Pages

  • RSS
Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

30 October, 2011

மாயம் செய்தவன்!!

தலைப்பை படித்ததும் தெரிந்திருக்குமே?? தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும், தெரிந்தும் தெரியாது என்பவர்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன். வேலாயுதம் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம. ஒரு பரம விஜய் ரசிகையான என்னை ஏமாற்றாத விஜய்க்கு முதலில் நன்றிகளும் வெற்றிக்கு வாழ்த்துகளும். அதே விஜய். அதே செண்டிமெண்ட். அதே சண்டை. அதே காமெடி. அதே அசத்தும் நடனம். ஆனால் புதிய ரசனையைக் கொடுத்து மாயம்தான் செய்திருக்கிறார் விஜய்.

Velayutham-Movie-Poster ஆறு மணி ஷோவுக்கு நாலு மணிக்கு நானும், நாலரைக்கு அம்முவும், ஐந்து மணிக்கு சதுவும் ரெடி ஆகிவிட்டோம். மாம்ஸ் வந்து ‘என்னம்மா இன்னும் ரெடி ஆலையா நீங்க’ன்னு விரட்டி ஒரு வழியாக அவர்கள் ரெடியாகி தியேட்டர் போக ஐந்தே முக்கால். டிக்கட் காசை கையுக்கும், தான் வரவில்லை என்ற தகவலை காதுக்கும் கொடுத்தார். நின்றிருந்த மழைக்கொரு நன்றியை சொல்லிவிட்டு உள்ளே ஓடினால் ’என்னக்கா இவ்ளோ லேட்டா வரிங்க.. முன்னாடி தான் சீட் கிடைக்கப்போது’ என்ற படக்காரத் தம்பியிடம் டிக்கட்டை பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு அம்மு, சதுவை பாப்கார்ன், கேண்டிக்கு அனுப்பிவிட்டு, மாமியாரோடு உள்ளே போனால் முன்னிருந்து மூன்றாவது ரோவில் கரையோர சீட்தான் கிடைத்தது. துண்டை போட்டுவிட்டு மீண்டும் வந்து கடிக்கஸ், நொறுக்ஸ், குடிக்ஸ் எல்லாம் வாங்கியபடி டிக்கட் தம்பியை கடந்தபோது அவர் அருகில் நின்றிருந்த நோர்வேஜியன் சொன்னார் ‘பரவால்லையே உனக்கு நல்ல லாபம்தான் போல.. கடைசி நேரத்தில நிறையப்பேர் வராங்க’ பயபுள்ளை என்னத்தான் வாரிச்சோ என்ற டவுட்டை போக்கியது வெற்றிடமாக இருந்த முன் வரிசை. ‘என்னம்மா இது கரைல உக்காந்து தலை திருப்பி பாக்க கஷ்டமா இருக்குமே’ என்ற அம்முவை சமாதானம் செய்து எல்லோரும் உட்கார்ந்தோம். எங்கள் வரிசையில் நடுவில் இருந்த நால்வர் முன் வரிசைக்கு ஷிஃப்ட்டாக நடு சீட்டுகளுக்கு நாங்கள் ஷிஃப்ட்டினோம்.

’ண்ணா.. நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்.. நீ காட்ட்டு காட்ட்டுன்னு வேற சொல்றே’ என்று இமையை படபடவென்று வெட்டிவிட்டு அப்பாவியாய் சொன்னபோது சிரிப்புச் சத்தம் தியேட்டர் நிறைந்தது. அதையே விறைப்பா/முறைப்பா சொல்லி இருந்தால் இந்த அளவு ரசனை வந்திருக்காது. எப்படியும் செம சாத்து சாத்தப் போகிறார் என்பது  தெரிந்த ஒன்றே என்றாலும் இந்த அப்பாவித்தனம் ரசித்துச் சிரிக்க வைத்த இடம் அது.

velayudhamவிஜயின் காஸ்ட்யூம் கலக்கல். இங்கே வேட்டைக்காரனுக்கு அப்புறம் தியேட்டரில் விசில் கூடாதென்று கட்டுப்பாடு. அப்படியும் கைதட்டலும், விசிலும் கேட்டபடியே இருந்தது. சது அவ்வப்போது ’syk kul film அம்மா’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரையும் ஊருக்கு அனுப்பிய பின்னர் ‘இப்ப பாருங்க தங்கச்சிய கிட்நாப் பண்ணப் போறாங்க’ என்றார் அம்மு. ட்ரெயின் புழுதி கிளப்பியபடி நின்றபோது யாரோ ஒருவர் ஒன்ன்றிப் போய்ப் பார்த்திருப்பார் போல தூசி தாங்காமல் இருமுவது போலவே இருமினார்.

அம்முவுக்கு ஹன்ஸிகாவை விட ஜெனிலியாவைத்தான் பிடித்ததாம். ஜெனிலியா விஜய் முடிவு கேட்டு அழுதபோது எனக்கும் அழுகாச்சியா இருந்துது. பாடல்கள் கேட்டபோது மாயம் செய்தாயோ எனக்கு ரொம்ம்ம்ம்பவும் பிடித்திருந்தது. பார்த்தபோது விஜய் ஸ்டைலாக இருக்காரேன்னு நான் நினைக்க சது சொன்னார். சில்லாக்சில் விஜய் அவளவு அழகு. முளைச்சு மூணு படமாக்கிய விதம் அழகா இருந்துது. ரத்தத்தின் ரத்தமே ஒரு வகையான அமர்த்தலான இசையமைப்போடு அட்டகாசம். சொன்னாப் புரியாதுவுக்கு எழுந்து ஆட முடியாத வருத்தம் எனக்கு. என்னா டான்சுப்பா. ஆனால் பாடல்களை முழுதாகப் போடவில்லை. ’கேட்டிங்களாம்மா.. மீசைன்னு இந்தப் பாட்லவும் வருது. நான் நினைக்கறேன் எல்லாப் பாட்லவும் வருதுன்னு’ என்று தனது கண்டுபிடிப்பை அம்மு சொன்னார்.

velayudham_UHQ விஜய் கழுத்தில தாயத்து மாதிரி ஒண்ணு போட்டிருக்கார். மாம்ஸுக்கும் அதே போல் ஒன்று வாங்க வேண்டும். கியூட்டா இருந்தது.  சந்தானம் செம. சிரித்து முடியவில்லை. சரண்யா மோகன் தங்கச்சி காரக்டரோட அவ்ளோ பொருந்தி இருக்காங்க. சரியா 8:36 க்கு யாரோ என்னய திட்டி இருக்காங்க. அம்புட்டு புரையேறியது எனக்கு. மாம்ஸிடம் கேட்டு கன்ஃபார்ம் பண்ணிவிட்டேன். அவர் நினைக்கவே இல்லாதபோது திட்ட சான்ஸ் இல்லை. என்னைத் திட்டியது யார்?? நான் மேலே சொன்ன அந்த நோர்வேக்காரன் எங்களுக்கு பக்கத்தில் கேட்டுவிட்டு இருந்தார். கொஞ்சநேரம்தான் அப்புறம் போய்டுவேன் என்றவர் எழுந்து முன் வரிசையில் அமர்ந்து முழுப்படமும் பார்த்தார்.

என்னதான் சொல்லுங்க. விஜய் படத்த தியேட்டர்ல போய் பார்க்கிற அந்த சந்தோஷமே தனிதான். எப்படி நேரம் போனதென்றே தெரியாமல் அத்தனை நேரமும் எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது படம் என்பதை விட விஜய் என்று சொல்வதே பொருத்தம். படம் முடிந்து வந்து வண்டியில் ஏறும்போதே ‘விஜய்க்கு வெற்றிப்படம்’ என்றார் மாமி. 

’அது நீங்க சொல்ணுமா உங்க முகம் சந்தோஷமா இருக்கிறது பார்க்கும்போதே தெரியுதே நல்லா என்ஜாய் பண்ணி இருக்கிங்கன்னு’ என்றார் மாம்ஸ்.

சது ‘அப்பா நான் பாத்ததிலயே பெஸ்ட் விஜய் படம் இதுதான்’ என்றதோடு டிவிடிக்கும் ஆர்டரை கொடுத்தார். கூடவே ’எப்போம்மா விஜயோட அடுத்த படம் வரும்’னு டிக்கட்டும் புக் செய்தார்.

மாம்ஸ் ஏழாம் அறிவு இந்தவாரம் பார்க்கப்போகிறாராம். பசங்களுக்கு விருப்பமில்லை. சூர்யாவின் நடிப்புக்காகப் போகலாம் என்றிருக்கிறேன். இல்லையென்றால் அடுத்து நான் தியேட்டரில் பார்க்கப்போகும் தமிழ்ப்படம்?? நண்பேண்டா!!

வர்ட்டா..

velayutjam movie new stills 2

01 December, 2010

என்ன செய்வேன் நான்??

என்னை அழ வைக்கவென்றே எல்லோரும் என்னோடு பழகுவது போதாதென்று திரைப்படங்களை வேறு என்னை அழ வைக்கவென்றே எடுக்கிறாங்க போல. என்ன செய்வேன் நான்??

மைனா.. என்ன சொல்ல.. நினைவில் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.. அந்த எளிமை, யதார்த்தமான நடிப்பு, நம்ப முடியாத ஆனால் சாத்தியமானதோ என்று நினைக்க வைக்கும் கதை.. சுருளி, மைனா, ஏட்டு, இன்ஸ்பெக்டர் என மனதில் நின்ற பாத்திரங்கள்.. பஸ் விழும் காட்சியும், கடைசி நேர காட்சிகளும் கொஞ்சம் அதிகமென்று நினைக்கத் தோன்றினாலும், இன்ஸ்பெக்டர் எடுத்த முடிவினால் எங்கோ ஒரு ஆறுதல் வரத்தான் செய்கிறது.

இத்தோடு விட்டிருக்கலாம் நான். தெரிந்தே பார்த்தேன் நந்தலாலா..

சிறுவனை அடிக்க முடியாமல் அழுதபடி போய்ப் போய்த் திரும்பி வரும் மிஷ்கினைப் போல கண்ணீரும் கண்ணை நிறைத்து நிறைத்து காய்ந்து கொண்டிருந்தது. தொண்டை அடைத்து, மனதைப் பிசைந்த வலி தலைவலியாய் மாறியும் தொடர்ந்து படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லது பார்க்காமல் இருக்க முடியாமல் கட்டுப்பட்டிருந்தேன். அம்மாவை மிஷ்கின் பார்த்த கணம்.. இருந்த அமைதியை குலைத்தபடி கேட்டதே ஒரு குரல்..

’தாலாட்டுக் கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்..’

அதன் பின் பொல பொலவென்று நில்லாது ஓடியது கண்களில் அருவி.. இங்கே என் வழக்கம் போல் ஆவ்வ்வ் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை.. அத்தனை பாரம் மனதில்.. அப்படியே உணர்வைக் குழைத்து குரலில் கொடுக்கும்படி இசை தெய்வத்தை படைத்த தெய்வத்துக்குக் கோடி நன்றி.. இப்போதும் தென்பாண்டி சீமையிலே அவர் குரலில் கேட்கும்போது என்னை அறியாது தொண்டைக்குள் எதுவோ சிக்கிக் கொள்ளும் ஒரு உணர்வு எனக்கு வரும். அதன் பின் இன்று இந்த வரியின் தாக்கம்.. இனி மனதை விட்டுப் போகுமா தெரியவில்லை..  மிஷ்கின் அம்மாவைத் தூக்கிக் கொண்டு போகத் தொடங்கியபோது பாடல் தொடர்ந்தாலும் இன்னமும் அந்த ஒற்றை வரி மட்டும் காதுக்குள் கேட்பதாய் ஒரு உணர்வு..

என் அம்மாவோட தூரத்து உறவில் ஒருத்தர் புத்திசுவாதீனம் இல்லாதவர். அவருடைய அம்மாதான் அத்தனையும் செய்து பார்த்துக் கொள்வார்.  எங்கள் ஊர் கோயில் திருவிழாவுக்கு தவறாமல் கூட்டி வருவார். நாங்கள் போய்ப் பார்க்கும்போது ஒரு தடவை பக்கத்தில் இருக்கச் சொல்லி என் கையைப் பிடித்துக் காட்டி எதுவோ கேட்டார் அவர் அம்மாவிடம்.  சட்டென்று பறித்துக் கொண்டு என் அம்மா பின்னே சென்று ஒளிந்து கொண்டேன். பின்னர் என்னை சமாதானம் செய்து கையை பிடிக்க விடும்வரை அவர் முகத்தில் அத்தனை கவலை, அப்படியே அங்கங்கே மிஷ்கின் முகத்தில் தெரிந்தது போல. டீ, காஃபி பொடி கண்டால் எடுத்து அப்படியே சாப்பிட்டு விடுவார். ஒரு குழந்தையை அதட்டுவது போல அவர் அம்மா அதட்டி பறித்து வைத்தது இப்போதும் நினைவிருக்கு. ஒரு தடவை திருவிழாவுக்கு அவர்கள் வராத காரணம் கேட்டபோது அம்மா சொன்னார்.. ‘அவருக்கு தண்ணி எடுத்து குடிக்க தெரியாதில்லையா.. வீட்ல அம்மா இல்லையாம்.. தாகமா இருந்திருக்கு போல.. வழக்கம் போல கிணத்தை எட்டிப் பாத்துட்டு இருந்திருக்கார்.. அப்டியே உள்ள விழுந்திட்டாராம்’ அவர் அம்மா இப்போது இருக்கிறாரா என்று தெரியவில்லை.

சிறுவன் ஸ்னிக்தாவை அம்மாவாக்கி முத்தமாய் கொடுக்கும்போது.. எப்படி சொல்வதென்று தெரியவில்லை.. சந்தோஷம் வருவதற்குப் பதிலாக மீண்டும் அழத்தான் முடிந்தது என்னால்..

காமரா இஷ்டத்துக்குக் கவிதை வடித்திருக்கிறது. ஒற்றைத் தெரு.. பச்சை வயல்.. சோவென்ற மழை.. எல்லாம் பழசுதான்.. அத்தனை அழகாய், புதுமையாய் எடுத்த விதம்.. படம் பாருங்கள்.. புரியும்.

மனநிலை சரி இல்லாதவர் போடப் போகும் சண்டை எப்படி இருக்குமோ என்று ஒரு பயத்தோடு இருக்கும்போது, அப்படியே எங்கள் மனதில் இருக்கும் பதட்டம், எதிர்பார்ப்பு புரிந்து இசைஞானி ஒரு பின்னணி கொடுத்திருப்பார்.. கேளுங்கள்.. தெய்வம்டா.. படத்தோடு முழு நேரமும் புலனைப் பிணைத்துப் போட்டு வைத்ததில் பெரும்பங்கு இளையராஜா என்ற இசை தேவனுடையது.

குளிர்க் கண்ணாடியை சிறுவனிடம் வாங்கிப் போட்டு விட்டு ’அய்யோ ராத்ரி ஆய்டிச்சு’ என்று மிஷ்கின் சொல்லும்போதும், குடிசையில் இருந்து இளநீரோடு எட்டிப் பார்க்கும்போது தப்பி ஓடி விட்டானோ சிறுவன் என்று நான் நினைக்க தள்ளி நின்று பார்க்கும் சிறுவனைக் காட்டி அப்படியே சைக்கிளோடு தோட்டக்காரன் காமராவுக்குள் வரும்போதும், சட்டென்று பியர் பாட்டிலால் இளைஞன் தலையில் மிஷ்கின் அடிக்கும்போதும் இயல்பாய் சிரிப்பு வருகின்றது இதம்.

உங்கள் எல்லாருக்கும் மிஷ்கின் வழியில் நானும் கொடுக்கிறேன். பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

stein

இன்னைக்கும் வர்ட்டா சொல்ல மனசு வர்லை..

05 May, 2010

டொட்டொடொய்ங்..

சனிக்கிழமை.. 01.05.10. என்னவரும் நானும் படம் பார்க்க உக்காந்தோம். பசங்களுக்கு படத்தோட பேர் சொன்னேன். யார் நடிச்சதுன்னாங்க சொன்னேன். அப்புறமா வரோம்னாங்க. கடைசி வரை வர்ல. போன ஞாயிறுக்கு முதல் ஞாயிறு (தேதி நீங்களே காலண்டர்ல பாத்துக்கோங்க) டிவி முன்னாடி உக்காந்திருந்த என்னவர் கூப்டார்.

”ஏய் இங்க கொஞ்சம் வாயேன்.. புது படமாம்”

கிச்சன்ல இருந்து நான் வரத்துக்குள்ள (பதினஞ்சு அடி தூ..ரம் நடந்து வந்தா) ட்ரெய்லர் போயிடுச்சு. எஸ்.கே நாதன் கடை சூரிச்ல சேல்னு ஸ்நேகா ஆடிட்டு இருந்தாங்க. மறுபடி ஆட் போட ஆரம்பிச்சதும் கூப்டார். மூணாவதா இது வரவும் நான் கிச்சன்ல இருந்து வரவும் சரியா இருந்துது.

நமது கலைஞர் தொலைக்காட்சியில்..

புத்தம் புதிய திரைப்படம்..

வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு..

’…..’ நடித்த புத்தம் புதிய திரைப்படம் ’…..’

நமது கலைஞர் தொலைக்காட்சியில்..

ன்னு சொல்லிட்டு இருந்தாங்க.

”இது புதுப் படம் இல்லை.. நீ கூட தியேட்டர்ல பாக்கலாமான்னு கேட்டேல்ல.. நல்ல வேளை இந்த சனி எந்த ப்ரோக்ராமும் இல்லை. நிம்மதியா பாக்கலாம்”

ன்னு சொல்லி, ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தார். சனியும் வந்தது. ரெண்டு பேரும் இருக்கோம் படம் பாத்துட்டு. என்னடி இது.. ரொம்ப முக்கியம்.. இது வேறயானு அப்பப்போ சொல்லிட்டு இருந்தவர் அப்புறம் சைலண்டா பாத்துட்டு இருந்தார். நான் போஸ்ட் படிச்சுட்டு கமண்ட் போடாம போற வாசகியா பேசாமலே இருந்தேன். படமும் முடிஞ்சுது.  கமண்ட் போட்டுட்டு பிளாகர் என்ன சொல்லப் போறார்னு மறுபடி கமண்ட் போட்ட பிளாக் போய் பாக்கிற வாசகியா அவர் முகத்த பாத்தேன்.

”என்னடி இது..”

”ஏம்பா..”

”நல்லவேளை அன்னிக்கு உன் பேச்ச கேட்டு நான் தியேட்டர் வர்லை”

”அதான் நானும் போல இல்லை.. எனக்கென்ன தெரியும். நான் கூட இப்டி இருக்கும்னு நினைக்கல”

ஒரு பாட்டாவது நல்லா இருந்திருக்கலாம்.. இவருக்கு விஜய் மாதிரி டான்சும் வராது.. காமெடியும் சொதப்பல்.. நல்ல வேளை தப்பிச்சேண்டா சாமி.. இன்னைக்கு யாராவது ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்காச்சும் போயிருக்கலாம். ஒரு சனிக்கிழமை அநியாயமா போச்சு போ..”

அதான் பாவனா ஷமீரானு ஒண்ணுக்கு ரெண்டு பேர் இருந்தாங்களேஏனு கேக்க நினைச்சுட்டு நினைச்சதோட விட்டுட்டேன். எனக்கு தெரியும் அவங்கள அவருக்கு பிடிக்கலைன்னு. ஷமீரா வா ஆ தில வந்த மாதிரி இதுல இல்லை. பாவனா டொட்டொடொய்ங் பாட்டுல கொஞ்சூண்டு நதியாவ என் நினைவுக்கு கொண்டு வந்தாங்க. அஜித்.. அவ்வ்வ்..

லேட்டான்னாலும் லேட்ட்ட்டஸ்டா நாங்க பாத்த படம்..

Bilde006 (2)

டொட்டொடொய்ங்.. டொட்டொடொய்ங்..

ஞாயிற்றுக்கிழமை. 02.05.10. நானும் சதுவும் கார்ல வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அம்முவுக்கு 4 மணிக்கு முடிய வேண்டிய டான்ஸ் கிளாஸ் 4.11 ஆகியும் முடியிறதா காணோம். x-box game விளாடிட்டு இருந்தவர கூட்டி வந்துட்டேங்கிற கடுப்பில இருந்தார். வெளிய வெயில்னாலும் குளிர். கார்லவே இருக்க வேண்டியதா போச்சு. முடிஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சும் அவர் இந்த ரேஞ்சுக்கு போய்ட்டார்.

Bilde003 (2)

கடைசியா ஒண்ணு சொன்னேன். போட்டாரு பாருங்க ஒரு குதியாட்டம். நீங்களே பாருங்களேன்..

Bilde005

அப்புறம் அம்மு வந்ததும்தான் நேரம் 4.49 ன்னு தெரிஞ்சுது. அது வரைக்கும்

“அம்மா.. விஜய், வில்லு, வேட்டைக்காரன் எல்லாமே ’வி’ல தொடங்குது இல்லை..”

“வடிவேலும் இருக்காரா அய் ஜாலி..” ”

”இனிமே என் ஃபேவரிட் லிஸ்ட்ல சுறாதான் ஃபர்ஸ்ட்..”

இப்டியே பேசிட்டு இருந்தார். வேற ஒண்ணுமில்லிங்க.. செவ்வாய்க்கிழமை சுறா பாக்க தியேட்டர் போறோம்.. அப்பா டிக்கட் புக் பண்ணிட்டார்.. இந்த ரெண்டு வசனமும் தாங்க நான் சொன்னேன். இத முன்னாடியே சொல்லி இருக்கலாம்னு சொல்றீங்களா?? அததாங்க நானும் நினைச்சேன்..

டொட்டொடொய்ங்.. டொட்டொடொய்ங்..

இன்னைக்கு செவ்வாய்க்கிழமை. 04.05.10. ஆஃபீஸ்லருந்து 2:30 க்கே கிளம்ப நினைச்ச என் திட்டம் டமால்.. திடீர் மீட்டிங். ஏமாற்றம் நெம்பர் ஒன்.

ஃப்ரெண்ட் கூட ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங். அது கிட்ட பேசிட்டு போலாம்னு நினைச்சேன் லைன் என்கேஜ்ட். ஏமாற்றம் டூவு.

அடுத்து சமையலையாவது சீக்கிரம் முடிக்கலாம்னா ஃப்ரிஜ் லைட் எரியுது வேலை செய்யல. நைட் வெட்டி ரெடியா சுத்தம் பண்ணி வச்ச மீன் மறுபடி செத்துப் போச்சு. மூணாவது ஏமாற்றம்.

ஒரு வழியா புறப்பட்டு போனா பார்க்கிங் கிடைக்கல. நாங்க மட்டும் உள்ள போக அவர் தேடி பார்க் பண்ணி வரேன்னுட்டு போய்ட்டார். ஏமாற்றம் நான்கு.

டிக்கட் வாங்கி பாத்தா 5 வது ரோல 1-4 சீட். முன்னாடி அதுவும் செண்டர் சீட் இல்லாம ஓரத்தில உக்கார வேண்டியதா போச்சு. என்னதான் 5 எனக்கு பிடிச்ச நம்பர்னாலும் அந்த ஏமாற்றம் அஞ்சேய்.

சர்டிபிக்கேட் போட ஆரம்பிச்சும் கண்ணாளன் வர்ல. அப்பப்போ வராரான்னு திரும்பி திரும்பி பாத்ததுல கரெக்டா பாக்க வேண்டிய பேர் போயி தமன்னானு வந்திடுச்சு. எத்தனாவது ஏமாற்றம்? ஆறு.

ஆனா ‘தள’ மட்டும் என்ன ஏமாத்தலிங்க. என்ன டான்ஸு, என்ன பாட்டு, என்ன காமெடி, அடடடடா.. நல்லா எழுதுற பதிவர்களோட பதிவுல நல்லா இருக்குன்னு கமண்ட் போட்டு அலுத்துப்போனா மாதிரி எனக்கும் அவர் படத்தப் பத்தி நல்லாருக்குன்னு சொல்லி சொல்லி அலுத்துப் போச்சுங்க.

எனக்கு கவலையெல்லாம் விசில் சத்தம் பாக்ரவுண்ட்ல கேக்காம பாத்ததுதான். டிக்கட் புக் செய்யும்போது நார்மலாவும், தியேட்டர் உள்ள போம்போது ஸ்ட்ரிக்டாவும் சொல்லிட்டாங்க. விசில், இல்லை ஆனந்தக் கூச்சல், கைதட்டல் கூடாதுன்னு. இருந்தாலும் அப்பப்போ கேட்டுட்டு இருந்துது. லைட்டா. இருந்தாலும்..

இதான் முத தடவையா ஊர்ல சினிமா டிக்கட் பாத்த ஒரு ஃபீல் வந்துது. டிக்கட் செலவ சரி செய்யவோ என்னமோ விலைய 110kr இல இருந்து 130 kr க்கு ஏத்திட்டாங்க.

பாருங்க என் கைல ஒண்ணில்ல நாலு Sunrise :))))

Bilde035

வர்ட்டா..

31 March, 2010

விண்ணைத் தாண்டிய தமிழ் அவதாரம்..

அன்னிக்கும் பயங்கர ஸ்னோ.. இருந்தாலும் அதையும் தாண்டி ரொம்ப எதிர்பார்ப்போட போனேன். கண்ணாளன வேற உசுப்பேத்தி கூட கூட்டிட்டு போயாச்சு. அதே க்ரூப். அதாவது எங்க நண்பர்கள் வட்டம். ஒருத்தர் இது பசங்களுக்கு புரியாத படம் அதனால அவங்கள நான் bowling center கூட்டிப் போறேன்னு சதுவ பொறுப்பெடுத்தார். லச்சும்மா அவங்க ஃப்ரெண்டி வீட்டுக்கு போனாங்க. தியேட்டர் உள்ள போனா எந்த தமிழ் முகத்தையும் காணோம். இருங்கப்பா இவ்ளோ மோசமா ஸ்னோ கொட்டும்போது எல்லாரும் நம்மள மாதிரியே சீக்கிரமா வர நினைச்சிருக்க மாட்டாங்கனு  என்னவர் பார்வைய தவிர்த்து பதில் சொன்னேன்.

 

கொஞ்சம் ஆளுங்க வந்தாங்க. வந்தவங்க என்ன கேட்ட கேள்வி பெரும்பாலும் இப்டியா இருந்துது. தெரிஞ்சேதான் அந்தப் படத்துக்கு வராம இதுக்கு அதுவும் சீக்கிரமா வந்திருக்கீங்க இல்ல.. நல்லாருங்க. யாரும் நம்ப மாட்டேங்கராங்க. அவ்ளோ ஏன் நீங்க கூட நம்பாம என்ன திட்னீங்க இல்ல.. சரி விடுங்க.. ஒரு ஃப்ரெண்டோட அம்மா வராங்க வாங்க அவங்க கிட்ட பேசலாம்.

 

ஹாய் ஆண்டி.. எப்டி இருக்கீங்க?

நல்லா இருக்கேம்மா..

எப்டி போச்சு இந்தியா பயணம்லாம்?

நல்லா போச்சும்மா.. என்ன எல்லாருக்கும் உடம்புக்கு முடியாம போச்சு.. அதான் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டோம்.. இங்க வந்தா இந்த ஸ்னோ இப்டி கொல்லுது.. இப்போ கொஞ்சம் பரவால்லடா..

(இப்டியே கொஞ்ச நேரம் அவங்க பயணம் பத்தி பேச்சு போயி படங்கள் பக்கம் வந்து நின்னிச்சு)

இங்க என்ன படம்லாம் போட்டாங்கம்மா?

குட்டி, கோவா.. ஆயிரத்தில் ஒரு..

அப்பாடா.. ஓடி முடிஞ்சுதா அந்த படம்.. தப்பிச்சேன்.

ஏன் ஆண்டி.. அப்டி சொல்றீங்க?

அது ஒரு கருமம் பிடிச்ச படம் போல.. ட்ரெய்லர் பார்த்தே நான் பயந்துட்டேன்.

நான் நீங்க இந்தியால பாத்திருப்பீங்கனுல்ல நினைச்சேன்..

ஏம்மா.. எற்கனவே உடம்புக்கு முடியல.. அதில இது வேறயா..

 

அப்டியே டிக்கட் குடுக்க ஆரம்பிச்சாங்க. உள்ள போய்ட்டோம். இருந்தாலும் என் மைண்ட்ல ஒரு கேள்வி சுத்திட்டே இருந்துது. கருமம் படமா இல்ல பாத்தவங்களா இல்ல பாக்காமலே திட்டு வாங்கிறவங்களா??

 

17:30 ஷோ.. சீட் நம்பர்லாம் கிடையாது நீங்களே போய் இஷ்டத்துக்கு உக்காருங்கன்னாங்க. நடு ரோல வசதியா, வரிசையா உக்காந்தோம். என்ன கூட்டம் கம்மியா இருக்கு. பின்ன கடசியா பாத்த படம் அப்டி.. ரொம்ப மிரண்டிட்டாங்க போல.. பாவம்ல மக்கள்.. இந்த வகையில பேச்சு அடிபட்டுது. நான் எதுவும் சொல்லவும் இல்லை. கேக்கவும் இல்லை. நோட் பண்ணிக்கோங்க. என் இடப் பக்கம் கண்ணாளன். வலப் பக்கம் கொலைவெறி கொஞ்சம் கம்மி ஆயிட்ட அக்கா. நான் வரதால நல்ல படமா இருக்கும்னு நம்பி வந்திருந்தாங்க.

 

ரொம்ப நேரமா பாத்துட்டு இருந்தோம். வந்திச்சு பாருங்க இண்டர்வல்.. அடப்பாவிகளா இப்போதான் இண்டர்வலா? சொன்னது என்னவர். அதுவும் கொஞ்சம் சத்தமா.. பக்குனு எல்லாரும் சிரிச்சிட்டாங்க. அன்னிக்குனு காஃபி மெஷின் கூட ரிப்பேர். தியேட்டர் எதிர்க்க இருந்த காஃபி ஷாப்ல வாங்கிட்டு வந்தது குளிர்ல ஜில்னு ஆயிடிச்சு. வேற வழி.. மறுபடி உக்காந்தோம்.

 

போகும்போதே என் ஃப்ரண்டுக்கு ஒரு பிரச்சனைனு மனசு சரியா இருக்கல. படம் இருந்த வலிய அதிகம் ஆக்கிடிச்சு. பாடலும் காமராவும் கட்டிப் போடலேன்னா எப்பவோ எந்திரிச்சு போயிருப்பேன். பொறுமைய இழுத்து பிடிச்சிட்டு இருந்த என்னவர் கூடவே வந்திருப்பார்.

 

- சிம்பு ஒவொரு தடவையும் அந்த கேள்விய கேட்டப்போ எல்லாரும் சிரிச்சாங்க. நான் மட்டும்    ரசிச்சேன்.. அது நான் என் கண்ணன எப்போதும் கேக்கற கேள்வியாச்சே :))

- சிம்புவும் த்ரிஷாவும் பார்க்ல உக்காந்து பேசறப்போ உதடு துடிக்க சிம்பு பேசிட்டு இருந்தார். என் கண்ணில தூசி.. அவ்வ்.. மத்தவங்க குசுகுசுனு ஆரம்பிச்சு இப்போ சத்தமாவே பேசிட்டு இருந்தாங்க.

- இந்த வலி இவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நினைச்சுப் பாக்கலன்னு த்ரிஷா சொன்னப்போ ஆவ்வ்..

 

இனி வெளிய வந்து பேசிக்கிட்டது.

- என்னங்க இந்த படத்துக்கு போயெல்லாம் அழுவீங்களானு என் மூஞ்சிய பாத்து கேட்டவங்களுக்கு பக்கத்தில இருந்தவங்க சொன்னாங்க அவங்க இந்த படத்த பாத்தோமேங்கிற கஷ்டத்தில அழுதாங்கப்பானு.

- ஒருத்தங்க சொன்னாங்க எனக்கு கௌதம் மேனன் எடுத்த படத்த விட சிம்பு எடுத்த படம்தான் பிடிச்சுதுங்கனு.

- ஒருத்தங்க சரி விடுங்கப்பா அதான் த்ரிஷாவே சொல்லிட்டாங்களே மூவ் ஆன் னு.. அப்புறம் என்னன்னு சொன்னாங்க.

- ஒருத்தங்க ரொம்ப இழுவ்வ்வ்வையா இருந்திச்சுல்லன்னாங்க.. நான் சொன்னேன் விண்ணைத்தாண்டணும்னா சும்மாவா.. அவ்ளோ தூரம் போணும்ல.. அதான்..

 

என்னப் பொறுத்த வரைக்கும் பாடல்கள் சொன்ன அளவுக்கு படம் காதலை சொல்லைங்க. காட்சிகள் தனித்தனியா பார்க்க நல்லா இருக்கு.. படத்தில திணிச்சா மாதிரி இருந்துது. ட்ரெயின்ல நடந்தது.. வா ஆ ட்ரெயின் சீன்ல இருந்தே நான் இன்னும் வெளிய வரல.. இது அத விட நல்லா இருந்திருக்கணும். த்ரிஷா வீட்ல கல்யாணம் நின்னப்போ சிம்பு பாக்க போவாரில்ல.. திரை பின்னாடி அவர கூட்டிப் போய் உக்கார வச்ச சீன் தேவை இல்லாத ஒண்ணு.. இது மாதிரி நிறைய. இத எல்லாம் ஏன் சொல்றேன்னா இதெல்லாம் இல்லாது இருந்திருந்தா காதல் இன்னும் அழகா இழுவை இல்லாம சொல்லப்பட்டிருக்கும். எதிர்பார்ப்பு கம்மியாகி த்ரிஷா இத தான் சொல்லப்போறாங்கனு முன்னாடியே யூகிக்க முடிஞ்சது ஆர்வத்தை குறைச்சிடுச்சு.

 

பசங்கள பிக் அப் பண்ணிட்டு வர வழில லச்சு கேட்டா யாரெல்லாம் வந்தாங்கனு. அவ க்ளாஸ் பையன் ஒருத்தர் வந்திருந்தார்னும் சொன்னேன். கதை என்ன. சொன்னோம். படம் நல்லா இல்லையானு அடுத்த கேள்வி. நானும் அவரும் அர்த்தமுள்ள ஒரு பார்வை பரிமாற்றம் செய்து கொண்டோம். இல்லடா ஓக்கேதான். ஆனா கொஞ்சம் பிடிக்கலை. அப்டினா எந்திரிச்சு வந்திருக்க வேண்டியதுதானேன்னா. அம்மாவுக்காக நானும் உக்காந்திட்டு இருந்தேண்டான்னார் என்னவர். பாவமா இருந்துது. எனக்கும் ஒரு வகையில அந்த காதலோட வலி பிடிச்சிருந்துது. அதான் வர்லனு சொன்னா அவங்களால புரிஞ்சுக்க முடியாதேனு நான் எதுவும் சொல்லல. வீட்டுக்கு வந்ததும் சாட்ல அந்த பையன் கிட்ட பேசிட்டு வந்து சொன்னாங்க.. அம்மா அவருக்கு படம் ஒண்ணுமே புரியலையாம். நல்ல வேளை நாங்க வர்ல. என் உடன் பிறப்பு பேசிச்சு. என்னடி டல்லா இருக்கே. இல்லக்கா படம் பாத்துட்டு வந்தோம். அதான். ஃபோனப் புடுங்கி தன்னோட ஆதங்கத்த வெளிப்படுத்தினார் என்னவர். ஊர்ல இருக்கும்போது எங்கள மகளிர் மட்டும் பாக்க வச்சீங்க இல்லை.. உங்களுக்கு நல்லாவே வேணும்ணா.. எல்லாம் கேட்டுட்டு சந்தோஷமா சொல்லிச்சு என் உ.பி.

 

அடுத்து தமிழ்ப்படம் பார்த்து சிரிரிரிரிரிரிச்சோம்.

 

அவதார்.. நானே ஒரு அவதாரம் அப்புறம் எதுக்கு அத போயி பாக்கணும்னு என்னவர் வர்ல. நான் பசங்க அதே நண்பர்களோட போனோம். ரசிச்சு பாத்துட்டு வந்தோம்.

 

இப்போ போன வாரம் கலைஞர் + ஐங்கரன் டிவி ஒளிபரப்பின போர்க்களம் பாக்க போறேன். ரெக்கார்ட் செஞ்சு வச்சிருக்கேன்.

இடையில ஒரு விஷயம் கேள்விப்பட்டு என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணேன்.

வர செவ்வாய் பையா போடறாங்களாம் அக்கா.. போலாமா..

இனிமே வருவேனு நினைக்கிறீங்க உங்க கூட படம் பாக்க? காமடி பண்ணாம வேற எதுனா பேசுங்க.. இல்லேனா ரணகளம் ஆயிடும்..

படம் எடுத்தவங்கள விட்டிட்டு என் மேல இவ்ளோ கொலைவறி ஆகாதுனு அவங்களுக்கு நான் எப்டி புரிய வைப்பேன். பாவம் நான்.

 

வர்ட்டா..