Pages

  • RSS
Showing posts with label அக்கறை. Show all posts
Showing posts with label அக்கறை. Show all posts

01 April, 2012

குழந்தை வளர்ப்பு.

Barn-og-familie நோர்வேயில் குழந்தை வளர்ப்புப் பற்றிய தகவல்களை திரு.சொக்கன் அவர்கள் கேட்டிருந்தார்கள். அது பற்றிய முழு விபரங்களையும் அவர் பதிவில் எழுதி இருப்பதால் நான் இங்கே மீண்டும் விபரமாக எழுதவில்லை. தகவல்களை வைத்துக்கொண்டு எழுதப்போவது அவரே என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எனக்குத் தெரிந்ததை/அறிந்ததை எழுதி அனுப்பி இருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வலை ஏற்றி இருந்தார். அதில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை. அதே நேரம் அந்தத் தகவல்கள் அவர் எழுத்தில் புது வடிவம் பெறாதது அதே அளவு ஏமாற்றம் என்பதும் உண்மையே.

இந்தியக் குடும்பத்திடமிருந்து குழந்தைகளைப் பிரித்த சம்பவம் நடந்தபோது நான் ஏதாவது எழுதலாம் என்று நினைத்தபோது ‘நீ எதுனா எழுதி வச்சு அது ஏடாகூடமாகி உன் மேல யாராச்சும் கேஸ் போட்டுட போறாங்க’ என்று என்னவர் விளையாட்டாக மிரட்டியதில் உண்மையாகவே மிரண்டு போய் அந்த எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டேன். அதற்கு ஈடுகட்டுவதாய் என்னிடம் தகவல்கள் கேட்ட சொக்கன் அவர்களுக்கு மனதார்ந்த நன்றிகள்.

இங்கே திரு.சொக்கன் அவர்களின் பதிவில் நான் எழுதிய தகவல்களைப் படித்துப் பாருங்கள்.

02 November, 2011

மஷ்ரூம் பீஃபும் சோயா மட்டனும்.

'அம்மா.. தங்கா பெரியம்மா வீட்ல ஃபோறிகோல் சாப்டோம்மா.. அவ்வ்வவ்ளோ டேஸ்ட்ட்ட்ட்டா இருந்ததும்மா.. நீங்களும் செஞ்சு குடுக்கரிங்களா'

அப்டின்னு பசங்க ஒரு சேரக் கூறி(வி)னார்கள். அது ஒண்ணும் அவளவு கஷ்டமான ரெசிப்பி இல்லைங்க. கஷ்டம்னா கூட அது சாப்டுறவங்களுக்குதானே, செய்ற எனக்கு என்ன வந்தது. ஆனால் கோவா (முட்டைக்கோஸ்) + மட்டன்.. பார்க்க சூப் போல இருந்தாலும் மெயின் டிஷ்ஷே அதுதானாம். காம்பினேஷன் நல்லா இல்லையேன்னு விட்டிட்டன். இவங்க கேட்டதும் சரின்னு கூகிளாண்டவரிட்ட matpirat.no என்று வேண்டினேன்.. அவர் இதையா வேண்டினே சரியா பாருன்னு குட்டினதும் பார்த்தா pratக்கு பதில் piratனு டைப்பிட்டன். சரின்னு வேண்டப்பட்ட பொருளெல்லாம் லிஸ்ட் எழுத வேண்டியது இல்லாம ரோல்ஸ் செய்ய வாங்கி வச்ச மட்டன் கூடவே கோவான்னு பிரிஜ்ஜை திறந்ததும் சிரித்தன. வேறென்ன வேண்டும்?? ஓ.. என்னென்ன வேண்டும் என்று சொல்ல வேண்டுமோ?? நோட்டிக்குங்க.

fårikål (எ) mutton stew.

நாலு பேருக்கு.

1 1/2 கிலோ மட்டன்

1 1/2 கிலோ கோவா

4 ts முழு மிளகு

2 ts உப்பு

3 dl தண்ணீர்

உருளைக்கிழங்கு தேவைக்கு ஏற்ப.

 

063 பாத்திரம் கொஞ்சம் பெருசா இருக்கட்டும். இப்டிக்கா பெரிய துண்டா, எலும்பு இருக்கிறதா இருக்கணும் மட்டன். இங்க இப்டியே கிடைக்குது. கோவாவையும் இப்படியே பெரிய துண்டாக வெட்டிக்கொள்ளுங்க.

 

 

 

 

064 இடையிடையே மிளகையும் தூவிக்கணும். நான் 4 க்கு பதில் 8 டீ ஸ்பூன் சேர்த்தேன்.

 

 

 

 

 

 

067 அப்படியே முழுவதையும் கலந்து கட்டி அடுக்கிவிட்டு உப்பு சேர்த்து, தண்ணீரையும் ஊத்திக்கணும். இனி அதுபாட்டுக்கு  இரண்டு மணி நேரம் குறைஞ்ச தீயில வேகட்டும். இப்போ உருளைக்கிழங்கை தனியா வேக வைத்துக் கொள்ளுங்க. அது முடிய நீங்க வேற வேலை இருந்தா பாத்திட்டு வாங்க. சிம்ல இருக்கிறதால அடிப்பிடிக்க வாய்ப்புகள் குறைவு.

 

070 ஒன்றரை மணி நேரம் அவிந்ததும் நான் மேலும் காலிஃப்ளவர், புரோக்கலி, காரட் என சில பல சேர்த்துவிட்டேன். ஆனால் இவற்றை இறக்குவதற்கு ஒரு பத்து நிமிடம் இருக்கும்போது சேர்த்தாலே போதும். அரைமணி நேரமாக ஓவர் குக் ஆகிவிட்டது.

 

 

073 நம்பி சாப்பிடலாம்!! சுள்ளென்று மிளகு அவ்வப்போது கடிபட ம்ம்..

பாதியிலவே வாசனை வாயூற வைத்தது. வீட்டில் ஆரும் இல்லை. ஆசையாகக் கேட்ட பசங்க இல்லாமல் தனியே சாப்பிட மனமில்லாமல் அடிக்கடி கிச்சனுக்குப் போய் வாசனை பிடித்துக்கொண்டு மட்டும் இருந்தேன். நாலு மணிக்கு மேல் ஓவர் பசியாகி பாதி சாப்பிடும்போது வந்தார்கள். மீண்டும் வெளியே போக வேண்டி இருந்ததாலும், போன இடத்தில் எதுவோ சாப்பிட்டு விட்டதாலும் வந்து சாப்பிடுவதென்று மாம்ஸ் தீர்ப்பை வழங்கினார். திடீரென தடதடவென்று படியேறினார் அம்மு.

'எங்கம்மா போறீங்க.. கிளம்பலாம்' என்ற மாம்ஸ்க்கு

'அப்பா ஃபோறிகோல் மறந்திட்டேன்' என்ற பதில்தான் படியிறங்கிப் போனது. தடதடவென்று சது படியேறி வந்த சத்தத்தில் அம்முவின் 'ம்ம்..' கரைந்து போனது. இருவருக்குமே மீதியை ஊட்டிவிட்டு

'யம்மன் கொத் அம்மா.. நீங்கதான் ஃபோறிகோல் செய்றதில பெஸ்ட்' என்ற சர்ட்டிபிக்கேட்டோடு கிளம்பினோம். வரும்போது

'அது என்னடி ரெண்டு மணி நேரம் சமைச்சதா சொன்னே.. சூப் போல இருக்கு.. அதான் சாப்பாடா இன்னைக்கு' என்ற மாம்சுக்கு

'உங்கூர்ல சூப் ரெண்டு மணி நேரமா சமைப்பாங்களா' என்றதோடு நான் நிறுத்த சுவையின் புகழ் பரப்பினார்கள் நான் பெற்ற மக்கள். வந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

'அடியே.. பெரிய பீசா தூக்கிட்டு வந்தா அது கோவா.. இப்டியா என்ன ஏமாத்துவே நீ' என்று மாம்ஸின் குரல் கேட்டது.

நான் போன போது எனக்கு நிறைய்ய்ய முழு பெப்பரும், நான்கைந்து கோவா பீசும், பாதி பொட்டாட்டோவுமே இருந்தது. அப்பாவியாய் பார்த்த எனக்கு

'அதான் நீங்க அப்போவே சாப்டிங்களே' என்று பதில் வந்தது அதே நான் பெற்ற மக்களிடம் இருந்து. இங்கே இலையுதிர்காலக் குளிருக்கு இதமாகவும், பனிக்காலக் குளிருக்கு உடலைத் தயார்ப்படுத்தத்  தேவையான கொழுப்பைச் சேர்க்கவும் என இது ஃபோறிகோல்  சீஸனாகிவிடுகிறது. அக்காச்சிக்கு இந்த ரிசிப்பி சொன்னேன்.

’செய்லாம்டி எங்க.. சஜோபனுக்கு இப்டியான டிஷஸ் பிடிக்காது. கருண் குட்டிமாமா செஞ்சு குடுத்த பிளாக் சிக்கன் தவிர வேற சாப்டாது. சேரன் எடுவை எடுத்திட்டு இருக்கும். அப்பாவுக்கு செஞ்சு குடுக்கறேன்’ என்றார்.

‘அது என்ன குட்டிமாமா செஞ்ச ப்ளாக் சிக்கன்?? ரஜி எப்போ இப்டிலாம் சமைக்க ஆரம்பிச்சான்??’ என்று ஆச்சரியமானேன்.

’அது நாங்க அங்க போயிருந்தப்போ ரஜி பறவை மீன பொரிச்சுக் குடுத்தான். மீன்னு சொன்னா கருண் சாப்டாரேனுட்டு சிக்கன்னு சொன்னேன்.. அது கருப்பா இருந்ததால அதுக்கு பிளாக் சிக்கன்னு கருண் பேர் வச்சிட்டார்' அப்டின்னா.

நான் கூட மஷ்ரூம் சமைச்சுட்டு பீஃப்னு சொல்லி வெள்ளிக்கிழமைல இவங்களுக்கு குடுத்திட்டு இருந்தேன். மாமியார் இது மஷ்ரூம் ஆனா பீஃப்னு சொல்லி அம்மா தருவாங்கன்னு சொல்லின நாளில இருந்து அவங்க உஷாராயிட்டாங்க. சமைக்க முடியலை. அப்புறம்தான் தெரிஞ்சது மாமியாருக்கு மஷ்ரூம் உவ்வேன்னு. ஆனால் சோயாமீட் மாமியாருக்கு பிடித்தம்ன்றதால இன்றுவரை வெள்ளில மட்டன்னு போயிட்டு இருக்கு.

13 March, 2011

சுனாமியும் உண்டா??

ஜப்பானில் சுனாமி, நிலநடுக்கத்தில் உயிரை பறிகொடுத்த அத்தனை பேருக்கும் எல்லோரும் செலுத்திய அஞ்சலிகளோடு என்னதையும் சேர்த்துக் கொள்கிறேன். காட்சிகள் தந்த மலைப்பும், வேதனையும் போக நாள் பல ஆகும்.

japan-tsunami

ஆஃபீஸில் இருந்து அடிக்கடி நிலமையை அறிந்து கொண்டும், கடவுளை வேண்டிக் கொண்டும் இருந்தபோது இன்னும் கொஞ்சம் காலம் போனதும் மழையை, ஸ்னோவைப் போல சுனாமியும் பூகம்பமும் கூட எமக்கு ஆச்சரியம் தராத ஒன்றாய் போய்விடும் என்று சொன்னேன். கேட்கவே பயமாக இருந்தாலும் நாம் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கும் வேகத்தில் இப்படி ஆனாலும் ஆகலாம் என்று கலீக்ஸ் ஆமோதித்தார்கள். ஜப்பான்காரர்கள் எமக்கு செய்த கொடுமைக்குத்தான் இப்படி ஆகி இருக்கு அங்கே என்று ஒரு நண்பர் சொன்னார். எனக்கும் எங்கேயோ மெலிதாக அந்த எண்ணம் ஒரே ஒரு தரம் தலை தூக்கி இருந்தது. அரசாங்கம் செய்யும் அட்டூழியத்துக்கு அப்பாவி மக்களை ஏன் பலி ஆக்க வேண்டும்?? கடவுளிடம் என் நினைப்புக்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

இரண்டு வாரம் முன்னர் அம்மாவின் பிறந்தநாளுக்கு சின்னதாக ஒரு பார்ட்டி வைத்தோம். அப்பா உடன் இல்லாத கவலையை ஒரு நண்பர் கிளறிவிட சின்னதாய் ஒரு அழுகையோடு சந்தோஷமாகவே கேக் கட் செய்தார் அம்மா. சாப்பாடு முடிந்ததும் சுனாமியும் உண்டா என்று தங்கா அக்கா கேட்டார். என்னதான் சிரித்தாலும் பிள்ளையாரே என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டேன்.

2004 அக்டோபரில் இலங்கைக்குப் போய் வந்தோம். டிசம்பரில் சுனாமி. காலையில் குண்டு வெடித்தது போல் ஏதோ சத்தம் கேட்டு எல்லோரும் வெளியே வந்து பார்த்தார்களாம். வீட்டில் அம்மா, அப்பா, ரஜி, சின்னண்ணி, இரண்டு மாதக் குழந்தையாக சாத்வி, அத்தை பையன் ஒருவன் என எல்லோரும் இருந்தார்கள். ஓரிரு நிமிடங்களில் ‘ஓடுங்கோ தண்ணி வருது, தண்ணி வருது’ என்று ஓலமிட்டபடி தெருவால் ஆட்கள் ஓடுவதும், இரைச்சலாய் ஒரு சத்தம் கேட்பதுமாய் என்னவென்று தெரியாமல் இவர்களும் கூட்டத்தோடு ஓடி இருக்கிறார்கள். ஊரின் மத்தியில் எங்கள் வீடு. வீட்டிலிருந்து அரை கி.மீ தூரத்தில் கடல். ஆனாலும் எங்கிருந்து தண்ணீர், என்ன ஏது என அறியாமல் பயமும், பதட்டமுமாய் ஓடியவர்களை பத்தடி போவதற்குள் விரட்டிப் பிடித்தது வெள்ளம்.

எங்கள் வீடு உயரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. பக்கத்தில் இரண்டு மாடிக் கட்டடத்தில் ஒரு கடை. அதன் அருகில் உயரமான சந்தைக் கட்டடங்கள், கடைகள். என்னவென்று தெரியாததால் தூர ஓடினால் தப்பிக்கலாம் என்று நினைத்து வயற் பிரதேசம் நோக்கி ஓடி இருக்கிறார்கள்.  அங்கே  அவர்களுக்கு முன்னராகவே வெள்ளம் நிறைந்து நீர்மட்டம் உயர அங்கே இருந்த ஒரு பழைய வீட்டின் மேல் ஏறி இருக்கிறார்கள். கடைசியாக கையில் குழந்தையோடு ரஜி ஏற முயன்ற சமயம் தண்ணீரின் வேகமும் கூட, ஒரு குட்டிப் பனை மரத்தின் கருக்கை எட்டிப் பிடித்துக்கொண்டு அவன் போராடிய கணங்கள். கை கிழிந்து இரத்தம் வழிய கைக்குழந்தையையாவது காப்பற்ற வேண்டுமே என்று அவன் பட்டபாடு இன்று சொன்ன போதும் அம்மாவின் கண்களில் தெரிந்தது.

பழைய கட்டடம் பத்துப் பதினைந்து பேர் பாரமும், தண்ணீரின் வேகமும் தாங்காது இடிந்து விழ ஆரம்பித்ததும்தான் மீண்டும் கடைத்தெருப் பக்கம் போகலாம் என்று நினைத்து இன்னொரு பக்கத்தால் கீழே இறங்கி நீரோட்டத்துக்கு எதிராக ஒருவர் கை ஒருவர் கோர்த்தபடி போயிருக்கிறார்கள். அம்மா ஒரு கட்டத்தில் முடியாது போகவே அப்பாவை கெஞ்சினாராம் தன்னை விட்டு அவர்கள் உயிரைக் காத்துக் கொள்ளச் சொல்லி. சின்னண்ணியின் தம்பி விஷயம் கேட்டு பக்கத்து ஊரிலிருந்து வந்தவர் கயிறொன்றை மரத்தில் கட்டித் தூக்கிப் போட அதன் உதவியோடு எல்லோருமாக உயரமான ஒரு கடையின் மொட்டை மாடியில் ஏறி நின்றிருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தோடு வந்து கொண்டிருக்கும்போதே முடியாமல் போய் தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டவர்கள் பலர். மூன்றாவது அலையின் வேகமும் குறைந்த பின்தான் கீழே இறங்கி வந்திருக்கிறார்கள். உயிர்ப் பயம், உடை கிழிந்து எல்லோர் முன்னும் இருந்த நிலை என எல்லாம் தந்த அதிர்வு போக அம்மாவுக்கு நெடுநாட்கள் ஆயிற்று.

அண்ணா அப்போது பக்கத்து ஊரில் இருந்தார். அம்மா வீட்டுக்கு வந்து இது நடப்பதற்கு சற்று முன்னர்தான் கிளம்பி பைக்கில் தன் வீடு போய்க் கொண்டிருந்தவர் விஷயம் அறிந்து திரும்பி வந்திருக்கிறார். அம்மா வீட்டுப் பக்கம் போகமுடியாது என்று தெரிந்ததும் தன்னால் இயன்ற அளவு வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த மக்களை காப்பாற்றி இருக்கிறார். கால் முழுவதும் பனை மட்டைகளும், இன்னும் தண்ணீரோடு வந்த என்னவெல்லாமோ உடல் முழுவதும் கிழித்துப் போட்ட காயங்கள். அண்ணா போலவே இன்னும் நிறைய இளைஞர்களும், ஆண்களும் எத்தனையோ பேரைக் காப்பாற்றினாலும் இழப்பு அதிகம்தான். ரஜியும், அண்ணியின் தம்பியும் கூட எல்லோரையும் பாதுகாப்பாக விட்டுவிட்டு மற்றவர்கள் உதவிக்குப் போயிருக்கிறார்கள். போனதில் கடைசி மாமா குடும்பத்தை மீட்க முடிந்தது. அண்ணா தண்ணீருக்குள் எட்டிப் பிடித்த சிறுவர்களும், பெரியவர்களும் மீண்டும் தண்ணீரால் இழுத்துச் செல்லப்பட்டபோது எப்படி இருந்திருக்கும் அண்ணாவுக்கு. 

எங்கள் வீட்டுக்குள் அரைச் சுவர் உயரத்துக்கு நீர்மட்டம் வந்து போயிருக்கிறது. அழிவென்று எதுவும் இல்லாவிட்டாலும் எங்களின் பழைய ஃபோட்டோ ஆல்பங்கள், ஆவணங்கள் உட்பட எல்லாம் நீரோடு போய்விட்டன. உயிர் இழப்பின் முன் இதெல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் கவலை இருக்கத்தான் செய்கிறது. மாமியார் வீடு பக்கத்து ஊரில். கடலில் இருந்து மூன்று மைல் உள்ளே இருந்ததோடு இயற்கையாகவே அரண் போல சேர்ந்திருந்த பெரிய மண் திட்டு ஊருக்குள் வெள்ளம் அதிகளவில் வராமல் காத்துக் கொண்டது.

அப்போதுதான் போய் பார்த்து வந்த ஊரவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எத்தனை பேரை இழந்துவிடப் போகிறோம் என்று தெரியாத நாங்கள், அந்த வருடம் கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் எங்கள் வீட்டில் என்பதால் கொண்டாட்டமாக இருந்தோம். அன்று நான் செய்த டெசர்ட் ஃப்ரூட் சலட். அளவு சொன்ன நண்பி ’என்னங்க இவ்வ்வ்வ்வ்வ்ளோ வந்திடிச்சு’ன்னு ஒரு பெரிய்ய்ய பாத்திரம் நிறைந்திருந்த சாலட்டை பார்த்து மிரண்டு போய் நான் கேட்டபோது தான் சொன்னார் ’அய்யோ.. அது 100 பேருக்கான அளவுங்க’ என்று. தங்கா அக்கா, அவரின் அக்கா, நாங்கள் என மூன்று குடும்பங்கள்தான் என்றாலும் பேச்சும், கும்மாளம் அவ்வப்போது சாலட்டுமாய் முழுவதும் காலி பண்ணிவிட்டோம். 26 பகல் ஒரு நண்பரின் ஃபோனில் கண் விழித்து விஷயம் அறிந்து.. அப்பா.. அன்று பட்ட வேதனை. அண்ணா எல்லாம் முடிந்து மூன்று ஊர் தள்ளி வந்து இயங்கிக் கொண்டிருந்த ஒரே கமியூனிகேஷன் செண்டரில் வரிசையில் காத்து நின்று கால் செய்த போதுதான் உயிர் வந்தது.

அன்றிலிருந்து நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செய்து கொடுத்தாலும் எங்கள் வீட்டில் எதுவும் விருந்தென்றால் நான் ஃப்ரூட் சாலட் செய்வதே இல்லை. எதுவும் கடந்து போகும் என்பது போல் நாங்கள் ஃப்ரூட் சாலட்டுக்கு வைத்த பெயர்தான் சுனாமி. ஊரில் இருந்த சமயம் தினமும் மாலையில் ரஜி சகிதம் நண்பர்கள் புடைசூழ, அம்மா செய்து கொடுக்கும் சைட் டிஷ்ஷோடு கண்ஸ் கடற்கரை சென்றுவிடுவார். பாட்டில் எல்லாம் காலி செய்து, சிரிதுப் பேசி(?) அப்படியே என்னையும் பிக்கப் பண்ணிக்கொண்டு ஒரு ஒன்பது மணி அளவில் மாமியார் வீட்டுக்குப் போவோம். சது என்னோடு வருவார். லச்சு இந்த யாகசாந்தியில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லாத மச்சினரோடு முன்னாடியே போய்விடுவார். ’அண்ணா நீங்க கடல்ல போய் போட்ட ஆட்டம் தாங்க முடியாம தான் சுனாமி வந்திருக்கு’ என்று அக்காச்சி இப்போதும் சொல்வாள்.

என்னதான் இயற்கையை வெல்ல முடியாது என்றாலும் அழிப்பதையாவது மனிதன் நிறுத்தும்வரை சுனாமிகளும், பூகம்பங்களும் தொடரும். இனிமேல் ஜப்பானியர்களின் அணுக்கதிர்களின் பாதிப்பு என்னென்ன கொடுமைகளை கொண்டுவரப் போகிறதோ என்று இப்போதே மனம் பதைக்கிறது. பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகளோடு வாழாவிட்டாலும், எம் பிள்ளைகளோடாவது வாழ்ந்து விட்டு சாக பிள்ளையாரப்பா வழி விடட்டும்.

09 July, 2010

தலை வணங்குகிறேன்..

இந்த வாரம் பூரா நல்லாவே பிஸி. டீம் லீடர் வெகெஷன்ல போனதாலா அவங்க ஆணியும் என் கைல. உங்க கமண்ட்ஸ் எல்லாம் படிச்சேன். ரொம்ப நன்றி. கண்டிப்பா பதில் எழுதுவேன். அது வரைக்கும் பொறுத்தருள்க. பதிவுகள் அது பாட்டுக்கு ஷெட்யூல் பிரகாரம் வெளிவந்துட்டு இருக்கு. சமத்தா. இது தவிர.

விஜியோட இந்த இடுகை படிச்சதில இருந்து மனசு முழுவதும் ஒரு கோபம், ஆற்றாமை, அழுகைனு கலவையா ஒரு உணர்வு. படிச்ச எல்லாரும் இந்த அனுபவத்துக்கு ஆளாகி இருப்பிங்கனு நினைக்கிறேன். பகிர்ந்து கொண்டதுக்கும் பகிர அனுமதிச்சதுக்கும் நன்றி விஜி.

சுனிதா கிருஷ்ணன்.. எனக்கு அவங்கள பத்தி சொல்ல வார்த்தையே வரல. என்ன ஒரு தைரியம்.. கலங்கிய கண்களும் பிரமிப்புமா அவங்க பேச்ச கேட்டு, பாத்துட்டு இருந்தேன். அவங்கள தீர்க்காயுசோட வாழ வை இறைவானு வேண்டிக்க தவறல. அவங்களுக்கு என் மரியாதை நிறைந்த வணக்கங்கள்.

அந்த பிஞ்சு முகங்கள் இன்னமும் மனசில இருக்கு. எப்டி முடியுது அவங்களால?? இந்தப் பிஞ்சுப் பூக்கள கடிச்சுக் குதற?? என்ன வகை இவங்க?? மிருகம்னு கூட சொல்ல முடியல. என்னோட அக்காச்சி நேர்ல பாத்த ஒரு நிகழ்வு. அப்போ அவ டீச்சர் ட்ரெய்னிங்ல இருந்தா. ஒரு ஃப்ரெண்ட் கூட பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது பைக்ல ரெண்டு பேர் வந்தாங்களாம். கூட அஞ்சு ஆறு வயசில ஒரு குட்டிப் பொண்ணு. ஒருத்தர் பைக்ல இருக்க மத்தவர் இறங்கி கடைக்குள்ள போனாராம். பைக்ல மற்றவர் இவங்களுக்கு முதுகு காட்டி இருந்தாராம். பொண்ணு அழுற சத்தம் கேட்டுதாம். அப்போ கடைக்கு போனவர் திரும்பி வர குட்டிப் பொண்ணு இன்னும் சத்தமா அழுதிட்டே  சொன்னாங்களாம் ”அப்பா.. இந்த அங்கிள் கிள்றார் ரொம்ப வலிக்குது”னு. அவங்க கை காட்ன இடம்?? அங்க இருந்த எல்லாரும் பாத்திட்டாங்க இதை. அப்பா அங்கிளுக்கு பளார்னு ரெண்டு அறை விடுறத்துக்கு பதில் இவங்களையும் சுத்தியும்  பாத்துட்டு  “சரிடாம்மா.. இதோ நாம வீட்டுக்கு போயிடலாம்”னு சொல்லி குழந்தை வாய இறுக்கி மூடிட்டே போய்ட்டாங்களாம். இப்போவும் அக்காச்சி சொல்வா. லச்சு கவனம்டி. நீ போகாத இடத்துக்கு தனியா யார் கூடவும் அனுப்பாத. ஆண்கள் சில விஷயங்கள நினைக்க மாட்டாங்க. அந்த கணம் போதும் ஒரு மிருகம் தன் வேலைய காட்டனு.

நான் ப்ளஸ் டூ முடிச்சிட்டு ரிஸல்ட்கு வெயிட் பண்ணிட்டு இருந்த சமயம். அப்போ எங்க ஊர்ல பல் மருத்துவர் இருந்தாங்க. ஆனா மருந்துதான் இல்லை. இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ள போக வேண்டிய கட்டாயம். அப்பா கூட போனேன். உயிர் போனாலும் பரவால்லை மானம் போயிரக்கூடாதுங்கிறதுதான் அப்போ ஒவொரு பெண்ணோடதும் வேண்டுதல். வயது இங்க கணக்கில இல்லை. அப்பா ஃப்ரெண்ட் வீட்ல தங்கி இருந்தோம். அங்க என் கஸின் ஒருத்தி பேயிங் கெஸ்டா இருந்தா. படிக்கிறத்துக்காக. ஒரு நாள் அவ வர வேண்டிய நேரத்துக்கு டியூஷன் முடிஞ்சு வர்லை. வீட்டுக்கார ஆண்ட்டி அவ்ளோ சத்தம் போட்டாங்க. எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு. அப்போ அவங்க சொன்னாங்க. ”பத்து வயசு கூட இருக்காதும்மா ஒரு பொண்ணு. ரெண்டு மூணு பேர் சேர்ந்து குதறியிருக்காங்க. ஹாஸ்பிட்டல்ல அவ அழுத சத்தம் இன்னமும் என் காதில கேக்குது. நிலைமை தெரிஞ்சும் நாமளே எதுக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கி குடுக்கணும் அவங்களுக்கு”ன்னு.

இங்க இன்னமும் மோசம். பையன் பொண்ணு வித்யாசமில்லாம சீரழிக்கிறாங்க. lommemann (pocket man) ன்னு ஒண்ணு ரொம்ப வருஷமா சுத்திட்டு இருந்துது. 10-13 வயசு பையன்கள்தான் அதனோட இலக்கு. அது பேண்ட் பாக்கெட்ல கை விட்டு பாக்க சொல்லுமாம். சாக்லெட், பணம் இருக்கும்னு. பாக்கெட் ஓட்டையா இருக்குமாம். போலீஸ் யார்னு கண்டு பிடிச்சும் கைது செய்ய முடியாம இருந்துது. ஆதாரம்?? Erik Andersen அது பேரு. 58 வயசு. 1999 – 2006 காலப்பகுதியில 66 பையன்கள அப்யூஸ் பண்ணி இருக்கு. அது அசந்த ஒரு நேரத்தில போன வருஷம் எங்க ஊர்ல வச்சுத்தான் பிடிச்சாங்க. பணக்காரன். படிச்சவன். பையன் கூட நல்ல வேலைல இருக்கார்.

lommemann

கைதுக்கு அப்புறமா தான் நிறைய்ய பேர் போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் குடுக்க ஆரம்பிச்சாங்க. இன்னமும் பலர் வெளிய சொல்ல வெக்கத்தில மறைச்சு வச்சிருக்கலாம்னும் சொல்றாங்க. தண்டனை என்ன தெரியுமா?? 6-9 வருஷ சிறை. 2,525,000kr காம்பன்சேஷன்.  500,000kr சட்டச் செலவுகள். இது போதுங்களா அதுக்கு?? கல்லால அடிச்ச்ச்ச்ச்சே கொல்லணும். என் கலீக் சொல்வா. ”இதுங்கள எல்லாம் ஒரு கம்பிக் கூட்டுக்குள்ள பிறந்த மேனியா விட்டுட்டு, வெளிய குட்டிக் கல்லு நிறைய்ய வச்சிருக்கணும். யார் வேணா எப்ப வேணா கல்லெடுத்து அடிக்கலாம். நான் எவ்ளோ செலவுன்னாலும் போயி அடிச்சிட்டு வருவேன். ஆனா உயிர் போகாம சாப்பாடு தண்ணில்லாம் ஒழுங்கா குடுக்கணும். அப்போதான் இது மாதிரி இன்னொண்ணு உருவாகாது”ன்னு.  இப்போ சதுவுக்கு Voss cup football tournament நடந்துதுன்னு சொன்னேனே. இப்டியான இடங்கள்ல இந்த pedophiles சுத்திட்டு இருப்பாங்களாம். அதுகளுக்குன்னு ஒரு பெரிய நெட்வெர்க்கே இருக்குதாம்.

பசங்க தனியா வெளிய போறதுன்னா எப்டி நடந்துக்கணும்னு சொல்லி வச்சிருக்கோம். தனியா போறதும் தவிர்க்க முடியாதே. பர்த்டே பார்ட்டி, ஸ்கூல் ட்ரிப், ஆக்டிவிட்டிஸ்னு போக வேண்டிய கட்டாயம் இருக்கு. எந்த மிருகம் எங்க இருக்குமோ?? அன்பா, மிரட்டலான்னு பல வகைகள்ல அவங்க தாக்குதல் இருக்குதே. ஸ்கூல்லவும் குட் டச், பேட் டச் பத்தி எல்லாம் சொல்லிக் குடுத்திருக்காங்க. அது மட்டுமில்லாம பசங்க கிட்ட நாமளும் ஓப்பனா பேசுறது ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். தனக்கு என்ன ஆகுதுன்னே தெரியாம பாதிக்கப்படுறவங்கதான் அதிகம்னு சொல்வாங்க. இதுக்கு மேல எனக்கு சொல்லத் தெரியலைங்க. ஆத்திரம்.. இல்லை இல்லை.. கொலைவெறிதான் வருது.

17 June, 2010

சுளீர்..

மனம் முழுவதும் வெறுமை

பொய்த்துப் போய்விட்ட கசப்பு

ஏமாற்றத்தின் அழுத்தம்

என் மீது எழுந்த அருவருப்பு

ஓயாது உள்ளே கதறும் குரல்

அசிங்கம் நான்!!!

தோற்பது புதியதல்ல

ஒரே விதமான தோல்வி

என்றும் எதிர்பார்த்திரா அடி

தட்டி எறிந்து விட்டு

என் வழியே எழுந்து விட்டேன்

முதல் முறை

வழியே இல்லாத படி

அத்தனையும் அடைத்து விட்டேன்

இம் முறை

வேண்டாம்

இன்னொரு சுய தேற்றுதல்

வலிக்கட்டும்

சாவின் பின்னும் உணர வேண்டும்

இந்த உயிர் வலியின்

சாட்டை அடியை..

Ø Ø Ø Ø Ø

                                                     sad woman 

Ø Ø Ø Ø Ø

”அழுது முடிச்சியா?”

தெரிந்து கொண்டே கேட்கிறாய்

என் அன்பைப் போலவே

கண்ணீரும் அளவில்லாதது

இரண்டு நிமிடத்தில் முடிந்திட

அது என்ன உன் அன்பா??

18 April, 2010

யாரும் தப்பிக்க முடியாது..

மறுபடி என் புது வீட்ட பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னவங்க.. பாத்துட்டும் கம்முன்னு இருந்தவங்க.. இன்னமும் பாக்காதவங்க அல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்..

சைடு பார்ல புதுசா ஒரு விஷயம் சேர்த்திருக்கிறத பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னவங்க.. பாத்துட்டும் கம்முனு இருக்கிறவங்க.. இன்னமும் பாக்காதவங்க.. அல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்.. ஒண்ணுதாங்க.. ரெண்டு விஷயத்துக்கும் சேர்த்து சொல்ல வந்தது ஒண்ணுதான்.

இதனால ரெம்பக் கடுப்பில இருக்கேன் நானு. சோ.. அதனால.. இந்த தடவையும் சீரியஸ் பதிவுதான். தண்டனையில இருந்து யா..ரும் தப்பிக்க முடியாது சொல்ட்டேன்.

ஐஸ்லாண்ட்ல நடந்த எரிமலை வெடிப்பு பத்தி அறிஞ்சிருப்பீங்க. சாம்பல் புகை மண்டலம் குறையுற வரைக்கும் இங்க ஃப்ளைட்டெல்லாம் நிறுத்தி வச்சிருக்காங்க. லைட்டா சல்ஃபர் வாசனை காத்தில இருக்கு. ஒரு இடத்தில சாம்பல் வண்டி மேல படிஞ்சிருந்ததா கூட பேப்பர்ல படிச்சேன். எங்க ஆஃபீஸோட வெளியூர் கிளைகளில இருந்து வர வேண்டிய தபால் வராததால ஆணி கம்மியா இருந்துது. ரெண்டு நாள் ஜாலியா போச்சு. இப்போ யாரு கண்ணு பட்டுதோ பயபுள்ளைக ட்ரெயின் மூலமா அனுப்பி வச்சிட்டாங்க. விளைவு.. வெள்ளிக் கிழமை ஆணி குமியப் போதுன்னு டீம் லீடர் சொல்லிட்டாங்க. அன்னிக்குன்னு பாத்து லேட்டா எந்திரிச்சிட்டேன். (அடிப்பாவி.. பத்து நிமிஷம்தானேடி லேட்டா எந்திரிச்சே..) 

நீங்க லேட்டா எந்திரிச்சா எப்டி ரெடியாவீங்களோ அப்டி இல்லாம வழக்கம் போலவே ரெடியானேன். (ம்க்கும்.. ) ரோட்ல இறங்குறத்துக்கு முன்னாடி மம்மி சின்ன வயசில சொல்லிக் குடுத்தா மாதிரி வலது பக்கம் முதல்ல பார்த்தேன். ரெண்டு கார் சைட் குடுக்கிறத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்துது. பின்னாடி வரப்போற என் காருக்கு எதுக்கு சைட் குடுக்குறாங்கன்னுட்டு கொஞ்சம் எட்டிப் பாத்தா ஒரு ட்ரக் வந்துட்டு இருந்துது. இப்போ மம்மி சொன்னது மறுபடி ஞாபகம் வந்து இடது பக்கம் பாத்தா அங்க ஒரு கார் வந்துட்டு இருந்துது. அப்டியே என் கார் முன்னாடி அது வரும்போது ரெண்டு பக்கம் பாத்தா போதாதும்மா.. போக வேண்டிய பக்கத்த பறுபடி பாக்கணும்னு ம சொ ஞா வந்து மறுபடி வலது பக்கம் பார்த்தேன். ட்ரக் இன்னமும் வந்துட்டு இருந்துது. இல்ல நின்னுட்டு இருந்துது. என்னடா இது.. சைட் குடுத்தும் எதுக்கு வெயிட் பண்றாங்கனு என்ன மாதிரியே யோசிச்ச ரெண்டாவதா நின்ன வண்டி ட்ரைவர் வெளிய இறங்கி ட்ரக் ட்ரைவருக்கு இங்கதான் இவ்ளோ இடம் இருக்கே எடுத்துட்டுப் போயேன்னு சைகை காமிச்சாங்க. அவர் கண்டுக்கணுமே. அப்போ முத வண்டியில இருந்த ட்ரைவர் இறங்கி இவங்களுக்கு எதுவோ சொன்னாங்க. ரெண்டு பேரும் அவங்க அவங்க வண்டியில மறுபடி ஏறி உக்காந்துட்டாங்க. இப்போ என் முன்னாடி வந்த வண்டி என்ன கடந்து போய் ரெண்டாவது வண்டி பின்னாடி போய் மூணாவதா நின்னுது.

என்னடா நடக்குது இங்கனு ட்ரக்காளன இன்னும் நல்ல்ல்ல்லா எட்டிப் பாத்தா.. பாத்தா.. பா.. அதான் நல்லா எட்டிப் பாக்கறேன்னு சொன்னேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம்?? இருங்க என்ன பாத்தேன்னு எழுதறேன். அது வேற ஒண்ணும் இல்லீங்க. ஸ்னோ இருந்த வரைக்கும் ரோடோரம் சேர்ந்த குப்பை கூளம் கல்லையெல்லாம் சுத்தம் பண்ற வேலைய செஞ்சுட்டு இருந்தாரு அவரு. வழக்கமா வர வண்டிய விட இது வித்யாசமா இருந்ததால எங்களுக்கு தெரியல. அவர் நத்தை வேகத்தில வர எப்டியும் பத்து நிமிஷமாவது ஆகும்னு நினைச்சுட்டு என் கார நிறுத்தினேன். சரியா எட்டு நிமிஷம். ஒரு வண்டி ஓடிட்டு இருக்கிறத விட ஸ்டார்ட்ல நிக்கும்போதுதான் அதிகமா சூழல் மாசடையும்கிறது நீங்க அறிஞ்ச விஷயம்தானே. மத்த மூணு பேரும் அத செய்யலைங்க. ஸ்ட்டார்ட்லவே வண்டிங்க நின்னுது.

அது மட்டுமா.. ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சுன்னா இல்லை ரோட் வேலைக்குன்னு ட்ராஃபிக் ஜாமாகி நிக்கும்போது எத்தன பேர் வண்டிய நிறுத்தறோம்.. நேரமாகும்னு தெரியுதில்ல. அப்புறமும் எதுக்கு ஸ்டார்ட்ல நிக்கணும். ஆஃப் பண்ணிட்டோம்னா வண்டியும் ரிலாக்ஸ் பண்ணிக்கும். கொஞ்சம் யோசிக்கலாம்ல.. இது மட்டும் இயற்கை அனர்த்தங்களுக்கு காரணம் இல்லேன்னாலும் இதுவும் காரணம் தான் இல்லையா. அப்புறம் எரிமலை பொங்கி பனிப் பாறைகள் உருகிப் போகாம என்ன செய்யும். ஏப்ரல் மாசத்துல இந்த ஊர்ல இன்னைக்கு ஸ்னோ கொட்டாம என்ன செய்யும். வண்டிக்கு சம்மர் டயர் வேற மாத்தியாச்சு. கொஞ்சம் டெம்ப்ரேச்சர் ப்ளஸ்ல இருக்கப்போயி ஸ்னோ கரைஞ்சு போயிடறதால தப்பிச்சோம். இல்லேன்னா டயர் ஸ்லிப்பாகி ஆக்சிடெண்ட் சகட்டு மேனிக்கு நடக்குமே. என்னவோ போங்கப்பா.. யாருமே கவனிக்க மாட்றாங்க.

நேத்து ஒரு பார்ட்டிக்கு போயிருந்தோம். விழா நாயகி அஞ்சு மாச குழந்தை. சர்ச்ல ஞானஸ்நானம் காலேல முடிச்சுட்டு சாயந்தரம் பார்ட்டி, கூட்டம், ஃபோட்டோன்னு கஷ்டம் குடுத்தாலும் சமத்தா அழாம இருந்தாங்க. எல்லாரும் ஃபோட்டோ எடுத்து முடிச்சதும் நான் தூக்கி வச்சிருந்தேன். என் ராசி உடனவே என் தோள்ல தூங்கிட்டாங்க. சின்ன சின்ன போட்டிகள் விளையாட்டுகள்னு சத்தமா இருந்ததால ஒரு ஓரத்தில மடியில அவங்கள வச்சுட்டு உக்காந்திருந்தேன். அவங்க உறவுக்காரக் குட்டிப்பொண்ணு ஒண்ணு.. சது வயசு.. பயங்கர வாயாடி.. உங்க வயசு என்ன ஆண்ட்டினு என் கிட்ட பேச்ச ஆரம்பிச்சா. வயசுக்கேத்தாப்ல பேசுவாங்களோ?? சொன்னேன். கேட்டதும்  ஆஆச்சரியப்பட்டா. நீங்க எவ்ளோன்னு நினைச்சீங்கன்னேன்.. நான் சொன்னதில இருந்து பத்த குறைச்சு சொன்னா. இப்போ நான் ஆஆஆஆச்சரியப்பட்டேன். உங்களுக்கு பாப்பானா பிடிக்குமா? ம்.. ரொம்ப. அப்போ உங்களுக்குன்னு ஒண்ண எடுத்துக்க வேண்டியதுதானே. அவங்க அகராதியில குழந்தை பெத்துக்கிறத்துக்கு அர்த்தம் இதுதான் போல?! இல்லடா.. எனக்குன்னு வேணாம். ஆனா இப்டி அடுத்தவங்க பாப்பாவ தூக்கி வச்சுக்க பிடிக்கும். உங்களுக்குனு வேணவே வேணாமா? வேணாம். அதான் எனக்குனு ரெண்டு பசங்க இருக்காங்களே.. அவங்களே போதும்.

அந்த ஆண்ட்டி யாரு? அவங்க பசங்க யாருனு இப்டியே பேச்சு போயிட்டு இருந்துது. சீரியசா.. ஆண்ட்டி இந்த பாப்பா உங்க மடில சமத்தா தூங்குது.. ஆமாண்டா.. அவங்க ரொம்ப டயர்டாயிட்டாங்க இல்லை.. அதான். பாப்பா பாக்கும்போது உங்க பாப்பா மாதிரியே இருக்காங்க.. அப்டியா? ஏம்மா அப்டி சொல்றீங்க?? நீங்க ரெண்டு பேரும் ஒரே கலரா இருக்கீங்க..  சாயல் இல்லாம கலர் தீர்மானிக்குது பாருங்க. விஷயம் புதுசா இருக்கில்ல. இப்டி இன்னமும் சீரியசா போச்சு பேச்சு..

ஆண்ட்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. (சிரிச்சுட்டேன் நான். அவ முழிச்சா. எதுக்கு சிரிச்சேன்னு புரியாமலா.. இல்ல என் சிரிப்ப பாத்து பயந்தானு தெரில) தாங்ஸ்டா தங்கம். நீங்களும் ரொம்ப அழகா இருக்கிங்க. உங்க சாரி அழகா இருக்கு. தாங்ஸ்டா.. உங்க ஃப்ராக்கும் அழகா இருக்கு. உங்க வளையல் அழகா.. என்ன இது.. எதுக்கு சிரிக்கிறிங்க இப்போ?? ஹல்லோ.. படிச்சிட்டு இருக்கிற உங்களத்தான் கேக்கறேன். அதான் முன்னாடியே சொன்னேன்ல சீரியசா எழுதப் போறேன் இன்னைக்குன்னு..  நிஜமா சொன்னாங்கப்பா.. நம்புங்க. ரைட்டு!! இதுக்கு மேல நாங்க பேசிக்கிட்டத உங்களுக்கு சொல்லப் போறதில்ல நானு..  உங்க பேச்சு கா.. 

வர்ட்டா..