Pages

  • RSS
Showing posts with label விளையாட்டு தொடரும். Show all posts
Showing posts with label விளையாட்டு தொடரும். Show all posts

22 November, 2009

(பாவ) மன்னிப்பு...

வணக்க்....கம் மக்களே.... நலமா?
போன பதிவு போட்டதிலேர்ந்து கொஞ்சம் ஓவராத்தான் அழுதிட்டேன் போல இருக்கு. என்கூட சேர்ந்து கிட்டு இயற்கையும் மழையா அழுது தீர்த்திடிச்சா... தெருவெங்கும் வெள்ளம்... போக்குவரத்து சிக்கல்... மழை ரெஸ்ட்ல போய்ட்டாலும் என் அழுகை நிக்கல. கண்ணன் கூட இன்னமும்... அவ்வ்வ்வ்.... அது ஒரு புறம்னா இன்னைக்கு நான் எழுதப் போற விஷயம் மறு புறம். என் பதிவுகள படிக்க வச்சு உங்கள கொடுமைப்படுத்தி, உங்க பொன்னான நேரத்தையும் மண்ணாக்கறேன் இல்ல... ரெம்ப உறுத்துதுங்க. ஏற்கனவே மனசு சோர்ந்து போயிருக்கிற நேரத்தில அழுகை பொங்குது... நான் பதிவு எழுத வந்த கதைய சொல்லி உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு உறுத்தலே இல்லாம கொடுமைய கண்டினியூ பண்றத்துக்கு அருமையான சர்ந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்த என் அன்புத் தம்பி கோபிநாத் உங்களுக்கு கோடி நன்றிகள். நல்லாருங்க தம்பி. ஏய் அடங்குடி... எதுக்கு இப்டி தலைய சுத்தி மூக்க தொடறே பாருங்க... ஒரு வித்யாசமான பில்டப்போட ஆரம்பிக்கலாம்னா .சா முறைக்குது. சரி வாங்க நாம கதைக்குள்ள குதிக்கலாம்.

எல்லாரையும் போலவே எனக்கும் ஃபார்வாட் மெயில் பண்ற ஒரு ஃப்ரெண்டு. அதில சிலபல பதிவுகளுக்கான லிங்கும் இருக்கும். பதிவுலகம் ரொம்ப பயங்கரமானதுங்கிற ஒரு தப்பான எண்ணத்தில நான் இருந்ததால டிலீட்ட அமுக்கிவிட்டுடுவேன். ஒரு நாள் ஃப்ரெண்டோட டார்ச்சர் ஒரு லிங்க போய் பாக்க வச்சிடுச்சு. அதுல பாருங்க கதவு வழியா ரைட் லெக்க வச்சு முறையா பதிவுலகத்துக்க போவேன்னு பாத்தா சாளரம் வழியா தொபுக்கடீர்னு உள்ள விழுந்துட்டேன். அதுதான் பதிவுலகம்னு மறுபடி தப்பா நினைச்சு அங்கனவே சுத்திகிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட எல்லா இடுகைகளும் படிச்சுட்டேன். அவ்வ்வ்வ்.... திடீர்னு ஒரு நாள் இவரெல்லாம் எழுதும்போது நாமளும் ஏன் எழுதக் கூடாதுன்னு (கார்க்கி நோ கோவம், பேசிக் கிட்டத விட இன்னும் போட்டுக் குடுத்திடுறேன். பீ கூல்... ஓகே..) தோணிச்சு. கம்பியூட்டர் கண்ணாம்பா + டெக்னிக்கல் தேனாம்பாவான நான் என்னதான் ரைமிங்கா இருந்தாலும் இப்டி ஒரு பேர் ரெம்ப ஓவருடி அதே ஃப்ரெண்டு துணையோட கொடுமைய ஆரம்பிச்சுட்டேன்.

என்ன எழுதலாம்னு ரொம்பல்லாம் யோசிக்கல. என்னப் பத்தி மட்டுமே எழுதுறதுன்னு உறுதியான முடிவோட இருந்தேன், இருக்கேன். அது தவிர விருதுகளுக்கு, வாழ்த்துக்களுக்குன்னு சிலது. அதையும் தவிர ஏகலைவியா என் குருநாதர் கார்க்கிக்கு குருதட்சணையா சில (டேமேஜ்) பதிவுகள். அம்புட்டுதேன். விவாதங்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள்னு என் அறிவுக்கு சம்பந்தமில்லாத எதையும் எழுத மாட்டேங்க. நானே என் இடுகைகள மறுபடி படிக்கிரதில்லேங்கிரப்போ உங்கள எக் காரணம் கொண்டும் என்னோட பழைய பதிவுகள படிச்சிடாதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிறேன்.

தமிழ்ல எழுதுறத்துக்கு google.com/transliterate/indic/Tamil பாவிக்கிறேன். இப்போ இன்னொரு ஃப்ரெண்டு கிட்ட ஈகலப்பைய வாங்கி வச்சிருக்கேன். இன்னும் சரியா அதில உழவு ஆரம்பிக்கல.

பதிவுலகத்துக்குள்ள வரு முன்னர் நான் இருந்த மனநிலை.... என்ன யார்னே தெரியாத ஒரு இடத்தில போய் ஒளிஞ்சுக்க மாட்டோமான்னு நான் நினைச்சது மனசளவில கை கூடியிருக்கு. உன்னைய ஒரு கிரிமினல் ரேஞ்சுக்கு அவங்க நினைக்கப் போறது உறுதி என் மனதுக்கு இதமாய், என்னை திசை திருப்பி ஒரு புது உலகுக்குள்ள கொண்டு போய் விட்ட பதிவுகள் எத்தனை.... என்னை பார்த்திராத, என் கூட பேசியிராத எத்தனை நண்பர்கள் என் கூட இப்போ... என்னமோ ரொம்ப நாளா பழகின மாதிரி ஒரு உணர்வு. இத்தனை நாளா இப்டியான உறவுகள இழந்திட்டு இருந்திருக்கேனேன்னு நிஜமான கவலை. ஒவொருத்தர் பதிவ படிக்கும்போதும் அவங்க திறமைய பார்த்து அப்டி வியந்து போவேன். பதிவர்களுக்குள்ள இந்த நட்பும் ஒற்றுமையும் என்னைக்கும் நிலைச்சு இருக்கணும்னு என்னை அறியாமலே வேண்டிக்கிற அளவுக்கு பதிவுலகம் என்னை மாத்திடிச்சு. என்றாவது ஒருநாள் உங்களில் யாரையாவது நான் நேரில் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. அவங்களுக்கு இந்தக் கொடுமை வேறயா???

அப்புறம் என்னங்க.. என்னையும் மதிச்சு தொடர் பதிவுகளுக்கு கூப்ட, விருதுகள் வழங்கிய, என்னை பின் தொடர்கின்ற அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றிகள். உங்க யாரையாவது என் பதிவுகள் மூலமா, என் பின்னூட்டங்கள் மூலமா நான் காயப்படுத்தி இருந்தா மன்னிச்சுக்குங்க. இப்போ மாதிரியே எப்பவும் என் கொடுமைய பொறுத்துக் கிட்டு என் கூட நண்பர்களா இருங்க. என்னோட பதிவ படிக்கிற அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்போ நான் இத தொடர்ந்து கொண்டு போறத்துக்கு கூப்பிட போறவங்க இவங்கதான்.

தியாவின் பேனா பேசுகிறது...
பார்த்ததும் படித்ததும் சங்கர்.
பிரியமுடன்......வசந்த்
பித்தனின் வாக்கு சுதாண்ணா.
எடக்கு மடக்கு R.கோபி.
வடலூரான் கலை.
இது என்னோட இடம். தமிழ்பிரியன்.
சொல்லரசன்
சந்ருவின் பக்கம்

பத்து பேருக்குமான சிறு குறிப்பு :- நீங்க முன்னாடியே உங்க கதைய எழுதி நான் அத படிக்காம மிஸ் பண்ணி இருந்தேன்னா கமன்ட்ல கும்மிடுங்க... வரட்டுங்களா...

08 November, 2009

எனக்கும் புடிச்சிடுச்சு.

இந்த வாரம் எதப் பத்திடி மொக்கை போடப்போறே? கூடப் பொறந்தது அக்கறையா இப்டி கேட்டதுமே சட்னு உஷாராகி அதிசயம்னு சொல்லு இல்லேன்னா வ.போ உன்ன டியூப்லைட்னு குட்டியிருப்பா இல்லக்கா சின்ன அம்மிணி என்ன ஒரு தொடர் பதிவுக்கு கூப்டுருக்காங்க, அத எழுதப் போறேன்னேன். உன்னப் போயின்னு ஆரம்பிச்சவ நிறுத்தி எதப் பத்தின்னா. பிடிச்ச பிடிக்காத பத்து எழுதணும். நிறையப் பேர் ரொம்ப சூப்பரா எழுதி இருக்காங்க. நானும் எதுனா வித்யாசமா யோசிக்கிறேன்னேன் . சாப்பாடுன்னா தான் உனக்கு பிடிக்காத ஒண்ண கண்டுபிடிக்கிறது கஷ்டம். அதோட நீ எப்டி எழுதினாலும் அத எழுத்துன்னே சொல்ல முடியாது. மூடிக்கிட்டு போயி முடிஞ்சத எழுதுன்னா. தன் அழகு மேல கண்ணு வைக்காதன்னு என் கிட்ட (கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம) சொன்ன என் நண்பன மாதிரியே என் எழுத்து மேல கண்ணு வைக்காத, இப்போ ஃபோன வைன்னு சொல்லிட்டு எழுத டிவி முன்னாடி உக்காந்துட்டேன் வித் மடிக் கணினி.. எனக்கு சரியா எழுத வராததுக்கு டிவியும் ஒரு காரணமோ??? வாஸ்து சரியில்ல. இடத்த மாத்தணும்

பதிவ தொடர என்ன கூப்டதுக்கு நன்றி அம்மிணி. இன்னொரு நன்றி ரூல்ஸ் எதுவும் போடாததுக்கு.

1. அரசியல் தலைவர்
அரசியலே பிடிக்காது. அப்புறம் தலைவர்கள எங்கிருந்து பிடிக் க/காத.


2. எழுத்தாளர்
பிடித்தவர்
:- ரமணிச்சந்திரன் தொடங்கி அப்டியே என் பதிவ படிக்கிற நீங்க ஒரு பதிவுக்கு சொந்தக்காரர்னா உங்க வரைக்கும் லிஸ்டு நீளும்..
பிடிக்காதவர் :- வேற யாரு இத எழுதினவங்கதான்.

3. கவிஞர்:
எனக்கு கவுஜ கூட எழுத வராதுங்கிரதால எல்லா கவிஞருமே பிடிச்சவங்கதான்.


4. இயக்குனர்:
பிடித்தவர் :- மணிரத்னம்.
பிடிக்காதவர் :- இருங்க யோசிக்கிறேன்.....


5. நடிகர்:
பிடித்தவர் :- எப்போதும்
விஜய்.
பிடிக்காதவர் :- லிஸ்டு கொஞ்சம் பெருசு.


6. நடிகை:
பிடித்தவர் :- ஜோதிகா.
பிடிக்காதவர் :- குணாவுக்கு யார் யார பிடிக்குமோ அவங்க எல்லாம்.


7.இசையமைப்பாளர்:
பிடித்தவர் :- இசைஞானி. இசைப்புயல், ஹாரிஸ், யுவன்.....
பிடிக்காதவர் :- இதுவும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எனக்கு பிடிச்சா மாதிரி ஒரு பாட்டையாவது இசை அமைச்சிடுரதால பிடிக்காதவர் கிடையாது.அம்புட்டுதேன்.

8. பாடகர்:
பிடித்தவர் :- டிம்மி.

பிடிக்காதவர் :- குணா பாடல்லாம் மாட்டார். என்னங்க இது கேள்வி.

9. பாடகி:
என்ன விட நல்லா பாடுரதால எல்லாரையும் பிடிக்குமே...


10. விளையாட்டு வீரர்:
விளையாட்டா? அப்டீன்னா???

இனி அப்டியே அம்மிணி மாதிரியே மூணு பேர கூப்டு விட்டுடுறேன்.

கோபிநாத் என்னதான் நீங்க மாமாங்கத்துக்கு ஒரு பதிவு போட்டாலும் நாங்க அழைப்போமில்ல.

பிரியமுடன்......வசந்த் நீங்க தொடர் பதிவல்லன்னு தானே போட்டீங்க.

பித்தனின் வாக்கு சுதாண்ணா தொடர் கதைக்கு சின்னதா ஒரு பிரேக் குடுங்க.

இது நம்ம ஆளு மறுபடி வெளியூரா? வந்ததும் கண்டினியூ..

அப்பாடா... கரீட்டா மூணு பேர கூப்டாச்சுப்பா. வரட்டா மக்களே? நலமா இருங்க.

மு.கு. :- என் கண்ணாளன் செஞ்ச சதியால நேத்து என்னால பதிவு போட முடியலீங்க. ஃபோன்ல எதோ ப்ராப்ளம்னு நோண்டிக்கிட்டு அடிக்கடி நெட் கனேக்சனையும் கட் பண்ணி ரொம்ப கடுப்பேத்திட்டார். அதனால திங்க கிழமை எப்படா விடியும்னு காத்திருந்து என் பதிவ படிக்க ஆவலா வந்த உங்கள ஏமாத்த வேண்டியதாயிடுச்சு. ஜாரி...

பார்ரா...இப்போ எதுக்கு இவ்ளோ உர்ர்ர்ர்.....நல்ல வேளடி சுசி புத்தியா முன்குறிப்ப கடசீல போட்டே. இல்லேன்னா உன் நிலம... அவ்வ்வ்வ்வ்.....

14 July, 2009

இளமைக் காலங்கள் தொடர்கின்றன....

எல்லாரும் நல்லா இருக்கீங்களாங்க? அப்போதான் நான் நல்லா இருக்க முடியும். ஆபீஸ்ல என் பிராஞ்ச்ல என்னத் தவிர எல்லாரும் லீவில போய்ட்டாங்கங்க. அட இந்த காப்ல பதிவா போட்டுத் தாக்கலாம்னா மத்தவங்க விட்டாதானே. ஹேய் சூஷீ! நீ தனியாவா இருக்கேன்னுட்டு வந்து ஆளாளுக்கு மொக்கையா போட்டுத் தாக்கராங்கங்க. நான் என்ன செய்யட்டும்? அலப்பரய பாரு இந்தப் புள்ளைக்கு. அது உன் நல்ல நேரம்டி. இல்லேன்னா அதுக்கப்புறம் உன் மொக்கைப் பதிவுப் பக்கம் யாருமே தல வச்சும் படுத்திருக்க மாட்டாங்கடியோய் ஏங்க இப்போ எதாவது உங்களுக்கு கேட்டிச்சு? ஏதும் கிராஸ் பதிவா இருக்கும். சரி நான் எங்க விட்டேன்?

முதலாம் வகுப்புக்கு போன முத நாளே அம்மா ஆர்டர போட்டுட்டாங்க. அட என் அம்மாவ சொன்னேங்க இனி தாத்தால்லாம் சைக்கிள்ள வச்சு மிதிக்க முடியாது. சின்னண்ணன் கூட சமத்தா நடந்து வந்துடு என் செல்லக் குட்டீன்னு. முதலாம் வகுப்பு வந்ததும் நடைங்கிறது எங்க வீட்ல எழுதாத சட்டம். இவ்ளோ நாள் ஜாலியா சைக்கிள்ள போகும்போது எதுவும் தெரீல. நடக்கும்போது எத்தன தொல்லை? ஊர்ல உள்ள ஆடு,மாடு,நாய்,பஸ்சு,லாரி,பெருசா மீச வச்ச ஆளுங்க,தடி தடியா பொம்பளைங்க எல்லாரும் என் எதிர்க்கவே வரணுமா என்ன? அதுவும் ரெண்டாவது வாரமே பஸ்சுக்கு ஒதுங்கறேன் பேர்வழின்னு கொஞ்சம் ஓவரா ஒதுங்கிட்டேன் குளத்தில முங்கி சாகப் பாத்தேன். சின்னண்ணன் மட்டும் சவுண்டு குடுக்கலேன்னா ஆள் க்ளோஸ். ஜஸ்ட்டு மிஸ்ஸு. இது நான் முன்னாடி சொன்ன கண்டம். இங்க டீச்சர் பேரு தேவி. சின்னண்ணனுக்கு அவங்க டீச்சர் சில சமயம் எக்ஸ்ட்ராவா ஒரு மணி நேரம் டியூஷன் வைப்பாங்க. அப்போ நான் அவன் பக்கத்தில உக்காந்துக்க எனக்கு பர்மிஷன் குடுத்தாங்க. சின்னண்ணன் ரொம்ப நோண்டி. ரெண்டு வாட்டி ஸ்கேலால அவன் கையில டீச்சர் நல்லாவே கவனிச்சு கிட்டாங்க. பொறுத்துக்கிட்டேன். மூணாவது வாட்டி அடிச்சதும் நான் அவ்வ்வ்வ்வ்... வீட்ல போயும் ஒரே அவ்வ்வ்.. என் க்ளாசிலேயும் அவ்வ்வ்வ்... அப்புறம் சின்னண்ணன் தான் இனிமே சமத்து பிள்ளையா அடி வாங்காம இருக்கேன்னு சொல்லி, அப்பா அம்மா டீச்சர் கிட்டயும் பேசி, டீச்சர் இனிமே அவனுக்கு வலிக்காம அடிக்கறதா என்கிட்ட சொல்லி ஒரு வழியா கண்ணீர் காண்டம் முற்றும்.

இனி எல்லாரும் ரெண்டாம் வகுப்புக்கு போவோமா. இங்க எல்லாரும் ரொம்ப சமத்தா சுசி மாதிரியே இருக்கணும். ஏன்னா புதுசா வந்த குறள்தாசன்கிற பிரின்சிபால்தான் நமக்கு டீச்சர். இப்பவும் இவருக்கு என் மேல ரொம்ப அன்பு. சின்னண்ணன் இப்போ இவர் ஸ்கூல்லதான் டீச்சரா இருக்கான்.சமீபத்துல நடந்த பள்ளி விழாவில சின்னண்ணன் பொண்ண பாத்திட்டு அப்டியே என்ன பாக்றா மாதிரி இருந்ததாவும் தான் எப்பவும் என்னோட ரசிகன்னும் பாராட்டி பேசினாராம். நம்பலைல்ல? எடுங்க சூடத்த!

மூணாம் வகுப்பு ஒரு வித கிலியோடவே முடிஞ்சுது. காரணம் ஸ்கேல் புகழ் சுகுணா டீச்சர். மறந்திட்டீங்களா? வேணா இன்னொரு தடவ எழுதிடட்டுமா? ஓகே ஓகே.... தொடர்ந்து படீங்க.

நாலாம் வகுப்பு நல்ல வகுப்பு. சுகந்தீன்னு ஒரு தேவதையே டீச்சரா வந்தாங்க. ரொம்ப நல்ல மிஸ். அவங்க மிஸ் ங்கிரதனாலயோ என்னமோ ரொம்ப அன்பா இருப்பாங்க எல்லார்கிட்டயும். கல்யாணம் ஆகிப் போயும் ஊருக்கு வர்றப்போ என்ன வந்து பாக்கும்படி சொல்லி விடுவாங்க. அவங்களோட பிரியமான மாணவி நானாக்கும்.

அஞ்சாவது கணேஷ்வரி டீச்சர், குறள்தாசன் சார், சுகந்தி டீச்சரோட ஜாலியா போய்டிச்சு. இப்போ எனக்கு யசோ,லதா, மலர், மின்னி, சுமதி, ராஜி,மதாங்கினி, ரட்ணம், குமார், ஆதி, செந்தில்னு ஒரு நெருங்கின நண்பர் கூட்டம் உருவாய்டிச்சு. சுமதி கூட ஏன்னு தெரியாமலே ப்ளஸ் டூ முடியிற வரைக்கும் பேசிக்கலை. அப்புறமா நாங்க டீச்சிங் இண்டர்வியூ போனப்போதான் பேசிக்கிட்டோம். அவளுக்கும் காரணம் என்னன்னு தெரீலன்னு சொன்னா. இதில இப்போ யசோ,செந்தில் ஊர்ல இருக்காங்க. சுமதி கானடா, லதா லண்டன், ஆதி ஆஸ்த்ரேலியான்னு போய்ட்டாங்க. அட பொருத்தமாத்தான் பயபுள்ளக போயிருக்கு மத்தவங்க எங்கன்னு தெரீல. ரட்ணம் எங்களை விட்டு ஒரேயடியா போய்ட்டான். எட்டாவது படிக்கும்போதே ஸ்கூல விட்டு நின்னுட்டான். நாங்க பத்தாவது வந்தப்போ அவன் உயிரோட இல்ல.
பொழுது போக்குன்னா பாட்டி வீடுதான். எப்பவும் தனியாதா விளையாடுவேன். ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து சாப்டு பாட்டி வீடு போனேன்னா ரொம்ப இருட்டானத்துக்கு அப்புறமாதான் மறுபடி வீட்டுக்கு வருவேன். அதுவும் தாத்தா என்ன முதுகு மேல சுமந்துகிட்டு போவாரு. அஞ்சாவது வந்ததும் தாத்தா லைட்டா மூச்சு வாங்கறத பாத்ததும் நானாவே இறங்கி அவர் கைய்ய இறுக்கி புடிச்சு கிட்டே பக்கத்தில நடந்து போவேன். என் தைரியத்த பத்தி மறுபடி எழுத வேணாமேன்னு பாக்கிறேன்.
விளையாட்னா சுசிக்கு ரஸ்க்கு, போட்டீன்னா ரொம்ப ரிஸ்க்கு. அதென்னமோ தெரீலீங்க வரிசையா விட்டுட்டு பிகில ஊதினாங்கன்னா எனக்கு உதறும். எப்டியோ சிலபல மூணாவது பரிசுகள வாங்கி வச்சிருக்கேன்.

கலை எனக்கு கை வந்த கலை. சித்திரம் கைப் பழக்கம் வரல. அப்போ அதுமட்டும் கலை கிடையாதோ? ஆடல்,பாடல், நாடகம்னா கூப்டு சுசியம்பாங்க.

எனக்கு நினைவு தெரிஞ்சு இவ்ளோ வருஷத்திலேம் ஒரே ஒரு வாட்டி ஹோம் ஒர்க் பண்ணலேன்னு தோப்புக் கரணம் போட்ருக்கேன். நண்பர்கள காப்பாத்தப் போயி ஒரே ஒரு வாட்டி அடி வாங்கி இருக்கேன். யாரும் என்னைய அடிச்சதில்ல, நானும் யாரையும் அடிச்சதில்ல. சின்ன சின்ன வாய்ச் சண்டைகள் போட்டதுண்டு.இப்ப சொல்லுங்க நான் நல்லவளா கெட்டவளா?

நெஜமா நான் சந்ருவுக்கு நிறைய நன்றி சொல்லணும். அம்மாடி... இத தான் மலரும் நினைவுகள்ம்பாங்களா... மறுபடியும் அந்தந்த வயதில வாழ்ந்து பாக்கணும் போல ஆசையா இருக்கு. அது மட்டுமா? எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரியண்ணன், அக்கா, சின்னண்ணன், தாத்தா, பாட்டி மத்த உறவுக்காரங்க, ஊர்க்காரங்கன்னு எல்லாரோடான நினைவுகளும்....

அவ்வ்வ்வ்.... ரொம்ப பீலாயிட்டேன். சத்யமா சொல்றேங்க இன்னைக்கு என்னால தூங்க முடியாது. ரொம்ப அழுகாச்சியா இருக்கு....


இப்போ நான் யாரையாவது கோத்து விடணும்ல. தயவு செஞ்சு இத சாதாரணமா நினைக்காதீங்க. அனுபவிச்சு பாருங்க... நிச்சயமா புரியும். ஏய் போதும்டி உன் புலம்பல். யாரையாவது கூப்பிடுற வழிய பாரு பார்ரா, மறுபடியும் எனக்கு ஏதோ கேக்றாப்லையே இருக்கு. வாஸ்து சரியில்ல, டெம்ப்ளேட்ட மாத்தணும்.

அத்துக்கு மின்னே இத்த படீங்க.
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தாங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்

இது சுசியோட விதி : நான் அழைப்பவர்கள் முதலிலேயே இதை எழுதி இருந்தால் உடனடியாக எனக்கு பின்னூட்டத்தில் அறியத் தர வேண்டும். நான் அடுத்தவரை கோர்க்க சாரி அழைக்க இது உதவியாக இருக்கும்.

முதலாவதா நான் அழைக்கிறவர் என்னோட முதல் பதிவுக்கு, முதல் பின்னூட்டம் போட்டவர் என்னும் மதிப்பிற்குரியவர் ஏதோ சொல்கிறேன்! புகழ் திரு நாகை சிவா அவர்கள்.

இரண்டாவது கவிதை முத்துக்களை கோர்த்து எமக்கு தரும் முத்துச்சரம் புகழ் ராமலக்ஷ்மி அக்கா அவர்கள்.

மூணாவதா கொளுத்திப் போடுறதில வல்லவரான இது என்னோட இடம். புகழ் தமிழ் பிரியன் அவர்களை கூப்பிட்டுக்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸப்பா... ஜில்லுன்னு ஒரு சோடாவ உடச்சு கொண்டு வாங்கப்பா. எவ்ளோ எழுதி குவிச்சிட்டேன்.

அப்றமென்ன கிடைக்கிற காப்ல முட்டையும் பாலுமா உடம்பைத் தேத்திக்கிறேன். வந்து கும்மிய போட்டுட்டு போங்க மக்கள்...

12 July, 2009

இளமைக் காலங்கள்.....

எப்டீங்க? எல்லாரும் நலமா இருக்கீங்களா? அதான் நீ வந்திட்டியே இனி எங்க இருந்து அப்டீங்கரவங்க தொடர்ந்து படீங்க. என் பதிவை படிச்சத்துக்கு அப்புறமும் ஒழுங்கா இருக்கீங்கன்னா நீங்க ஸ்ட்ராங் பார்ட்டீங்கதான். இப்போ சொல்லுங்க நீங்க ஸ்ட்ராங் தானே?

இனி விஷயத்துக்கு வருவோமா. இப்போதான் வரவே போறியா, வெளங்கும். முன்னம் ஒரு காலத்தில சந்ருன்னு ஒரு சக பதிவர் என்னய ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாரு. அதுக்காக அவர் ரொம்ப வருத்தப் படப் போறாருங்கோ அவருக்கே ஞாபகம் வருதோ என்னவோ. இன்னிக்கு அத எழுதிர்லாமேன்னுட்டு களத்தில குதிச்சிட்டேன். உங்க கெட்ட காலம்
என்னோட கல்விப் பயணம் நான் ரெண்டு வயசா இருக்கும்போதே ஆரம்பிச்சிடுச்சாம். என் முன்னாடி பிறந்த மூணு வாலுங்களும் பள்ளி போறது பெரும் அக்கப் போராம், என்னால. அவங்க கைய பிடிச்சுக் கிட்டு நானும் கூல் வாடேன் அப்டின்னு கிட்டு அடம் பிடிப்பேனாம். அப்புறம் அம்மா ஏதாவது பண்ணி என்ன அப்புறப் படுத்தினதும் அவங்க கிரேட் எஸ்கேப். அப்றமா ரொம்ப நேரத்துக்கு வெளி கேட்ட பாத்தாப்லையே வாசப் படீல உக்காந்திட்டிருப்பேனாம். அங்கனையே தூக்கம் கூட உண்டாம். அதனால அம்மா தொல்லையே இல்லாம வீட்டு வேல எல்லாம் முடிச்சிருவாங்களாம்.


இப்போ நான் உக்காந்து முழிச்சிட்டிருக்கேன். வாசப் படீலன்னு அவசரப் பட்டு நினைச்சிடாதீங்க. எனக்கு நாலு வயசு ஆய்டிச்சு. நர்சரி ஸ்கூல் மர பெஞ்சில கிட்டத்தட்ட ஒரு இருபது வாலுங்க புடை சூழ உக்காந்து அழலாமா வேணாமான்னு யோச்சுகிட்டு இருக்கேன்.அவனவன் போடற சௌண்ட பாக்கும்போது தப்பா ஆசப் பட்டுட்டோமோ, ஸ்கூலுன்னா ஏதோ எசகு பிசகா நடக்குமோன்னு லைட்டா பயம் வந்திச்சு. மூத்த வாலுங்க ஒரு வார்த்த சொல்லாம விட்டாங்களேன்னு அவங்கள திட்டினேன். அம்மாவும் அப்பாவும் ரொம்ப பெருமையா பாத்திட்டு நின்னாங்களா சரி போனா போகுதுன்னு உக்காந்திட்டேன். ராஜினின்னு ஒரு பொண்ணுதான் என் பெஸ்டு பிரென்ட். அவ அம்மாதான் டீச்சர். என் தாத்தாதான் எனக்கு இலவச டாக்சி. டீச்சர் பேரு தெரீல. ராஜினி அம்மான்னுதான் சொல்லுவேன். இப்டி ஒரு நெலம வரும்னு தெரிஞ்சிருந்தா அறிஞ்சு வச்சிருப்பேன். இப்போ அம்மாவுக்கு ஃபோன போட்டு கேட்டேனா அவங்க பேரு பவளராணின்னு சொன்னாங்க. அது மட்டுமா! ஏண்டாம்மா நேத்து கூட நல்லா தானே பேசினே. மறுபடியும் ஜூரமான்னு கூடவே ரெண்டு கேள்விய சேத்துக் கேட்டாங்க. அவங்களுக்கு தெரியுமா என் நிலை?

அடுத்து எல்கேஜி. டீச்சர் பேரு கணேஷ்வரி. அம்மாவோட உறவுக்காரங்க. ராஜினி க்ளாஸ்ல மிஸ்ஸுங்கறதால ஸ்டார்டிங் கொஞ்சம் ப்ராப்ளம் ஆயிடிச்சு. அவ என்ன விட ஒரு வயசு கம்மி, டீச்சர் பொண்ணுங்கறதால அங்க வந்தாங்கிறது இப்போ மாதிரி அப்போ புரியலையே. நான் சமத்தா எல்லாம் எழுதி முடிச்சிடுவேன். அதனால மிச்ச நேரம் பூரா மத்தவங்கள சும்மா பாத்துகிட்டே இருப்பேன். சுசி நீ ரொம்ப சமத்து குழந்தடி திடீர்னு டீச்சர் ஒரு புது டெக்னிக்க கொண்டு வந்ததும் மறுபடி ப்ராப்ளம். ஸ்கூல் போக மாட்டேன்னு ஒரே அடம். டீச்சர் மணல தர மேல பரப்பிட்டு அது மேல விரலால அ, ஆ ன்னு எழுத வைப்பாங்க. விரல் எல்லாம் சிவந்து போய் அவங்க அடிக்கடி கைய உதறிக்கிறத பாக்க முடியாத நான், வேற என்ன? அவ்வ்வ்வ்வ்வ்... தான்.அப்புறம் டீச்சர் என்ன ஏதுன்னு விசாரிச்சப்போ ஏன் டீச்சர் எங்கிட்ட நல்லா, அன்பா நடந்துக்கறீங்க மத்தவங்கள அழ விடறீங்க. நீங்க நல்லவளா கெட்டவளான்னு கேட்டேன். ஐய்யய்யோ! அடிப் பாவி மகளே ஏண்டி அப்டி கேட்டே. டீச்சர் அடி பின்னீருப்பாங்களே அப்டீன்னு அவசரப் பட்டு நினைக்கப்படாது. டீச்சர் ரொம்ப பீலாகி ரொம்ப நேரம் என்ன மடி மேல உக்காத்தி வச்சிட்டு இருந்தாங்க. என்ன சொன்னாங்கன்னு நினைவில இல்ல. ஆனா நெறைய சொன்னாங்க. அதோட அந்த பனிஷ்மேண்டும் அப்றமா இல்ல. என் சமூக சேவை அப்போதான் ஸ்டார்ட் ஆச்சு. ரொம்ப புகழாதீங்க. பதிலுக்கு மேல படிச்சிட்டே போங்க.

இப்போ முதல் வகுப்பு. இங்கேதான் எனக்கு அடுத்த கண்டம் + அடுத்த கண்ணீர் காண்டம். என்னன்னு அறிய இன்னும் ஒரு கொஞ்சநாள் பொறுத்துக்கோங்க. சத்தியமா தொடர்ந்து எழுதுவேன். தண்டனைய ஒரே தடவேல குடுக்க கூடாதில்ல. அப்புறம் நீங்க எங்கிட்டவே ரிப்பீட்டு போட்ற மாட்டீங்க. அதாங்க... சுசி எங்க பதிவுக்கு பின்னூட்டம் போடும்போது கொஞ்சூண்டு(?) எழுதுறே. உன் பதிவுன்னா மட்டும் இவ்ளோ எழுதிறியே. நீ நல்லவளா கெட்டவளா???
மீண்டும் சந்திப்போமுங்க... அது வரை நலமா இருங்க.