Pages

  • RSS
Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

26 August, 2012

பழையன பகிர்தல்..

இப்பொழுதெல்லாம் பதிவு எழுதுவதற்கான பொறுமையும், மனமும் இல்லாமலே போய்விட்டது. எதுவாக இருந்தாலும் கூகிள் ப்ளஸ்ஸில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது மிக இலகுவாக இருக்கிறது. இல்லாத மூளையை உருட்டிப் பிரட்டி அதே விஷயத்தை 140 எழுத்துகளுக்குள் அடக்கி ட்விட்டரில் பகிர்ந்து கொள்வது மிகப் பிடித்திருக்கிறது. அப்படியே அங்கே பகிரப்படுபவற்றை படித்து கருத்துகளைச் சொல்வதில் நேரம் போய்விடுவதால் பதிவுகளை படிப்பதையும் குறைத்துவிட்டேன். முன் போல எப்படியாவது வாரம் இரண்டு இடுகைகளை எழுதி விட வேண்டுமென்று போன வாரம் முடிவு எடுத்தேன். அதை செயலாக்குவது முயற்கொம்பாகவே இருக்கிறது.

விருப்பமானவர்கள் என்னை @susiguna என்ற ஐடியில் ட்விட்டரில் தொடருங்கள். அதிகமாக அவ்வப்போது கேட்கும் பாடல்களின் வரிகளையே பகிர்ந்து கொள்வேன். அதனால் தைரியமாகத் தொடரலாம். நானும் தப்பித்துக்கொள்வேன். ட்விட்டரிலும் கூகிள் ப்ளஸ்ஸிலுமாய் அவ்வப்போது பகிர்ந்து கொள்வதில் பிடித்தவற்றில் சில இங்கேயும்.

--

சொன்ன சொல்லின் விலை.. கொடுக்கக் கொடுக்கத் தீரவில்லை.. தீர்வதாய் இல்லை..

--

பிறந்தநாள் வாழ்த்துகளின் போது சந்தோஷமாய் சிரிப்பவர்களை பார்த்தால் குட்டியாய் ஒரு வலி எட்டிப் பார்க்கிறது..

--

டைப்பும்போது கவனிப்பதில்லை
கவனிக்கும்போது எண்டர் தட்டியிருப்போம்
# எண்டர் தட்டிய சாட்

--

சொன்ன சொல்லையும் எண்டர் தட்டிய சாட்டையும் திருப்ப வாங்க முடியாது.. இரண்டிலும் பழிவாங்கப்படும்போது அழாம இருக்க கத்துக்கணும்..

--

காதலுக்குள் நட்பையும் உறவையும் சேர்த்து நரகமாக்குபவனும் நண்பன் தான்..

--

தானாய் அமைந்தது சொந்தம்.. நானாய் அமைத்தது நட்பு..

--

கையை ஆட்டியபடி பள்ளிக்குள் செல்லும் பிள்ளையின் சிரித்த முகத்தின் முன் ட்ராபிக்கும் பார்க்கிங் அலைச்சலும் ஒன்றுமே இல்லை.. 
--
படுத்தவுடன் தூங்கும் வரத்தை சிலருக்கு மட்டும் கொடுத்தது கடவுளின் மிகப் பெரிய ஓரவஞ்சனை..
--
வெயில், மழை, ஆலங்கட்டி மழை, பனியென மாறி மாறி வரும் காலநிலையும் என்னைப் போல இன்று ஒருநிலையில் இல்லைப் போல..

--

காலையில் நான் தலைவாரும்பொழுது சது ஸ்கூலுக்கு ரெடியாகிட்டு இருந்தார்.. நான் தலைவாரிய சத்தம் அவருக்கு ஆப்பிளை கடிச்சு சாப்டுறது போல இருந்திச்சாம்.. பிள்ளைகளுக்குத் தான் எப்டிலாம் யோசிக்க முடியுது..

05 April, 2012

5 நாட்கள்.

இந்த வாரம் புதன் அரை நாளோடு தொடங்கி செவ்வாய் வரை நீடிக்கும் ஈஸ்டர் கால விடுமுறை. பிள்ளைகளுக்கு திங்களில் இருந்து பள்ளி விடுமுறை விட்டதால் வழக்கம்போல் எதற்கு வளர்ந்து தொலைத்தோம் என்ற ஏக்கத்தோடு திங்கள் ஆஃபீசுக்கு கிளம்பினேன்.

இந்த விடுமுறை நாட்களில் ஆஃபீஸ் போகும் கொடுமையை குறைக்கும் முதல் விஷயம் my car, my petrol, my road தான். ஆளே இல்லாத வீதிகளில் எந்த டென்ஷனும் இல்லாமல் ட்ரைவ் பண்ணும் சுகம் இருக்கே.. அடடடடடடா..

004 என் மேஜையில் எனக்காகக் காத்திருந்த ஈஸ்டர் சாக்லெட் கொஞ்சம் சிரிப்பைக் கொடுத்தது. மேலிட தந்திரம்.

வெள்ளியோடு விடுப்பெடுத்து பாதி ஆஃபீஸ் திங்களன்று காலியாக இருக்கும். செவ்வாய் வந்ததும் கொஞ்சம் கடுப்பேறும். கலீக்ஸ் ஒவொருவராக விடைபெறுவார்கள். அதில் சிலர் அவர்கள் பயணம் பற்றிச் சொல்லும்போது. ம்ம்.. ஒருவழியாக புதன் கிழமை வந்தால் அன்று அரைநாள். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றும் சுகம் இருக்கே?? அடடடடடா..

அநேகமானோர் இந்த ஈஸ்டர் விடுமுறைக்கு இந்த வருடத்தின் இறுதிப் பனியை அனுபவிக்கவென மலைப் பகுதிகளில் உள்ள அவர்களின் சொந்தமான/வாடகை காட்டேஜ்களுக்குப் போய்விடுவார்கள். எங்கள் அயலில் ஓரிண்டு வீடுகளில் தான் ஆட்கள் உண்டு. கிட்டத்தட்ட ஊரே காலியாக இருக்கும் காலம் இது. எங்கள் பழைய வீட்டில் நான் வந்த புதிதில் ஜன்னலில் நின்று வேடிக்கை பார்த்துக் கழித்த காலங்களில் ஒரு நாள் அது. வீதிக்கு எதிரே ஒரு வரிசை வீடு. அடுத்து ஒரு உள்வீதியோடு சில வீடுகள். அதில் ஒரு வீட்டில் யாரோ வண்டி வைத்து பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். பின்னர்தான் தெரிந்தது அது திருட்டென்று. போலவே காட்டேஜ்களில் தங்கி இருப்போருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பிரபல திருடர்களும் ஒவொரு வருடமும் அவர்கள் கைவேலையை காட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள். போன வாரம் பக்கத்து ஊரில் ஒரு பெண் ஃபேஸ்புக்கில் ‘லீவு விட்டாச்சேய்ய்ய்ய்.. நான் காட்டேஜ் போறேனே’ என்று பொங்கிவிட அடுத்த நாளே வீட்டில் திருட்டு.

இதற்கிடையில் எங்கள் தமிழ்ப் பள்ளியின் பத்தாவது ஆண்டுவிழா வருகிறது. அதற்கென்று என் வகுப்புப் பிள்ளைகளுக்கு நாடகம் ஒன்று பழக்க ஆரம்பித்திருக்கிறேன். அற்புதமாகக் கழிகிறது நேரம். ஒவ்வொரு பிள்ளைக்குள்ளும் ஒழிந்திருக்கும் நடிகனையும் நடிகையையும் வெளிக்கொண்டு வருவதென்பது அபரிமிதமான ஒரு அனுபவம். ஓரளவுக்கு நன்றாக நடிப்பார்கள் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. அதனால் இந்த விடுமுறை நாட்களில் 2 நாட்கள் மட்டும் பயிற்சி எடுத்துக்கொள்ளவுள்ளோம்.

2012-04-04 11.09.52 மலைப்பிரதேசம் போகாதவர்களே அனுபவியுங்கள் என்பதாய் திங்கள் பனி கொட்டித் தள்ளியது. கண்ணாளன் வேறு சின்ன வண்டிக்கு சம்மர் டயரை மாற்றிவிட்டார். ஒரு வழியாக பெரிய வண்டியை உருட்டிக்கொண்டு போய்வந்தேன். புதன் கிழமை அவரே போக்குவரத்துப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சதுவுக்கு ஆண்டுவிழா பயிற்சி இருந்ததால் அம்மு என்னோடு ஆஃபீஸ் வந்து அவ விருப்பப்படி இருவரும் லஞ்சுக்கு இலை தழைகளை உண்டோம்.

017 கிளம்பும் நேரம் திடீரென்று ஃபயர் அலாரம் அலறத் தொடங்கியதில் மொபைலை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு கட்டடத்தை விட்டு வெளியே வந்த என்னைப் பார்த்து அம்மு சிரித்தார். அவர் கையில் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தோடு வந்து தொடர்ந்து படித்ததைப் பார்த்து நான் சிரித்தேன். தீயணைப்புப் படையினர் வந்து அரைமணி நேர காத்திருத்தலின் பின் எங்கேயும் தீப்பிடிக்கவில்லை உள்ளே போகலாம் என்றார்கள். காரணம் என்னவென்று செவ்வாய் போனால்தான் தெரியும்.

இரண்டு நண்பர்கள் வீட்டில் விருந்துக்கு நாங்கள் போய், ஒரு நண்பர் குடும்பத்தை விருந்துக்கு அழைத்து தண்டனை கொடுப்பது, சதுவின் இரண்டு நண்பர்கள் இரண்டு நாட்கள் இங்கே டேரா, ஆண்டுவிழா நாடகப் பயிற்சி, சனிக்கிழமை ஊர் சுற்றல் என்ற அளவில் மட்டும் இப்போதைக்கு 5 நாள் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

img_7868_20100404_1741788986        அனைவருக்கும் இனிய ஈஸ்டர் வாழ்த்துகள்.

11 July, 2011

ஆத்தா எனக்கு லீவ் விட்டாச்சேய்ய்..

j 049

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் மண்ணே.. காத்திரு.. இன்று இரவு என் பொற்பாதம் உன்னை மிதிக்கும்..

இன்னமும் மூட்டை கட்டும் வேலை + வீட்டை ஒதுங்கக் கட்டும் வேலையை முடிக்காததால் இப்போதைக்கு எல்லாருக்கும்

டாட்டா.. பை பை.. சீ யூ..

08 July, 2011

யூவு டெல்லு மீயு??

என்னோட ஒரு கஸின். கனடால இருக்கான். தந்தையர் தினத்தன்று அக்காச்சி வீட்டுக்கு போயிருக்கான். கதவு திறந்ததுமே அக்காச்சியின் மூன்று கண்ணன்களும் கோரசாக ’happy father’s day சித்தப்பா’ என்று வாழ்த்தி இருக்கிறார்கள். ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு இருந்தவனுக்கு வந்தது அடுத்த சோதனை. என் இன்னொரு கஸினின் பிள்ளைகள் அப்பாவுக்குப் பரிசு கொடுக்கப் போனவர்கள் அவனுக்கும் மறக்காமல் பரிசு கொடுத்து வாழ்த்தி இருக்கிறார்கள். ஸ்கைப்பில் ‘ஒரு பேச்சிலருக்கு நேர்ந்த கொடுமைய பாத்திங்களா அக்கா’ என்றவனை வருங்கால அப்பாவுக்கான வாழ்த்தாக எடுத்துக் கொள்ளச் சொன்னேன். பயபுள்ள சோகத்தை மறந்து வெக்கப்படுது.

@@@@@

Voss cup. 6-12 வயதுக்கு உட்பட்ட பசங்களுக்கான ஃபுட்பால் திருவிழா. இம்முறை வெள்ளி ஒரு மேச்சும், சனி மூன்றும் சது டீமுக்கு இருந்தது. என்னால் போக முடியவில்லை. தவிர அத்தனை அடுக்குகளும் செய்து வண்டிக்குள் எல்லாரும் ஏறி டாட்டா காட்டியதும் ’அம்மா எனக்கு இன்னொரு ஹக் வேணும்’ என்றபடி சது கதவைத் திறந்தார். இறுக்கிக் கட்டிக்கொண்டு ’மிஸ் யூ அம்மா’ என்றார். துளிர்த்த கண்ணீரை மறைத்தபடி மீண்டும் கை அசைத்தேன். அவர்கள் திரும்பி வரும் வரை மனம் அலைந்து கொண்டே இருந்தது. நடந்த அத்தனையும் அப்டேட் பண்ணிவிட்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னார். இம்முறை பச்சை கலர் டீஷர்ட் கிடைத்தது.

 074 058

@@@@@

Prince of Persia - The sands of time படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அதற்கு இரண்டு நாட்கள் முன்னர் பார்த்த பொன்னர் சங்கர் நினைவுக்கு வந்தது. குறிப்பாக கோட்டைச் சுவரில் எய்யப்பட்ட அம்பைப் பிடித்து மேலே ஏறும் காட்சி வந்தபோது சிரிப்புத் தாங்கலை. ஏன்னா ஒரு ஆர்வக்கோளாறில ‘அடப்பாவி.. பிரசாந்து படத்தை சுட்டுட்டானே வெள்ளைக்காரன்’னு நினைச்சிட்டேன்.  Brokeback Mountain க்குப் பின்னர் Jake Gyllenhaal நடிப்பில் நான் பார்த்த படம் இது. அவரோட மூதாதையர் நம்ம பக்கத்து நாடாம். அவர் நடித்த மீதிப் படங்களும் பார்க்க வேண்டும்.

@@@@@

’இருக்கும்போது தெரியலங்க.. நடக்கும்போது தெரியுது..’

‘நீங்க உயரம்ன்றதால தெரியல. ஆனா..’

’அவர் அப்போ பாத்தாப்லயே இருக்கார். நீங்க..’

இப்படிப் பலவாக ஆரம்பித்து ‘..வெயிட் போட்டிங்களா என்ன??’ என்ற ஒரே கேள்வியில் முடிக்கும் அனைவருக்கும் இதையே சொல்லிக் கொல்கிறேன். யாரோ ஒரு நல்லிதயம் அனுப்பி வச்சது. டிலீட் தட்டாம வச்சது நல்லதாப் போச்சு.

HEALTH MESSAGE:

1. If walking/cycling is good for your health, the postman would be immortal. (Not Malaysian Postmen !)
2. A whale swims all day, only eats fish, drinks water and is not thin BUT fat.
3. A rabbit runs and hops and only lives 15 years.
4. A tortoise doesn't run, does nothing ..yet lives for 450 years.
AND
YOU TELL ME TO EXERCISE!

@@@@@

இந்த பாடல் எல்லாரும் கேட்டிருப்பிங்க. இருந்தாலும்  இப்போவும் கேளுங்க. காமகோடியன் வரிகள் உருக்குகிறது. யுவன் இசையில் சங்கர் மகாதேவன் அசத்துகிறார். படம் மௌனம் பேசியதேவாய் இருந்தாலும் மௌனமாகக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இருக்கிறேன். வரிகள் கூகிளாண்டவர் குடுத்தார். பிழை திருத்த நேரமும் மனமும் இடம் கொடுக்காததால் அப்படியே சேர்க்கிறேன்.


என் அன்பே! என் அன்பே!
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி!
என் அன்பே! என் அன்பே!
என் நெஞ்சுக்குள் காதல் வலி!
என் உடலின்று கடலானதே!
என் உயிருக்குள் அலையாடுதே!
இந்தப் பாறைக்குள் பனி பாய்ந்ததே!
என் விரதத்தில் விளையாடுதே!
ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!
(என் அன்பே............)


விழி பட்ட இடம் இன்று, உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்று அறிந்தேனடி
புது பார்வைப் நீ பார்த்து, புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாறச் செய்தாயடி
மெல்லிடை கொண்டு நடைகள் போடும்
அழகான பெண்ணே
முப்படை கொண்டு எனைச் சுற்றி வளைத்தாயடி!
என் உறக்கத்தைத் திருடிச் சென்று
உறவாடும் பூவே!
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்!
அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய்!
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்!
இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்!
இனி என்ன சொல்லுவேன் இன்று?
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே...!
ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!
(என் அன்பே...........)

30 June, 2011

உன்னுள் வாழ்கிறேன்..

எங்கிருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் பாட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆஃபீஸில் என் காதுகளுக்கு மட்டும். ’சீக்கிரமே உனக்கு காது அவுட்டாகப் போது பாரு` என்று சக ஊழியர்கள் கிண்டல் செய்தாலும் ஐபாட், இயர்ஃபோன் மறந்து போகும் நாள் எனக்கு சாபக்கேடு. என் நண்பர்களுக்கும். நல்லதா ஒரு பாட்டு சொல்லு என்று அடம்பிடிப்பேன். அவர்கள் சொல்லும் பாட்டின் வரிகள் மறந்துவிட்டால் கூகிளாண்டவர் துணையோடு மனதுக்குள்ளும், தனியாக இருக்கும்போது முணுமுணுத்தும் பாடிக்கொண்டிருப்பேன். என்னை எங்கோ இழுத்துச்செல்லும் பாடல்களில் ஒன்றை இன்று எஃப் எம் உதவியோடு கேட்க நேர்ந்தது. இன்னமும் வெளிவர முடியாமல் அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். அல்லது வர விரும்பாமல் உள்ளேயே இருக்கிறேன் என்றும் சொல்லலாம்.

முதல் முதல் கேட்டபோதே மனதை அழுத்திய பாடல் இது. அதன் பின் எப்போது கேட்டாலும் கனம் குறைவதில்லை. எதுவோ ஒரு சோகம், பாரம், தவிப்பு இப்படிக் கலவையாய் ஒரு உணர்வு வந்து போகும். காலையிலிருந்து இப்போது இந்தக் கணம் வரை திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.  கொஞ்சம்  தனிமை.  நிறைவாய்க் கண்ணீர். இந்த மன அழுத்தம் போக தேவையாய் இருக்கிறது. உடனேயே உனக்கென்ன இப்போ என்று கேட்காதீர்கள். எனக்கு எதுவும் இல்லை. சில நேரங்கள் அப்படித்தான். ஏதோ ஒன்று எதுவோ ஒன்றின் காரணமாய் தேவைப்படுகிறது. தேவைப்படுத்திக் கொள்கிறேன். தொடர்பே இல்லாமல், என்னவென்றே புரியாமல். சிரிப்பும், அழுகையும் எதுவோ ஒன்றின் நினைவுபடுத்தலாய் வருவது வாழ்வில் இயல்பே.

பாடலைக் கேளுங்கள். யுவன், நா.முத்துக்குமார் சேர்ந்து படைத்த அற்புதம். ஷ்ரேயா கோஷலின் குரல். இது தமிழில் அவரின் ஆரம்ப காலப் பாடலாக இருக்க வேண்டும். எனக்கு சரியாகத் தெரியவில்லை. உச்சரிப்பைக் கவனியுங்கள்.  7G, ரெயின்போ காலனி படத்திலிருந்து என்னைத் தின்றுகொண்டிருக்கும் பாடல்.

நினைத்து நினைத்துப் பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்..

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு..

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்..

15 May, 2011

உங்களுக்கு 4. எங்களுக்கு 8.

அன்னையர் தினம் கனடாவிலும் வந்து போனது. ஸ்கைப்பில் என் அன்னையிடமும் கூடவே அய்யனிடமும் ஆசீர்வாதம் வாங்கினேன். அண்ணா ஸ்கைப்பிலும், ரஜி ஃபோனிலும் அதையே செய்திருக்கிறார்கள். அக்காச்சி எங்கள் நால்வருக்குமாக 4 தடவைகள் அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாளாம். அடிப்பாவி.. இதே சாக்கா அரைக்கிலோ வெயிட்ட குறைச்சிட்டியா என்று சொன்னாலும் என் கண்ணீரை மறைக்கவென்று பரிசுகளைக் காட்டச் சொன்னேன். அதில் ஒரு body cream. அக்காச்சிக்குக் கிடைத்தது. அதன் விலை 20 கனேடியன் டாலர்ஸ் என்றதும் அதுக்கு வேறு எதாவது மாற்றி வாங்கலாம் என்று கடைக்குப் போனார்களாம். எதற்கும் ஒரு தடவை வாசனை எப்படி என்று பார்க்க சாம்பிள் கிரீமை திறந்தார்களாம். கூடவே வந்த கருண் சொன்னாராம்.

‘ம்ம்.. நல்ல வாசம்.. அம்மா.. இதையே யூஸ் பண்ணுங்க.. McDonald’s வாஷ்ரூம்ல இருக்கிற hand soap மாதிரியே மணக்குது’

(((((

அதிக நாள் ஆகிவிட்டது ரெஸ்டாரண்டில் போய் சாப்பிட்டு. முன்பெல்லாம் வெளியே சாப்பிடுவதென்றால் அது மாக்டொனால்ட்ஸ் பர்கராகவோ இல்லை பெப்பர்ஸ் பீஸாவாகவோ தான் இருந்தது. பிள்ளைகள் வளர்ந்ததும் ரெஸ்டாரண்ட் போவது பிடித்துப்போனதால் வாரம் ஒரு தடவை போய் வந்த வழக்கம் ஊர்ப் பிரச்சனையோடு இல்லாமல் போய் மீண்டும் ஆரம்பித்தது. அம்முவின் ஃப்ரெண்டி ’நீங்க லக்கி அதான் ஒவொரு வாரமும் ரெஸ்டாரண்ட் போறிங்க’ என்று சொன்னதன் பின் மீண்டும் குறைந்து போனது. காரணம் தெரியாமல். வெட்டிங் டே அன்று சைனா பாலஸ் என்ற ரெஸ்டாரண்ட் போனோம். அம்முவின் விருப்பம். தங்கா அக்கா வீட்டுக்குப் போய் அவர் அம்மா அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கிப் போனதில் லேட்டானதால் ஸ்டார்ட்டர் கூட ஆர்டர் பண்ணவில்லை.

037 3 ஃபாண்டா, ஒரு சைனீஸ் பியர். நான் பறக்கிறது, ஓடுறது, நீந்துறது எல்லாம் கலந்த ஒரு மெனு (Kamkon pot), கண்ஸ் நீந்துறது மட்டும் (sea delicasy), பிள்ளைகள் பீஃப், ஃப்ரைட் நூடில்ஸ்.

 

 

 

 

041 அப்படியே ஃப்ரைட் பனானா/பைனாப்பிள் வித் வனிலா ஐஸ்க்ரீம்.

 

 

 

 

 

 

048

பில் வந்தது. பக்கத்திலேயே சுடுநீரில் முக்கிய குட்டி டவல்களை வைத்து விட்டுப் போனார்கள். பில்லைப் பார்த்த பின்னர் கண்ணீரைத் துடைக்கவும் பயன்பட்டது.

(((((

First_Communion ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கிறிஸ்தவ நண்பர்கள் முதல் நன்மை என்ற ஒரு சமயச் சடங்கை செய்கின்றார்கள். 9 வயதான பிள்ளைகள் முதன் முதலாக ஆசீர்வதிக்கப்பட்ட அப்பம் உண்ணும் நாளாம். நாங்கள் இருக்கும் இடத்தில் இந்துக்களை விட கிறிஸ்தவர்களே அதிகம். போன சனிக்கிழமை மொத்தம் 4 ஃபங்க்‌ஷன். இந்த வருடம் ரெக்கார்ட். ஆனாலும் தெரிந்தவர் ஒருவர் ’4க்கே அலுத்துக்கறிங்க. எங்களுக்கு 8’ என்று சொன்ன போது அப்பாடா என்று இருந்தது. ’உங்களுக்கென்ன பசங்க வளந்திட்டாங்க. நாங்க இவங்களையும் இழுத்திட்டு அலையிறத நினைச்சுப் பாருங்க’ என்று வேறு சிலர் அங்கலாய்த்தபோது அச்சச்சோ என்றிருந்தது.

டென்மார்க்கில் இருந்து ஒரு நண்பியின் உறவினர்கள் வந்திருந்தார்கள். அங்கே எல்லாம் குறிக்கப்பட்ட நாளில் சர்ச்சில் இந்த நிகழ்வு முடிந்ததும் பின்னொரு நாளில் ஜூன் வரை ஃபங்க்‌ஷனை வைப்பார்களாம். இங்கே சனி அல்லது ஞாயிறு மட்டும்தான் வைக்கின்றார்கள். எந்த ஒரு ஃப்ங்க்‌ஷனிலுமே கலந்து கொண்ட உணர்வு வரவில்லை. ஒரு இடத்தில் சாப்பாடு, அடுத்த இடத்தில் டெசர்ட், அடுத்த இடத்தில் டீ, பலகாரம், கடைசியாகப் போன இடத்தில் ஃபோட்டோவுக்கு போஸ் மட்டும். பார்க்கிங் தேடி அலைந்ததிலும், நாலு திசைக்கும் ஓடியதிலுமே.. உஸ்ஸ்ஸ்ஸ்..

இதெல்லாம் கூட பரவாயில்லை. 4 ஃபங்க்‌ஷனும் ஒரே நாளில் நடந்ததால் 3 ஸாரி கிடைக்காம போச்சேன்றதுதான் எனக்கு மிகப் பெரிய்ய்ய கவலை. இப்போ நீங்க உஸ்ஸ்ஸ் சொல்றத்துக்குள்ள நான் எஸ்ஸ்ஸ்ஸ்..

வர்ட்டா..

13 May, 2010

ஒரு வேளை..

என்ன கொடுமைங்க இது.. மே மாசம் ஆச்சுது.. இன்னமும் ஸ்னோ விட்டுப் போறதா காணோம். உங்களுக்கு எப்டி வெயில் கொடுமையா இருக்கோ அப்டியே எங்களுக்கு குளிர், இருட்டு. காலேல எந்திரிச்சு வெளிய பாக்கவே கடுப்பா இருக்கு. திங்கள் காலேல எடுத்த படங்கள் பாருங்க. டெம்ப்ரேச்சர் +5 க்கும் +10க்கும் இடையில  ஊசலாடுது.  ஐஸ்லண்ட்ல எரிமலை வெடிச்சதுதான் காரணம்ங்கிறாங்க. ஆனா என் ஃப்ரெண்டு சொல்லுது எனக்கு இருக்கிற வயித்தெரிச்சல்தான் எரிமலையா வெடிக்குதாம். ஒரு வேளை உண்மையா இருக்குமோ??

IMG_9541  IMG_9543

Bilde000 (5) முதல் ரெண்டும் வீடு.. கடைசி ரோடு..

><     ><     ><     ><     ><

என் கலீக் ஒருத்தர் ஆஃப்ரிக்கன். இப்போ லீவ்ல சவுத் ஆஃப்ரிக்கா போய்ட்டு வந்தப்போ கொண்டு வந்தார்ங்க. ஒண்ணு த்ராட் இன்ஃபெக்‌ஷன். இன்னொண்ணு ட்ரைட் மங்கோ ரோல்ஸ். சாப்பாட்டு விஷயத்தில எனக்கு கல்லும் செரிக்கும்னாலும் கொஞ்சம் பயத்தோட காக்கா கடி கடிச்சு டேஸ்ட் பண்ணேன். அப்புறம் பாக்கெட் காலி. என்னா டேஸ்ட்டு.. எங்கூர்ல பனம் பழத்தோட பல்ப் எடுத்து பனை ஓலைப் பாய்ல காய வச்சு பினாட்டுன்னு செய்வோம். அதே மெதட்ல மாம்பழ பல்ப்ல செஞ்சிருக்காங்க. இப்போ அவர் அம்மா இங்க வர இருக்காங்க. ரோல்ஸ் ஆர்டர் பண்ணிட்டோம்ல. ப்ராப்ளம் என்னன்னா அடிக்கடி இந்த எரிமலையோட சாம்பல் கூட்டம் தொல்லை பண்ணி ஃப்ளைட்ட லாண்ட் ஆக விடாம பண்றதால வரத்துக்கு கொஞ்சம் பயப்படறாங்களாம். ஒரு வேளை வராம இருந்துடுவாங்களோ??

Bilde018 (2)

><     ><     ><     ><     ><

எங்க பக்கத்து வீட்டுப் பசங்க முயல் வளர்க்கிறது பத்தி சொல்லி இருக்கேன். அமாண்டுஸ். அவர் இந்த குளிர் பத்தில்லாம் கவலைப்பட்டதா தெரில. எனக்குத்தான் அவர் இந்த கொடும் பனியிலேம் கூட்ல இருக்கிறத பாக்க கவலையா இருக்கும். இப்போ வளர்ந்திட்டாரு இல்லையா. ரொம்ப நேரம் தூக்கி வச்சிட்டு இருக்க முடியல. இறக்கி விட சொல்லி அடம். இல்லேன்னு தூக்கி வச்சிருந்தா பிறாண்டி வச்சிடறார். இறக்கினதும் வீடு பூரா ஓட்டம். விரட்டிப் பிடிக்கிறத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. ப வீ பொண்ணு சொன்னாங்க அவருக்கு ஒரு பெல்ட் வாங்கணுமாம். நாய்க்கு கழுத்தில மாதிரி இவருக்கு வயித்த சுத்தி கட்டணுமாம். எனக்கென்னமோ இன்னமும் கவலையா இருந்துது. ஒரு வேளை நாய் மாதிரி முயலும் வருங்காலத்துல வீட்ட காவல் காக்குமோ??

Bilde027 (2)

><     ><     ><     ><     ><

அல்லாரும் இப்போ பூதக் கண்ணாடிய எடுத்துக்கோங்க. சொல்லும்போது யூஸ் பண்ணலாம். இப்போதைக்கு பக்கத்தில வச்சுக்கோங்க. அப்டியே படிங்க தொடர்ந்து..

"ஆவ்வ்.."

அலறியபடி கையை உதறினேன்

சிவப்புப் பொட்டுக்கள் இரண்டு

சட்டென்று எட்டிப் பார்த்தன

முதலில் பதறிய கலீக்

சுதாரித்து பின் சிரிப்போடு கேட்டான் 

"பேப்பர் கட்??"

இந்த பேப்பர் கட் இருக்குங்களே.. வெட்டும்போது ஒரு எரிச்சல் சுரீர்னு வரும். அப்புறம் அப்பப்போ காயம் ஆறுற வரைக்கும் (இது உனக்கே நியாயமா படுதா??) விறுவிறுன்னு எரிச்சலாவே இருக்கும். என் கலீக் ஒருத்தி கைல வெட்டிக்கும்போது கெட்ட வார்த்தைல்லாம் சொல்லி கத்துவா. (இவ மனசுக்குள்ள கத்துவா) எனக்கென்னமோ இதில ஒரு தத்துவம் ஒளிஞ்சிட்டு இருக்கிறதா தோணும். வாழ்க்கேல வர பெரிய பிரச்சனைகள விட உப்புப் பெறாத குட்டிக் குட்டிப் பிரச்சனைகள்தான் நம்மள அதிகம் பாதிக்குது. மனச அலைய வைக்குது. நல்ல வேளை.. அதுக்கு இதுவே பரவால்லன்னு நினைக்க வைக்குது. இப்போ பூதக் கண்ணாடிய எடுத்து படத்தப் பாருங்க. காயத்த சுத்தி கருப்பா வட்டம்லாம் போட்டிருக்கேன். தெரிலன்னு சொல்றவங்க கை காமிங்க.. பேப்பரால சர்ரக்னு குட்டியா ஒரு கட் வச்சிட்டு.. உப்பு தூவி பிளாஸ்திரி போட்டிடலாம். ஒருவேளை காயம் அப்போ தன்னால தெரியுமோ??

  Bilde025

வர்ட்டா..

28 April, 2010

ஹாப்பி கிறிஸ்ட்மஸ்!!

 

என்னோட ஒரு ஃப்ரெண்டு கிட்ட பேசும்போது ஹாப்பி கிறிஸ்ட்மஸ்னேன். லூசா நீன்னு கேட்டு அலுத்திடுச்சோ என்னமோ என்னாச்சு.. எதுக்கு இப்போ சொல்றேனுச்சு. ஏப்ரல் முடிஞ்சு மே மாசமும் வரப் போது, ஆனா இன்னமும் ஸ்னோ கொட்டிட்டு இருக்கிற ஊர்ல இருந்துக்கிட்டு, வேற என்ன சொல்ல நான்..

வெயிலடிக்கும்.. மழை பெய்யும்.. அதுவே ஆலங்கட்டி மழையாகும்.. அப்டியே ஸ்னோவா கொட்டும்.. இவளவும் அரை மணி நேரத்துக்குள்ள நடக்கும். மறுபடி வெயில்.. மழை.. இயற்கை வித்தை காட்டிட்டு இருக்கு. அப்போதான் ஆஃபீஸ்ல ஆளாளுக்கு சொல்லிக்க ஆரம்பிச்சோம் ஹாப்பி கிறிஸ்ட்மஸ். இடுக்கண் வருகில் நகுகனு சும்மாவா சொன்னாங்க. ஜாலியா இருந்துது அப்புறம். அதுவும் பொறுக்கலை போல இயற்கைக்கு. வெள்ளி  காலேல வழக்கம் போல அலாரம் அலற அலறி அடிச்சிக்கிட்டு எந்திரிச்சு ரூம விட்டு வெளிய வந்தா வழக்கமா கதவு வழியா தெரியிற வேலி, கார், மலை, வீடுகள் எதையும் காணோம். கண்ணாடி போட்டிருக்கேனான்னு தொட்டுப் பாத்தா இருக்கு. என்னடா இதுன்னு கிட்டக்க போயி பாத்தா ஸ்னோ.. ராத்திரி பூரா கொட்டி வச்சிருக்கு. சம்மர் டயர் ஸ்லிப்பாக உயிர கைல பிடிச்சிக்கிட்டு வேண்டுதலோட ஆஃபீஸ் போனேன்.

Bilde027 Bilde029 Bilde030

பாருங்க.. முதல் படத்தில ஆலங்கட்டி மழை.. அடுத்து ஸ்னோ. மொபைல்ல எடுத்ததால கொஞ்சம் க்ளியரா இல்லை.. (இல்லேன்னா மட்டும்??)

இதுக்கும் முன்ன இருந்த ஸ்னோவோட மிச்ச சொச்சத்த ஃபோட்டோ எடுத்ததா போன பதிவில நான் சொன்னத நீங்க மறந்தாலும் நான் மறக்கல. அதையும் பாருங்க.

IMG_9130 IMG_9131 IMG_9132 முன்னாடி ப்ளே க்ரவுண்ட், எங்க உள்பாதை.

 

 

 

IMG_9127 IMG_9133 IMG_9134 ரெண்டு வீட்டுக்கும் இடையில பெரிய குவியல், ரோட், வீட்டு முற்றம்.

 

 

 

IMG_9043 இத முதல் இந்த பதிவில சேர்க்க மறந்துட்டேன். இந்த வருஷ அமோக ஸ்னோவ வழிக்கிறத்துக்கும், அள்ளி எறியவும்னு வாங்கிய ஆயுதங்கள். ரெண்டு மூணு ஸ்னோல புதைஞ்சு வேற போச்சு.

 

அப்டியே அந்த படங்கள்ல பாருங்க ஸ்னோவோட இந்த இடமெல்லாம் எப்டி இருந்திச்சுன்னு, நேரம் கிடைச்சா..

வர்ட்டா..

18 April, 2010

யாரும் தப்பிக்க முடியாது..

மறுபடி என் புது வீட்ட பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னவங்க.. பாத்துட்டும் கம்முன்னு இருந்தவங்க.. இன்னமும் பாக்காதவங்க அல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்..

சைடு பார்ல புதுசா ஒரு விஷயம் சேர்த்திருக்கிறத பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னவங்க.. பாத்துட்டும் கம்முனு இருக்கிறவங்க.. இன்னமும் பாக்காதவங்க.. அல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன்.. ஒண்ணுதாங்க.. ரெண்டு விஷயத்துக்கும் சேர்த்து சொல்ல வந்தது ஒண்ணுதான்.

இதனால ரெம்பக் கடுப்பில இருக்கேன் நானு. சோ.. அதனால.. இந்த தடவையும் சீரியஸ் பதிவுதான். தண்டனையில இருந்து யா..ரும் தப்பிக்க முடியாது சொல்ட்டேன்.

ஐஸ்லாண்ட்ல நடந்த எரிமலை வெடிப்பு பத்தி அறிஞ்சிருப்பீங்க. சாம்பல் புகை மண்டலம் குறையுற வரைக்கும் இங்க ஃப்ளைட்டெல்லாம் நிறுத்தி வச்சிருக்காங்க. லைட்டா சல்ஃபர் வாசனை காத்தில இருக்கு. ஒரு இடத்தில சாம்பல் வண்டி மேல படிஞ்சிருந்ததா கூட பேப்பர்ல படிச்சேன். எங்க ஆஃபீஸோட வெளியூர் கிளைகளில இருந்து வர வேண்டிய தபால் வராததால ஆணி கம்மியா இருந்துது. ரெண்டு நாள் ஜாலியா போச்சு. இப்போ யாரு கண்ணு பட்டுதோ பயபுள்ளைக ட்ரெயின் மூலமா அனுப்பி வச்சிட்டாங்க. விளைவு.. வெள்ளிக் கிழமை ஆணி குமியப் போதுன்னு டீம் லீடர் சொல்லிட்டாங்க. அன்னிக்குன்னு பாத்து லேட்டா எந்திரிச்சிட்டேன். (அடிப்பாவி.. பத்து நிமிஷம்தானேடி லேட்டா எந்திரிச்சே..) 

நீங்க லேட்டா எந்திரிச்சா எப்டி ரெடியாவீங்களோ அப்டி இல்லாம வழக்கம் போலவே ரெடியானேன். (ம்க்கும்.. ) ரோட்ல இறங்குறத்துக்கு முன்னாடி மம்மி சின்ன வயசில சொல்லிக் குடுத்தா மாதிரி வலது பக்கம் முதல்ல பார்த்தேன். ரெண்டு கார் சைட் குடுக்கிறத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்துது. பின்னாடி வரப்போற என் காருக்கு எதுக்கு சைட் குடுக்குறாங்கன்னுட்டு கொஞ்சம் எட்டிப் பாத்தா ஒரு ட்ரக் வந்துட்டு இருந்துது. இப்போ மம்மி சொன்னது மறுபடி ஞாபகம் வந்து இடது பக்கம் பாத்தா அங்க ஒரு கார் வந்துட்டு இருந்துது. அப்டியே என் கார் முன்னாடி அது வரும்போது ரெண்டு பக்கம் பாத்தா போதாதும்மா.. போக வேண்டிய பக்கத்த பறுபடி பாக்கணும்னு ம சொ ஞா வந்து மறுபடி வலது பக்கம் பார்த்தேன். ட்ரக் இன்னமும் வந்துட்டு இருந்துது. இல்ல நின்னுட்டு இருந்துது. என்னடா இது.. சைட் குடுத்தும் எதுக்கு வெயிட் பண்றாங்கனு என்ன மாதிரியே யோசிச்ச ரெண்டாவதா நின்ன வண்டி ட்ரைவர் வெளிய இறங்கி ட்ரக் ட்ரைவருக்கு இங்கதான் இவ்ளோ இடம் இருக்கே எடுத்துட்டுப் போயேன்னு சைகை காமிச்சாங்க. அவர் கண்டுக்கணுமே. அப்போ முத வண்டியில இருந்த ட்ரைவர் இறங்கி இவங்களுக்கு எதுவோ சொன்னாங்க. ரெண்டு பேரும் அவங்க அவங்க வண்டியில மறுபடி ஏறி உக்காந்துட்டாங்க. இப்போ என் முன்னாடி வந்த வண்டி என்ன கடந்து போய் ரெண்டாவது வண்டி பின்னாடி போய் மூணாவதா நின்னுது.

என்னடா நடக்குது இங்கனு ட்ரக்காளன இன்னும் நல்ல்ல்ல்லா எட்டிப் பாத்தா.. பாத்தா.. பா.. அதான் நல்லா எட்டிப் பாக்கறேன்னு சொன்னேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம்?? இருங்க என்ன பாத்தேன்னு எழுதறேன். அது வேற ஒண்ணும் இல்லீங்க. ஸ்னோ இருந்த வரைக்கும் ரோடோரம் சேர்ந்த குப்பை கூளம் கல்லையெல்லாம் சுத்தம் பண்ற வேலைய செஞ்சுட்டு இருந்தாரு அவரு. வழக்கமா வர வண்டிய விட இது வித்யாசமா இருந்ததால எங்களுக்கு தெரியல. அவர் நத்தை வேகத்தில வர எப்டியும் பத்து நிமிஷமாவது ஆகும்னு நினைச்சுட்டு என் கார நிறுத்தினேன். சரியா எட்டு நிமிஷம். ஒரு வண்டி ஓடிட்டு இருக்கிறத விட ஸ்டார்ட்ல நிக்கும்போதுதான் அதிகமா சூழல் மாசடையும்கிறது நீங்க அறிஞ்ச விஷயம்தானே. மத்த மூணு பேரும் அத செய்யலைங்க. ஸ்ட்டார்ட்லவே வண்டிங்க நின்னுது.

அது மட்டுமா.. ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சுன்னா இல்லை ரோட் வேலைக்குன்னு ட்ராஃபிக் ஜாமாகி நிக்கும்போது எத்தன பேர் வண்டிய நிறுத்தறோம்.. நேரமாகும்னு தெரியுதில்ல. அப்புறமும் எதுக்கு ஸ்டார்ட்ல நிக்கணும். ஆஃப் பண்ணிட்டோம்னா வண்டியும் ரிலாக்ஸ் பண்ணிக்கும். கொஞ்சம் யோசிக்கலாம்ல.. இது மட்டும் இயற்கை அனர்த்தங்களுக்கு காரணம் இல்லேன்னாலும் இதுவும் காரணம் தான் இல்லையா. அப்புறம் எரிமலை பொங்கி பனிப் பாறைகள் உருகிப் போகாம என்ன செய்யும். ஏப்ரல் மாசத்துல இந்த ஊர்ல இன்னைக்கு ஸ்னோ கொட்டாம என்ன செய்யும். வண்டிக்கு சம்மர் டயர் வேற மாத்தியாச்சு. கொஞ்சம் டெம்ப்ரேச்சர் ப்ளஸ்ல இருக்கப்போயி ஸ்னோ கரைஞ்சு போயிடறதால தப்பிச்சோம். இல்லேன்னா டயர் ஸ்லிப்பாகி ஆக்சிடெண்ட் சகட்டு மேனிக்கு நடக்குமே. என்னவோ போங்கப்பா.. யாருமே கவனிக்க மாட்றாங்க.

நேத்து ஒரு பார்ட்டிக்கு போயிருந்தோம். விழா நாயகி அஞ்சு மாச குழந்தை. சர்ச்ல ஞானஸ்நானம் காலேல முடிச்சுட்டு சாயந்தரம் பார்ட்டி, கூட்டம், ஃபோட்டோன்னு கஷ்டம் குடுத்தாலும் சமத்தா அழாம இருந்தாங்க. எல்லாரும் ஃபோட்டோ எடுத்து முடிச்சதும் நான் தூக்கி வச்சிருந்தேன். என் ராசி உடனவே என் தோள்ல தூங்கிட்டாங்க. சின்ன சின்ன போட்டிகள் விளையாட்டுகள்னு சத்தமா இருந்ததால ஒரு ஓரத்தில மடியில அவங்கள வச்சுட்டு உக்காந்திருந்தேன். அவங்க உறவுக்காரக் குட்டிப்பொண்ணு ஒண்ணு.. சது வயசு.. பயங்கர வாயாடி.. உங்க வயசு என்ன ஆண்ட்டினு என் கிட்ட பேச்ச ஆரம்பிச்சா. வயசுக்கேத்தாப்ல பேசுவாங்களோ?? சொன்னேன். கேட்டதும்  ஆஆச்சரியப்பட்டா. நீங்க எவ்ளோன்னு நினைச்சீங்கன்னேன்.. நான் சொன்னதில இருந்து பத்த குறைச்சு சொன்னா. இப்போ நான் ஆஆஆஆச்சரியப்பட்டேன். உங்களுக்கு பாப்பானா பிடிக்குமா? ம்.. ரொம்ப. அப்போ உங்களுக்குன்னு ஒண்ண எடுத்துக்க வேண்டியதுதானே. அவங்க அகராதியில குழந்தை பெத்துக்கிறத்துக்கு அர்த்தம் இதுதான் போல?! இல்லடா.. எனக்குன்னு வேணாம். ஆனா இப்டி அடுத்தவங்க பாப்பாவ தூக்கி வச்சுக்க பிடிக்கும். உங்களுக்குனு வேணவே வேணாமா? வேணாம். அதான் எனக்குனு ரெண்டு பசங்க இருக்காங்களே.. அவங்களே போதும்.

அந்த ஆண்ட்டி யாரு? அவங்க பசங்க யாருனு இப்டியே பேச்சு போயிட்டு இருந்துது. சீரியசா.. ஆண்ட்டி இந்த பாப்பா உங்க மடில சமத்தா தூங்குது.. ஆமாண்டா.. அவங்க ரொம்ப டயர்டாயிட்டாங்க இல்லை.. அதான். பாப்பா பாக்கும்போது உங்க பாப்பா மாதிரியே இருக்காங்க.. அப்டியா? ஏம்மா அப்டி சொல்றீங்க?? நீங்க ரெண்டு பேரும் ஒரே கலரா இருக்கீங்க..  சாயல் இல்லாம கலர் தீர்மானிக்குது பாருங்க. விஷயம் புதுசா இருக்கில்ல. இப்டி இன்னமும் சீரியசா போச்சு பேச்சு..

ஆண்ட்டி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. (சிரிச்சுட்டேன் நான். அவ முழிச்சா. எதுக்கு சிரிச்சேன்னு புரியாமலா.. இல்ல என் சிரிப்ப பாத்து பயந்தானு தெரில) தாங்ஸ்டா தங்கம். நீங்களும் ரொம்ப அழகா இருக்கிங்க. உங்க சாரி அழகா இருக்கு. தாங்ஸ்டா.. உங்க ஃப்ராக்கும் அழகா இருக்கு. உங்க வளையல் அழகா.. என்ன இது.. எதுக்கு சிரிக்கிறிங்க இப்போ?? ஹல்லோ.. படிச்சிட்டு இருக்கிற உங்களத்தான் கேக்கறேன். அதான் முன்னாடியே சொன்னேன்ல சீரியசா எழுதப் போறேன் இன்னைக்குன்னு..  நிஜமா சொன்னாங்கப்பா.. நம்புங்க. ரைட்டு!! இதுக்கு மேல நாங்க பேசிக்கிட்டத உங்களுக்கு சொல்லப் போறதில்ல நானு..  உங்க பேச்சு கா.. 

வர்ட்டா..

14 April, 2010

செருப்பு.. அப்பப்போ சப்பல்..

எல்லோருக்கும் எங்களோட இனிய சித்திரைப் புது வருட வாழ்த்துக்கள்.

சித்திரை வருஷம் தடல் புடலா கொண்டாடினதெல்லாம் ஒரு காலம். நான் அது பத்தி சொன்னாலும் பசங்கள பொறுத்த வரைக்கும் தை முதலாம் தேதிதான் புது வருஷம். இங்க வந்த புதுசுல சில ஃப்ரெண்ட்ஸ் வருவாங்க. இப்போ எல்லாரும் பசங்க, வேலைன்னு பிஸி ஆயிட்டாங்க. நினைவிருந்தா வாழ்த்துவாங்க. அவ்ளோதான். இதுவே ஊர்லன்னா.. அவ்வ்வ்.. இன்னைக்கு வேணாம். வருஷத்தன்னிக்கு சந்தோஷமா இருந்தாத்தான் வருஷம் பூரா  சந்தோஷமா இருப்பேன்னு நம்புறவ நான். (அச்சச்சோ.. அப்போ இந்த வருஷம் உனக்கு அம்புட்டுதானா?? ) அதனால எங்க ஊர்ல புது வருஷம் கொண்டாடுறது பத்தி வேற ஒரு நாளைக்கு எழுதறேன். ஆவ்வ்வ்.. (அதுக்கேண்டி நீ அழறே.. அவங்க இல்ல அழணும்)

சரி அத விடுங்க. இந்த ஊர்ல 86/87 ஆண்டுப் பகுதியில வந்த விண்டர் சீஸன் 62 நாட்கள் தொடர்ச்சியா ஸ்னோ இருந்த வருஷம்னு ரெக்கார்ட் பதிவாச்சு. அதாவது ஸ்னோ தொடர்ந்து கொட்டும்னு இல்லை. ஆனா மழைக்குப் பெயர் போன எங்க ஊர்ல மழை பெஞ்சு கரைஞ்சு போகாம இருந்தது. இந்த சீஸன் 2009/2010.. மொத்தம் 98 நாட்கள். புது ரெக்கார்ட். இடையில ரெண்டு நாள் மழைன்னாலும் ஸ்னோ கரையல.

இனிமே போதும். முடியலங்கிர ரேஞ்சுக்கு ஸ்னோல பிறந்து, தவழ்ந்து, அள்ளித் தின்னு வளர்ந்தவங்களே வந்திட்டாங்கன்னா, வந்தேறு குடிகளான நம்ம நிலை?? மழை பெய்து கரைஞ்ச ஸ்னோ கண்ணாடியாட்டம் ஃப்ரீஸ் ஆகாம இருந்ததால வழுக்கி விழுந்து டேமேஜ் ஆன மக்கள் + வாகனங்களோட எண்ணிக்கை இந்த வருஷம் குறைவு. நானும் இந்த வருஷம் சாதனை செஞ்சாச்சு. ஒரு நாள் கூட ஆஃபீசுக்கு கண்ணாளன் கூட்டிப் போல. பஸ்லவும் போல. (சில பல நாட்கள் பரவால்ல நீயே தைரியமா போனு அவர் சொல்லிட்டார்னு பயத்தில நடுங்கி கிட்டே அவர திட்டிக்கிட்டு ட்ரைவ் பண்ணது யார்டி சுசி?? நீயா என்ன??)

அதையும் விடுங்க. தலைப்பு பத்தி சொல்லணும்ல. கண்ணன் மேல கோவம்  எனக்கு. ஒரு கட்டத்தில இனிமே என்ன செருப்புன்னு கூப்டுன்னு சொன்னேன். சொன்னது தப்புனு உணர்ந்து சாரி சொன்னேன். சிரிச்சுக்கிட்டே எதுக்கு சாரின்னிச்சு. இல்ல நான் அப்டி சொன்னது உனக்கு வருத்தமா இருந்திருக்கும்னு நினைச்சு சாரி சொன்னேன். ஆனா இப்போ உன் சிரிப்பு பாத்தா அப்டி இல்லைன்னு  தோணுது. அப்பப்போ ஒரு சேஞ்சுக்கு சப்பல்னும் கூப்டுன்னேன். நான் சொன்னது சரிதானுங்களே.. செருப்பு.. சப்பல்.. இதில எந்தப் பெயர் எனக்கு நல்லா இருக்கும்??

ரெக்கார்ட் வச்ச ஸ்னோவ ஊரெல்லாம் அமர்க்களமா படம் பிடிச்சாங்க. நானும் எங்க வீட்ல இருந்த ஸ்னோவ படம் பிடிச்சிருக்கேன். ராமலக்ஷ்மி அக்கா மன்னிச்சிடுங்க.. உங்கள மாதிரி முத்து முத்தா கவிதையா எடுக்க தெரியல எனக்கு. வெயில் பட்டு இறுகிப் போன ஸ்னோ அப்டியே டைமன்ல கம்பளம் செஞ்சு விரிச்சு வச்சா மாதிரி ஜொலிச்சுது பாருங்க.. அப்போ உங்கள நினைச்சேன்.

IMG_9023 பால்கனில இருந்து பாத்தா முன்னாடி இருந்த எதையும் காணோம்.

 

 

 

IMG_9026IMG_9025  கராஜ் கூரை மேல.

IMG_9031 IMG_9032

பின் பக்கம். இதுக்கு மேல கதவு திறக்க முடியல.

IMG_9068 IMG_9036 IMG_9073

இன்னொரு பால்கனி.. கதவே திறக்க முடியல.

IMG_9037 IMG_9038 IMG_9039 IMG_9040

வீட்டோட முன்பக்கம். பசங்க உழுது வச்சிருக்காங்க.

IMG_9041 IMG_9045

அநாதரவா புதைஞ்சு போய் இருக்கிற பேப்பர் ரீசைக்கிள் பின். நல்ல வேளை குப்பை போடற பின்ன முன்னாடியே எடுத்து கராஜ்ல வச்சிட்டோம்.

IMG_9048 IMG_9056 IMG_9057 IMG_9058 பள்ளத்தில ஃபுட்பால் க்ரவுண்ட், நெருங்க முடியாத நிலையில போஸ்ட் பாக்ஸ், ரோட்.

IMG_9047 வீட்ல இருந்து ரோடுக்கு போம்போது வழுக்கிச்சுன்னா ஒண்ணு  எதுக்க இருக்கிற பள்ளத்தில குபீர். இல்ல ரெண்டு பக்கமிருந்தும் வர வண்டி மேல டமார். 

 

 

IMG_9054 சைட்ல.. மேல இருக்குற வீடுகளுக்கு போறத்துக்கான படிக்கட்டு. நடக்க இல்லை. சறுக்க மட்டும்.

 

 

 

 

 

IMG_9049IMG_9055

ரோட்ல, நடைபாதையில இருக்கிற ஸ்னோவ அள்ளிக் கொண்டு போய் பள்ளத்தில கொட்டறாங்க.. வசதி இல்லாத இடங்கள்ல லாரில அள்ளிட்டுப் போய் குளங்கள்ல கொட்டினாங்க.

இப்பவே படங்கள் ஜாஸ்தி ஆயிடுச்சு. அதனால இப்போ ஸ்னோ விட்டுப் போயிருக்கிற மிச்ச சொச்சங்கள இன்னொரு பதிவில பார்க்கலாம்.

மீண்டும் புது வருஷ வாழ்த்துக்கள்.

வர்ட்டா..