Pages

  • RSS
Showing posts with label என் நலன் விரும்பிகள். Show all posts
Showing posts with label என் நலன் விரும்பிகள். Show all posts

14 March, 2010

உனக்கு நேரம் சரி இல்ல..

நான் இன்னமும் பாக்கலை. பாக்காம எழுதக் கூடாதுங்கிர வைராக்கியத்தோட இருந்தேன். என்னையும் எழுத வச்சிட்டாங்க. பாக்க கூடாதுனு நினைக்கலங்க. பாக்க முடியாம போச்சு. எப்டியோ தட்டிப் போச்சுனும் சொல்லலாம். பாக்கணும்னு நிறைய எதிர்பார்ப்பு இருந்துச்சு. பாக்கலாம்னு முடிவானப்போ வேணாம்னு  தோணிச்சு. ஆனா அத நான் வேணும்னு செஞ்சதா நினைச்சிட்டாங்க. அதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.

 

இங்க வந்ததில இருந்து பழகறவங்க. என் மேல சொன்ன குற்றச்சாட்டுக்கள் நியாயமானு நீங்களே சொல்லுங்க. ரொம்ப கம்பல் பண்ணாங்க பாக்க போலாம்னு. இப்போ முத பத்தியோட மூணாவது லைன்ல இருந்து படிச்சுட்டு வாங்க.. என் சொல் பேச்சு கேட்டு போய் மறுபடி படிச்சவங்களுக்கு நன்றி.. இப்போ இந்த பத்திய முதல்ல இருந்து மறுபடி படிக்காமலே உங்களுக்கு புரிஞ்சிருக்கும், நான் விட்ட இடத்திலேர்ந்து சொல்லறேன்னு.. பாத்திட்டு வந்ததில இருந்து என் கிட்ட பேசல. ரெண்டு வாரம் கழிச்சு எங்க வீட்டுக்கு வந்திருந்தவங்க கிட்ட எப்டிக்கா படம்னு ரெண்டு வார்த்தைதான் கேட்டேங்க.. பொங்கிட்டாங்க போங்க.. கிச்சன்ல நின்னு கேட்ட என் தப்ப உணர்ந்து உயிர்ப் பயத்தோட நான்.. இனி அவங்க சொன்னது இல்ல இல்ல.. கொலைவெறியோட சொன்னது..

ரொம்ப எதிர்பார்ப்போட போனேன் தெரியும்ல உங்களுக்கு. அங்க போனா தியேட்டர் காத்தாடுது.. படம் ஆரம்பிச்சுதா.. பாத்துட்டே இருந்தோமா.. கொஞ்ச நேரம் ஆனதும் என் அக்கா சிரிக்க ஆரம்பிச்சுட்டா.

ஏங்கா.. காமடி சீனா..

நீங்க காமடி பண்ணாதீங்க. எதுவும் புரியலப்பா.  என் பொண்ணு அப்பப்போ அவங்கள பாத்து முறைக்க ஆரம்பிச்சுட்டா. அவ கண்டுக்கணுமே.. இப்டியே போனா வந்தாரு பாருங்க பார்த்திபன். பேசினாரு பாருங்க ஒரு தமிழ்.. அதுக்கு அப்புறம் அக்கா சிரிச்ச சிரிப்பில பொண்ணு கடுப்பாகி வேற சீட்ல போய் உக்காந்துட்டா. அவங்கள பாத்து நானும் சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். அவங்க அப்டி சிரிச்சு அன்னிக்குதாம்பா பாத்தேன்.

யாரும் திட்டலையா உங்கள?

எங்க அவங்களும் புரியாம தான் பாத்துட்டு இருந்தாங்க போல.. எங்க கூட  சிலர் கூட்டு சேர்ந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்கப்பா.

இல்லக்கா.. இது புது விதமான கதைனு சொல்றாங்க..

எவன் சொன்னான்? கூட்டிட்டு வாங்க என் முன்னாடி. இந்த படம் இந்தியால இப்பவும் ஓடுதுன்னு சொல்லுங்க இனிமே நான் வாழ்க்கேல படம் பாக்கல. 

இல்லக்கா.. ஓடிட்டு இருக்காம்..

(இப்போ ஒரு லுக்கு விட்டாங்க பாருங்க.. என்னத்த சொல்ல)

அப்டினா போய்ப் பாருங்க எங்கள மாதிரி அறியாம போய் மாட்டிக்கிட்டவங்க தான் பாத்திட்டு இருப்பாங்க.

பார்ட் டூவும் எடுக்க போறாராம் செல்வா..

(இப்போ முன்னய விட கேவலமா ஒரு லுக்கு)

வேணாம் என்ன கொலைகாரி ஆக்கிடாதீங்க சொல்ட்டேன்.

அப்போ காமடிக்குனு யார் வந்தாங்க?

அதான் அவரு கார்த்தி வந்தாரே. அவருதான் பெரிய காமடி பீஸு.

கார்த்தி ட்ரெய்லர்ல பாக்கும்போது ஒரு மாதிரி தலைய குனிஞ்சுட்டே போறாறே.. அது என்ன சீன்?

அவர் படம் பூரா அப்டிதான் போறார். இதில எதனு நான் சொல்ல. நீங்க இந்த படத்த டிவிடில கூட பாத்துடாதீங்கப்பா. அப்டியே பாக்குறதுனா கூட நான் வர நேரம் என் கண்ல படற மாதிரி வச்சிடாதீங்க. சொல்ட்டேன்.

பாட்டுக்கா.. ஆனா மாலை நேரம் வர்லயாமே..

உங்களுக்கு எப்டி தெரியும்?

அது சும்மா நெட்ல மேயும்போது படிச்சேன்..

இந்த குழப்பத்தில அத யாரு கேட்டா. அன்னிக்கு ஒரு படம் பாக்க வான்னீங்க. விஜய பிடிக்காத நானே அவ்ளோ என்ஜாய் பண்ணி பாத்தேன். அது உங்களுக்கு பொறுக்கல இல்ல. ஏம்பா.. ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே.. வேற என்ன படிச்சீங்க..

இல்லக்கா.. நீங்க சொன்ன எல்லாமே படிச்சேன்.

(இங்கனதான் வசமா மாட்டிக்கிட்டேன். அவ்ளோ கோவமா அவங்கள நான் பாத்ததே இல்ல) ஆனா நான் வேணும்னு வராம விடலக்கா.. அது உங்களுக்கே தெரியும்.. அவர் மாட்டேனுட்டார்.. பசங்களுக்கும் புரியாது..  நான்  தனியா வரலாம்னா இந்த ஸ்னோல ரிஸ்க் எடுத்து ட்ரைவ் பண்ண பயமா இருந்துது..

(இத சொல்லிக்கிட்டே மெதுவா அவங்கள கிச்சன விட்டு ஹால் பக்கம் கூட்டிட்டு வந்துட்டேங்க. கரண்டி எடுத்து வீசினா பரவால்ல.. கத்தி எடுத்து வீசிட்டா??)          

படம் பாக்காமலே எனக்கு வந்த நிலைய பாத்தீங்களா?? என் சித்தி ரெண்டு நாள் பொண்ணு மேல கடுப்பாவே இருந்தாங்க. அவங்கதான் அடம் பிடிச்சு கூட்டிப் போக சொன்னாங்களாம். அப்பா சொன்னார் யாம் பெற்ற துன்பம் நீயும் பெறணும்டாம்மா.. கண்டிப்பா நீயும் பாருன்னு. இதுக்கப்புறம் ஒருத்தர் கிட்ட கூட நான் மறந்தும் கேக்கல.

நீங்க ஆயிரத்தில் ஒருவன் பாத்தீங்களாஆ??

aayirathil-oruvan கார்த்திக்குப் பதில் செல்வாவ இங்க நிக்க வச்சிருக்கணுமோஓ??

அப்பப்போ என் கண்ணன் சொல்றதுதான் இப்போவும் என் நினைவுக்கு வந்துதுங்க. அதான் தலைப்பா போட்டுட்டேன். கரெக்டா இருக்குதுங்களா??

வரட்டுங்களா..

15 December, 2009

திசம்பர் 10.

திசம்பர் 10.
என் வாழ்க்கேல ரெண்டு முக்கிய, மறக்க முடியாத நிகழ்வுகள நடத்திய நாள்.


எனக்கு டைரி எழுதுற பழக்கம் (இப்பவும்) இருந்திருந்தா திசம்பர் பத்து அன்னிக்கு இப்டி எழுதி இருந்திருப்பேன். ஒண்ண சொன்னேன்னா என் கண்ணன் கோச்சுக்குவான். சோ.. இன்னொண்ண மட்டும் சொல்றேன்.


திசம்பர் பத்தோட சரியா ரெண்டு வருஷமாச்சு நான் வேலைக்கு சேர்ந்து. என் திறமைக்கும்(?) அவங்க பொறுமைக்கும்(!) இடையில ரெண்டு வருஷம் எப்டி போச்சுன்னு தெரீலிங்க. இப்போ ரெண்டு வாரம் லீவ் எனக்கு. உண்மைய சொல்லணும்னா வெள்ளி வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர மனசே வரல. வேலைக்குப் போம்போது எப்படா லீவ் கிடைக்கும்னு இருக்கும். லீவுன்னு வந்ததும் லைட்டா ஒரு ஃபீலிங் எட்டிப் பாக்கத்தான் செய்யுது. இனி கொஞ்ச நாள் இங்க வர முடியாதேன்னு. என் டெஸ்க்ல வச்சிருக்கிற ஆர்கிட்டுக்கெல்லாம் (ஆர்குட் இல்லப்பா) டாட்டா  சொல்லி  பத்ரமா பாத்துக்க சொல்லி ஒரு கலீக்  கிட்ட  பொறுப்பு  குடுத்திருக்கேன்.


ஒருத்தங்க லீவ்ல போராங்கன்னாவே என்னமோ நாமளே லீவ்ல போறா மாதிரி இருக்கும். இன்னும் எத்தனை நாள்ல உனக்கு லீவுன்னு தினமும் நாட்களை எண்ணிக் கிட்டே இருப்போம். இனிமே கிறிஸ்துமஸ் முடிஞ்சுதான் ஆபீஸ் போவேங்கிரதால கலீக்ஸ்  அன்ப கொஞ்சம் அதிகமாவே  காமிச்சாங்க. பல் வலின்னு போனவளுக்கு டென்டிஸ்ட் கண்ட மேனிக்கு ஊசிய குத்தி ட்ரீட்மென்ட் செஞ்சதில கன்னம் வீங்கி செம  வலி. அதையும் மறந்து ஆ கோ ல அதே கன்னத்தில இறுக்கி முத்தம்  குடுத்துட்டு  சாரி சொல்லி அப்பாவியா அவங்க முழிச்சப்போ வலி மறந்து சிரிக்க  ஆரம்பிச்சிட்டேன். (பட்ட கால்ல மட்டும் படாதோ? பழமொழிய மாத்த  சொல்லணும்)  அதோட  சிலபல பறக்கும் முத்தங்கள், அணைப்புகள்னு எனக்கு மட்டும் இல்லாம கண்ணாளன் + பசங்களுக்கும் குடுக்க சொல்லி கிடைச்சுது. அப்டியே கிரிஸ்த்மஸ் பரிசு  பரிமாற்றங்களும். 


முதல்ல ட்ரெய்னியா ஆபீசுக்குள்ள ரைட் லெக்க வச்சப்போ  நல்லாவே  கககாவி மாதிரி இருந்திச்சு. எங்க ரூம விட்டு வெளிய வந்தா மறுபடி போக தெரியாம  சுத்தி   சுத்தி வந்திருக்கேன். எல்லா ரூமையும் ஒ..ரே ப்ளான்ல கட்டி வச்சிருக்குதுங்க.   (இப்போ புதுசா வர்றவங்களுக்கு நான் வழிகாட்டி).  அதிலயும் என் நிறப் பிரச்சனை சிலரால இன்னமும் ஒத்துக்க முடியாத ஒண்ணு. (அதுக்குன்னு நாம சிவாஜி ரஜினி சார் மாதிரியா   பண்ண  முடியும்)  பாக்க பிடிக்கலேன்னா அது அவங்க பிரச்சனை இல்லையா. எங்க டிபார்ட்மெண்டுக்கு  இண்டர்நஷனல் டிபார்ட்மெண்டுன்னு செல்லப் பேரு. எங்க ஏழு பேர்ல ரெண்டு பேர்தான் நார்வேஜியன்ஸ். மீதி அஞ்சு பேரும் அஞ்சு நாட்டுக்காரங்க. ஜெர்மன், சிலி, சவுத் ஆபிரிக்கா, செச்சீனியான்னு மத்தவங்களுக்கு  ஒன்லி  இனப்  பிரச்சனைதான். நமக்குதான் இனம் + நிறம்.


குடுக்கிற வேலைய ஒழுங்கா செய்றவ, சிரிச்ச முகத்தோட(?) வளைய வர்றவ, பழக இனிமையானவ, அன்பானவ, கலர் கலரா டிரஸ் பண்ணி  அதுக்கு பொருத்தமா  ஆக்சசரீஸ் போடரவ, என்னதான் நாட்டுக்கேத்தா மாதிரி இருந்தாலும் தான் வளர்ந்த விதம் மறக்காம தன்னோட எல்லை எதுன்னு தெரிஞ்சவ இப்டி  நிறையா சொல்லி இருக்காங்க கலீக்ஸ் என்னப் பத்தி (ம்க்கும். படிக்கிறவங்க இங்க வரமாட்டாங்கங்கிற தைரியம்.. நடத்து நடத்து)  எல்லாத்துக்கும் மேல என் கோபத்த இதுவரை யாரும் பாக்கலையாம் (நல்லவேளை.மனசுக்குள்ள கெ.வா லாம் சொல்லி திட்டுறது  யாருக்கும் கேக்கல சாமியோவ்) இதாவது தேவலைங்க சமயத்துல ஏன் உன் கன்னம் திடீர்னு சிவந்திருக்குன்னு கேட்டு ஒரு வழி பண்ணிடுவாங்க. அதுக்கு காரணம் என் கண்ணன்னு எப்பூடி சொல்வேன்.. அவ்வ்வ்..


சில பதிவுகள,  கமன்ட்ஸ  படிச்சிட்டு டங்குன்னு தலைய டெஸ்க்ல மோதும்போதும் (என் பதிவ எழுதுறதோட சரி, நான் அத மறுபடி படிக்கிறதில்ல. சோ.. அவசரப்பட்டு கமன்ட ரெடியாக வேண்டாம்) லைட்டா ஃபீலாகி உக்காந்திருக்கும்போதும், கெக்கேபிக்கேன்னு சிரிக்கும்போதும் கொஞ்சம் இல்ல நல்லாவே மிரண்டு போயிடறாங்க. அப்புறம் சாரி சொல்லி விஷயத்த விளக்க வேண்டியதாயிடுது. நெட்ல மேயிறத்துக்கு சம்பளம் குடுக்கல பரவால்ல. ஆனா இப்டி ட்ரான்ஸ்லேஷன்லாம் செஞ்சு விளக்கம் குடுக்கிறதுக்கு எதுனா தரணும் இல்ல? அடுத்த PDD ல பேசணும்.. மறக்காம.


மொத்தத்தில ரொம்ப நல்ல ஆபீஸ், திருப்தியான வேலை, அன்பான கலீக்ஸ். இவளுக்கு போயி இங்க வேலையான்னு நம்ம மக்களிடையே பொறாமை வர்ற அளவுக்கு ஆகிப்போச்சு. குறிப்பா கண்ணாளன். 09:00 - 14:00 தவிர மீதி நேரம் என் இஷ்டத்துக்கு போய் வர்றது, நினைச்சதும் மட்டம் போடுறது, ஜன்னலோரம்  உக்காந்து  தெருவ  வேடிக்கை  பாக்குறது (ஏங்க ஜன்னலாண்டை என் டெஸ்க்  இருந்தா  அப்பப்போ வெளிய என்ன நடக்குதுன்னு பாத்து பொது  அறிவ  வளர்க்கிறதும்   தப்புங்களா?)  மூணும் அவர கடுப்பேத்துற விஷயங்கள்ல அடங்கும்.


கடவுள் அருளால எந்த பிரச்சனையும் எனக்கோ, என் ஆபீசுக்கோ வரலேன்னா தொடர்ந்து அங்கனவே குப்பைய கொட்டலாம்னு முடிவு பண்ணிட்டேங்க. ஏன் ஆணி புடுங்கலாம்னு சொல்லலைன்னு பாக்கறீங்களா? அதாம்பா ஆபீசும், கலீக்சும்  என் குடும்பம் மாதிரி ஆயிடிச்சுன்னு ஜிம்பலக்கடியா சொல்றேன்.
வரட்டுங்களா.. 

06 December, 2009

அம்மாவாய் எனக்கு ஒரு தோழி..

சிட்டுக்குருவியாய்  சிறகடித்துப் பறந்தாள்  பதினைந்து வயது வரை ஒரு சின்னப் பெண். முதல் காதல் கை கோர்க்க ஊரைச் சுற்றியது அந்த அழகு தேவதை பதினெட்டு வயது வரை.  பெற்றவரால் நடாத்தப்பட்ட கட்டாயக் கல்யாணம். கைவிரலில் மோதிரத்தோடு  கால்களிலும்  சங்கிலியை  மாட்டினான் கணவன். அடுத்தடுத்து இரண்டு பிள்ளைச் செல்வங்கள், ஆணொன்றும்   பெண்ணொன்றுமாய். சிறிதளவேனும் வாழ்வில் பிடிப்பு வந்ததே அதன்பின்தான். ஆனாலும் சித்ரவதைகள் குறையவில்லை. பொறுத்துக் கொள்ள முடியாத எல்லையை அடைந்த பின்னர் தோழியின் உதவியோடு நாட்டை விட்டே வெளியேறினாள்.

அயராத உழைப்பு + தன்னம்பிக்கையால் பிள்ளைகளுக்கு நல்ல நிலையைக் கொடுத்து தனக்கும் ஒரு துணையை தேடிக் கொண்டாள். துணைக்கு வந்தவன் தொல்லை செய்ய ஆரம்பித்தான் சுயநலமாய். அவ்வப்போது பத்திரங்கள் நீட்டப்பட்டன, முடிவு செய் நானா பிள்ளைகளா என்ற கேள்வியுடன். ஒவொரு தடவையும் ஒப்பமிட்டு முகத்தில் எறிவாள். மிரட்டமட்டுமே தெரிந்தவன் மறுபடி துணையாவான்.

மகனுக்கு வந்தது தொல்லை மருமகள் வடிவில். அவர்கள் சண்டை நாட்களில் பேரன் பாட்டி வீட்டில் தூங்க  ஆரம்பித்தான். பிள்ளை என்ற நூலால் கட்டப்பட்ட வாழ்க்கை தொடர்கிறது அவர்களிடையே. அறுந்து போகாமல் முடிச்சை இறுக்கிப் போடும் முழு முயற்சியில் இவள்.

இவளைப் போலவே தைரியசாலி மகள் என்ற இவளின் பெருமிதத்துக்கு இடியாய் அழுதபடி வந்தாள் மகள். எத்தனை சித்ரவதைகள் அனுபவித்திருக்கின்றது அந்த இருபத்து மூன்று வயதுப் பெண். எட்டு வயது முதல் ஒன்றாகப் படித்தவர்கள் வாழ்விலும் இணைந்து  கொண்டதற்கு அந்த மனிதமிருகம் கொடுத்த பரிசுகள் அத்தனையும்.  பிள்ளைகளுக்காக கொலையும் செய்ய தயங்கமாட்டாள் இவளென்று புரியாத அந்த மிருகம் கொலை மிரட்டல் விடுகிறது இவளுக்கே.

*************************************************
இது என்னோட ஒரு தோழியோட நிலை. அவங்க பேச்சுல எப்பவும் இருக்கிறது பிள்ளைங்க, பேரப் பிள்ளைங்கதான். அந்த மிருகம் தவிர அத்தனை பேரையும் நான் சந்திச்சிருக்கேன். ஒரு தடவை ஆபீஸ் பக்கத்தில இருக்கிற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல கண்ணில, கன்னத்தில வீக்கத்தோட அவங்க மகளை பாத்தேன். நான் என்னன்னு கேக்காமலே பல்வலின்னு சொன்னா. அவ்ளோ குட்டியா இருப்பாங்க. எப்டி மனசு வந்துது அந்த ராட்சஷனுக்கு. மனசால,உடலால எவ்ளவு சித்ரவதைகள அனுபவிச்சிருக்கா. இத்தனை வருஷமா ஒரு வார்த்தை கூட ஏன் சொல்லலைன்னு கேட்டத்துக்கு நீங்க அனுபவிக்கிறது போதும்மா. நானும் குடுக்க வேண்டாம்னு பாத்தேன். ஆனா இதுக்கு மேல என்னால முடியலம்மான்னு இவங்கள கட்டிக்கிட்டு அவ அழுதப்போ எப்டி வலிச்சிருக்கும் இவங்களுக்கு.. இந்த அம்மாவோட கண்ணீருக்கு கண்டிப்பா அந்த மிருகம் பதில் சொல்லி ஆகணும்ங்க.

எங்க ஆபீஸ்லையே ரொம்பத் தைரியமான பொண்ணுன்னு பேரெடுத்தவங்க பலசமயம் என்னால இதுக்கு மேல முடியலன்னு சொல்லி அழும்போது.. தனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குதுன்னு கேக்கும்போது.. அவ மனசுக்கு ஆறுதலா பேசி,  அழுகையும் சில சமயம் மனச இலகுவாக்கும்கிரதால கொஞ்சமா அழ விட்டு, அவ கண்ணீரைத் துடைச்சு, சிரிக்க வச்சுட்டுதான் அவ ரூம விட்டு மறுபடி என் இடத்துக்கு போவேன். இப்போ ஃப்ரீயா ஃபீல் பண்றேம்பா.. ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லி இறுக்கி  அணைச்சுக்குவா. கண்ணீரால கலைஞ்சு போன மேக்கப்ப சரி செஞ்சு, லிப்ஸ்டிக்கோட சிரிப்பையும் சேத்து பூசிக்கிட்டு அடுத்த நொடி அவ வேலை பாக்க ஆரம்பிக்கும்போது இவதானா கொஞ்சம் முன்னாடி அழுதான்னு மலைப்பா இருக்கும்.

அவ கிட்ட அவளோட மனத்திடம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சதே. என் உறவுகள நினைச்சு நான் தவிச்சப்போல்லாம் எனக்கு அவ்ளோ ஆறுதலும், நம்பிக்கையும் குடுத்தா. அவ பேரன்கள் ரெண்டு பேரும் என்கூட ஒட்டிக்கிட்டதில ரொம்ப சந்தோஷப்படுவா. மூணு வருஷம் முன்னாடி அவங்கள விட்டுப் போன அம்மா செஞ்சு குடுத்த ஷால் ஒண்ண அவங்க ஞாபகமா எனக்கு பிரசன்ட் பண்ணி இருக்கா.

ஒண்ணு மட்டும் சொல்றேன் சுசி, என் பொண்ண அவன் எதுனா பண்ணினான்னா அவன கொல்லவும் தயங்கமாட்டேன்னு சொல்லும்போது அவ கண்கள்ல கவலையையும் மீறி அப்டி ஒரு திடம் தெரியும்.  அப்டீல்லாம் ஆகாது, அவன் அந்தளவுக்கு போகமாட்டான்னு சொல்லி பேச்ச மாத்துவேன். அவன் இவங்களையும் நேர்லயும், ஃபோன்லையும் நிறைய தடவை மிரட்டி இருக்கான். என்னதான் போலீஸ், சட்டம்னு எல்லாம் பக்காவா இருந்தாலும் உயிருக்கு ஒண்ணு ஆனத்துக்கு அப்புறம் எதுவும் தேவை இல்லையே. அந்த அன்பான அம்மா நிம்மதியா இருக்கணும்னா பசங்க வாழ்க்கை சரி ஆகணும். பொண்ணோட மனசு சரியாகி எல்லா துன்பங்கள்ள இருந்தும் வெளிய வரணும். அதுக்காக எப்பவும் கடவுள வேண்டிக்குவேன்.

ஒருத்தங்களோட சந்தோஷத்தில இல்ல, துக்கத்தில பங்கெடுத்திக்கிறது தான் ரொம்ப பெரிய விஷயம்னு என் உயிர் நட்புகிட்ட  சொல்வேங்க. குட்டியா ஒரு அணைப்பு, கையில், தோளில்   சின்னதாய் ஓர் அழுத்தம், முதுகில் ஒரு வருடல், ஆறுதலாய் ரெண்டு வார்த்தை, புரிதலாய் ஒரு பார்வை.. இப்டி எத்தனையோ விதத்தில அடுத்தவங்க துக்கத்தில நாமளும்  பங்கெடுத்துக்கலாம்ங்க. செஞ்சு பாருங்க, அனுபவிச்சுப் பாருங்க.. நான் சொன்னது சரிதான்னு நீங்களும் சொல்வீங்க..
வரட்டுங்களா..

16 August, 2009

கார்க்கி - மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

யாவரும் நலமா மக்களே....


நானும் நலம்தான்.


இன்னைக்கு தோரணை படம் பார்த்தேன். என்னது வில்லு ரிலீஸ் ஆய்டுச்சாமான்னு கேட்றாதீங்க. இங்க தியேட்டர்ல தோரணை போடலை. நான் நெட்லயும் பாக்கறதில்ல. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படங்களை சன் போடும்போதோ இல்ல block buster movie ன்னு கலைஞரும் ஐங்கரன் இன்டர்நேஷனலும் கூட்டு சேர்ந்து போடும்போதோதான் பார்ப்பேன். லண்டன் போனப்போ நிறைய்ய படங்கள் வாங்கிட்டு வந்திருக்கேன். தோரணை பார்த்திட்டு இருக்கும்போது சட்னு ஒரு விஷயம் தெரிஞ்சுது. இந்த ஸ்டைல நான் எங்கேயோ பார்த்திருக்கேனேன்னு. அத நேரடியாவே சம்பந்தப் பட்டவர் கிட்ட கேட்ரலாம்னுட்டு பொட்டி முன்னாடி உக்காந்துட்டேன். இதனால மானாட மயிலாடவுக்கு வரலைன்னு கலா மாஸ்டர் வேற கோச்சுக்கப் போறாங்க.


இவர பார்த்திருக்கீங்களா? பார்த்தவங்க படிக்கறத தொடருங்க. பார்க்காதவங்க ஷகீலா (அ) டக்கீலான்னு கூகிளாண்டவர கேட்டீங்கன்னா இவர் பக்கம் கைய காமிப்பாருன்னு இவரே சொல்லி இருக்கார்.


அப்டியும் சிக்கலேன்னா சாளரம்







இப்போ இவங்கள்ல ஸ்ரேயாவ விட்டுட்டு விஷால மட்டும் பாருங்க.


பாத்தீங்களா! அதே டிரெஸ்ஸிங் ஸ்டைல்.. அதே தொப்...பி..... இத லக்கலக்க ரஜனி ஸ்டைல்ல சொல்லிக்குங்க. அதே கண்ணாடி..







இப்போ ஷ்ரேயாவ ஜூஸ் குடிக்க அனுப்பிட்டு விஷால் பின்னாடி ஒரு மரத்த வச்சா...........???





இப்பிடி இருக்கும்.....!!!!!





அதே கண்ணாடி... அதே ஹேர் ஸ்டைல்..









இப்டி வழக்க விரோதமா உக்காந்து கிட்டார் ப்ளே பண்ண கார்க்கிகிட்டதான் விஷால் கத்துக் கிட்டாராம். கார்க்கி வித் கிட்டார் ஸ்டில் கிடைக்கல.




இப்போ மறுக்கா மேலே போயி பதிவோட தலைப்ப படீங்க..


அதே தான்....

இவ்ளவுக்கும் இவர் ஒரு விஜய் ரசிகராமாமாம்.


என்னதான் இவர் நாங்க யாரு தெரியுமில்ல!!! ன்னு சொன்னாலும், தெரீல....

இவர் யார் ரசிகர்னு....



பின் குறிப்பு (அ) முன் குறிப்பு :-


நான் மேற் சொன்ன நபர்களுக்கும் இந்த படத்தில் சிரிப்பவருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறேன்.
இதை மனதில் கொண்டு பின்னூட்டத்தை போடவும்.




பி.கு :- கார்க்கியின் ஸ்டில்ஸ் அவர் பதிவிலேயே சுடப்பட்டவை.
பி.கு. க்கு பி.கு :- இந்த பாடலில் கார்க்கியை அல்ல விஷாலை பார்க்கலாம், கூட ஸ்ரேயாவும் பலரும்.

இப்போ மறுமறுக்கா அல்லாரும் மேலே போய் தலைப்பை படீங்க... சுசி ஜூட்டேய்....

19 June, 2009

என் புதிய பதிவுலக நண்பர்களுக்கு....


சென்ஷி, லோகு, சொல்லரசன், பித்தன்!

மீண்டும் நன்றி. லோகு சொன்னாப்ல வேற தளங்களிலேயும் போடனும்னு ரொம்...ப ஆசை. ஆனா இன்னும் கொஞ்சூண்டு திருத்தம் செஞ்சதும் போடலாம்னு இருக்கேன். இன்னும் நெறைய எழுதணும்னு எனக்கும் விருப்பம்தாங்க. ஆனா சேம் பிளட். நேரமே கெடக்கிரதில்ல.


இங்க இருந்து பொட்டி தட்ற நேரம்தான் ஐடியாவா கொட்டுது. வீட்டுக்கு போயி என் வாலுங்க கூட மல்லு கட்டி தூங்க வச்சு, சமயல முடிச்சு, ரெண்டு பேர் கூட (குறைஞ்சது) போன்ல (வம்பு) பேசி, கொஞ்சூண்டு டிவி பாத்து (சத்யமா சீரியல் பக்கம் போறதில்ல. நம்ம கதைய வச்சே நாலு மெகா சீரியல் ஓட்டலாம். இதில அது வேறயா)

எத்....தன வேல.... லொட்டு லொசுக்குன்னு வீட்ல வேலைக்கா பஞ்சம் (இந்த வீட்ல மனுஷன் இருப்பானா. சும்மா உக்காந்தா நீ என் தலமேலயும் எதையாவது வச்சிட்டு போய்ட்டே இருப்பேன்னு சொன்னது உன் புருஷனா? விடு சுசி உனக்குத்தான் தாலி கழுத்துல ஏறும் போதே சூடு சொரண எல்லாம் எறங்கிடுச்சே)

இது எல்லா குடும்ப தலைவீசும் சொல்ல்ரதுதாங்க. வீட்டுக்கு வீடு வாசல் படி இருந்து தானே ஆகணும். என் வீடு மட்டும் விதி விலக்கா என்ன. அதிலையும் ஒரோருத்தர் ப்ளாக பாக்கும் போது தப்பா உள்ள வந்திட்டோமான்னு தோனுது. என்ன்னா எழுத்து, என்ன்னா அமைப்பு.... இதில நம்மளது எல்லாம் எந்த மூலைக்கு. இருந்தாலும் பரவால்ல. அவங்களது மாளிகைன்னா நம்மது குடிசை. ஹோட்டல் + கையேந்திபவன். சரவணா ஸ்டோர்ஸ் + பொட்டிகடை. இப்டி ஏதேதோ சொல்லி என்ன நானே தேத்திக் கிட்டு எழுத வேண்டியதா போச்சு. அட்லீஸ்ட் ஆட்டைய போட்டாவது எழுதிருவோம்ல!


அதோட நான் பதிவர் கணக்கை ஆபீஸ்ல இருந்து உருவாக்கீட்டேனா அது பெரிய தலைவலியா போச்சு. ஆஃபிஸ் மெஷின்ல தமிழ் வரல. அப்பறம் நான் ரொம்ப நோண்டினதில அது மூணு மொழிகளேம் போட்டு குழப்பிடுச்சு. நான் வேற டெக்னிகல் விஷயத்தில அதி மேதாவியா சமயங்கள்ல என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிக்கிறேன். சின்னதா ஒரு உதாரணம். வீட்ல வாலுங்களுக்கு என் மொபைல் + கம்பியூட்டர தொடறதுக்கு அனுமதி கிடையாதுங்க. ஏதாவதுன்னா சமத்தா அப்பாவோடாத விளையாடுங்க கண்ணுங்களான்னு அனுப்பிடுவேன். இப்போ அவங்களுக்குன்னு ரெண்டும் வாங்கி குடுத்ததும் என்ன தெனாவட்டு! உங்க கிட்ட இந்த ப்ரோக்ராம் இருக்கா, இத எப்டி யூஸ் பண்றதுன்னு தெரியுமான்னு ரொம்பவே கடுப்பேத்துறாங்க. நான் பூனைக்கும் ஒரு காலம் வரும்னு சொன்னா என் யானை சொல்லுது அதா நீ பூனைங்கிறது தெரியுமே காலம் வருதான்னு மட்டும் பாருங்குது. எனக்கு எதிரிங்க வெளிய இல்லீங்க.

உங்க ஆதரவு தான் எனக்கு என்னைக்குமே இருக்குமே (இருக்குமா?) நெஜமா சொல்றேங்க இது எனக்கு ரொம்ப புதுமையான + சுகமான அனுபவமா இருக்கு. முகம் தெரிந்தவர்களிடம் முதுகிலும், மனதிலும் வாங்கும் குத்துகளுக்கும் அடிகளுக்கும் இந்த முகம் அறியா நண்பர்கள் வடிகாலா இருக்கப் போறாங்கன்னு என் மனசு சொல்லுது.

எனக்கு எதுவும் தெரியாதுங்கரத சுருக்கமா சொல்லாம கொஞ்சம் ஓவரா பில்ட் அப் குடுத்திட்டேன்னு நல்லாவே தெரியிது. (அதுக்காக விஜயகாந்த் ரேஞ்சுக்கு கண்ணு சிவக்க நீங்க படிக்க கூடாதுங்க. அப்புறம் எங்கேருந்து நலமா இருக்கிறது. பிரஷர் எகிறிடாது?)

எல்லாரும் நல்ல மனசோடயும் நல்ல சுகத்தோடையும் இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன், எப்பவும் போல. மீண்டும் நலம் அறிய வருவேன்....