Pages

  • RSS
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

19 June, 2012

ரொம்ப நாள் ஆச்சு..

கன்னம் காது மீசை உதடு k l

இடம் பொருள் பாராது முத்தம் பதித்துவிட்டேன்

சாமி குற்றம் ஆகிடுமோ..

 

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

134 உன் போக்கில் அலையும் மேகம் ஆகிவிட்டேன்

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் காற்றே..

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

அங்கும் இங்கும் பார்த்துவிட்டு i_kiss_you

என்னை நீ பார்க்கும் பார்வையில்

ஆயிரம் முத்தப் பூக்களை

என் உதடுகள் பூக்கின்றன..

 

-----------------------------------------------------------------------------------------------------------------

sommerfugler

 

உன் நினைவுகளையெல்லாம்

வெற்றுத் தாளில் எழுதிப் பார்த்தேன்

பட்டாம்பூச்சிகள் வந்து மொய்த்துக் கொண்டன..

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

உனக்கான முத்தங்களையெல்லாம் ps

இரக்கமில்லாமல் பறித்துச் செல்கிறது

காற்று..

18 January, 2012

நதி மனிதர்.

vente காத்திருத்தலின் அவசியமின்மையை

உணர்த்திப் போகின்றன

ஒப்புக்காய் ஆகிவிட்ட சந்திப்புகள். 

 

--------------------------------------------------------------------------------------------------------------

Whats-love இயல்பை மாற்றிப் போடும் காதலே

ஒரு கட்டத்தில்

இயல்பை எதிர்பார்க்கிறது.

 

----------------------------------------------------------------------------------------------------------------

elv கரையை அரித்துச் செல்வது தெரிந்தும்

ஓடிக் கொண்டிருக்கிறது நதி

மனங்களை அறுத்து

கடந்து செல்கின்றனர் மனிதர்.

 

-------------------------------------------------------------------------------------------------------------

THE VAMPIRE DIARIES கதகதப்பான உன் அணைப்பில்

இன்னமும் சுடுகின்றது

நீயறியாத என் கண்ணீர்.

 

---------------------------------------------------------------------------------------------------------------

kjærlighet-1 அன்பே இல்லாத இதயம்

என்னுள் தன் இருப்பை

உறுதி செய்து கொள்கிறது

அவ்வப்போது.

01 May, 2011

ஒன்றாய்ச் சேர்த்(ந்)தவன்!!

நான்

மழை நின்று வெகு நேரம்

இலை சொட்டும் நீரும்

சடசடத்த ஓசையும்

இன்னமும் அடங்கவில்லை

வான் நிறைந்த கருமுகில்

குடையோடு காத்திருக்கிறேன்

மழை வராமலும் போகலாம்.

 

நீ

உன் மேல் இருப்பதால் தான்

சட்டையே அழகு என்றாய்

பாக்கெட்டில் நிறைத்து வைத்த

முத்தங்களை என்ன செய்தாயென்று

இது வரை சொல்லவில்லை.

 

நாம்

என்னுள்ளே வந்தாய்

எதற்காக வந்தாய்

விழிவழி நுழைந்து

உதிரத்தில் கலந்து

உயிர் பறித்தாய்

உனக்குள்ளே வந்தேன்

உயிர் கொண்டு வந்தேன்

உன்னையும் என்னையும்

ஒன்றெனச் சேர்த்து

காதல் செய்தேன்

kjærlighet

27 March, 2011

வெற்று வார்த்தைகள்..

writing அறியாமல் வந்தது காதல்

உன்னைப் பற்றி

உன் மேல்

 

 

--

வலைகள் வேறு

ஆண் வேடர்கள்

பெண் மான்கள்

--

 

glemt உண்மைதான்

உன் போல் நான் இல்லை

இதில் கூட

 

 

 

--

கிணற்று நீர்

வெள்ளம் அள்ளாது

வற்றிப் போகும்

 

--

 

jeg savner deg உன் பெயர்

பேச்சில் அனிச்சையாய் வருகிறது

உன்னவள் பெயரும்

09 January, 2011

முத்தம்ம்ம்ம்மா..

தூறல் மழை

உன் அருகில் நான்

நம்மைச் சுமந்த கார்

தெரு சேர்ந்த நீரை மெதுவே கிழித்தபடி

அழகு பேச்சு சிரிப்பென்ற உன்

மும்முனைத் தாக்குதலில்

மோக முளைவிட்டது

உன்னை முத்தமிடும் ஆசை

இதழாயுதத்தை இயக்கிவிட்டேன்

கன்னத்தில் தொடங்கி

காது கழுத்து மூக்கு நெற்றி

தாடை தொட்டு தலை திருப்பி

உதடு வரை ஜெயித்தேன்

என் முத்தச் சத்தங்கள் வெளிக்கேளாமல்

கண்ணாடியில் சடசடத்தது

பெருமழை

இதழ்கள் விழி மறைத்தபோது மட்டும்

செல்லமாய் விலக்கி வைத்தாய்

மூர்க்கமானேன்

வலம் ஒடித்து மரத்தின் கீழ்

காருக்கு அடைக்கலம் கொடுத்தாய்

பொறுமை உடைத்து

முத்தப்போரில் நீ என் எதிராளியானாய்

ஆயுதங்கள் பலவாயின

சிலிர்த்துப் போய் தன் பங்குக்கு

சிலிர் நீரைக் கொட்டி வெட்கியது

மழை நின்ற பின்னும்

பெருமரம்.

08 November, 2010

வாழ்ந்துவிட்டுப் போகிறேன்!!

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

என்னை விட்டு                                                                                       vindu

ரொம்பத் தூரம் சென்று விட்டான்

என் கண்ணன்

மனதுக்குள் கதவுகளை

ஒவ்வொன்றாய்

மறக்காமல் மூடிச் செல்கின்றான்

ஒற்றை ஜன்னல் மட்டும் 

எப்போதும் மூடத் தாயாராய்

இறுகப் பிடித்தபடி நான்..

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

jente klemmer gutt 

நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ

என் கண்ணனாயும் இரு

நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்.

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

                                                             greek-statue-1

சிலையாய் செதுக்கினாய்

சிதைந்து கொண்டிருக்கிறேன்

செதுக்கியதோடு

உன் கடமை முடிந்துவிட்டதால்.

 

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

Picture0554 

ஈரக் கையில் ஒட்டிய முடியாய்

உதறியும் விழாமல் உன் நினைவுகள்

உலரும் வரை காத்திருக்கிறேன்

தானாக விழுந்திடுமென்ற தவிப்புடன்!!

 

 

 

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

drøm

 

இப்போதெல்லாம் முன் போல்

கனவுகள் வருவதேயில்லை

முன்போல் உன்னோடான கனவுகள்..

 

 

 

✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿     ✿♥‿♥✿    

24 October, 2010

முன்னே ஒரு U பின்னே ஒரு A..

wings

விரிந்து கொண்ட சிறகுகளுக்குத்

தெரியவில்லை

இது எட்டா வானம் நோக்கிய

முடிவில்லாப் பயணம் என்று

போகட்டும் விட்டுவிடு..

முடிந்த வரை பறந்து சாகட்டும்!!

புரிந்து கொண்ட மனதின்

கெஞ்சுதலை மீறி

ஒடித்துப் போடத் தோன்றவில்லை

பரிதாபமான என் சிறகுகளை.

#####               #####                #####                #####                #####                #####

kyss t

எதுவோ சொன்னேன்

mm என்றான்

முன்னே ஒரு u

பின்னே ஒரு a

சேர்த்து சொல்லு என்றேன்

சொன்னதை செய்யும்

வழக்கம் தெரியாத என் கண்ணன்

சொல்லவில்லை..

கொடுத்தான்..

umma..

#####               #####                #####                #####                #####                #####

rein kyss முத்து முத்தாய் மழைத் துளிகள்

கூடவே கண்ணீர்த் துளிகள்

என் மடியில் பட்டுத் தெறித்தன

உன்னோடு நனையாத

ஒவ்வொரு மழைக்கும்

சொல்லி அனுப்புகிறேன்

நாளை என் கண்ணன்

என்னுடன் இருப்பான்..

மறக்காமல் வந்துவிடு!!

#####               #####                #####                #####                #####                #####

10 October, 2010

வேண்டவே வேண்டாம்!!

என்னை நீ முழுவதுமாக

புரிந்து கொள்ளும்போது

என் உயிர் கண்டிப்பாக

என்னிடம் இருக்காது

எனக்காக உன் கண்ணிலிருந்து

ஓர் ஒற்றைத் துளி கூட

வேண்டவே வேண்டாம்

உன் மீதான என் அன்பை

அது கேவலப்படுத்தி விடும்

பதிலாக யாரிடமாவது சொல்லி

பெருமைப் பட்டுக்கொள்

உனக்காகவே ஒரு பைத்தியம்

வாழ்ந்து இறந்ததென்று!!

;;;     ;;;     ;;;     ;;;     ;;;

girl with book

;;;     ;;;     ;;;     ;;;     ;;;

மறு ஜென்மம் எனக்கு

உண்டா தெரியவில்லை

ஆம் என்பது பதிலானால்

உன் அன்புக்குரியவளாய்

அதிலாவது பிறக்க வேண்டும்

இன்னொரு பிறவி

உன் அன்புக்காக ஏங்கும்

பாவப்பட்ட ஜீவனாக

இறைவா எனக்கு

வேண்டவே வேண்டாம்!!

27 September, 2010

இரண்டில் ஒன்று!!

100. சொல்லிப் பார்க்கவே சந்தோஷத்தில் மனம் நிறைகிறது. இது என்னோட நூறாவது இடுகை. என்னை இது வரை எழுத வைத்த உங்களுக்கும் எழுதிய எனக்கும் எவ் வகையில் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும், நட்புக்கும் என்றும் என் வணக்கங்கள். நன்றி சொல்லி தள்ளி வைக்க விருப்பம் இல்லை. இருந்தாலும் சொல்லிக் கொள்கிறேன்..

நன்றி மக்கள்ஸ்..

இன்னைக்கு ஸ்பெஷலா, வித்தியாசமா எதாவது எழுதணும்னு ரொம்ம்ம்ம்ப யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். எப்போதும் என் இஷ்டத்துக்கே எழுதிட்டு இருக்கேனேன்னு ரொம்ப நாளா ஒரு உறுத்தல். இன்னைக்கு ஒரு நாள் (கேட்டுக்குங்க மக்கள்ஸ்.. இன்னைக்கு ஒரு நாள் தானாம்) ஒரு சின்ன மாற்றம். உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் குடுத்திருக்கேன். உங்களுக்கு இருக்கிற நேர அளவுகளுக்கேற்ப ரெண்டில ஒண்ண படிச்சிட்டு போங்க. கண்டிப்பா படிச்சிடணும் சொல்ட்டேன். நூறாவது இடுகைன்னு நெகிழ்ந்து போய் இருக்கிற சந்தர்ப்பத்தில ரெம்ப கஷ்டப்பட்டு உங்கள டவல் எடுக்க வைக்காத மாதிரி எழுதிட்டு இருக்கேன்.

எல்லாரும் நலமா இருக்க என் பிள்ளையார வேண்டிக்கிறேன்.

 \ \ \ \ \ \ \ \ \ \

நான் உன்னிடம்

’லவ் யூ’ சொன்னதை விடவும்

’சாரி’ சொன்னது அதிகம்

’உம்மா’ கேட்டதை விடவும்

’திட்டாதே’ கேட்டது அதிகம்

’கிட்ட வா’ என்றதை விடவும்

’கோச்சுக்காதே’ என்றது அதிகம்

’கொஞ்சிய’ கணங்களை விடவும்

’கெஞ்சிய’ கணங்கள் மிக மிக அதிகம்!!

 \ \ \ \ \ \ \ \ \ \

லவ் யூ

சாரி

உம்மா

திட்டாதே

கிட்ட வா

கெஞ்சி கேட்டுக்கறேன்

கோச்சுக்காதே!!

\ \ \ \ \ \ \ \ \ \

15 September, 2010

குழந்தைக் கதைகள்..

பூச்சி காட்டினான் என் குழந்தை

ஒன்றல்ல இரண்டு முறை

பாம்போ பல்லியோ இருக்குமென்று பார்த்தவளுக்கு

பூச்சி சிரிப்பைத் தான் தந்தது

காரணம் அறியாக் குழந்தை முழித்தது

சொல்லக் கேட்ட பின் செல்லமாய் முறைத்தது

பறந்து போய் விட்ட பூச்சியை

இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறான்

சிரிப்புக்கான கோவத்தை என் மேல் காட்ட முடியாத

என் போக்கிரிக் குழந்தை

7 7 7 7 7

woman looking

7 7 7 7 7

என் குழந்தை மெச்சிய

கதைகாரி நான்

அவ்வளவு அழகாய் கதை சொல்வேனாம்

அவன் தான் சொன்னான்

கதைக்கான கருவை கொடுத்துவிடுவான்

சொல்லும்போது விட்டுப் போகும் அத்தனையும்

கேள்விகளாய் குறிப்புக்களாய்

அவனால் எடுத்துக் கொடுக்கப்படும்

கதை நாயகனும் அவனே ஆகும்போது

நிஜத்தில் நடந்தது

என் நினைவில் உணரப்படும்

அழகாய் கதை சொல்வேனாம்

அவன் தான் சொல்கிறான்

நடந்ததையெல்லாம் கதையென்னும்

என் தங்கக் குழந்தையை

என்னவென்று நான் சொல்வேன்..

05 September, 2010

இறைவா கொடுக்காதே..

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

மனதை வதம் செய்வதில்

அவன் போல் தான் நீயும்

சில முறையேனும்

காயங்களுக்கு இதமாய்

ஆ(ற்)றுதல் செய்வதால்

நீ மட்டும்

சற்று வேறுபட்டுப் போகிறாய்.

Sleeping_Beauty_by_MarcinT 

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

ஒற்றை வார்த்தையால்

உயிர் வரை நனைக்கவும்

உயிர் வதை செய்யவும்

உன்னால் மட்டுமே முடிகிறது

உதாரணத்திற்கு ஒன்று

“செல்லம்”

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

gråt

என்னது போல் ஒரு வாழ்வு

யாருக்கும் கொடுக்காதே இறைவா

இருக்கென்று சிரிக்க விடு

இல்லையென்று அழவிடு

இருந்தும் இல்லாமல்

என்ன வலி இது??

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

உன்

காலடியில் பரிதவிக்கும்

என் இதயம்

கடந்து வேண்டுமானால் போய்விடு

மிதித்து மட்டும் போகாதே.

2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 2 

01 September, 2010

வனவாசம்.

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

எப்போதாவது உன்னோடு வாழ்வேன்
இல்லை வாழ்ந்து விட்டுப் போகிறேன்
எப்போதும் போல் நினைவுகளில்..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

par r உன் மூச்சு சத்தம்

கேட்காத எந்த இடமும்

ஏற்பாய் இல்லை

வைத்துக் கொள் என்னை

உன் கைகளின் வட்டத்துக்குள்

 

  5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

நெகிழச் செய்யாதே..

நீ சொல்வதெல்லாம் சரியாகவும்

கூடவே கேட்பதெல்லாம் செய்யவும்

எனை மீறித் தோன்றுகிறது.

  5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

sjø 1 என்னோடு நீயும்

உன்னோடு நானும்

நம்மோடு யாரோவுமாய்

வாழ்க்கை..

விதி..

படைப்பு..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

இந்த உன் சிரிப்பு

இப்போதும் நினைவில்..

எப்போதும் இல்லை

எப்போதாவது சிரிக்கிறாய்

என்னை சிலிர்க்க வைத்த

அந்த முதல் சிரிப்பை..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

உன் ஒற்றை நொடி உதட்டு முத்தம்
மனதோடு தலை வலிக்கும் மருந்தாக
நிம்மதியாய் ஒரு தூக்கம்
நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்
கிட்ட வா கண்ணா..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

29 August, 2010

என்னைப் புரிந்துகொள்..

எனக்கான ஒரு சூரியன்

  உதிப்பது முடியுமா

    காயும் நிலவு

      எனக்காக மட்டுமா

        தென்றலின் சுகத்தை

          யாரெல்லாம் அறியவில்லை

            கொட்டும் மழையில் குதிப்பது

              நான் மட்டும் இல்லையே

                ஒற்றைப் பூமியிடம்

              எத்தனை உயிர்கள்

            எவ்வளவு உரிமையாய்

          இயற்கை புரிகிறது..

        நீ மனிதனாய் போனதால்

      விட்டுக்கொடுக்க முடியாத

    சுயநலக்காரி ஆகி விட்டேன் போல..

  புரிந்து கொள்ள வேண்டியவன்

நீதான் என் பொதுநலக்காரா!!!!

hands

6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6

இதனால் சகல மக்களுக்கும் சொல்வது என்னவென்றால்..

நூறுன்னா கூட பரவால்ல.. கூட ஒண்ணு சேர்த்துக்கோங்க.. இப்போ நூத்தி ஒண்ணு ஆச்சா.. அத்தனை ஃபாலோயர்ஸ்.. யாவரும் நலமா இருக்காங்களாம்.

உங்க எல்லார் அன்புக்கும் ஆதரவுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். நீங்க தான் பணம் பொருளுக்கெல்லாம் ஆசைப்படாதவங்களாச்சே. அதுக்காக நான் செய் நன்றி மறக்க கூடாதில்லையா. இந்த நன்றிக் கடன எழுதியே தீர்த்துடலாம்னு முடிவு செஞ்சாச்சு.

இதனால் சகல மக்களுக்கும் மறுபடி சொல்வது என்னவென்றால்..

வர்ட்டா..

18 August, 2010

உயிர் விளையாட்டு.

X X X X X                                                                                                             X X X X X 

உன்னிடம்
கேட்காது தவிர்க்கப்பட்ட
கேள்விகளுக்குள்
மறைந்திருக்கின்றன
உன் மனதின் உண்மைகள்..

questions

X X X X X                                                                                                              X X X X X 

வாசல் வரை வரத்தான்

எனக்கான அனுமதி

காத்திருக்கிறேன்

நாளை உன் ஸ்பரிசம்

உணரலாமென..

 sko

X X X X X                                                                                                                                

உன் விரல் விசைக்காய்

என் சுழல்ப் பேச்சு

நீ இல்லாத வீட்டிலும்

மௌனமாய் தவமிருக்கும்..

fan

X X X X X                                                                                                              X X X X X

கொடுத்து வைத்த மேகம்
நினைக்கும் போதெல்லாம்
அழுது தீர்த்து விடுகிறது
என்னாலும் அது முடிந்தால்..

rain460

X X X X X                                                                                                                X X X X X

உயிராய் ஆனவனுக்காய்

உயிரோடு விளையாடும்

ஓர் உயிர் விளையாட்டு..

j 016 (2)

X X X X X                                                                                                             X X X X X 

04 August, 2010

சொர்க்கம்!! இரண்டே வார்த்தையில்.

vannசுள்ளிடும் உன் வார்த்தைகள்

ஒரு சிலதான்

என் மனதில் வலிகள்

வலிகள் மட்டும்??

 

*****     *****     *****     ******     *****

IMG_0640  எங்கு வரம் வாங்கி வந்தது

தொலை நீண்ட நீல வானம்

ஒன்று கடக்க இன்னொன்றாய்

ஒட்டி உறவாடிக் கொள்கின்றன

வெண் பஞ்சு மேகங்கள்..

 

*****     *****     *****     *****     *****

 

எனக்கான சொர்க்கம்

இரண்டே வார்த்தையில்..

”கிட்ட வா”

*****     *****     *****     *****     *****

தொடர் கதைய மறந்துட்டேன்னு நினைச்சிங்களா?? இதுவும் பயணத்தில பார்த்ததுதான். என் கண்ணனுக்கும் எனக்குமான சொத்து. சோகம், சுகம், ஏக்கம், கண்ணீர், காதல் அத்தனையையும் இரு மனங்களுக்கும் கண் வழி கடத்தும் மாய மருந்து. எல்லாம் மறந்து விரிந்த அவன் கைகளுக்குள் அணைந்து, அணைத்து அங்கேயே இருந்திட முடியாமல் நடப்பு வாழ்க்கை இழுத்து வருவது போல்தான் இதுவும். எதுவோ ஒரு ஜெர்மன் தெருவில.. 160 கி.மீ வேகத்துல வண்டி போய்க்கொண்டு இருந்த போதுதான் பார்த்தேன்..

KVS.  யாரோ  ஒரு புண்ணியவான். கோதுமையோ எதுவோ விளைச்ச ஒரு தானிய வயல்ல, அறுவடைக்குத் தயாரான பழுப்புப் பயிர்களுக்கு மத்தியில பசேல்னு எழுதி வச்சிருந்தார். கிட்ட வா.. கூடவே சுசியும் சேர்த்து சொல்வது போல.. அரக்கப் பரக்க காமிரா எடுத்து ஒரு கிளிக்.. வெறும் பழுப்புப் பயிர்.. அடுத்த கிளிக்.. இந்தப் படம்.. அப்படியும் ஒரு குட்டிச் செடி குறுக்கே.. V மறைஞ்சு போச்சு.

வண்டிய உடனே திருப்ப முடியாத படி நேர்ப் பாதை.. அகலம் குறைந்த சாலையோரம் ஒதுக்கி நிறுத்துவது உயிராபத்தில் முடியும். இன்னொரு முறை பார்க்கலாம் என்ற ஆறுதலோட இதாவது கிடைச்சதே என்ற திருப்தியோட வந்தாச்சு. அப்போ இருந்த படபடப்பில தோணலை. எந்த இடம்னாவது பார்த்து வைக்கணும்னு. அப்படியே எப்பவோ ஒரு தலைவலி நாளில் எழுதி வச்ச இன்னொரு ”கிட்ட வா”வும் இலவச இணைப்பா.. பாவம் நீங்க.

*****     *****     *****     *****     *****

 Kissing-Couple

இச் என்று ஒரு சத்தம்

இறுக்காத ஓர் அணைப்பு

”ஆமா இவ ஒருத்தி”

பட்டென்று நனவுக்கு வந்தேன்

”இத்தனை நேரம் தலைவலியோட

ஏன் கஷ்டப்படறே??”

”வீட்டுக்குப் போய்தான் டாப்லட் போடணும்னு

அப்டி என்ன வேண்டுதல் உனக்கு??”

”அவ வீட்ல காயகல்பம் வச்சிருக்காளாம்”

குறைப்படுவார்கள் அலுவலகத்தில்

போகாத பொழுதை நெட்டித் தள்ளி

வேலை முடிந்து வீடு வந்தால்

என் முகம் பார்த்த அடுத்த நொடி

இரு கை நீட்டி

என் கண்ணன் கூப்பிடுவான்

”தலைவலியா..

கிட்ட வா..”

இச் என்று ஒரு சத்தம்..

இறுக்காத ஓர் அணைப்பு..

உயிரின் அணுவரை சுகித்துப் போகும்

யாருக்கு வேண்டும் மருந்தும் மாத்திரையும்??

*****     *****     *****     *****     *****

18 July, 2010

புரி(யப்)படாத வலி.

என் உடலின் வலி..

கோபத்தில் புரிபடவில்லை உனக்கு

ஆசையில் புரிபடவில்லை அவனுக்கு

அவ்வளவு ஏன்

எனக்கே என் வலி புரிபடவில்லை

புரியப்படாத என் மனதின்

வலியை மீறி..

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~                                                                      

sad-girl (1)

 ~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~

முதலில் கோவம்

அடுத்து அருவருப்பு

தொடர்ந்து கேவலம்

என்பதாய் ஒரு பார்வை

கடைசியில் போதுமுன்

நடிப்பென வாய் திறந்து

சொல்லாமல்

நீ காட்டிய சலிப்பு..

தாரளமாய் புரிய வைத்தது

உனக்குள் எனக்கான அன்பை

தாங்க்ஸ்!!

07 July, 2010

புதிய(என்ன)வன்

”தலை வலிக்குது.. உம்மா??”

என்பதாய் நானோ

”தலை வலிக்குதா.. உம்மா!!”

என்பதாய் நீயோ

வாழ்ந்திருக்கிறோம்

எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது

வழக்கம்போல கேட்கத்தான் விழைகிறேன்

புதியதான உன் கோவங்களும்

புரியாதது போன்ற பாவனைகளும்

முகம் நிறைத்த கசப்புக்களும்

எட்டித் தள்ளுவதால்

மனதோடு செத்துப் போகிறது கேள்வி

மறக்காமல் தலைவலியை

மடங்காக ஆக்கிவிட்டு.

<<<<<     >>>>>

j 016 (2)

<<<<<     >>>>>

வெறுப்பை உமிழும் விழிகள்

கசப்பாய் பேசும் உதடுகள்

அலட்சியம் நிறைந்த முகம்

யாரையோ பார்ப்பதாய்

ஒரு புது உணர்வு

எனக்குள் எனை மீறித் தோன்றிவிட

தொலைந்து போன என்னவனை

கணமும் தேடுகிறேன்

பழைய நினைவுகளை தட்டிப் புரட்டி

புதிய நினைவுகளை எட்டி விரட்டி.

30 June, 2010

கணக்கு.

sad-woman

இருப்பதாய் நீ சொன்னபோது

உண்மையாய் உணர்ந்ததாலோ என்னவோ

இல்லவே இல்லையென்ற போது

அழத் தோன்றவில்லை எனக்கு

நீதான் பொய் பேசுவதில்லையாமே

சொல்லி இருக்கிறாய்.

@ @ @ @ @

                   இனிமேல் என் கதைகள்

                   கேட்கக் காதுகளில்லாமல்

                   அலையப் போவதில்லை

                    இல்லாத ஒன்றைப் பற்றி

                    இனியும் கதை சொல்லமாட்டாள்

                    இந்தக் கதைகாரி.

@ @ @ @ @ @ @ @ @ @

                                         நீ நிம்மதியாய் இருப்பாய்

                                         என்ற ஒன்றுதான்

                                         என் நினைவாக இப்போது

                                         குற்ற உணர்வு

                                         உனக்கு இது வரை இருந்ததாய்

                                         என் மனது அறியவில்லை

                                         கொஞ்சமேனும் இருந்திருந்தால்

                                         இன்றோடு அதுவும்

                                         இல்லை என்பதாய் எடுத்துக்கொள்

                                         மகிழ்வாய் இரு.

@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @

                                                                 சந்தேகம்

                                                                 +

                                                                 பயம்

                                                                 x

                                                                 சுயநலம்

                                                                 /

                                                                 பிடிவாதம்

                                                                 =

                                                                நான்.

                                                               கணக்காளன்

                                                               என்னைப் புரிந்து கொண்ட

                                                               நீயானதால்

                                                               பதில்

                                                               தப்பாய்ப் போக

                                                               வாய்ப்புக்கள் இல்லவே இல்லை!!

@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @

                                                                                      j 019

17 June, 2010

சுளீர்..

மனம் முழுவதும் வெறுமை

பொய்த்துப் போய்விட்ட கசப்பு

ஏமாற்றத்தின் அழுத்தம்

என் மீது எழுந்த அருவருப்பு

ஓயாது உள்ளே கதறும் குரல்

அசிங்கம் நான்!!!

தோற்பது புதியதல்ல

ஒரே விதமான தோல்வி

என்றும் எதிர்பார்த்திரா அடி

தட்டி எறிந்து விட்டு

என் வழியே எழுந்து விட்டேன்

முதல் முறை

வழியே இல்லாத படி

அத்தனையும் அடைத்து விட்டேன்

இம் முறை

வேண்டாம்

இன்னொரு சுய தேற்றுதல்

வலிக்கட்டும்

சாவின் பின்னும் உணர வேண்டும்

இந்த உயிர் வலியின்

சாட்டை அடியை..

Ø Ø Ø Ø Ø

                                                     sad woman 

Ø Ø Ø Ø Ø

”அழுது முடிச்சியா?”

தெரிந்து கொண்டே கேட்கிறாய்

என் அன்பைப் போலவே

கண்ணீரும் அளவில்லாதது

இரண்டு நிமிடத்தில் முடிந்திட

அது என்ன உன் அன்பா??

31 May, 2010

எங்க போன?

kyss r

உன் ஒற்றைக் கேள்வி!!

என் மீது உனக்கான

அத்தனை உரிமையையும்

இரட்டைச் சொல்லில் அடக்கிவிட்டாய்.

நான் வருவேன்னு தெரியாதா..

இன்னும் எவ்ளோ நேரம் வெயிட் பண்ண..

வருவியா மாட்டியா..

வழக்கமா எனக்கு முன்னாடி வந்திடுவே..

அதான் சொன்னேனே நான் வருவேன்னு..

நீ வந்திருப்பேன்னு நினைச்சேன்..

வரது கஷ்டம்னா அப்போவே சொல்லி இருக்கலாமே..

நான் வந்தாச்சு..

எப்போ வருவே நீ..

எத்தனை அர்த்தங்கள்

உன் ஒற்றைக் கேள்வியில்

உன்னைப் போலவே உன் பேச்சுக்கும்

என்னை ஆட்டுவிக்கும் சக்தி அதிகம்

நீ விட்டுப் போன பின்னும்

தட்டிப் போன அர்த்தம்

இன்னும் ஏதும் இருக்குமா என்று

உற்றுக் கேட்கிறேன் மனதுக்குள் மறுபடி

எ.. ங்..க.. போ.. ன.. ?..

sad women