்ச் சண்டைகள் போட்டதுண்டு.இப்ப சொல்லுங்க நான் நல்லவளா கெட்டவளா?

நெஜமா நான் சந்ருவுக்கு நிறைய நன்றி சொல்லணும். அம்மாடி... இத தான் மலரும் நினைவுகள்ம்பாங்களா... மறுபடியும் அந்தந்த வயதில வாழ்ந்து பாக்கணும் போல ஆசையா இருக்கு. அது மட்டுமா? எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரியண்ணன், அக்கா, சின்னண்ணன், தாத்தா, பாட்டி மத்த உறவுக்காரங்க, ஊர்க்காரங்கன்னு எல்லாரோடான நினைவுகளும்....

அவ்வ்வ்வ்.... ரொம்ப பீலாயிட்டேன். சத்யமா சொல்றேங்க இன்னைக்கு என்னால தூங்க முடியாது. ரொம்ப அழுகாச்சியா இருக்கு....


இப்போ நான் யாரையாவது கோத்து விடணும்ல. தயவு செஞ்சு இத சாதாரணமா நினைக்காதீங்க. அனுபவிச்சு பாருங்க... நிச்சயமா புரியும். ஏய் போதும்டி உன் புலம்பல். யாரையாவது கூப்பிடுற வழிய பாரு பார்ரா, மறுபடியும் எனக்கு ஏதோ கேக்றாப்லையே இருக்கு. வாஸ்து சரியில்ல, டெம்ப்ளேட்ட மாத்தணும்.

அத்துக்கு மின்னே இத்த படீங்க.
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தாங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்

இது சுசியோட விதி : நான் அழைப்பவர்கள் முதலிலேயே இதை எழுதி இருந்தால் உடனடியாக எனக்கு பின்னூட்டத்தில் அறியத் தர வேண்டும். நான் அடுத்தவரை கோர்க்க சாரி அழைக்க இது உதவியாக இருக்கும்.

முதலாவதா நான் அழைக்கிறவர் என்னோட முதல் பதிவுக்கு, முதல் பின்னூட்டம் போட்டவர் என்னும் மதிப்பிற்குரியவர் ஏதோ சொல்கிறேன்! புகழ் திரு நாகை சிவா அவர்கள்.

இரண்டாவது கவிதை முத்துக்களை கோர்த்து எமக்கு தரும் முத்துச்சரம் புகழ் ராமலக்ஷ்மி அக்கா அவர்கள்.

மூணாவதா கொளுத்திப் போடுறதில வல்லவரான இது என்னோட இடம். புகழ் தமிழ் பிரியன் அவர்களை கூப்பிட்டுக்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸப்பா... ஜில்லுன்னு ஒரு சோடாவ உடச்சு கொண்டு வாங்கப்பா. எவ்ளோ எழுதி குவிச்சிட்டேன்.

அப்றமென்ன கிடைக்கிற காப்ல முட்டையும் பாலுமா உடம்பைத் தேத்திக்கிறேன். வந்து கும்மிய போட்டுட்டு போங்க மக்கள்...

12 July, 2009

இளமைக் காலங்கள்.....

எப்டீங்க? எல்லாரும் நலமா இருக்கீங்களா? அதான் நீ வந்திட்டியே இனி எங்க இருந்து அப்டீங்கரவங்க தொடர்ந்து படீங்க. என் பதிவை படிச்சத்துக்கு அப்புறமும் ஒழுங்கா இருக்கீங்கன்னா நீங்க ஸ்ட்ராங் பார்ட்டீங்கதான். இப்போ சொல்லுங்க நீங்க ஸ்ட்ராங் தானே?

இனி விஷயத்துக்கு வருவோமா. இப்போதான் வரவே போறியா, வெளங்கும். முன்னம் ஒரு காலத்தில சந்ருன்னு ஒரு சக பதிவர் என்னய ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாரு. அதுக்காக அவர் ரொம்ப வருத்தப் படப் போறாருங்கோ அவருக்கே ஞாபகம் வருதோ என்னவோ. இன்னிக்கு அத எழுதிர்லாமேன்னுட்டு களத்தில குதிச்சிட்டேன். உங்க கெட்ட காலம்
என்னோட கல்விப் பயணம் நான் ரெண்டு வயசா இருக்கும்போதே ஆரம்பிச்சிடுச்சாம். என் முன்னாடி பிறந்த மூணு வாலுங்களும் பள்ளி போறது பெரும் அக்கப் போராம், என்னால. அவங்க கைய பிடிச்சுக் கிட்டு நானும் கூல் வாடேன் அப்டின்னு கிட்டு அடம் பிடிப்பேனாம். அப்புறம் அம்மா ஏதாவது பண்ணி என்ன அப்புறப் படுத்தினதும் அவங்க கிரேட் எஸ்கேப். அப்றமா ரொம்ப நேரத்துக்கு வெளி கேட்ட பாத்தாப்லையே வாசப் படீல உக்காந்திட்டிருப்பேனாம். அங்கனையே தூக்கம் கூட உண்டாம். அதனால அம்மா தொல்லையே இல்லாம வீட்டு வேல எல்லாம் முடிச்சிருவாங்களாம்.


இப்போ நான் உக்காந்து முழிச்சிட்டிருக்கேன். வாசப் படீலன்னு அவசரப் பட்டு நினைச்சிடாதீங்க. எனக்கு நாலு வயசு ஆய்டிச்சு. நர்சரி ஸ்கூல் மர பெஞ்சில கிட்டத்தட்ட ஒரு இருபது வாலுங்க புடை சூழ உக்காந்து அழலாமா வேணாமான்னு யோச்சுகிட்டு இருக்கேன்.அவனவன் போடற சௌண்ட பாக்கும்போது தப்பா ஆசப் பட்டுட்டோமோ, ஸ்கூலுன்னா ஏதோ எசகு பிசகா நடக்குமோன்னு லைட்டா பயம் வந்திச்சு. மூத்த வாலுங்க ஒரு வார்த்த சொல்லாம விட்டாங்களேன்னு அவங்கள திட்டினேன். அம்மாவும் அப்பாவும் ரொம்ப பெருமையா பாத்திட்டு நின்னாங்களா சரி போனா போகுதுன்னு உக்காந்திட்டேன். ராஜினின்னு ஒரு பொண்ணுதான் என் பெஸ்டு பிரென்ட். அவ அம்மாதான் டீச்சர். என் தாத்தாதான் எனக்கு இலவச டாக்சி. டீச்சர் பேரு தெரீல. ராஜினி அம்மான்னுதான் சொல்லுவேன். இப்டி ஒரு நெலம வரும்னு தெரிஞ்சிருந்தா அறிஞ்சு வச்சிருப்பேன். இப்போ அம்மாவுக்கு ஃபோன போட்டு கேட்டேனா அவங்க பேரு பவளராணின்னு சொன்னாங்க. அது மட்டுமா! ஏண்டாம்மா நேத்து கூட நல்லா தானே பேசினே. மறுபடியும் ஜூரமான்னு கூடவே ரெண்டு கேள்விய சேத்துக் கேட்டாங்க. அவங்களுக்கு தெரியுமா என் நிலை?

அடுத்து எல்கேஜி. டீச்சர் பேரு கணேஷ்வரி. அம்மாவோட உறவுக்காரங்க. ராஜினி க்ளாஸ்ல மிஸ்ஸுங்கறதால ஸ்டார்டிங் கொஞ்சம் ப்ராப்ளம் ஆயிடிச்சு. அவ என்ன விட ஒரு வயசு கம்மி, டீச்சர் பொண்ணுங்கறதால அங்க வந்தாங்கிறது இப்போ மாதிரி அப்போ புரியலையே. நான் சமத்தா எல்லாம் எழுதி முடிச்சிடுவேன். அதனால மிச்ச நேரம் பூரா மத்தவங்கள சும்மா பாத்துகிட்டே இருப்பேன். சுசி நீ ரொம்ப சமத்து குழந்தடி திடீர்னு டீச்சர் ஒரு புது டெக்னிக்க கொண்டு வந்ததும் மறுபடி ப்ராப்ளம். ஸ்கூல் போக மாட்டேன்னு ஒரே அடம். டீச்சர் மணல தர மேல பரப்பிட்டு அது மேல விரலால அ, ஆ ன்னு எழுத வைப்பாங்க. விரல் எல்லாம் சிவந்து போய் அவங்க அடிக்கடி கைய உதறிக்கிறத பாக்க முடியாத நான், வேற என்ன? அவ்வ்வ்வ்வ்வ்... தான்.அப்புறம் டீச்சர் என்ன ஏதுன்னு விசாரிச்சப்போ ஏன் டீச்சர் எங்கிட்ட நல்லா, அன்பா நடந்துக்கறீங்க மத்தவங்கள அழ விடறீங்க. நீங்க நல்லவளா கெட்டவளான்னு கேட்டேன். ஐய்யய்யோ! அடிப் பாவி மகளே ஏண்டி அப்டி கேட்டே. டீச்சர் அடி பின்னீருப்பாங்களே அப்டீன்னு அவசரப் பட்டு நினைக்கப்படாது. டீச்சர் ரொம்ப பீலாகி ரொம்ப நேரம் என்ன மடி மேல உக்காத்தி வச்சிட்டு இருந்தாங்க. என்ன சொன்னாங்கன்னு நினைவில இல்ல. ஆனா நெறைய சொன்னாங்க. அதோட அந்த பனிஷ்மேண்டும் அப்றமா இல்ல. என் சமூக சேவை அப்போதான் ஸ்டார்ட் ஆச்சு. ரொம்ப புகழாதீங்க. பதிலுக்கு மேல படிச்சிட்டே போங்க.

இப்போ முதல் வகுப்பு. இங்கேதான் எனக்கு அடுத்த கண்டம் + அடுத்த கண்ணீர் காண்டம். என்னன்னு அறிய இன்னும் ஒரு கொஞ்சநாள் பொறுத்துக்கோங்க. சத்தியமா தொடர்ந்து எழுதுவேன். தண்டனைய ஒரே தடவேல குடுக்க கூடாதில்ல. அப்புறம் நீங்க எங்கிட்டவே ரிப்பீட்டு போட்ற மாட்டீங்க. அதாங்க... சுசி எங்க பதிவுக்கு பின்னூட்டம் போடும்போது கொஞ்சூண்டு(?) எழுதுறே. உன் பதிவுன்னா மட்டும் இவ்ளோ எழுதிறியே. நீ நல்லவளா கெட்டவளா???
மீண்டும் சந்திப்போமுங்க... அது வரை நலமா இருங்க.

01 July, 2009

இது ரெம்ப அநியாயம்...

குடி உடல்நலத்துக்கு கேடானதுங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். தெரிஞ்சும் (குணா உட்பட) ஏன் குடிக்கிறீங்க என்பது எனக்கு புரியாத புதிர். இருந்தும் ஏன் இந்த பதிவு சுசீன்னு நீங்க கேக்கறது எனக்கு கேக்குது. கார்க்கி கார்க்கின்னு ஒருத்தர் எழுதின (சத்யமா ஒருத்தர்தான். ரெண்டு கார்க்கிய பூமி தாங்காது) இன்னைய பதிவ படிச்சதோட விளைவு இது. போனாப் போவுது யாருக்காவது யூஸ்புல்லா இருக்கட்டுமேன்னுட்டு போடறேன்.

பி.கு:- முன்னாடியே இத பாத்தவங்க கடுப்பாயிடாதீங்க. ஏன்னா இது எனக்கு ஈ மெயில்ல கிடைச்சது. இதுக்கு எந்த விதத்திலேம் நான் உரிமை கொண்டாடப் போறதில்ல. உரிமை உள்ளவங்க மன்னிச்சுக்கோங்கோ....

பின் குறிப்புக்கு பி.கு:- அவரோட பதிவு படிக்காதவங்க இங்க சொடுக்குங்க....

http://www.karkibava.com/2009/07/blog-post.html

இனி அநியாயத்த பாருங்க....







பின் குறிப்புக்கு பின் குறிப்புக்கு பி.கு:-
இப்டி ஒரு பதிவ போட்டுட்டு உங்க கிட்ட நலம்தானான்னு கேக்க மனசே வரலங்க... அவ்வ்வ்வ்.......

29 June, 2009

வாழ்த்து மழையில் அம்மாவும் அப்பாவும்...


எல்லோரும் நலமா உறவுகளே?!
இன்று என்னோட அன்பு அப்பாவுக்கும் ஆசை அம்மாவுக்கும் திருமணநாள். அவங்க இன்னிக்கு மாதிரியே இன்னும் நெற...ய்ய வருஷம் சந்தோஷமா வாழணும்னு வாழ்த்துங்கள்.கூடவே சின்னதா ஒரு தகவலும் குடுத்திருக்கேன். பாருங்க.

Year 1 is Paper Anniversary
Year 2 Cotton Anniversary
Year 3 Leather Anniversary
Year 4 Linen Anniversary
Year 5 Wood Anniversary
Year 6 Iron Anniversary
Year 7 Wool Anniversary
Year 8 Bronze Anniversary
Year 9 Copper Anniversary
Year 10 Tin or Aluminum Anniversary
Year 11 Steel Anniversary
Year 12 Silk Anniversary
Year 13 Lace Anniversary
Year 14 Ivory Anniversary
Year 15 Crystal Anniversary
Year 20 China - porcelain Anniversary
Year 25 Silver Jubilee or silver wedding Anniversary
Year 30 Pearl Anniversary
Year 35 Coral or jade Anniversary
Year 40 Ruby Anniversary
Year 45 Sapphire Anniversary
Year 50 Golden Jubilee Anniversary
Year 55 Emerald Anniversary
Year 60 Diamond Jubilee
Year 65 Blue sapphire Anniversary
Year 70 Platinum Jubilee.
Year 75 Diamond wedding Anniversary
Year 80 Oak wedding Anniversary

27 June, 2009

மழை விட்டும் தூறல் நிக்கல...

என்னப்பா! எல்லாரும் நல்லா இருக்கீங்களா?
சுசி மட்டும் நல்லாவே இல்லீங்க. இப்போதான் ஒருபடியா கொஞ்சம் தேறி இருக்கேன். சுசிக்கு பேஸ்மென்ட் மட்டும் இல்லீங்க, பில்டிங்கும் வீக்கு. அவ்ளோ சுலபமா சுசி சீக்காளி ஆனதில்ல. எப்பவாச்சும் ஜலதோஷம் அட்டன்ச போட்டுக்கும். இந்த வாட்டி கொஞ்சம் ஜாஸ்தி ஆய்டிச்சு. பல நோய்கள் கைகோத்துகிட்டு ஒரே சமயத்துல அட்டாக் பண்ணிடிச்சு. அதோட ட்ராவல் பண்ணினதும் ரொம்ப தப்பாயிடிச்சு (அது பத்தி தனி பதிவு எழுதுறேன்)

நா வேற ரொம்ப சீன் காட்டிகிட்டு மலேல ஏறினேனா (இதுக்கும் தனி பதிவு வரும்) நிலம இன்னும் மோசமாயிடிச்சு. ஏங்க எனக்கு மட்டும் இப்டி? ரொம்ப நொந்து போயிட்டேங்க. அதிலையும் டாக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கான அன்டி பயாட்டிக் வேற குடுத்திட்டாரா ஒரே தலைசுத்தும், வாந்தியும். குணா இத நண்பர்கள் மத்தீல என்ன மாதிரி ப்ளே பண்ணார்னு தெரீல, ஆளாளுக்கு போன போட்டு மூணாவதா? சொல்லவே இல்லைங்கிறாங்க. அதில இது வேறயா? ( அப்டியே இருந்தாலும் இத எல்லாம் சொல்லிட்டா செய்வாங்க)

அதிலையும் குணாவோட கவனிப்பு இருக்கே, அட அட அடா... ரெஸ்டாரன்ட் கெட்டுது போங்க. காப்பி கேட்டா ஒரு மணிக்கு அப்பறம். ஜூசின்னா அரை மணி. சாப்பாடு பீசாவும் பர்கரும் (பசங்க காட்ல அடை மழை) சுசி ரெண்டு நாள் பாத்திட்டு பொங்கி எழுந்ததில மெரண்டு போயி கோழி குழம்பும் சோறும் போட்டாரு. அவர் மட்டும் காயகல்பம் சாப்பிட்டிருக்காரா என்ன? அவருக்கும் உடம்புக்கு ஏதும் வரும்ல! (என்ன ஒரு பரந்த மனம் பாத்தீங்களா) அப்போ போடறேண்டி நானும் ரெஸ்டாரன்ட் சாப்பாடு.

முதுகு வலிக்கு திடீர்னு மலை ஏறினதும் காரணாமா இருக்கலாம்னு டாக்டர் சொன்னார். பிசியோதெரபிஸ்ட் சின்னதா எக்சர்சைஸ் பண்ண சொன்னார். அது எங்க கிடைக்கும்னு தெரீலிங்க. அதிலையும் என் சைஸ்ல கிடைக்குமான்னும் தெரீல.

சும்மா சொல்லக் கூடாதுங்க, ஸோபாவும் டீவியுமா பொழுத ஓட்ரதும் சுகம்மாதான் இருந்திச்சுங்க. அதிலையும் இப்போ ஆதித்யா+சன் மியூசிக்கும் நமக்கு வருதா ஒரே ஜாலி. இனி மறுபடியும் வேலைக்கு ஓடுறத நெனக்கவே அலுப்பா இருக்கு. வேற வழி? பசங்களுக்கு கொண்டாட்டம் அம்மா வீட்ல இருக்காங்கன்னு. இந்த குணா இருக்கே... நீ நாளைக்கு வேலைக்கு போறியான்னு கேட்டு அப்பப்போ கடுப்பேத்திட்டே இருப்பாரு (என்னைய பாக்க அவ்ளோ கஷ்டமாவா இருக்கு? ) இப்போ கூட ஒரு டவுட்டாவே சுத்திட்டு இருக்காரு.

அப்புறமா வேற மருந்தோட உங்கள சந்திக்கிறேன். அதுவரை நலமாய் இருங்கள்.

22 June, 2009

விஜய் வாழ்த்து மழையில் - சுசி வருத்த மழையில்....


சுசிக்கு கண்ணு பட்டு போச்சுங்க! குளிர் ஜூரம், உடம்பு பூரா வலி, தலை வலி, தொண்டை நோவு, லைட்டா ஜலதோஷம் அப்புறம் ரொம்ப பசிக்குது, கொடுமை சாப்ட முடில. சிக் லீவ்ல இருந்தாலும் நம்ம விஜய்க்கு சின்னதா ஒரு வாழ்த்து சொல்லிடலாமேன்னு நினச்சேன். சொந்தமா எழுத உடம்பில தெம்பில்ல. அதனால விடுப்பு.காம்ல ஆட்டைய போட்டுட்டேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய். உங்க கொள்கைகள்ல அரசியல்+சினிமாத்தனம் புகாம பாத்துக்கோங்க. வாழ்க நலமுடனும் வளமுடனும்.

இனி சுட்ட பழம்.....



விஜய் பிறந்தநாள் செய்தி !!!

எதிர்பார்த்தபடியே தனது நற்பணி இயக்கத்தை மக்களின் இயக்கம் என அறிவித்துவிட்டார் விஜய்.
விஜய்க்கு இன்று பிறந்தநாள். தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்க, தனது பிறந்தநாள் செய்தியாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

"எனது முதல் படம் வெளியானபோது ரசிகர் மன்றம் ஆரம்பித்து, படிப்படியாக சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்த்தீர்கள். ஏழைகளுக்கு இலவச வேட்டி,சேலை கொடுப்பதில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, இலவச திருமணம் நடத்தி வைப்பது, பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுப்பது, ஏழை பிள்ளைகளை படிக்க வைப்பது போன்ற பணிகளை செய்து சமூக தொண்டர்களாக உயர்ந்து இருக்கிறீர்கள்.

நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி. அதனால் நான் கல்விப் பணியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன். பல நூறு ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதுடன் அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு என் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் 2 இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தொடங்குகிறேன். இந்த கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். இரண்டு இருபதாகி, இருபது இரண்டாயிரமாக வளர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. இதைத்தான் பிறந்தநாள் பரிசாக உங்களிடம் கேட்கிறேன்.

நேற்றைய தொண்டன், இன்றைய தலைவனாக இருக்கிறான். அதேபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும். இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு. இதை ஆழமாக மனதில் பதிய வைத்து மேலும் உங்கள் சமூக பணியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்காக பாடுபடும் ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, வளமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்.

முக்கியமா இவ்ளோ உடம்புக்கு முடியாம போன நெலமேலேம் எனக்கு வாழ்த்து சொன்ன சுசிக்கு என்னோட மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன். அவங்க சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்."

ஏன்.... ஏன்... ஏம்பா.... ஏன் இந்த கொலைவெறி? நமக்குள்ள என்ன. சத்தியம்மா விஜய் இத சொன்னாருங்க. ( என் கனவுல)

19 June, 2009

என் புதிய பதிவுலக நண்பர்களுக்கு....


சென்ஷி, லோகு, சொல்லரசன், பித்தன்!

மீண்டும் நன்றி. லோகு சொன்னாப்ல வேற தளங்களிலேயும் போடனும்னு ரொம்...ப ஆசை. ஆனா இன்னும் கொஞ்சூண்டு திருத்தம் செஞ்சதும் போடலாம்னு இருக்கேன். இன்னும் நெறைய எழுதணும்னு எனக்கும் விருப்பம்தாங்க. ஆனா சேம் பிளட். நேரமே கெடக்கிரதில்ல.


இங்க இருந்து பொட்டி தட்ற நேரம்தான் ஐடியாவா கொட்டுது. வீட்டுக்கு போயி என் வாலுங்க கூட மல்லு கட்டி தூங்க வச்சு, சமயல முடிச்சு, ரெண்டு பேர் கூட (குறைஞ்சது) போன்ல (வம்பு) பேசி, கொஞ்சூண்டு டிவி பாத்து (சத்யமா சீரியல் பக்கம் போறதில்ல. நம்ம கதைய வச்சே நாலு மெகா சீரியல் ஓட்டலாம். இதில அது வேறயா)

எத்....தன வேல.... லொட்டு லொசுக்குன்னு வீட்ல வேலைக்கா பஞ்சம் (இந்த வீட்ல மனுஷன் இருப்பானா. சும்மா உக்காந்தா நீ என் தலமேலயும் எதையாவது வச்சிட்டு போய்ட்டே இருப்பேன்னு சொன்னது உன் புருஷனா? விடு சுசி உனக்குத்தான் தாலி கழுத்துல ஏறும் போதே சூடு சொரண எல்லாம் எறங்கிடுச்சே)

இது எல்லா குடும்ப தலைவீசும் சொல்ல்ரதுதாங்க. வீட்டுக்கு வீடு வாசல் படி இருந்து தானே ஆகணும். என் வீடு மட்டும் விதி விலக்கா என்ன. அதிலையும் ஒரோருத்தர் ப்ளாக பாக்கும் போது தப்பா உள்ள வந்திட்டோமான்னு தோனுது. என்ன்னா எழுத்து, என்ன்னா அமைப்பு.... இதில நம்மளது எல்லாம் எந்த மூலைக்கு. இருந்தாலும் பரவால்ல. அவங்களது மாளிகைன்னா நம்மது குடிசை. ஹோட்டல் + கையேந்திபவன். சரவணா ஸ்டோர்ஸ் + பொட்டிகடை. இப்டி ஏதேதோ சொல்லி என்ன நானே தேத்திக் கிட்டு எழுத வேண்டியதா போச்சு. அட்லீஸ்ட் ஆட்டைய போட்டாவது எழுதிருவோம்ல!


அதோட நான் பதிவர் கணக்கை ஆபீஸ்ல இருந்து உருவாக்கீட்டேனா அது பெரிய தலைவலியா போச்சு. ஆஃபிஸ் மெஷின்ல தமிழ் வரல. அப்பறம் நான் ரொம்ப நோண்டினதில அது மூணு மொழிகளேம் போட்டு குழப்பிடுச்சு. நான் வேற டெக்னிகல் விஷயத்தில அதி மேதாவியா சமயங்கள்ல என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிக்கிறேன். சின்னதா ஒரு உதாரணம். வீட்ல வாலுங்களுக்கு என் மொபைல் + கம்பியூட்டர தொடறதுக்கு அனுமதி கிடையாதுங்க. ஏதாவதுன்னா சமத்தா அப்பாவோடாத விளையாடுங்க கண்ணுங்களான்னு அனுப்பிடுவேன். இப்போ அவங்களுக்குன்னு ரெண்டும் வாங்கி குடுத்ததும் என்ன தெனாவட்டு! உங்க கிட்ட இந்த ப்ரோக்ராம் இருக்கா, இத எப்டி யூஸ் பண்றதுன்னு தெரியுமான்னு ரொம்பவே கடுப்பேத்துறாங்க. நான் பூனைக்கும் ஒரு காலம் வரும்னு சொன்னா என் யானை சொல்லுது அதா நீ பூனைங்கிறது தெரியுமே காலம் வருதான்னு மட்டும் பாருங்குது. எனக்கு எதிரிங்க வெளிய இல்லீங்க.

உங்க ஆதரவு தான் எனக்கு என்னைக்குமே இருக்குமே (இருக்குமா?) நெஜமா சொல்றேங்க இது எனக்கு ரொம்ப புதுமையான + சுகமான அனுபவமா இருக்கு. முகம் தெரிந்தவர்களிடம் முதுகிலும், மனதிலும் வாங்கும் குத்துகளுக்கும் அடிகளுக்கும் இந்த முகம் அறியா நண்பர்கள் வடிகாலா இருக்கப் போறாங்கன்னு என் மனசு சொல்லுது.

எனக்கு எதுவும் தெரியாதுங்கரத சுருக்கமா சொல்லாம கொஞ்சம் ஓவரா பில்ட் அப் குடுத்திட்டேன்னு நல்லாவே தெரியிது. (அதுக்காக விஜயகாந்த் ரேஞ்சுக்கு கண்ணு சிவக்க நீங்க படிக்க கூடாதுங்க. அப்புறம் எங்கேருந்து நலமா இருக்கிறது. பிரஷர் எகிறிடாது?)

எல்லாரும் நல்ல மனசோடயும் நல்ல சுகத்தோடையும் இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன், எப்பவும் போல. மீண்டும் நலம் அறிய வருவேன்....

12 June, 2009

*****************


எல்லோரும் நலம்தானே? சின்னதா ஒரு விளக்கம்.. நான் பாக்கிறதில பிடிச்ச விஷயங்களை, நான் கேட்டு ரசிக்கிற விஷயங்கள, நான் கவிதைங்கிற பேர்ல எழுதுற (?) விஷயங்கள, நான் ருசி பார்த்த விஷயங்கள இன்னும் எத்தனையோ விஷயங்கள உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு இருக்கேன்.

உங்களுக்கும் வேற வழி இல்லைங்க. அனுபவிச்சு தான் ஆகணும். எனக்கும் வேற யார் இருக்கா? என் கண்ணாளனுக்கு ரொ....ம்ப சந்தோஷம்க. இந்த பாட்ட கேளுங்களேன், அந்த படத்த பாருங்களேன், இந்த காமெடிக்கு கொஞ்சமாவது சிரிங்களேன்னு தொல்லை பண்ண மாட்டேனாம். பாவம். கொஞ்சூண்டு நிம்மதியாவது மனுஷனுக்கு கிடைக்கட்டுமே.

இனி அப்பப்போ எழுதறேன். பொறுமையோட படிச்சிடுங்க. அப்போதான் யாவரும் நலமா இருக்கலாம்.

மு.கு:-
என்னோட படம் மாத்திட்டேன். அழ...க்கா (வடிவேல் ஸ்டைல்) இருக்கேனான்னு ஒரு வார்த்தை மறக்காம சொல்லிடுங்க....

11 June, 2009

அயன் - நெஞ்சே நெஞ்சே....


ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்.....

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் என் சேர்கிறாய்..
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே....

கண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானும் இம் மண்ணும் பொய்யாக கண்டேனே
அன்பே பேரன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே
வெயிற் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீழும்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் மலராகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே

கள்வா என் கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே
காத்து நம் பூமி தனை விட்டு போகாதே
ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போக கூடாது
ஏய் மஞ்சள் தாமரையே என் உச்ச தாரகையே
கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே
என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் எங்கே தேகம் இங்கே
என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் வைகிறாய்

ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்..... ஆஹா... ம்ம்.. ஆஆஆ... ம்ம்ம்ம்.....

படம் : அயன்
பாடியவர் : ஹாரிஸ் ராகவேந்திரா, மகதி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பி.கு:- குளிர்மையான காட்சிகள், மகதியின் இனிமையான குரல், எல்லாத்துக்கும் மேல ஹாரிஸின் இசை என எல்லாம் சேர்ந்து இந்த பாடலை ரசிக்க வைத்தது.

26 May, 2009

படம் பாருங்க...

ஆத்தி.......இப்டி கூடவா திங்க் பண்ணுவாங்க.... ஆனாலும் சயின்சு அநியாயத்துக்கு முன்னேறிடிச்சுய்யா....
ஆஹா... கிளம்பிடாங்கய்யா... இதுதா எங்கும் லவ்வு, எதிலும் லவ்வா? விளங்கினாப்லதா

என்ன உலகம்யா இது!!! மனுசப் பய புள்ளக தேவலாம்யா !!!!






இதன் பெயர் என்ன? காதலர்களுக்கு காதல். நண்பர்களுக்கு நட்பு. எல்லாம் நம்ம பார்வையில இருக்குங்க.







மீண்டும் பார்க்கலாம்.
-அன்புடன் சுசி.

25 May, 2009

கவர்ச்சியான உதடுகளை பெற !!!

முகத்தின் அழகை மேலும் வசீகரப்படுத்துவதில் கண்கள் எவ்வளவு முக்கியம் பெறுகின்றவோ அதைப்போல் உதடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. முறையாக உதடுகளைப் பராமரிக்காமல் விட்டால் உதடு வரண்டு தோல் உரிந்து அது அவலட்சணமாகிவிடும். ஆகவே உதடுகளைப் பராமரிக்க...பொதுவான ஆலோசனைகள் :
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.
உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அவலட்சணமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும். (முக்கியமா சிம்பு பக்கத்தில வராம பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்புங்க)
மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெயை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும். தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.
லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும். உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வொஷ் அல்லது தேங்காய் எண்ணெயை உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.
உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு விற்றமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.
உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும். லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் குளொஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் குளொஸ் தடவப்பட வேண்டும். லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்

பி.கு:- பாய்ஸ்! இத ஏன் நீங்க படிச்சு உங்க கேள் பிரண்டுக்கு சொல்ல கூடாது? அட்லீஸ்ட் கடல போட ஒரு டாப்பிக்காவது கிடச்சிருக்கில...

20 May, 2009

நான் பார்த்ததில் ரசித்தது...

சும்மா சொல்லுங்க எனக்கு ஒன்னும் கஷ்டம் கிடையாது.. என்ன நடக்கட்டுமா?



ஐயோ.... சோ ச்வீட்.....


எனக்கு இதுன்னா உயிர் (இனம் இனத்துடன் சேரும்னு யார் சொல்லறது? ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .. வவ்வ்..)






ரொம்ப டச்சிங்கு .......

முத வசனம் நமக்கு ஓகே. ரெண்டாவது இன்னும் மெய்ப்பட்ல .
சோ ஸாட்ட் !!!




பி.கு:-இப்போதைக்கு இத பாத்து திட்டுங்க. சாரி ... ஸ்லிப் ஆய்டிச்சு. ரசிங்க. வேற எங்கேயும் இல்ல, நம்ம தமிழில் நம்பெர் வன்ன்லதா சுட்டேன்.அப்றமா வாறேனுங்க.

13 May, 2009

மனிதம் எங்கே இந்த நாட்டில்?


ஏன் இந்த கொடுமை?
இவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?
எத்தனை உயிர்கள்......

அரும்புகள், மலர்கள், காய்கள், கனிகள் ஏன் காய்ந்த சருகுகளைக் கூட விடவில்லையே....
ஒரு சுனாமி வந்து காவு கொண்டது போதாதா?
இன்னும் வேண்டுமா கொடியவனே உனக்கு?
என்று தணியும் உந்தன் இன வெறி ஆசை?
என்று முடிப்பாய் இந்த போரை?

அம்மா வயிற்றில் ஆனந்தமாய்
ஒரு சிசு இருப்பது கூட உனக்கு பிடிக்கவில்லையே....
அதனால் தான் அது உலகைப் பார்க்க முன்னமே
பிய்த்துப் போட்டாயா?
ஒரு தமிழ் தாய் வயிற்றில் கருவானதற்கு
உன் தண்டனை இதுதானா?

ஏன் இந்த கொடுமை?
இவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா?
எத்தனை உயிர்கள்.......


(ஒன்னும் இல்லைங்க! இங்க தீஈபம்னு ஒரு டிவில ஜெயா டிவி உங்களில் யார் அடுத்த பிரபு தேவா பார்த்தனா அதில போன வாரம் சிலோங்காரங்க பிரச்சன பத்தின டான்ஸ்.... தாங்க முடில... நா வேற ரொம்ப நல்லவளா.. அழுதிட்டேன் போங்க. அதோட ராமோட ப்லக்லேம் இத பத்தி பாத்தேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் இல்லையா? ரொம்ப சென்டியா டச் பண்றேனோ? பாவம்க. ஏதோ நம்மால முடிஞ்சது. ஒரு நிமிஷம் அவங்களுக்காக பிரார்த்தனை பண்ணலாமில்ல? ப்ளிஇஸ்.....)


(இது காயத்ரிக்கு... ரொம்ப காண்டி ஆயிட்டேன். நினச்சத எழுத முடில. எப்டிதான் நீங்கல்லாம் தமிழ்ல பின்னி பிடல் எடுக்கரிஇங்கோ மக்கா?)

02 May, 2009

vanakkam

யாவரும் நலமா?

முதல் முதல் முதலாய் முயல்கின்றேன்.

எங்கோ ஓர் தொலைவில் உறவுகளை எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் அயல் நாட்டு வாழ்வில் ஏதோ ஒரு வகையில் ஒரு சின்ன இளைப்பாறல் எங்கு கிடைக்கும் என்று மனம் ஏங்குகின்றது.

இது எனக்கு மட்டுமா?

சின்ன சின்ன விஷயங்கள் கூட எப்படித்தான் தாய் நிலம் தேடி என் நினைவுகளை ஓட வைக்கின்றனவோ நான் அறியேன்.

ஏக்கமும் எதிர்பார்ப்பும் நடப்பு வாழ்வின் சுகங்களையும் சந்தோஷங்களையும் நொடிப் பொழுதில் பொசுக்கி விடுகின்றனவே? ஏன்?

யார் தப்பு யார் சரி?

பிரிவினை வேண்டாமே... மனிதரை மனிதராய் மட்டும் பார்ப்போம்.

இங்குள்ள ஒரு செல்லப் பிராணி முற்பிறவியில் செய்யாத எதை நாம் செய்தோம் மனிதராய் பிறந்து மனம் குமைய?

என்னிடம் விடை இல்லை.

உங்களிடம் உள்ளதா?

மீண்டும் வருவேன் உங்கள் நலம் அறிய என் ஆனைமுகன் துணையுடன்.

நலமாய் இருங்கள்!!!!