Pages

  • RSS

01 August, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 2

ஊர் சுத்தல் ஒண்ணு.
DSC00134 அல்லாரும் முதல்ல சாக்லேட் எடுத்துக்கோங்க. சுவிஸ் சாக்லேட் சூப்பரா இருக்கும். Mövenpick - The art of Swiss ice cream.. ம்ம்.. அள்ளும் சுவை. கொண்டு வர கரைஞ்சு போய்டும்னு நானே சாப்டேன். உங்களுக்கும் சேர்த்து..

 

விடுமுறைன்னு வந்துட்டா வேலைக்குப் போறவங்களுக்கும் சரி, போகாதவங்களுக்கும் சரி கொண்டாட்டத்துக்குக் குறைவிருக்காது. என்னவோ இவளவு நாளா அதுக்காகத்தான் உயிர் வாழ்ந்த மாதிரி அவ்வளவு ஒரு நிம்மதி. மனசுலயும் உடல்லயும் உற்சாகம் காட்டாறு மாதிரி கட்டில்லாம ஓடும். நான் வழக்கமா என்னோட விடுமுறைய பசங்க சம்மர் ஹாலிடே கூட மூணு வாரம், அவங்க பர்த்டே சமயம் ஒரு வாரம், விண்டர்ல ஒரு வாரம்னு பங்கு போட்டுக்கொள்வேன். அது என்ன மாயமோ தெரியல.. இன்னைக்குத்தான் லீவ்ல வந்தா மாதிரி இருக்கும் அதுக்குள்ள முடிஞ்சு போய்டும். அதுவும் விடுமுறை தீர்ந்து வேலைக்கு மறுபடி போகும் அந்த முதல் நாள்.. அவ்வ்வ்வ்..

அதிகமான எங்க கோடை விடுமுறை கார்ப் பயணமாவே இருக்கும். கண்ணாளனுக்கு வண்டி ஓட்டுறதுல இருக்கிற அலாதிப் பிரியம் முதல் காரணம்னா போற இடத்தில நாங்க நினைச்ச நேரம் நினைச்ச இடம் போக அது வசதியா இருக்கிறது ரெண்டாவது காரணம். பசங்களுக்கும் இது பிடிச்சுப் போனது கூடுதல் நன்மை. மாமியார் வந்து நிக்கிற சமயம் அவங்களும் விரும்பி வருவாங்க.

அம்மு ஆறு மாச குழந்தையா இருந்தப்போ முதல் முதல் டென்மார்க் போனோம். அவ்ளோ ஜாலியா கும்மாளம் போட்டுட்டு வந்தாங்க. அதையே சதுவும் பின்பற்றினார். அதிக நேரம் தூக்கத்தில கழியிற அவங்க பயணத்தில இந்த வருஷம் மாற்றங்கள். நிறைய நேரம் விழிச்சிருந்து எங்க கூட பேசிட்டு, அவங்களுக்குள்ள சண்டை போட்டுட்டுன்னு இதுவும் புது அனுபவமா இருந்துது.

இங்க இருந்து கார்ல யுரோப் டூர் போறதுன்னா ஒண்ணு கப்பல்ல போகலாம். இல்லை இங்க இருந்தே ட்ரைவ் பண்ணிட்டு போகலாம். நாங்க சில சமயம் கப்பல்ல டென்மார்க் போய் அங்க இருந்து ட்ரைவ் பண்ணுவோம். கப்பல்ல ஒரு முழு நாள் பயணம். நீர்ப் பரப்பும், ஆகாயமும் ஆழ்கடல்ல போகும்போது அவ்வளவு அழகா இருக்கும்.  கொஞ்சம்   பயமாவும். காத்துல கப்பல் ஆட ஆரம்பிச்சுதுன்னா, எங்க கேபினும் செக்கண்ட் ஃப்ளோருக்கு மேல இருந்துச்சுன்னா.. அவ்ளோதான். உவ்வே.. குடிக்காமலே குடிகாரன் பர்ஃபாமன்ஸ் குடுக்கணும் நான். இந்த சுவத்துல இருந்து அந்த சுவத்துக்கு ஒரே ஜம்பு. டாய்லெட்ல சர்க்கஸ்காரி மாதிரிதான் உக்காருவேன். இறுக்க்க்க்கி கண்ண மூடிட்டு, தூக்கமும் இல்லாம பெட்ல படுத்துட்டு இருப்பேன். மீதி முக்கால் குடும்பமும் அவ்ளோ ஆட்டம் போடும். ஊர சுத்திப் பாக்குறா மாதிரி கப்பல சுத்தி சுத்தி வருவாங்க. மாமியார் சமத்தா தூங்கிடுவாங்க. லேட்டா மீதிப் பேரும். என்னால முடியிறதில்லை.

இந்த தடவை ட்ரைவ் பண்றதுன்னு முடிவாச்சு. இங்க இருந்து தலைநகரம் ஆஸ்லோ வழியா சுவீடன் போகணும். சுவீடன் வழியா டென்மார்க். ஆஸ்லோ 550 கி.மீ. தூரத்தில இருந்தாலும் மலைப்பாதை, கூடவே குறைந்த வேகம்னு அதிக நேரம் பிடிக்கும். போக்குவரத்து நெரிசல்ல சிக்காம, வெயில் வரதுக்கு முன்னம் மலைப்பாதையை கடந்துட அநேகமா காலை நாலு மணிக்கு முன்னம் கிளம்பிடுவோம். வழியில கண்டெய்னர் லாரிகள் குறைவா இருக்கும் என்பதும் உபரி நன்மை. 

குடிக்க, கடிக்க, கேக்க, நொறுக்க, படிக்கன்னு தேவையான எல்லாம் எடுத்து வச்சுட்டு நைட் தூங்க போவோம். அதி காலையில எழுந்து ஃப்ளாஸ்க்ல டீ எடுத்துட்டு, சாண்ட்விச் பாக் பண்ணிட்டு எல்லாரும் வண்டில ஏறினதும் கண்ணாளன் கடைசியா வீட்ட ஒரு ரவுண்ட் வந்து ஜன்னல், கதவு எல்லாம் பூட்டி இருக்குதா, குறிப்பா குப்பை எல்லாம் பின்ல கட்டிப் போட்டாச்சான்னு செக் பண்ணுவார். குப்பைய மட்டும் மறந்தோம்னு வைய்யுங்க, திரும்பி வரும்போது வீடு அவ்ளோதான்.

தூரப் பயணம் போகும்போதெல்லாம் கார்ல ஏறின உடனவே முதல்ல சாமி பாட்டு கேக்குறது என் விருப்பம். ஒருவித நம்பிக்கைன்னும் சொல்லலாம். ஒரு தடவை அலாரம் வைக்காம தூங்கி ரொம்ப லேட்டா கிளம்பியாச்சு. நண்பர் ஒருவர் கால் பண்ணார். இப்போ பாதி தூரம் வந்தாச்சுன்னு சொன்னார் என்னவர். அவர் உடனவே சொன்னார் ”எங்க.. அதான் சுப்ரபாதம் கேக்குதே. இப்போ தான் கிளம்பி இருக்கிங்க” ன்னு.
IMG_0144

இந்த தடவை கிளம்ப நாலரை மணி ஆச்சு. மகாநதி ஷோபனா கூட சேர்ந்து விநாயகர் அகவல் சொன்னேன். (அவங்க பாடினாங்கடி.. நீ சொன்னேன்னு சொல்லு) மெதுவான தூறலோட குளிர்ச்சியா ஆரம்பிச்சுது பயணம். அப்புறம் முக்கியமான விஷயம். படங்கள் விபரங்கள் எல்லாம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். பொறுத்துக்குங்க. போனதே ரெண்டு வார விடுமுறை. இங்க இருந்து அங்க போய் நிலாவுக்கு ஒரு ஹாயும் அட்ஷகிக்கு ஒரு உம்மாவும் குடுத்துட்டு வந்தா மாதிரி இருக்கு. எந்த இடத்தையும் சுத்திப் பார்க்க முடியல. அடுத்த விஷயம் இயற்கைய ரசிக்கவெல்லாம் எங்க வண்டி நிக்காது. நிக்கிற இடத்துல இருக்கிறத ரசிக்க வேண்டியதுதான். தவிர அந்தந்த வேகத்துக்கேற்ப ரசிக்கிறதும், படம் எடுத்துக்கிறதும் உங்க சாமர்த்தியம்.


IMG_0146 சுவிஸ்ல வெயில் ஜாஸ்தியா இருக்கும்னு சது காப்ஸ்லாம் எடுத்து வச்சிருக்கார்.

 

 



IMG_0145 நாலு முப்பதுக்கு கிளம்பினோம். இப்போ நாலு அம்பத்தேழாச்சா.. பாவம் சாண்ட்விச் பேக் கெஞ்சிட்டு இருந்துது சாப்டுன்னு.. அதான்.


 


மொத்தமா 1200 கி.மீ தூரத்தில டென்மார்க் சித்தி வீடு. டெஸ்டினேஷன் டைம் சாயந்தரம் ஆறு மணின்னு GPS ஆண்ட்டி சொன்னாங்க. எப்டியும் அவங்க சொல்றதுக்கு முன்னாடி போய் சேரணும் என்ற கொள்கையோட என்னவர். உயிர் போகாம போய் சேரணும் என்ற வேண்டுதலோட நான். அம்மா சாண்ட்விச்களை கபளீகரம் செய்வது தெரியாம கலைந்த தூக்கத்த தொடரும் அம்மு, சது.  போக்குவரத்தே இல்லாத சாலையில சத்தமே செய்யாம சமத்தா ஓடுது எங்க வண்டி..

எவ்ளோ நேரத்தில, எத்தனை  சாண்ட்விச் முழுங்கினேன், எத்தனை கப் டீ சாப்டேன் போன்ற இதர விஷயங்கள் அடுத்த பாகத்தில். முடிவ்வ்வே பண்ணிட்டேன்.. இனி தொடர்ந்து தொடர் பதிவுதான். அது வரைக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்களோடு..

வர்ட்டா..

29 July, 2010

நீ ரொம்ப கேள்வி கேக்கறே..

அல்லாரும் நல்லா இருக்கிங்களா மக்கள்ஸ்.. உங்க கிட்ட இப்டி கேட்டு எத்த்த்த்த்தனை நாளாச்சு.

விடுமுறை இன்னமும் ஒரு நாள் தான் பாக்கி இருக்கிறதால கொஞ்சம் மனசு சரியா இல்லை.. அதனாலதான் என் பயணம் பத்தி இன்னமும் எழுதல. கண்டிப்பா எழுதுவேன். அதுவும் தொடர் கதையா.  என் கிட்ட பத்து கேள்விகள அனுப்பி வச்சிருக்காங்க நம்ம சின்ன அம்மிணி ஒரு தொடர் பதிவு வடிவில. நான் தான் எப்போதும் கேள்வி கேப்பேன்னு ஒருத்தர் சொல்வார். இதுவும் கேள்விதானே. அதான் அவர் சொல்றத அப்டியே தலைப்பா வச்சேன். உங்கள சொல்லல அம்மிணி. இத தொடர நானும் சிலர கோத்து விடறேன். அம்மிணி சொன்னா மாதிரி நேரமும் விருப்பமும் இருந்தா தொடருங்க, தொடர வைங்க.

@சந்தியா.

@ப்ரியா.

@புன்னகை.

@சீமான்கனி

@கயல்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சுசி.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சுசின்னு பேர் வைக்க பெருசா எந்த காரணமும் இல்லைங்க. அது என்னோட செல்ல பேரு மாதிரி. சின்ன வயசுல அப்டி கூப்பிடுவாங்க. அதனால் வச்சேன். அது உண்மையா என் பேருதான். ஆனா எனக்கு இன்னொரு பேரும் இருக்கு.. பாட்ஷா.. பாட்ஷா மாதிரி

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

காலடி எங்க வச்சேன்.. சாளரம் வழியா என் ஃப்ரெண்டி புடிச்சு தள்ளி விட்டுட்டா.. தொபுக்கடீர்னு வந்து விழுந்துட்டேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒண்ணே ஒண்ணுதாங்க செய்தேன். போஸ்ட்டு போஸ்ட்ட்ட்ட்டா எழுதிப் போட்டேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு. ஏனாஆஆ.. என்னப் பத்தி மட்டும் எழுதணும்கிறதுதாங்க என் எண்ணமே. விளைவு.. நீங்க நலமா இருக்கிங்க தானே??

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என் மனத் திருப்திக்காக எழுதறேன். அது மூலமா உங்க அன்பை சம்பாதிக்க முடிஞ்சது நிறைவு.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

கண்ணே கண்ணு.. இப்போதைக்கு.   இன்னமும் ஒரு எட்டுப் பத்துக்கு சொந்தக்காரி ஆகும் எண்ணம் இருக்கு.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

உண்டு. எழுத தைரியம் இல்லை. அல்லாரும் என்னய பாருங்க.. பாத்திங்களா.. இப்போ சைகைல காட்னேனே.. அந்த பதிவர் தான்.  ஏன்னும் சொல்லணுமா.. இப்போ மறுபடி பாருங்க என்ன.. இதுக்குத்தான். யார் கிட்டவும் சொல்லிடாதிங்கப்பா.. நான் பாவம்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அவ்வ்வ்.. பாராட்டலை. ஒருத்தங்க திட்டினாங்க. என் பதிவுக்குன்னா கூட பரவால்ல. அவங்க பதிவுக்கு கமண்ட் போட்டத்துக்கு. இங்க பாராட்டைப் பத்தி மட்டும் கேட்டிருக்கிறதால திட்டு பத்தி இதுக்கு மேல சொல்ல முடியாது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஆவ்வ்வ்வ்வ்.. இருங்க.. இன்னும் கொஞ்சம் அழுது மனச  தேத்திக்கிட்டு   சொல்றேன்.. முன்னாடி நான் குடுத்த டவல் வச்சிருக்கிங்க இல்லை.. என்னதும் எடுத்துட்டு வரேன்.. கிளம்பிடாதிங்க..

25 July, 2010

கிளிக்ஸ்..

ஊர்ல இருந்து அண்ணா ஃபோட்டோஸ் அனுப்பி இருந்தார். உங்க கூடவும் பகிர்ந்துக்கலாமேன்னு நினைச்சதோட விளைவு இந்த பதிவு. சொந்த வீட்ல போய் இருக்கிற சந்தோஷம்.. சுகம்.. ஒவொரு தடவை இடம் பெயர்ந்து மறுபடி எங்க வீட்டுக்கு போகும்போதும் அனுபவிச்சிருக்கோம். ஓடியோடி ஏய் இது பாத்தியா.. அத பாத்தியா.. இந்த மரம் இங்க புதுசா வந்திருக்கேன்னு அவ்ளோ ஆரவாரம். ஒவொரு தடவை வீட்ட விட்டு கிளம்பும்போதும் திரும்பி வரும்போதும் அப்பா கண் கலங்க தவறுவதில்லை. அப்போ அது சிரிப்பா இருக்கும் எங்களுக்கு. இப்போ நாங்களே உழைக்க ஆரம்பிச்சதும் தான் அருமை புரியுது. சாரிப்பா.. ரஜியும் இப்போ ஒரு அப்பாவா, உங்க மனநிலைல தான் இருக்கான். தன் உழைப்பில பாத்து பாத்து கட்டிய வீட்டுல ஒரு மாசம்தான் இருந்தாங்க. இப்போ மறுபடி போய் இருக்கிறதுன்னா.. ”சொர்க்கம்டி”ன்னு சொன்னான். கரண்ட் மட்டும் இல்லையாம். அதுவும் சீக்கிரம் வந்துடும்னான்.

 Raji return to home 002 Raji return to home 011 Raji return to home 112

இது ரஜி வீட்டோட மிச்சம் மீதிகள். கொய்யா,தேசில்லாம் ஆளில்லாத போதும் நிறைய்ய காய்ச்சுப் போய் இருந்துதாம். 

 

 

அண்ணா வீட்டுக்கும் ரஜி வீட்டுக்கும் இடையில கிபிர் விமான குண்டு விழுந்த பெரிய்ய்ய குழி இருந்திச்சாம். நல்ல வேளை வீடு தப்பிச்சு. வீட்டுக்கு பின் பக்க வேலியோரம் இருந்த பதுங்கு குழிக்குள்ள 20 வெடிக்காத ஷெல்குண்டுகள் எடுத்தாங்களாம். என்னடா இதுன்னு நான் பயப்பிட சிரிக்கிறான். ”அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுடி. என்ன லேண்ட் மைண்ட்ஸ் தான் இன்னமும் சரியா கிளியர் பண்ணல. மத்தபடி ஒரு பயமும் இல்லை”ங்கிறான். எனக்கு வயித்தில நெருப்பு.

Raji return to home 026 Raji return to home 079 Raji return to home 102

எங்க ஊர் கண்ணகை அம்மன் கோயில் திருவிழா. சேதமானாலும் வீழாத கோபுரம். தேரிழுக்கிற படத்துல வலது கரையில ஆரஞ்ச் கலர் வஸ்திரத்துல ஆஜானுபாகுவா தெரியிற முதுகுதான் நம்ம சின்னண்ணா ரஜி.

 

DSC03882 DSC03884 DSC03912

இது அக்காச்சி தாய்நாடு போன உடன எடுத்தது. எல்லா சாமானும் எடுத்தாச்சான்னு கடைசி லுக் அண்ட் செக்  விடும் பொறுப்பான அம்மா பரமேஸ்வரி. அங்க போயி சாப்பிடலைன்னாலும் பரவால்லை.  நிறைய்ய குடிக்கணும்னு சித்தி (ஹிஹிஹி.. நான் தான்) சொன்னத சமத்தா கேட்டு கைல கோக் பாட்டில் தூக்கிய  அக்காச்சியோட மூத்த வாரிசு சஜோபன். தாய் மண்ணில் கால் பதித்த அத்தானோட பாதங்கள்.

DSC03978 DSC03979 DSC04012

சித்தி மாதிரியே பெட் பிரியர் அக்காச்சியோட ரெண்டாவது வாரிசு கருண். ”என்ன இவருக்கு பிரியம் கொஞ்சம் ஜாஸ்திடி. பூனைய வால்ல பிடிச்சு சுழட்டி ஒரு எறி”ன்னு அண்ணா சொன்னார். இப்போ சமத்தா விளையாடறாராம். நேத்தும் ஸ்கைப்ல காமிச்சார். ஷிஃபர்னு பேர் வச்சிருக்காராம். அத்தையோட லக்கேஜ்ல கனடா போக ட்ரையல் பார்க்கும் அண்ணாவோட கடைசி வால் கிரண். அண்ணா வளர்க்கிற கோழி.. குஞ்சுகள் உடன்.

அவ்வ்வ்வ்வ்வ்..

DSC03907

ரெம்ம்ம்ப டச்சிங்கான படம். ரஜி, கருண், அக்காச்சியோட கடைசி வால் சேரன். மாமன் மடியில உரிமையா இருந்து பட்டாம்பூச்சி பாக்கறாங்க. பொக்கிஷம் இந்தப் படம். எவ்ளோ நேரம் பாத்துட்டு இருந்தேன்னு தெரில.. வித் ஆவ்வ்வ்வ்..

வர்ட்டா..

21 July, 2010

நானும் ரவுடிதான்!!

ரொம்ப நாளாவே எனக்கொரு ஆசைங்க. பதிவுலகத்துக்குள்ள குதிச்சு ஒரு வருஷத்துக்கு மேலாகியும் இன்னமும் ஒரு சமையல் குறிப்பு கூட  எழுதலையேன்னு. தெரிஞ்சாத்தானேன்னு மனசாட்சிய முந்தி நானே சொல்லிட்டேன். அதிலும் இந்த ரெசிப்பி என்னவர் ஒரு அமெரிக்கன்  பொண்ணு குடுத்ததுன்னு கொண்டு வந்தார். அவருக்கு ரொம்ப பிடிக்கும். அட.. இந்த கேக்க சொன்னேங்க. இன்னும் பேர் சொல்லலை இல்லை. இது பேரு banana cake. நீங்க உங்க இஷ்டத்துக்கு வேற பெயர் வேணா வச்சுக்கலாம். இப்போ கம்மு.. சமையல ஸ்டார்ட் பண்ணலாம்.
DSCN0214
நல்ல்ல்லா படத்த பாத்துக்கோங்க. முட்டை, பால் எடுத்து வைக்க மறந்துட்டேன். oven தூக்கிட்டு வந்து இங்க வைக்க முடியல. அதுக்கு மேல இதை எல்லாம் அடுக்க முடியல. இப்போதான் மத்யான சமையல் முடிச்சதால hot plate சூடா இருக்கு. இம்புட்டுதான். கரெக்டா எல்லாம் எடுத்து வச்சுக்குங்க. அளவு அடுத்த பத்தி. முக்கியமா சாப்ட ஆள் வேணுங்க. உங்க வீட்டுக்கு குடும்பத்தோட ஆஜராக நான் தயார். டிக்கட் செலவு உங்களது. மருத்துவ செலவு என்னது.
ஆயில்  125g
சர்க்கரை  250g
முட்டை 2
வாழைப்பழம் (நன்கு கனிந்தது) 3 – 4
மா 500g
பேகிங் சோடா 1ts
உப்பு 1/2 ts
பேகிங் பவுடர் 1 ts
வெனிலா பவுடர் 1 ts
பால் 3 tabs
அப்டியே நான் சொல்லி இருக்கிற அளவில, ஒண்ணொண்ணா சேர்த்து நல்லா பீட் பண்ணிக்கோங்க. இதுல பால் அவங்க சொன்னத விட நான் ஒரு நாள் தப்பா 300ml சேர்த்துட்டேன். அது கூட நல்லாத்தான் இருந்துது. அப்டியே ஒரு ப்ரெட் ஃபோர்ம்ல விட்டுக்கோங்க.
DSCN0215
இப்போ oven 160c ல செட் செஞ்சுக்கோங்க. ஹீட் வந்ததும் அவனோட lowest rack ல வச்சு ஒண்ணரை மணி நேரம் பேக் செய்யணும். உங்களுக்கு விருப்பம்னா  90 நிமிஷமும் பேக் செய்யலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
DSCN0216
என்ன சிரிப்பு?? இதுக்குத்தான் சொன்னேன் பெயர் உங்க இஷ்டம்னு. இது ப்ரெட் ஃபோர்ம்ல செய்றதுனாலையோ என்னமோ பாக்குறத்துக்கு ப்ரெட் மாதிரியே இருக்கும்ங்க.
DSCN0220  DSCN0219
சமையல் எப்டி இருந்தாலும் ப்ரசண்டேஷன் நல்லா இருக்கணுமாம். இதிலயும் ரெண்டு ஆப்ஷன் குடுக்கறேன்.
ஒண்ணு - பாதி வெட்டின வெங்காயத்தை நடுவுல வச்சிங்கன்னா குட்டி விசிட் வரவங்க அத சாக்கு வச்சு அழுறத்துக்கு ஈஸியா இருக்கும்.
டூவு - அப்டியே நடுவுல ஒரு முழு வெங்காயத்தை வச்சிட்டிங்கன்னா உங்க மாலை நேரத்த முழுசா முழுங்க வந்தவங்க சாவகாசமா தோலுறிச்சு அழ வசதியா இருக்கும்.
இத பாத்து, படிச்சு அழுகை வருது ஆனா அழ முடியலைன்னு நினைக்கிறவங்க தயவு செஞ்சு அழுதிடுங்க. பிளீஸ்.. மனசுக்குள்ள கவலைய அடக்கி வச்சா உடம்புக்கு ஆகாதாம்.
வர்ட்டா..

18 July, 2010

புரி(யப்)படாத வலி.

என் உடலின் வலி..

கோபத்தில் புரிபடவில்லை உனக்கு

ஆசையில் புரிபடவில்லை அவனுக்கு

அவ்வளவு ஏன்

எனக்கே என் வலி புரிபடவில்லை

புரியப்படாத என் மனதின்

வலியை மீறி..

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~                                                                      

sad-girl (1)

 ~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~

முதலில் கோவம்

அடுத்து அருவருப்பு

தொடர்ந்து கேவலம்

என்பதாய் ஒரு பார்வை

கடைசியில் போதுமுன்

நடிப்பென வாய் திறந்து

சொல்லாமல்

நீ காட்டிய சலிப்பு..

தாரளமாய் புரிய வைத்தது

உனக்குள் எனக்கான அன்பை

தாங்க்ஸ்!!

14 July, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன்..

போற அவசரத்தில வீட்ட பூட்டிட்டு உங்களுக்கு டாட்டா சொல்லாம ஓடிட்டேன். மூணு வாரம் என் குடும்பம் ஸ்விட்ஸர்லாந்துக்கு உல்லாசப் பயணம் போய்டிச்சு. இதுவும் ஹிஹிஹி.. ஷெட்யூல் செஞ்சதுதான். போன இடுகைத் தலைப்பு பாத்திங்க இல்லை.. உங்க பதிவுகள் படிக்க முடியாதேங்கிற கவலைல வந்த பெருமூச்சு தான் அது. உங்களோடதாவும் எடுத்துக்கலாம். நிம்மதிப் பெருமூச்சு. புரியுது. இப்டி ஷெட்யூல் செஞ்சு தொல்லை தொடர என்ன அவசியம் இப்போன்னு கேக்கறிங்க. நெக்ஸ்டு பத்திக்கு வாங்க சொல்றேன்.

அதாவது நான் பேசுறத குறைச்சுக்கிட்டேன்னா நீங்க என்ன  மறந்துடுவிங்களோ, அப்புறம் என் இடத்துக்கு வேற யாராவது வந்துடுவாங்களோ அப்படியாகப்பட்ட பயம் எனக்கு இருக்கு.  அப்டின்னு வேண்டியவர் ஒருத்தர் சொன்னாங்க. அதான். இந்த கொடும் முயற்சி. எப்போதும் டச்ல இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நேரம் கிடைச்சா முடிஞ்ச வரைக்கும் பதிவுகள் படிக்கிறேன். சரியா நண்பர்ஸ்..

நாங்க வந்திருக்கிறது என் மச்சினி நிலா வீட்டுக்கு. அவள பத்தி முன்னாடியே சொல்லி இருக்கேன். மறந்தவங்களுக்காக அம்மா பேயி.. அவ ஆள் ரெம்ப டெர்ர்ர்ர்ரர்.. நம்ம வீட்டு மொக்கை சாமியையே சமயத்தில மொக்கிடுவா. சரண்டர் ஆகாம சமாளிச்சுக்கிட்டே சொல்வார் “அடியேய்.. நீ என்னையே மிஞ்சிட்டேடி.. இரு நேர்ல வரேன் உனக்கு”ன்னு. சாம்பிளுக்கு ஒண்ணு டைப்புறேன் படிங்க. ஸ்கைப்ல கண்ணாளனும் நானும் ஜோடியா உக்காந்து அவ கூட பேசிட்டு இருந்தோம். அவ கம்பியூட்டர்ல கோளாறு. கலர் சரியா தெரியாது. திடீர்னு சொன்னா.

“என்ன மச்சாள்.. நீங்க பிங்க் கலர்ல இருக்கிங்க.. அண்ணா யெல்லோவா இருக்கார்??”

“ஏய்.. நான் பூவுடி.. அப்டித்தான் தெரியும்”

“அப்போ அவர் என்ன பழமா??”

இவ அப்பாவோட ரெண்டாவது தங்கை பொண்ணு. அப்பா வழில எங்க அம்மா அவங்கதான். ராணி அத்தை. அவங்க பசங்களுக்கு முன்னம் எங்களுக்கு ஊட்டி விடுற பாசக்காரி. மாமா 48 வயசிலவே எங்கள விட்டு போய்ட்டார். அத்தைதான் எல்லாம் அவங்களுக்கு. இப்போ அண்ணா கேட்டுக்கிட்டார்னு அண்ணா கூட இருக்காங்க. ஸ்கைப்ல பேசும்போது இப்போதும் அதே குட்டிம்மா, அம்மாச்சிதான் நான் அவங்களுக்கு. மூத்தவளுக்கு என் வயசு. ஊர்ல இருக்கா. ரெண்டாவது பையனும் சுவிஸ்ல. மூணாவது இப்போ நாங்க போயிருக்கிற டெர்ர்ரர். நாலாவது பொண்ணு சுவிஸ் வரத்துக்காக வெயிட் பண்ணிட்டு வருங்கால கணவன் கூட ஸ்கைப்பும் பேச்சுமா இருக்கா.  கடைசிப் பையன் கத்தார்ல. எங்க செல்லம். லேட்டஸ்ட்டா தன் காதல் பத்தி சின்ன மச்சிக்கு மட்டும் தான் தெரியும்னு ஃபேஸ்புக்ல ஒரு வெடிகுண்டை வீசி விட்டிருக்கு. எல்லாரும் யார்னு சொல்லுனு என்னைய குடையறாங்க.

அப்பா கிராமம்தான் ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியோட எல்லை. என்னவர் நார்வே வரத்துக்காக இவங்க வீட்ல தங்கி இருந்தார். இவ சைக்கிள்லதான் டபுள்ஸ் ஏத்திக்கிட்டு எல்லை வரைக்கும் கொண்டு வந்து விட்டிட்டு இவ அப்டியே ஸ்கூல் போனா. தன்னோட ராசிதான் இவர் எங்கேயும் சிக்காம நார்வே வந்ததா சொல்வா. அவ கணவன் ரூபன் அண்ணாவ எங்களுக்கு ஊர்லவே தெரியும். ரொம்ப நல்லவர். இவள நல்லபடியா பாத்துக்கிறார்.

இவளோட குட்டிப்பாப்பா.. அட்ஷகி. எட்டு மாசம். சொன்னா நம்புங்க. அவங்க ஸ்கைப்ல என் கிட்ட மட்டும்தான் பேசுவாங்க. சிரிப்பாங்க. தூக்க வாங்கனு கை நீட்னா வருவாங்க. எல்லா கூத்தும் காட்டுவாங்க. மத்தவங்கள லுக்கு ஒன்லி. ரொம்ம்ம்ம்ம்ம்ப ஆசையோட போறேன் அவங்கள பாக்க.

எங்களுக்கு பிடிச்ச மாதிரி கார்லதான் டூர். ஐஸ்லாண்ட்ல எரிமலை வெடிச்சப்போ பசங்க சொன்னாங்க. இந்த தடவை ஃப்ளைட்ல எங்கேயும் போக வேண்டாம். பயமா இருக்கு. கார்ல போகலாம்னு. அவ்ளோ ஜாலியா இருக்கும். கண்ணாளனுக்கு லாங் ட்ரைவ்னா உயிர். 30km – 60km, சில இடங்களில 80km. இது தான் இங்க ஸ்பீட் லிமிட்.  தலைநகர் ஆஸ்லோ தாண்டிட்டோம்னா அப்புறம் மலைப்பாதை கிடையாது. ஸ்பீட் குறைஞ்சது 120km. கேக்கணுமா என்னவர. கார் இப்டித்தாங்க போகும்.

j (2)

மீதி பயண அனுபவங்கள் அடுத்த பதிவுகள்ல. (தொடரும் தொல்லைஸ் நண்பர்ஸ்.. திடப்படுத்திக்கோங்க) ப்ளான் இதுதான்.

போம்போது நார்வே –  டென்மார்க். சித்தி வீடு ரெண்டு நாள்.

டென்மார்க் – சுவிஸ்.

வரும்போது சுவிஸ் – ஹாலண்ட். ஒரு மச்சாள், ரெண்டு மச்சான்ஸ் வீடுகள்ல ரெண்டு நாள்.

ஹாலண்ட் – டென்மார்க். மறுபடி சித்தி வீடு. ஒரு நாள்.

டென்மார்க் – சுவீடன். முக்கியமான ஒருத்தங்கள பாக்கணும்.

சுவீடன் – நார்வே. ஹோம் ஸ்வீட் ஹோம்.

வர்ட்டா..

09 July, 2010

தலை வணங்குகிறேன்..

இந்த வாரம் பூரா நல்லாவே பிஸி. டீம் லீடர் வெகெஷன்ல போனதாலா அவங்க ஆணியும் என் கைல. உங்க கமண்ட்ஸ் எல்லாம் படிச்சேன். ரொம்ப நன்றி. கண்டிப்பா பதில் எழுதுவேன். அது வரைக்கும் பொறுத்தருள்க. பதிவுகள் அது பாட்டுக்கு ஷெட்யூல் பிரகாரம் வெளிவந்துட்டு இருக்கு. சமத்தா. இது தவிர.

விஜியோட இந்த இடுகை படிச்சதில இருந்து மனசு முழுவதும் ஒரு கோபம், ஆற்றாமை, அழுகைனு கலவையா ஒரு உணர்வு. படிச்ச எல்லாரும் இந்த அனுபவத்துக்கு ஆளாகி இருப்பிங்கனு நினைக்கிறேன். பகிர்ந்து கொண்டதுக்கும் பகிர அனுமதிச்சதுக்கும் நன்றி விஜி.

சுனிதா கிருஷ்ணன்.. எனக்கு அவங்கள பத்தி சொல்ல வார்த்தையே வரல. என்ன ஒரு தைரியம்.. கலங்கிய கண்களும் பிரமிப்புமா அவங்க பேச்ச கேட்டு, பாத்துட்டு இருந்தேன். அவங்கள தீர்க்காயுசோட வாழ வை இறைவானு வேண்டிக்க தவறல. அவங்களுக்கு என் மரியாதை நிறைந்த வணக்கங்கள்.

அந்த பிஞ்சு முகங்கள் இன்னமும் மனசில இருக்கு. எப்டி முடியுது அவங்களால?? இந்தப் பிஞ்சுப் பூக்கள கடிச்சுக் குதற?? என்ன வகை இவங்க?? மிருகம்னு கூட சொல்ல முடியல. என்னோட அக்காச்சி நேர்ல பாத்த ஒரு நிகழ்வு. அப்போ அவ டீச்சர் ட்ரெய்னிங்ல இருந்தா. ஒரு ஃப்ரெண்ட் கூட பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது பைக்ல ரெண்டு பேர் வந்தாங்களாம். கூட அஞ்சு ஆறு வயசில ஒரு குட்டிப் பொண்ணு. ஒருத்தர் பைக்ல இருக்க மத்தவர் இறங்கி கடைக்குள்ள போனாராம். பைக்ல மற்றவர் இவங்களுக்கு முதுகு காட்டி இருந்தாராம். பொண்ணு அழுற சத்தம் கேட்டுதாம். அப்போ கடைக்கு போனவர் திரும்பி வர குட்டிப் பொண்ணு இன்னும் சத்தமா அழுதிட்டே  சொன்னாங்களாம் ”அப்பா.. இந்த அங்கிள் கிள்றார் ரொம்ப வலிக்குது”னு. அவங்க கை காட்ன இடம்?? அங்க இருந்த எல்லாரும் பாத்திட்டாங்க இதை. அப்பா அங்கிளுக்கு பளார்னு ரெண்டு அறை விடுறத்துக்கு பதில் இவங்களையும் சுத்தியும்  பாத்துட்டு  “சரிடாம்மா.. இதோ நாம வீட்டுக்கு போயிடலாம்”னு சொல்லி குழந்தை வாய இறுக்கி மூடிட்டே போய்ட்டாங்களாம். இப்போவும் அக்காச்சி சொல்வா. லச்சு கவனம்டி. நீ போகாத இடத்துக்கு தனியா யார் கூடவும் அனுப்பாத. ஆண்கள் சில விஷயங்கள நினைக்க மாட்டாங்க. அந்த கணம் போதும் ஒரு மிருகம் தன் வேலைய காட்டனு.

நான் ப்ளஸ் டூ முடிச்சிட்டு ரிஸல்ட்கு வெயிட் பண்ணிட்டு இருந்த சமயம். அப்போ எங்க ஊர்ல பல் மருத்துவர் இருந்தாங்க. ஆனா மருந்துதான் இல்லை. இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ள போக வேண்டிய கட்டாயம். அப்பா கூட போனேன். உயிர் போனாலும் பரவால்லை மானம் போயிரக்கூடாதுங்கிறதுதான் அப்போ ஒவொரு பெண்ணோடதும் வேண்டுதல். வயது இங்க கணக்கில இல்லை. அப்பா ஃப்ரெண்ட் வீட்ல தங்கி இருந்தோம். அங்க என் கஸின் ஒருத்தி பேயிங் கெஸ்டா இருந்தா. படிக்கிறத்துக்காக. ஒரு நாள் அவ வர வேண்டிய நேரத்துக்கு டியூஷன் முடிஞ்சு வர்லை. வீட்டுக்கார ஆண்ட்டி அவ்ளோ சத்தம் போட்டாங்க. எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு. அப்போ அவங்க சொன்னாங்க. ”பத்து வயசு கூட இருக்காதும்மா ஒரு பொண்ணு. ரெண்டு மூணு பேர் சேர்ந்து குதறியிருக்காங்க. ஹாஸ்பிட்டல்ல அவ அழுத சத்தம் இன்னமும் என் காதில கேக்குது. நிலைமை தெரிஞ்சும் நாமளே எதுக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கி குடுக்கணும் அவங்களுக்கு”ன்னு.

இங்க இன்னமும் மோசம். பையன் பொண்ணு வித்யாசமில்லாம சீரழிக்கிறாங்க. lommemann (pocket man) ன்னு ஒண்ணு ரொம்ப வருஷமா சுத்திட்டு இருந்துது. 10-13 வயசு பையன்கள்தான் அதனோட இலக்கு. அது பேண்ட் பாக்கெட்ல கை விட்டு பாக்க சொல்லுமாம். சாக்லெட், பணம் இருக்கும்னு. பாக்கெட் ஓட்டையா இருக்குமாம். போலீஸ் யார்னு கண்டு பிடிச்சும் கைது செய்ய முடியாம இருந்துது. ஆதாரம்?? Erik Andersen அது பேரு. 58 வயசு. 1999 – 2006 காலப்பகுதியில 66 பையன்கள அப்யூஸ் பண்ணி இருக்கு. அது அசந்த ஒரு நேரத்தில போன வருஷம் எங்க ஊர்ல வச்சுத்தான் பிடிச்சாங்க. பணக்காரன். படிச்சவன். பையன் கூட நல்ல வேலைல இருக்கார்.

lommemann

கைதுக்கு அப்புறமா தான் நிறைய்ய பேர் போலீஸ் கிட்ட கம்ப்ளைண்ட் குடுக்க ஆரம்பிச்சாங்க. இன்னமும் பலர் வெளிய சொல்ல வெக்கத்தில மறைச்சு வச்சிருக்கலாம்னும் சொல்றாங்க. தண்டனை என்ன தெரியுமா?? 6-9 வருஷ சிறை. 2,525,000kr காம்பன்சேஷன்.  500,000kr சட்டச் செலவுகள். இது போதுங்களா அதுக்கு?? கல்லால அடிச்ச்ச்ச்ச்சே கொல்லணும். என் கலீக் சொல்வா. ”இதுங்கள எல்லாம் ஒரு கம்பிக் கூட்டுக்குள்ள பிறந்த மேனியா விட்டுட்டு, வெளிய குட்டிக் கல்லு நிறைய்ய வச்சிருக்கணும். யார் வேணா எப்ப வேணா கல்லெடுத்து அடிக்கலாம். நான் எவ்ளோ செலவுன்னாலும் போயி அடிச்சிட்டு வருவேன். ஆனா உயிர் போகாம சாப்பாடு தண்ணில்லாம் ஒழுங்கா குடுக்கணும். அப்போதான் இது மாதிரி இன்னொண்ணு உருவாகாது”ன்னு.  இப்போ சதுவுக்கு Voss cup football tournament நடந்துதுன்னு சொன்னேனே. இப்டியான இடங்கள்ல இந்த pedophiles சுத்திட்டு இருப்பாங்களாம். அதுகளுக்குன்னு ஒரு பெரிய நெட்வெர்க்கே இருக்குதாம்.

பசங்க தனியா வெளிய போறதுன்னா எப்டி நடந்துக்கணும்னு சொல்லி வச்சிருக்கோம். தனியா போறதும் தவிர்க்க முடியாதே. பர்த்டே பார்ட்டி, ஸ்கூல் ட்ரிப், ஆக்டிவிட்டிஸ்னு போக வேண்டிய கட்டாயம் இருக்கு. எந்த மிருகம் எங்க இருக்குமோ?? அன்பா, மிரட்டலான்னு பல வகைகள்ல அவங்க தாக்குதல் இருக்குதே. ஸ்கூல்லவும் குட் டச், பேட் டச் பத்தி எல்லாம் சொல்லிக் குடுத்திருக்காங்க. அது மட்டுமில்லாம பசங்க கிட்ட நாமளும் ஓப்பனா பேசுறது ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். தனக்கு என்ன ஆகுதுன்னே தெரியாம பாதிக்கப்படுறவங்கதான் அதிகம்னு சொல்வாங்க. இதுக்கு மேல எனக்கு சொல்லத் தெரியலைங்க. ஆத்திரம்.. இல்லை இல்லை.. கொலைவெறிதான் வருது.

07 July, 2010

புதிய(என்ன)வன்

”தலை வலிக்குது.. உம்மா??”

என்பதாய் நானோ

”தலை வலிக்குதா.. உம்மா!!”

என்பதாய் நீயோ

வாழ்ந்திருக்கிறோம்

எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது

வழக்கம்போல கேட்கத்தான் விழைகிறேன்

புதியதான உன் கோவங்களும்

புரியாதது போன்ற பாவனைகளும்

முகம் நிறைத்த கசப்புக்களும்

எட்டித் தள்ளுவதால்

மனதோடு செத்துப் போகிறது கேள்வி

மறக்காமல் தலைவலியை

மடங்காக ஆக்கிவிட்டு.

<<<<<     >>>>>

j 016 (2)

<<<<<     >>>>>

வெறுப்பை உமிழும் விழிகள்

கசப்பாய் பேசும் உதடுகள்

அலட்சியம் நிறைந்த முகம்

யாரையோ பார்ப்பதாய்

ஒரு புது உணர்வு

எனக்குள் எனை மீறித் தோன்றிவிட

தொலைந்து போன என்னவனை

கணமும் தேடுகிறேன்

பழைய நினைவுகளை தட்டிப் புரட்டி

புதிய நினைவுகளை எட்டி விரட்டி.

04 July, 2010

அம்மா.. பேயி..

jailani's awards ஜெய்லானி ரொம்ப நல்லவருன்னு மறுபடி நிரூபிச்சிருக்கார். இந்த தடவையும் அலுக்காம எத்தனை பேருக்கு விருது கொடுத்திருக்கார் தெரியுமா.. இங்க போய்தான் பாருங்களேன். பதிவுலக கர்ணன் நீங்கதான் ஜெய்லானி. (அடுத்த விருதும் கிடைக்க வழி பண்ணிட்டே. என்ன ஒரு நல் மனம்) இந்த தடவை தங்க மகள்/ன் விருது. ரொம்ப நன்றி நண்பரே.

இப்போ நானும் விருத பகிர்ந்துக்கணும்ல. எனக்கு பிடிச்ச நம்பர்ல குடுத்திடறேன். நீங்க உங்க இஷ்டத்துக்கு வாரி வழங்குங்க. இல்லை நைஸா.. ஓக்கேவா.. அப்புறம் எல்லாத்துக்கும் காரணம் கேக்குறவ நான்னு சொன்னார் ஒருத்தர். யார்னு கேக்க மாட்டிங்க இல்லை.. சமத்து நண்பர்ஸ் நீங்க. விருதுக்கான காரணத்தை சொல்லிடறேன் கூடவே.

கயல்விழி – கவிதைகளுக்காக. கூர்வாள்ங்கிற தலைப்புக்கேற்றாற் போல அவளவு கூர்மை வார்த்தைகளில்.

ஆதி – ரமா, சுபாவுக்காக. நீங்க இவ்ளோ அழகா எழுதுறத்துக்கான மனநிலைய கொடுக்கிறதில பெரும் பங்கு அவங்களதுதானே.

மயில் – அன்புக்காக. இப்போதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன் உங்கள. அதான் இப்போதைக்கு இது.

மதுமிதா – கவிதைகளுக்காக. குட்டிக் குட்டியா வார்த்தைகள் கூடவே பெரிய அளவிலான சிந்தனை.

சந்தியா – தமிழுக்காக. தமிழ்ல எழுதணும்ன்ற உங்க ஆர்வத்துக்கு இந்த ஒரு விருது போதாது.

]]]     ]]]     ]]]     ]]]     ]]]

வாரத்துக்கு ஒரு தடவை ப்ரஃபைல் ஃபோட்டோ மாத்துறது என் வழக்கம். கை கால்னு ஃபோட்டா புடிக்காம நல்லா முகம் தெரியுறாப்ல ஒரு ஃபோட்டா போடலாமேன்னு திடீர் ஆசை வந்துச்சு. சரினு செயல் படுத்தினேன். அப்போ பாத்து என் கஸின் ஆன்லைன்ல வந்தா. இது நல்லா இருக்கா பார்டினு அனுப்பி வச்சேன். பட்னு ஆஃப்லைன்ல போய்ட்டா. ரெண்டு நாளா ஆன்லைன்ல வரவே இல்லை அவ. ஃபோன போட்டு என்னாச்சுன்னு கேட்டா லைட்டா ஜூரம். இப்போ பரவால்லன்னா. நீங்க ஒண்ணும் நினைக்காதிங்க மச்சாள். இங்க வெதர் சரி இல்லைனு ஒரு பி.கு வேற. ரைட்டு!!

அவ தங்கை ஊர்ல இருக்கா. அவளும் என் கஸின் தான். இவ ஸ்கைப்ல அவ கூட பேசும்போது இந்த ஃபோட்டோவ அனுப்பினாளாம். அதாவது நான் மேலே சொன்னது. பாத்துட்டு அவ குடுத்த ரீயாக்‌ஷன் தான் தலைப்புக்கு உதவிச்சு. மச்சாளுக்கு உன் ஐடி குடுக்கட்டுமான்னு கேட்டத்துக்கு வேணாம்கா.. நான் கேட்டதா சொல்லுனாளாம். ஆகட்டும் ஆகட்டும். அவ ஸ்விட்சர்லாண்ட் தான் வர இருக்கா. கல்யாணம் முடிவாகி இருக்கு. நேர்ல போய் பாத்திட மாட்டேன். வரட்டும் வரட்டும். என்னமோ தெரில. என் உறவுகள் பக்கத்து நாட்டுக்கு வந்தா கூட பக்கத்து வீட்டுக்கே வந்தா மாதிரி ஒரு சந்தோஷம்.

]]]     ]]]     ]]]     ]]]     ]]]

grill-too-hot-716044

இந்த வருஷ சம்மர்க்குரிய முதல் பார்பகியூ நேத்து தான் செய்ய முடிஞ்சுது. +18 ல வெதரும் அம்சமா இருந்துது. நான் உங்களுக்கு சுலோச்சனா அக்கா விஜய் அண்ணா பத்தி இதுவரை சொல்லை இல்லை?? இப்போ சொல்றேன். அவங்க என்னவர் அண்ணா முன்னாடி இங்க இருந்தப்போ ஃப்ரெண்ட்ஸ் ஆகி, என்னவர் இங்க வந்ததும் அவர் ஃப்ரெண்ட்ஸ் ஆகி. அப்டியே என் ஃப்ரெண்ட்ஸ் ஆனவங்க. என் ஃப்ரெண்ட்ஸ்னு இவர் கை காட்டி விட்டவங்களுக்குள்ள எனக்கு பட்னு பிடிச்சு போனவங்க தங்கா அக்கா. அவங்கள அப்டித்தான் கூப்டுவோம். நானோ என்னவரோ மனம் விட்டு பேசுறது அவங்க கிட்ட மட்டும்தான்.

நினைச்சதும் அவங்க வீட்டுக்கு நாங்களோ இல்லை எங்க வீட்டுக்கு அவங்களோ போவோம், வருவோம். எங்க பசங்க கூட அவங்கள பெரியம்மா, பெரியப்பானு தான் சொல்வாங்க. என்னோட வழிகாட்டி மட்டுமில்லை என் உயிர் நட்பும் அவங்கதான். சமயத்தில என்ன அம்மா மாதிரி கவனிச்சுக்குவாங்க. சண்டை போடுவேன் எப்போ நீங்க எனக்காக பேச போறிங்கனு. அவ்ளோத்துக்கு என்னோட எதிர்வாதம் பண்ணுவாங்க. கடைசில சொல்வாங்க. உங்க கூட ஒத்துப் பேசினா இந்த விஷயத்தில உங்க குழப்பம் போயிருக்காது. அதான் அப்டி பேசினேன்னு. சரியாத்தான் இருக்கும்.

அப்புறம் நேத்து இந்த ட்ரெஸ்ல பின்னாடி இருந்து பாக்கும்போது பதினாறு வயசு பொண்ணு மாதிரி இருக்கிங்கன்னு அவங்க சொன்னத்துக்காக நான் இதையெல்லாம் எழுதினதா நினைச்ச்ச்சுக்காதிங்க நண்பர்ஸ். அவங்க சொன்ன உடனவே என்னவர் “தங்காக்கா.. அத நீங்க சொல்லக் கூடாது. நாங்க சொல்ணும்”னும், விஜய் அண்ணா ”நான் நினைக்கிறேன் உன்னை ஐ செக் அப் கூட்டிப் போகணும்”னும் சொல்லியாச்சு. அப்போ முன்னாடி இருந்து பாத்தா எப்டி இருப்பேன்னு கமண்ட்ல கும்ம நினைச்ச நண்பர்ஸ் தலைப்பை தைரியமா காப்பி பேஸ்ட் பண்ணுங்க. சில உண்மைகள் வலிச்சாலும் நான் தாங்கிப்பேன்.

வர்ட்டா..

01 July, 2010

வித் அவுட் கரண்ட்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

30 June, 2010

கணக்கு.

sad-woman

இருப்பதாய் நீ சொன்னபோது

உண்மையாய் உணர்ந்ததாலோ என்னவோ

இல்லவே இல்லையென்ற போது

அழத் தோன்றவில்லை எனக்கு

நீதான் பொய் பேசுவதில்லையாமே

சொல்லி இருக்கிறாய்.

@ @ @ @ @

                   இனிமேல் என் கதைகள்

                   கேட்கக் காதுகளில்லாமல்

                   அலையப் போவதில்லை

                    இல்லாத ஒன்றைப் பற்றி

                    இனியும் கதை சொல்லமாட்டாள்

                    இந்தக் கதைகாரி.

@ @ @ @ @ @ @ @ @ @

                                         நீ நிம்மதியாய் இருப்பாய்

                                         என்ற ஒன்றுதான்

                                         என் நினைவாக இப்போது

                                         குற்ற உணர்வு

                                         உனக்கு இது வரை இருந்ததாய்

                                         என் மனது அறியவில்லை

                                         கொஞ்சமேனும் இருந்திருந்தால்

                                         இன்றோடு அதுவும்

                                         இல்லை என்பதாய் எடுத்துக்கொள்

                                         மகிழ்வாய் இரு.

@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @

                                                                 சந்தேகம்

                                                                 +

                                                                 பயம்

                                                                 x

                                                                 சுயநலம்

                                                                 /

                                                                 பிடிவாதம்

                                                                 =

                                                                நான்.

                                                               கணக்காளன்

                                                               என்னைப் புரிந்து கொண்ட

                                                               நீயானதால்

                                                               பதில்

                                                               தப்பாய்ப் போக

                                                               வாய்ப்புக்கள் இல்லவே இல்லை!!

@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @

                                                                                      j 019

27 June, 2010

ஆகஸ்ட் 18..

நான் நடந்தால் அதிரடி.. போன புதன் கிழமை. 12:20 க்கு ஆஃபீஸ்ல வேலையில மூழ்கி இருந்த என் மொபைல் பாடிச்சு.

”என்னம்மா..”

“அம்மா நாங்க அரோஷா (பாகிஸ்தான் பொண்ணு, அம்மு க்ளாஸ் மேட்) வீட்டுக்கு போலாமா.. அப்பா கேக்க சொன்னார்”

“அப்பாவும் சரினு சொன்னா போங்க. சேர்ந்து போய்.. சேர்ந்து வரணும். சரியா”

12:50 க்கு மறுபடி நான் நடந்தா..

”அம்மா நாங்க அரோஷா வீட்டுக்கு வந்திட்டோம்”

போய் சேர்ந்ததும் சொல்லணும்கிறது எழுதாத சட்டம்.

14:06 நான் நடந்தா..

“என்னடாம்மா”

”அம்மா நான் சது பேசறேன். அரோஷா இல்லை.. அவங்க என்ன விளாட்டுல சேர்த்துக்க மாட்டாங்களாம். என் கூட சண்டை போடறாங்க”

“ஓ.. அக்காச்சி எங்கப்பா”

“அவங்க அரோஷா கூட இருக்காங்க”

“சரி. அவங்க கிட்ட ஃபோன குடுங்க”

கரபுர கரபுர சத்தம் + பேச்சு சத்தம்.

“அம்மா.. என்னம்மா”

“தம்பி கூட அரோஷா சண்டை போடறாங்களாம். என்னாச்சு”

“இல்லம்மா.. அவங்க சண்டை போடலை.. தம்பிதான் அவ,,”

ஃபோன் பிடுங்கப்பட்டு..

“இல்லம்மா.. அக்காச்சி பொய் சொல்றாங்க. அரோஷாதான் முதல்ல திட்னா”

பின்னணியில அரோஷா + அம்மு குரல் மறுப்பாய்..

நேரம் பார்க்கறேன்.. 14:20. ஆணிய பார்க்கறேன். கொஞ்சம் குவியல்தான்.

“தம்பி. அம்மா ஒண்ணு சொல்றேன். கேக்கரிங்களா. அப்டியே ஃபோன கட் பண்ணிட்டு ரெண்டு பேரும் முதல்ல வீட்டுக்கு போங்க. சரியா”

”சரிம்மா”

14:26. நான் நடந்தா..

“என்னம்மா”

“அம்மா.. தம்பி அரோஷா கூட ஃப்ரெண்ட் ஆயிட்டார். நாங்க இன்னும் கொஞ்ச நேரம் விளையாடவா. ப்ளீஈஈஸ்..”

“ம்ம்”

14:31. நான் நடந்த்..

”என்ன்னம்மா”

“அம்மா நான் தம்பி.. அரோஷா இல்லை.. அவ மறுபடி சண்டை போடறா”

“தம்பி.. முதல்ல ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க சரியா.. அம்மா வேலை முடிக்கணும். ஓக்கே.. கிளம்புங்க.. பை”

14:36. நான் ந..

“வீட்டுக்கு போயாச்சா. சைக்கிள்ள போனிங்களா என்ன”

“இல்லம்மா நாங்க இன்னும் போல. அரோஷா அவ அண்ணா கிட்ட சொல்லி எனக்கு அடிக்க சொல்வாங்களாம்”

அவருக்கு 20 வயசு. Polandல படிச்சிட்டு இருக்கார்.

“தம்பி இன்னும் நீங்க வீட்டுக்கு போலையா.. அம்மால்ல போக சொன்னேன்”

“இல்லம்மா.. நாங்க எப்டி போறது. சாவி கொண்டு வர்லையே”

“எதுக்கு சாவி விட்டு போனிங்க. சரி அப்பா வந்திருப்பார்ல. போங்க”

“அப்பா இன்னும் வர்லையாம். கடைக்கு போயிருக்காராம்”

“சரி பரவால்ல. அம்மா வந்திடுவேன். நீங்க முதல்ல கிளம்”

“நீங்க வர ட்ராஃபிக்ல லேட்டானா??”

“லேட்டானா என்ன. வெளிய ரெண்டு பேரும் வெயிட் பண்ணுங்க. அம்மா இல்லை அப்பா வந்துடுவோம்”

“அதெப்டி.. வெளிய வெயிட் பண்ணா கால் வலிக்கும்”

“அதான் வெளிய பெஞ்ச் இருக்கில்ல அதில உக்காருங்க”

“அதில எவ்ளோ நேரம்னு உக்கார்ரது.. போர்மா”

”இதோ பாருங்க.. முதல்ல.. ரெண்டு பேரும்.. வீட்டுக்கு.. கிளம்புங்க.. புரியுதா..”

“அம்மா.. இல்லம்மா..”

“அம்மாச்சி.. அம்மா வேலை முடிச்சு மூணு மணிக்கு கிளம்பிறதா இருக்கேன். ஓக்கே.. வீட்டுக்கு போங்க.. வேற பேச்சு வேண்டாம். நாங்க வர வரைக்கும் ஒண்ணு பெஞ்ச்ல இருங்க.. இல்லை சைக்கிள் ஓட்டுங்க.. அம்மா சொல்றது கேக்குதில்ல.. ஃபோன வச்சிட்டு அம்மா சொன்னத செய்ங்க”

கட் பண்ணிட்டு, மொபைல டெஸ்க்ல வைக்கிறத்துக்குள்ள கலீக்ஸ் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் ங்ஙேஏஏஏ..

“பரவால்லையே இன்னைக்குத்தான் ஒரு அம்மா ஸ்ட்ரிக்டா நடந்துக்கிட்டத நாங்களும் கேட்டோம்”

“ஹிஹிஹி.. கேட்டிங்களா”

”ஆமாம்.. முதல் நாளே இப்டின்னா ஆகஸ்ட் 18 வரைக்கும் என்ன பண்ண போறே”

அவ்வ்வ்வ்..

போன வெள்ளிக்கிழமை. இரவு 8 மணிக்கு பக்கத்து வீட்டு பொண்ணு அமாலிய வந்தாங்க.

“நான் உங்க வீட்ல இன்னைக்கு தூங்கலாமா”

“ஓ.. தாரளமா”

உடனவே என் வாரிசுங்க..

“எத்தன நாள் அவங்க இங்க தூங்கலாம்??”

நான் கிர்ர்ர்ர்ர்..

“இல்லம்மா. ஆகஸ்ட் 18 வரைக்கும் நிறைய்ய்ய நாள் இருக்கே. சொல்லுங்க.. எத்தன நாள்??”

ஆவ்வ்வ்வ்

~~  ~~  ~~  ~~  ~~

boy-girl-balloons

வேற ஒண்ணும் இல்லைங்க.

ஆத்தா எங்களுக்கு லீவு உட்டாச்சூஊஊஊஊஊ..ங்கிறத பசங்க கோரசா இப்டி ஃபோன்ல சொன்னாங்க.. ”அம்மாஆஆஆ.. எங்களுக்கு லீவு விட்டாச்சு.. வீட்டுக்கு போயிட்டிருக்கோம்” காதுல புகையோட கேட்டுட்டு இருந்தேன். அவங்களுக்கு போன புதன் ஸ்கூல் லீவு விட்டாச்சு.. இன்னும் எத்தனை மாசம், வாரம், நாள், மணி, நிமிஷம், செக்கன் இருக்கு லீவுக்குன்னு எண்ணிப் பாத்து என்னய நொந்து போக வச்சிட்டாங்க. அன்னிக்கு.. அதாங்க புதன் கிழமை.. பதினோரு மணியோட பள்ளி முடிஞ்சுது. எனக்கு ஃபோன் வந்தது 11:10 க்கு. அதுக்கப்புறம் நடந்தது தான் மேல சொன்னது.

என்ன செய்ய. பள்ளி விடுமுறைன்னா பாட்டி வீட்டுக்கோ, உறவுக்காரங்க வீட்டுக்கோ அனுப்பி வைக்க முடியுமா எங்களால. இப்டித்தான் சமாளிக்க வேண்டியதா இருக்கு. இங்க சம்மர்ல ஸ்கேட்டிங், கராத்தே, ஸ்விம்மிங்னு  எந்த அக்டிவிட்டிசும் கிடையாது. இனி ஸ்கூல் தொடங்கும்போதுதான் எல்லாம் தொடங்கும். சம்மர் காம்ப் கூட கிடையாது. நான் வீட்டுக்கு வரதுக்கும் அவர் வேலைக்கு கிளம்புறதுக்குமான இடைவெளியில பக்கத்து வீட்டு பசங்க கூட இருக்காங்க. கொஞ்சம் வளந்துட்டதால பயமில்லாம நிம்மதியா இருக்கு.

மக்கள்ஸ்.. வெயிட் பிளீஸ்.. பசங்களுக்கு லீவு விட்டாச்சுங்கிற ஒற்றை வரிய.. இவ்ளோ பத்தி பத்தியா எழுதின என்ன திட்ட முடியாது நீங்க. எல்லாத்துக்கும் காரணம் சின்ன அம்மிணிதான். இல்லையா அம்மிணி.. நீங்கதானே கமண்ட்ல சொன்னிங்க

//இதையெல்லாம் சேமிச்சு வையுங்க. பெரியவங்க ஆனப்பறம் அவங்களாலயே நம்ப முடியாது.//

அப்டின்னு. இப்டி சேமிச்சா கரெக்டுங்களா?? இல்லைன்னா சொல்லுங்க. இன்னும் ரெண்டு பத்தி சேர்த்துடலாம்.

வர்ட்டா..

24 June, 2010

4-3, 4-0, 4-1, 4-2.

 voss cup போன வீகென்ட் சதுவுக்கு Voss Cup football tournament நடந்துது. Voss ங்கிற இடத்தில. எங்க வீட்ல இருந்து 120 கி.மீ தூரத்தில இருக்கு. 6 – 12 வயசு பசங்களுக்கான போட்டி. இந்த வருஷத்தோட போட்டிகள் ஆரம்பிச்சு இருபது வருஷம் ஆகிடுச்சு. வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாளும் போட்டிகள் நடக்கும். ஒரு அணிக்கு நாலு போட்டிகள். போன வருஷம் நாங்க காட்டேஜ் வாடகைக்கு எடுத்து தங்கினோம். இந்த வருஷம் புக்கிங் லேட்டானதால ஒண்ணு பெருஸ்ஸ்ஸா இல்லை ரொம்ம்ப அழுக்கா தான் கிடைச்சுது. பெருசு வாடகை கைய கடிக்கும். மத்தது சுத்தம் பண்ணவே ஒரு மாசம் ஆகும் போல. இதில எப்டி மூணு நாள் தங்குறதுன்னு தினமும் கார்ல போய் வரலாம்னு முடிவாச்சு. அம்மு இஷ்டம் இல்லைனு சொன்னதால நாங்க வீட்ல. கண்ணாளன் விஜய் அண்ணானு ஒரு ஃப்ரெண்ட் கூட போனார். 

வெள்ளி ரெண்டு மணிக்கு அப்புறம் எல்லாரும் வொஸ்க்கு போவாங்க.  ஞாயிறு மாலை திரும்புவாங்க. அதனால போக்குவரத்து பயங்கர நெரிசலா இருக்கும். இந்த தடவை இவங்க ஏஜ் குரூப்கு சனி ரெண்டு, ஞாயிறு ரெண்டு மேச்கள். அதனால தினமும் போய் வர கூடுதல் வசதி ஆச்சு. காலநிலையும் அளவான வெயிலோட தன் பங்குக்கு உதவி செஞ்சது. இந்த வருஷம் மொத்தம் 675 குழுக்கள், 7000 வீர வீராங்கனைகள், 25 மணி நேரத்துக்குள்ள 1354 போட்டிகள். இருபதாவது வருஷ நிறைவுக்கு ஏற்றாற்போல ரெக்கார்ட் ஆகியிருக்கிறதுல ஒழுங்கமைப்பாளர்களுக்கு திருப்தி.

சதுரோட ஃபுட்பால் க்ளப்ல இவங்க ஏஜ் குரூப்ல ரெண்டு டீம் இருக்காங்க. டீமுக்கொரு வீராங்கனையும் இருக்காங்க. இவங்க டீம்ல இருக்கிறவங்க பேரு மறியா. விளையாடுறது தவிர எல்லாம் பண்ணுவாங்க. பாடல், ஆடல், சண்டை, கீழ உக்காந்து புல்லு பிடுங்குதல், சமயத்தில நடு கிரவுண்ட்ல படுத்துட்டு கூட இருப்பாங்க. இதில கொடுமை என்னன்னா பசங்கள வம்புக்கு இழுத்துட்டு அவங்க பதிலுக்கு திட்னதும் ஊர கூட்டி அழுவாங்க. இப்டியான பல தொல்லைகள் குடுக்குறதால அத்தனை பையன்களும் அவங்க மேல கொலை வெறில இருக்காங்க. நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு விளையாடினாலும் தோல்விதான் அதிகமா கிடைக்கும். மறியாவால.. அப்டிங்கிற ஒரு எண்ணம் தானாவே இவங்களுக்கு இருக்கு. 

பாக்கும்போது சிரிப்பு வந்தாலும் கடைசி நேரத்தில ஒரே ஒரு கோல் வித்யாசத்தில தோத்து போயி வரும்போது பாவமா இருக்கும். இதே எண்ணத்தோட தான் காலேலவும் பை சொல்லிட்டு போனார். எப்டியாவது ஜெயிக்கணும்கிற ஆர்வம் இருந்ததாலையோ என்னமோ நாலு மேச்லவும் ஜெயிச்சிட்டாங்க. ஸ்கோர்தான் தலைப்பா எழுதி இருக்கேன்னு உங்களுக்கு எப்பவோ புரிஞ்சிருக்கும். அதனால அத மறுபடி டைப்பல. இந்த டூர்ணமென்ட்ல டீம் ரேங்கிங், பெஸ்ட் ப்ளேயர்லாம் கிடையாது. எல்லாருக்கும் ஒரு ட்ராஃபி, சர்டிஃபிக்கேட், டீஷர்ட் கிடைக்கும்.

Bilde002 (2) Bilde003

குட்டிப் பசங்களா இருந்தாலும்  விளையாடும் போது அவ்ளோ டென்ஷனா இருக்கும். அவங்க ஜெயிக்கணுமேன்னு. அவங்களும் கிரவுண்ட்ல இறங்கிட்டா தங்களை ஒரு பெக்காமாகவோ ஹென்றியாகவோதான் நினைச்சுப்பாங்க. நாங்க பெத்தவங்க, உற்றவங்க, நண்பர்கள் போடற உற்சாக கூச்சல்ல எதிர் அணிக்காரங்க மிரண்டுடுவாங்க. ஒரு மேச்ல ஒருத்தர் சொன்னார் இங்க என்னமோ லிவர்பூல், யூனைட்டட் மேச் நடக்குதோனு நினைச்சேன்னு. அவளவு  ஈடுபாடு எங்களுக்கும் தானாவே வந்திடும். ஒவொரு குட்டி வீரரும்  தன்னால முடிஞ்ச அளவுக்கு திறமையா விளையாடும்போது  எங்களுக்கு என்னமோ அவங்க உலகக் கோப்பைய ஜெயிச்சு வந்த சந்தோஷம் தான் கிடைக்கும்.

வர்ட்டா..

22 June, 2010

நாங்களும் பூவு குடுப்போம்ல..

Vijay அக்காச்சி கிட்ட இருந்து இந்தப் படம் எனக்கு மெயில்ல வந்திருந்துது. அடடடடா.. என் உபியோட அன்பே அன்பு. எனக்காக இவ்ளோ செய்த அவளுக்கு என்ன செய்யலாம்னு நினைச்சுக்கிட்டே படத்தில இருக்கிறவர கொஞ்சூண்டு சைட் அடிச்சிட்டு.. அப்டியே படத்துக் கீழ எழுதி இருந்தத படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் அதுக்காக அவள என்ன செய்யலாம்னு நினைச்சுக்கிட்டே மறுபடி படத்தில இருக்கிறவர சைட் அடிக்காமலே பாத்தேன். பல்ப்.. இது அந்த பல்ப் கிடையாது. ஐடியா பல்ப். ஜகஜ்ஜோதியா எரிஞ்சுது தலைக்கு மேல. இப்போ கண்டிப்பா நீங்க அவ என்ன எழுதி இருந்தானு படிச்சிருக்க முடியாது. ஏன்னா நாந்தான் படத்துக்குக் கீழ இத டைப்பிட்டேனே. அப்டியே அடுத்த பத்திக்கு வாங்க. அவ என்ன எழுதி இருந்தான்னு சொல்றேன்.. சாரி.. டைப்புறேன்.

”ஏய்ய்ய்ய்.. நேத்து செமையா ஒரு கனவுடி. அதில விஜய்  வந்தாரு..  ஜாலியா பேசினாரு.. பூல்லாம் குடுத்தார்டி.. என்ன பேசினோம்னு நினைவில்ல..  ஹைய்ய்ய்ய்ய்யோஓஓஒ.. எனக்கு அது கனவு மாதிரியே தோணலை. நீதான அவரோட பரம ரசிகை. அப்புறம் எப்டி?? நார்வேக்கு பதில் கனடாக்கு டிக்கட் போட்டுட்டார் போல. இருந்தாலும் உன்னை நினைச்சா பாவமா இல்லை.. ரெம்ம்ம்ப பாவமா இருந்துதா.. அத்தோட உனக்கு இப்போ கோவம், வயித்தெரிச்சல்னு கலவையா ஒரு பீலிங்ஸ் வரும்னு தெரிஞ்சுதா.. அதான் இத ஃபோன்ல சொல்லை.. உன் ஆறுதலுக்காக இந்த படம். கோச்சுக்காத பூக்குட்டி..”

அவளோட இந்த பூக்குட்டி ஐஸுக்கும் ஒரு பின்னணி இருக்கு. பயம் வேண்டாம் மக்கள்ஸ். அத இன்னொரு நாளைக்கு சொல்றேன். இப்போ நான் அவளுக்கு ஒரு படம் அனுப்பி, அதுக்கு மேல இத எழுதினேன்.

“போக்காச்சி.. உன்னால திரையுலகமே ஆஆஆடிப் போயிருக்காம். பின்ன.. இருக்காதா. அவர் பாட்டுக்கு யாருக்கும் சொல்லாம உனக்கு பூக் கொடுத்துட்டு போயிட்டாரு. சொல்லி இருந்தா நாங்களும் வந்திருப்போமேன்னு மத்த ஹீரோஸ் ஆளாளுக்கு சண்டை போடறாங்களாம். இப்போ தினமும் ஒருத்தர் வரதா முடிவாகி சீட்டுப் போட்டுப் பாத்ததில இவர் இன்னைக்கு வருவார்னு உளவுத்துறை தகவல் சொல்லியிருக்கு. உன் முன்னாடி சொதப்பல்ஸ் கூடாதுனு அவர் கண்ணாடி முன்னாடி பூ குடுக்கிறாப்ல ரிஹர்சல் பாத்தத மொபைல்ல சுட்டு எனக்கு அனுப்பி இருக்காங்க. நேத்து மாதிரி முழிக்காம சமத்தா நடந்துக்கோ.  ஓக்கேவா.. ரெடியா இரு மினிம்மா..”

அவளோட பதில் மெயில்ல இருந்த திட்டுக்கள் பப்ளிக்கா நாட் அப்ளிக்கபிள்.. அதனால கடைசி லைன மட்டும் எழுதறேன்.

“.. இருந்தாலும் உனக்கு இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ வயித்தெரிச்சல் ஆகாதுடீஈஈஈஈஈ.. நல்லாரு!!!”

நான் என்ன சொல்ல.. நல்லதுக்கு காலமில்லாத நானிலத்துல பிறந்து தொலைச்சிட்டேன். ஹூம்.. சரி போகட்டும் விடுங்க. அப்டியே நீங்க இங்க போய் அந்த பூக்காரன் யாருன்னு பாத்துக்கோங்க.

# # # # # # # # # #

இளைய தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் பிறந்த நாள் பரிசா எங்க ஊர்ல முதல் முதலா உள்ளூர் ரயில் சேவை ஆரம்பமாகுது. இந்த நாட்டு ராணி சோன்யா வந்து ஆரம்பிச்சு வைக்கப் போறாங்க. நிகழ்வுகள் பகல் பனிரெண்டு மணிக்கு ஆரம்பமாகுது. எல்லாரையும் திருட்டு ஃப்ளைட் ஏறியாவது வந்து கலந்து சிறப்பிக்குமாறு யாவரும் நலம் சார்பாக அன்பாகவும், பண்பாகவும், தாழ்மையாகவும் வேண்டிக் கொள்கிறேன்.

வர்ட்டா..

20 June, 2010

டவல் ஃப்ரீ..

நான் இங்க வந்ததுக்கு அப்புறம் இது வரைக்கும் ரெண்டு தடவை ஊருக்கு போய் வந்திருக்கேன். சொந்த ஊருக்கு போற சுகம் இருக்கே.. அப்பப்பா.. என் அக்காச்சி கனடா போனதுக்கு இது தான் முதல் தடவை ஊருக்கு போயிருக்கா. அவள விட எனக்குத்தான் டென்ஷன். அத எடுத்தியா இத எடுத்தியானு தினமும் கேப்பேன். கடைசி நேரம் அவள பிடிக்கவே முடியலை. அதுவும் கிளம்பின அன்னைக்கு பசங்களுக்கும், அத்தானுக்கும் (நாங்க அக்கா புருஷன அப்டித்தான் சொல்வோம்), அம்மாவுக்கும் ஹாப்பி ஜர்னி சொல்லியாச்சு. அதுக்கும் மேலவும் இருந்தா அடுத்த நாள் நான் வேலைக்கு போக முடியாதுங்கிறதால நைட்டு ஒண்ணரை மணியோட தூங்க போய்ட்டேன். அவ மொபைல வேற வீட்ல வச்சிட்டு போய்ட்டா.

அம்மா போனாங்கன்னும் சொன்னேன்ல. அதை ஏங்க கேக்கறிங்க. போறதா பேச்சு தொடங்கின அன்னையில இருந்து அப்பாவ எப்டிம்மா தனியா விட்டு போறது. பாவம் சரியா சாப்டுவாரோ. தூங்குவாரோ. இன்னும் சில பல ரோக்கள்தான் அவங்க பேச்சா இருந்துது. என்னம்மா நீங்க அப்பா என்ன குழந்தையா. அவர் பாத்துப்பார். நீங்க முதல்ல போய் அண்ணன்கள பாத்துட்டு வாங்கன்னு சொன்னா.. இல்லடாம்மா நான்னா நேரத்துக்கு எல்லாம் செஞ்சு குடுப்பேன். சாப்பாடு சரியா எடுத்து போக மாட்டார் வேலைக்கும்பாங்க. உங்க வளர்ப்பு சரி இல்லைம்மா. ஒரு அவசரத்துக்கு செய்யும்படியா இதெல்லாம் கத்துக் குடுத்திருக்கணும்னு நான் சொல்ல.. அப்டியா அப்போ நீங்க உங்க அவர சரியா வளர்க்கறிங்களானு அவங்க கேக்க சிரிப்போட பேச்சு ட்ராக் மாறும்.

ஏர்போட்ல அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். லக்கேஜும் வெயிட் ஜாஸ்தினு கொஞ்சம் சிக்கலாகி பசங்களோட ஃபீடிங் பாட்லவும் மறந்துட்டு ஃப்ளைட் ஏறிட்டாங்க. அப்பா ஆஃபீஸ்கு காலேல ஃபோன் பண்ணி சொன்னார். வீட்டுக்குப் போனதும் ஸ்கைப்ல கால் பண்ணேன். அப்பா எதுனா கூத்து பண்ணுவார்னு தெரிஞ்சு ரெடியா கைல ஒரு டவல நீட்டிக்கிட்டே சோகமா உக்காந்திருந்தேன். அங்க அவர் தாடையில கை வச்சுட்டு என்ன விட சோக ஃபீலோட உக்காந்திருந்தார். இத எதிர் பார்க்காததால சிரியோ சிரினு சிரிச்சார். அப்டியே அம்மா கேக்க சொன்ன சாப்டிங்களா, தூங்கினிங்களா கேள்விகளையும் கேட்டேன்.

நைட்தான் அண்ணா ஸ்கைப்ல வந்தார். இங்கயும் அங்கயுமா எல்லாரும் ஓடிட்டு இருந்தாங்க. அக்காச்சிய காணோம். குளிக்கறாளாம். ஆளாளுக்கு ஒரு வணக்கத்த வச்சிட்டு மறுபடி ஓட்டம். அண்ணா அப்பப்போ வந்து லைன்லவே இருடி.. யாரு ஃப்ரீ ஆகராங்களோ அவங்க வருவாங்கனு சொல்லிட்டு கேமரா ஆங்கிள் சேஞ்ச் பண்ணிட்டு போனார். எல்லாரையும் பாக்கும்படியா. ரஜி சாப்டுட்டு இருந்தான். அக்காச்சியோட மூத்த வாரிசு ஓடி வந்து ஷித்தி.. நான் பெரிய மாமா வீட்ல இருக்கேன்னு பேசிட்டு இருந்தார். அண்ணன் பசங்க அத்தைனு ஒரு சவுண்டு விட்டுட்டு ஓடிட்டாங்க. அக்காச்சியோட ரெண்டாவது பூனைக் குட்டி பின்னாடி.  அண்ணா  சொன்னார் ஏர்போர்ட்ல இருந்து வெளிய வந்ததுமே ஒரு சொறி நாய பாத்து டோகினு கத்த ஆரம்பிச்சவர் இப்போ கிற்றினு ஓடறார்னு.

அத்தான் சாப்டுட்டு இருந்தார். பக்கத்தில மாமி (அத்தானோட அம்மா). அம்மா வந்து பேசிட்டு சாப்ட போனாங்க. ரஜி சாப்டு வந்து பேசிட்டு இருந்தான். என்னடா பண்ணா அக்காச்சி பாத்ததும்னேன். அதை ஏண்டி கேக்கறே.. ரொம்ப வருஷம் ஆச்சில்லையா பிரிச்சு எடுத்து.. போதும்காச்சி.. எல்லாரும் பாக்கறாங்கனு சொல்ற அளவுக்கு அழுகை. அம்மா பத்தி உனக்கே தெரியும்னு சொல்லி கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டு இருந்தோம். என்னடா.. கிணத்து தண்ணி முடிச்சுத்தான் ஆள் வருவா போலனு நானும் சொல்ல அவளும் கடைசிய தூக்கிட்டு வந்து இருடி இவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு வரேன். யார் கிட்டவும் போக மாட்டேங்கறான்னா. அவர் என்ன ஒரு லுக்கு விட்டதோட சரி. ரஜி கூட பேச்சு தொடர்ந்துது. முடி வெட்னத கிண்டல் பண்ணான். எங்க வெக்கேஷன் பத்தி பேசினான். மேச் பாத்திட்டு இருந்த என்னவர் கிட்டவும் பேசினான்.

இப்போ திரும்பி வந்த அக்காச்சி ஏய் இங்க பார்டினுட்டு உக்காந்துட்டு இருந்த ரஜிய பின்னாடி இருந்து கட்டிக்கிட்டு ஒரு உம்மா குடுத்தா.. எனக்கு என்ன ஆச்சுன்னு தெரிலங்க.. அவ்வ்வ்வ்.. பொலு பொலுனு கண்ணீர்.. ரஜி முகத்தில எதுவோ ஒண்ணு முன்னாடியே தெரிஞ்சது எனக்கு. அவனுக்கும் அந்த நேரம் நானும் அங்க இல்லாதது கஷ்டமா இருந்திருக்கு. என்னடி நீ.. அழாதடி.. இதோ பாரு.. அக்காச்சி பாவம்ல.. எத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கா.. அண்ணா இவள வந்து பாருண்ணா என்ன பண்றானு.. சாப்டுட்டு இருந்த அண்ணாவ கூப்டான். அவர் சொன்னா நான் கேப்பேன்னு தெரியும். ஏய்.. இப்போ பாரேன்னா அக்காச்சி. கண்ணீருக்குள்ளால மங்கலா தெரிஞ்சுது.. அண்ணாக்கு உம்மா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வீட்ல இருந்த அத்தனை பேரும் டெஸ்க் டாப் முன்னாடி. அத்தை எதுக்கு அழறாங்க.. அழறீங்க.. அழாதிங்க.. don’t cry shithi.. எதுக்கும்மா அழறே.. அம்மாச்சி அழாதடானு ஏகப்பட்ட குரல்.

கேக்கக் கேக்க கண்ணீர் பெருகிச்சுதே தவிர குறையிறதா காணோம்.. பாவம் அவங்கள எதுக்கு கஷ்டப்படுத்தணும்னுட்டு கண்ணாளன பேச சொல்லிட்டு ஒரு பாட்டம் தூரப் போயி அழுது முடிச்சேன். வந்தவ அக்காச்சிய கூப்டு மறுபடி ரஜி, அண்ணாக்கு மட்டுமில்லாம அண்ணிங்க, பசங்க, அத்தை(அப்பா தங்கை) எல்லாருக்கும் ஒரு உம்மா என் சார்பா குடுக்க வச்சிட்டுத்தான் அவள சாப்டவே விட்டேன். என் கண்ணீர்ல உப்பு மட்டுமில்ல.. கொஞ்சம் கவலை, கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் கோவம், நிறைய்ய சந்தோஷம் சேர்ந்து ருசிச்சுது.

இது ஆச்சா.. எல்லாம் சரியாதாங்க இருந்திச்சு.. இங்க பாரு உன்னையனு அண்ணாவோட குட்டிப் பொண்ணை அக்காச்சி மடில வச்சிட்டு இருந்தா. அவ ஆறு வயசில நான் இருந்தது போலவே இருக்கா. ரஜியோட குட்டிப்பொண்ணு அப்டியே அக்காச்சிதான். அண்ணாவோட ரெண்டாவது பையன் வந்தார். அத்தை.. எதுக்கு நீங்க அழுதிங்க.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ.. நான் என்னங்க செய்ய.. அது தானா வருது.. அழுகையச் சொன்னேன்.

அப்பா கேக்கறார்.. யாரோ எனக்கு டவல் குடுத்தாங்கம்மா.. அவங்களுக்கு என்ன பெட் ஷீட் கிடைச்சுதான்னு. இப்போ ஆளாளுக்கு ஃபோன், ஸ்கைப், சாட்னு பல வழிகள்லவும் டவல் டவலா அனுப்பிட்டு இருக்காங்க. அதுக்கே ஒரு வீடு வாங்கணும் போல. உங்களுக்கு யாருக்காவது பார்சல் அனுப்பணும்னா உடனவே ஒரு மணியார்டர் அனுப்புங்க. போஸ்டல் செலவு போதும்.. டவல் ஃப்ரீஈஈஈஈஈ..

handkle_spa

வர்ட்டா..

17 June, 2010

சுளீர்..

மனம் முழுவதும் வெறுமை

பொய்த்துப் போய்விட்ட கசப்பு

ஏமாற்றத்தின் அழுத்தம்

என் மீது எழுந்த அருவருப்பு

ஓயாது உள்ளே கதறும் குரல்

அசிங்கம் நான்!!!

தோற்பது புதியதல்ல

ஒரே விதமான தோல்வி

என்றும் எதிர்பார்த்திரா அடி

தட்டி எறிந்து விட்டு

என் வழியே எழுந்து விட்டேன்

முதல் முறை

வழியே இல்லாத படி

அத்தனையும் அடைத்து விட்டேன்

இம் முறை

வேண்டாம்

இன்னொரு சுய தேற்றுதல்

வலிக்கட்டும்

சாவின் பின்னும் உணர வேண்டும்

இந்த உயிர் வலியின்

சாட்டை அடியை..

Ø Ø Ø Ø Ø

                                                     sad woman 

Ø Ø Ø Ø Ø

”அழுது முடிச்சியா?”

தெரிந்து கொண்டே கேட்கிறாய்

என் அன்பைப் போலவே

கண்ணீரும் அளவில்லாதது

இரண்டு நிமிடத்தில் முடிந்திட

அது என்ன உன் அன்பா??

16 June, 2010

சூரியனுக்க்கே லைட்டா..

இந்த வருஷமும் ஸ்ட்ரைக். ஆசிரியர்கள் உட்பட. பசங்க ஜாலியா வீட்ல இருந்து கும்மாளமோ கும்மாளம். வேலைல இதுக்குனு தனியா லீவெல்லாம் கிடையாதுனுட்டாங்க. முன்னல்லாம் என் கூட வேலைக்கு வருவாங்க. இல்லை அப்பா கூட போவாங்க. இல்லைனா என் ஆஃபீஸ் கிட்ட ஒரு ஃப்ரெண்டு இருக்காங்க. அவங்க வீட்ல விட்டுட்டு போம்போது கூட்டிப் போவேன். இந்த தடவை எங்க வீட்டு கிட்ட இருக்கிற ஒரு ஃப்ரெண்டு வீட்ல நின்னாங்க. ரெண்டு ஃப்ரெண்ட்சுக்கும் இவங்க வயசில பசங்க இருக்கிறதால ஒத்துப் போகும்.

streik

எங்க ஊரோட சேர்த்து ஒன்பது நகரங்களில ஸ்ட்ரைக் பண்ணாங்க. ஒரு நாளைக்கு 10,5 மில்லியன் குரோனர் சேமிச்சாங்களாம் அரசாங்கம். அதனாலயே ஒரு தீர்வும் சொல்லாம கொஞ்ச நாளைக்கு இழுத்தடிப்பாங்க. இந்த தடவை கொடுமை என்னனா முனிசிபாலிடி ஆளுங்க ஸ்ட்ரைக் பண்ணதுல குப்பை எடுக்க ஆளில்லாம ஊரே நாற ஆரம்பிச்சிடுச்சு. நல்ல வேளை டெம்ப்ரேச்சர் +15 கு மேல போகாததால நாற்றம் கம்மி. எங்க வீட்ல இந்த ரெண்டு வாரமும் சமையல் பெருசா செய்யலைங்கிறதால  தப்பிச்சோம்.  பெரிய அளவில போகாம கடவுளேனு ஒரு வழிக்கு வந்திட்டாங்க. இப்போ ஏர்போட் செக்யூரிட்டி திங்கள்ள இருந்து குதிக்க போறாங்களாம்.

søppel

டீச்சருங்க பத்தாவது எக்சாம் சமயமும், முனிசிபாலிடி ஆளுங்க வெயில் நேரமும், ஏர்போர்ட்காரங்க இப்போ எல்லாரும் சம்மர் வெகேஷன் போற சமயமும்னு கரெக்டா தான் பிளான போடறாங்கப்பா.

00000            

மானாட மயிலாட பாத்துட்டு இருந்தோம் நானும் சதுவும். ப்ரேக் வந்த காப்ல நான் இதை டைப்பிக் கிட்டிருந்தேன். ”இதில எந்த பொண்ணுப்பா அழகா இருக்காங்க”ன்னேன். கேள்வி முடியிறத்துக்குள்ள பதில் தெறிச்சு விழுந்துது. ”யாருமே இல்லம்மா”னு. ”ரம்பா, நமிதா இவங்க கூடவா அழகா இல்லை??”ன்னேன். “ம்ஹூம்.. யாருமில்ல.. நீங்கதான் அழகு” (அவ்வ்வ்..) கேக்க சந்தோஓஓஓஓஷமா இருந்தாலும் கேட்டேன் “ஏம்பா அப்டி சொல்றிங்க??”னு. “பாருங்க அத்தனை பேருமே நிறைய்ய்ய்ய்ய மேக் அப் போட்டிருக்காங்க.. (என் தோள்ல சாஞ்சுட்டு இருந்தவர் தலை தூக்கி என் முகத்த ஒரு லுக் விட்டார்) நீங்க எதுவுமே போட்டுக்காததால அழகா இருக்கிங்க”ன்னார். (ஆவ்வ்வ்..) குஞ்சுக் காக்காக்கும் அம்மாக் காக்கா பொன் காக்காவா?? சரி சரி.. விடுங்கப்பா.. காசா பணமா.. கொஞ்சூண்டு சந்தோஷப்பட்டுக்கிறேனே.

00000

ஆஃபீஸ் முடிஞ்சு வரும்போது வழியில ஒரு ரெண்டு கிமீ தூரத்துக்கு எதுத்தாப்ல வர வண்டிங்க சிலது ஹெட் லைட் போட்டு காமிச்சதுங்க. யாரோ நமக்கு தெரிஞ்சவங்க வேலை முடிஞ்சு போறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். இருந்தாலும் இத்தனை பேரா ஹாய் சொல்வாங்க.. வீட்ல இருந்து கிட்டத்தட்ட ரெண்டு கிமீ தூரத்தில மறுபடி ஹெட் லைட். ட்ராஃபிக் இல்லாததால ட்ரைவர் சீட்ல யார்னு உத்துப் பாத்தேன். யார்னே தெரில. நாம பிளாக் எழுதுற விஷயம் ஊருக்குள்ள பரவிடுச்சோ?? ஆட்டோகிராஃப் கேட்டு வண்டிய நிறுத்தாத வரைக்கும் சரினு நினைக்க சந்தோஷமா இருந்துது. அதையும் மீறி ஸ்பீட் ப்ரேக்கர்ல வண்டி ஏறி இறங்கும்போது லைட் பவரா தெரிஞ்சிருக்கலாம்னு நினைச்சுட்டு விடமுடியாத படி இது அடுத்தடுத்த நாட்கள்லவும் தொடர்ந்துது. “என்னப்பா இது.. எதுக்கு எனக்கு இவ்ளோ பேர் ஹெட்லைட் போட்டு காட்றாங்க”ன்னு என்னவர் கிட்ட முறைப்பட்டேன். “முதல்ல லைட் போட்டிருக்கியானு பாரு” பஸ் ஸ்டாப்ல வண்டிய ஓரங்கட்டி பாத்துட்டு சொன்னேன். “போட்டிருக்குப்பா.. எரியுது” “அப்புறம் என்ன.. சரி நான் வீட்டுக்கு வந்ததும் பாக்கறேன்” பாத்தார். லைட் எரியுது. ஆனாலும் அடுத்த நாளும் ஹெட் லைட் சிக்னல் தொடர்ந்தது. கடுப்பாயிட்டேன். பதிலுக்கு நானும் ஹெட் லைட் போட்டுட்டே வீடு வந்து சேர்ந்தேன். அதுக்கு கூட ஃபைன். நல்ல வேளை மாட்ல.

அப்புறம் தான் விஷயம் புரிபட்டுதுங்க. இங்க விண்டர்ல இருட்டும், சம்மர்ல மிஸ்ட்டும் அதிகம். அதனால வண்டி ஓடும்போது கட்டாயம் ரன்னிங் லைட்ஸ் போட்டிருக்கணும்ங்கிறது எழுதப்பட்ட சட்டம். இல்லேன்னா ஃபைன் 2000 குரோனர்கள். Low beam, high beam, signal lights ல எதுனா பிழை இருந்தா கூட இந்த ஃபைன் செல்லுபடியாகும்.

mangler ett frontlys இப்டி ஒரு லைட் போட்டு போனாலும் ஃபைன்தான்.

யாராவது லைட் போடாம வண்டில போனா எதிர்ல வரவங்க அவங்க ஹெட் லைட் போட்டு சிக்னல் குடுப்பாங்க. தெரிஞ்சவங்க ஹலோ சொல்றத்துக்கு சமயத்தில ஹெட் லைட் போட்டு காமிக்கிறதும் உண்டு. இந்த வருஷ கொடுங்குளிரால பாட்டரி சிக்கல் குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. மெக்கானிக் ஷெட்ல அப்பாயிண்ட்மெண்ட் அடுத்த வாரம். அதனால பாட்டரி சார்ஜ் இறங்காம இருக்கனு லைட் auto ல செட் பண்ணி வச்சிருந்தார் என்னவர். ஷெட்ல இருந்து வண்டி வந்தப்புறமும் அத மறந்தாச்சு. இப்போ லைட்டா வெளிச்சம் வர ஆரம்பிச்சிடுச்சா.. மத்த இடங்கள்ல பிரச்சனை இல்லை. நான் சொன்ன ரெண்டு இடங்கள்லேம் கார் வரும்போது கரெக்டா சூரியன் எதுக்க வந்திடுவாரா.. சூரியனுக்க்க்க்கே லைட்டான்னுட்டு காரோட லைட்ஸ் ஆட்டோமேடிக்கா ஆஃபாய்டும். அதனாலதான் அவங்க அக்கறையோட சிக்னல் குடுத்தது. இப்போ நீங்க சிக்னல் குடுக்கிறது நல்லாவே புரியுதுங்க. இத்தோட வணக்கம் வச்சுக்கிறேன்.

வர்ட்டா..

13 June, 2010

பரம ஃபுட்பால் ரசிகர்!!

mann ser fotball

- மேச் இருக்கிற நாள்ல குத்துக்கல்லாட்டம் இருக்கிற எனக்கு உடம்புக்கு முடியாம போய்டும். அதனால அவர் லீவ் போட்டுட்டு என்னையும் பசங்களையும் கவனிச்சுக்கணும்.

- கோல்னு கத்தற சத்தத்தில தூங்கிட்டு இருக்கிற பசங்க அலறி அடிச்சுட்டு எந்திரிச்சு என் தூக்கம், இல்லை வேலை கெட்டுப் போகும்.

- அப்டியே ஸ்லோமோஷன்ல எந்திரிச்சுட்டு கோல்னா ஒரு குதி குதிக்கிறது, மிஸ்ஸாச்சுன்னா அதையும் விட ஸ்லோவா உக்காந்துக்கிறது.

- சோஃபா நுனிக்கு வரதும் போறதும் பத்தாதுனு முகத்தில எக்கச்சக்க எக்ஸ்பிரஷன்ஸ் வேற.

- கீழே உள்ளது மாதிரியான சில பல காட்சிகள் மாமியார் வந்து நிக்கும்போது நடந்திருக்கு.

காட்சி 1 : யாருக்கோ எதுவோ ஆய்டுச்சாம்மா.. இல்லையே மாமி. ஏன் கேக்கறிங்க? இல்லம்மா.. இவன பாரு,, ஃபோன்ல யார் கிட்டவோ சோகமா பேசிட்டு இருக்கான்.

காட்சி 2 : நீ என் கிட்ட எதுவுமே சொல்றதில்லை. என்ன மாமி சொல்றிங்க? பாரு.. அவனுக்கு எதுவோ பிரச்னை. சண்டை போட்டுட்டு இருக்கான் ஃபோன்ல.

காட்சி 3 : உனக்கு நான் இங்க வந்தது ரொம்ப செலவாயிடுச்சு இல்லைப்பா.. அதோட இப்போ இந்த மருந்து செலவு வேற.. என்னம்மா சொல்றிங்க? நீங்க வரது எனக்கு செலவா என்ன?? பின்ன.. நேத்துலருந்து ஒரு மாதிரியா இருக்கே.. நீ சரியா பேசவும் மாட்றே.. என் பேச்சையும் சரியா கேக்க மாட்றே..

காட்சி 4 : ரூம்ல தூங்கிட்டு இருக்கிற மாமியார் அலறி அடிச்சுக்கிட்டு மாடிக்கு ஓடி வருவாங்க.. என்னம்மா, என்னப்பா ஆச்சு.. வீட்ல திருடன் வந்துட்டானான்னு கேட்டுக்கிட்டே.

- நாம யாரு.. கிங்குல்ல.. ரேஞ்சுக்கு நூற்றுக் கணக்கான ஃபோன்கள்.. சிரிப்பு + சத்தமா. அதுவே தோத்துட்டாலும் நூற்றுக் கணக்கான ஃபோன்கள். சோகம் + சத்தம் கம்மியா. இப்போ என்ன ஆச்சு?? இதில்லன்னா அடுத்த மேச்ல பாத்துக்கலாம்னு. தோக்கணும்.. அப்போதான் இன்னும் நல்லா விளாடுவாங்க. விளையாட்டுன்னா வெற்றி தோல்வி ஜகஜமப்பானு தத்ஸ் வேற.

- மேச் பாத்துட்டு இருக்கும்போது நானோ, பசங்களோ எது கேட்டாலும் மண்டைய ஆட்டிட்டு.. அப்புறமா நான் எப்போ சொன்னேன்னு அப்பாவியாட்டம் முழிக்கிறது.

- இவங்க (சமயத்தில நண்பர் குழாமும் கூட்டு சேர்ந்துக்கும்) கூச்சல் போதாதுனு டிவி சத்தம் அடுத்த ஊருக்கே கேக்கும்.

- ஃபுட்பால் பிடிக்காதவங்க மேச் டைம்ல வீட்டுக்கு வந்தா வேற வழியில்லாம அவங்களும் மேச் பாக்கணும்.

- நாங்க விசிட் போற வீட்டுக்காரங்க ஃபுட்பால் பிடிக்காதவங்கன்னா அன்னிக்கு நான் எவ்ளோ லேட்டா ரெடியானாலும் நோ கமண்ட்ஸ். இல்லைன்னா தெரியாதா இவ ரெடியாக லேட்டாச்சு, பசங்க கொஞ்சம் டயர்டா இருந்தாங்கன்னு  லேட்டா வந்தத்துக்கு சமாளிஃபிக்கேஷன்.

- டிவி ரிமோட் அவர் கண்ட்ரோல்லவே இருக்கும்.

- லைவ் மேச், ஹைலைட்ஸ், டெக்ஸ்ட்னு ஒரே மேச் பத்தி வித விதமா அலுக்காம பாக்குறது.

- மொபைல், லேண்ட்ஃபோன் எல்லாம் சுத்தி வச்சுக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட அப்பப்போ பேச்சு. அப்போ எனக்கு கால் வந்தா ஒண்ணு நான் வீட்ல இருக்கமாட்டேன் இல்லை குளிச்சிட்டு இல்லை தூங்கிட்டு இருப்பேன்னு சொல்லப்படும்.

- யார் பெத்த பிள்ளைங்களோ.. சரியா ஆடலேன்னா அநியாயத்துக்கு திட்டு வாங்குங்க. (கெ வா லாம் அள்ளு கொள்ளையா கேக்கும்)

- என்னமோ நான் அவர் பக்கத்துல உக்காந்த ராசிதான் அவங்க தோத்துட்டாங்கங்கிர மாதிரி என் கிட்ட மூஞ்சிய தூக்கி வச்சுக்கிறது.

- நான் மேச் ரிசல்ட் பத்தி பேசும்போது மட்டும் அட என் பொண்டாட்டி சமத்துங்கிறா மாதிரி பெருமையா ஒரு லுக்கு.

- ஃபுட்பால் மேச் டெலிகாஸ்ட் பண்ற அத்தனை  டிவி சானலும் வச்சிருக்கிறது பத்தாதுனு செண்டிங் க்ளியரா இல்லைன்னா கொடும் காலநிலைலவும் பப்ல போயி பாக்கிறது.

- மேச் பாத்துட்டு சமயத்தில டிவி ஆஃப் பண்ணாம தூங்கிடுறது, பல சமயம் நான் தூங்கிட்டு இருக்கும் போது மேச் போயிட்டு இருக்கும். அவங்க கமண்ட்ரி ஹை பிச்ல போம்போது கனவில நம்மள யாரோ கொலைவெறியோட துரத்திட்டு வர மாதிரியே இருக்கும்.

- வேலைல இருந்து அக்கறையா கால் பண்ணி சொன்னபடி மேச் டீகோடர்ல ரெக்கார்ட் பண்ண போட்டேனா, இல்லை அவர் செட் பண்ணிட்டு போன டைமர் வொர்க் ஆகுதா, இல்லை சானல் ஒழுங்கா வருதான்னு கேக்கிறது.

man-united

[ [ [ [ [ O ] ] ] ] ]

அன்பே.. ஆருயிரே.. என் அத்தான்.. முழுக்க முழுக்க உங்களுக்காகவே இன்றைய பதிவ எழுதி இருக்கேன். Football World Cup ஆரம்பிச்சும் நீ எனக்கு பிடிச்சது பத்தி எழுதலையேடின்னு நாளைக்கு நீங்க கேட்ர கூடாதுப்பா. அதான். சந்தோஷம்தானே.. எதோ நம்ம அறிவுக்கு எட்டின ஃபுட்பால் பத்தின விஷயங்கள எழுதி இருக்கேன்.

ManU-bilde இதானே ஃபுட்பால்.. மேச்னா இத சுத்தி ஆளுங்களும், அவங்கள சுத்தி இன்னும் நிறைய்ய்ய்ய்யா ஆளுங்களும் இருப்பாங்க. அவ்ளோதானே.. எனக்குத்தான் தெரியுமே..

 

எதாவது விட்டு போயிருந்தா சொல்லிடுங்க. இந்த வருஷம் மேல சொன்னதையும் விட புதுசா எதுனா நடந்தா அதையும் சேர்த்து இன்னொரு பதிவு எழுதிடறேன். அப்புறம் பாரதி அக்கா நேத்து ஃபோன் பண்ணி இருந்தாங்க.. நாளைக்கு ஈவ்னிங் ஷாப்பிங் போலாமான்னு.  உங்களுக்கே உங்களுக்கான இந்த ஸ்பெஷல் பதிவுக்கான அன்பு பரிசு எவ்ளோன்னு மட்டும் சொல்லிடுங்க. இவங்களுக்கு ஒரு பை சொல்லிட்டு வரேன் முதல்ல..

வர்ட்டா..

09 June, 2010

கலைந்த கனவு..

இது நடந்தது நான் விண்ணைத் தாண்டிய அன்று. அப்போ ஏன் அப்போவே சொல்லலன்னு நீங்க சொல்றது கேக்குது. அப்டியே நீங்க சொல்லலைன்னாலும் கூட நான் சொல்ல வேண்டியது ஒரு பதிவரா (அப்டின்னா??) என்னோட தலையாய கடமை. அதனால சொல்லிடறேன். (ஸ்ஸ்ஸப்பா.. ஒரு பத்தி ஆச்சா)

படம் முடிஞ்சு அழுது வீங்கின கண்களோட கூட்டத்தை விடுத்து.. தப்பி ஓட வழியில்லாம ஒரு ஃப்ரெண்டுக்காக வெயிட் பண்ண வேண்டிய கட்டாயம், அன்னிக்கு எனக்கு.  தெரிஞ்சவங்க தள்ளி நின்னுட்டு இருந்தாங்க. அவங்களுக்கும் இசை பிடிக்கும்னு தெரியும்.

”எப்டிங்க பாட்லாம் அசத்தல் இல்லை” இது நானு.

“ஆமா.. பைத்தியம் பிடிச்சிடுச்சு.. ஆனா ஒரு பாட்டு படத்தில வர்ல. எனக்கு அது ரொம்ப பிடிக்கும்” இது அவங்க.

“அப்டியா.. ம்ம்ம்.. எல்லாமே வந்துதே.. என்ன பாட்டு அது”

“கனவெல்லாம்னு.. செம பாட்டுங்க”

”கனவெல்லாமா.. அப்டி ஒண்ணு நான் வி தா வ ல கேட்டதே இல்லையே”

“இல்லை.. நீங்க யூ டியூப்ல பாருங்க.. அதையும் சேர்த்திருக்கலாம். வேற எதுனா இழுவை சீன கட் பண்ணிட்டு”

பேச்சு தொடர்ந்து, முடிந்து வீட்டுக்கு வந்து மறந்தே போய்ட்டேன். இன்னைக்கு மன்னிப்பாயா கேட்டு மனசு கனத்துப் போயி இருக்கும்போது இது திடீர் நினைவு வந்து ஆராய்ச்சிய பண்ணேன். யப்பா.. என்ன ஒரு பாட்டு. ஃப்ரம் திலிப் வர்மான்னு இருக்கு. யார்னு தெரில. ஆனா வீடியோல ப்ரசண்ட் பை எஸ். ஜனஹன்னு இருக்கு. ரெண்டு பேருக்குமே நன்றிகள். படத்தோட ஸ்டில்ஸ் ஸ்லைட்ல போது. அதனால தான் அவங்க இது வி தா வனு நினைச்சிருக்காங்க. பாடல் வரிகள், இசை ரெண்டுமே மனசை பிசையுதுங்க. கேட்டுட்டே இருக்கேன். அவ்வ்வ்..

நான் கேட்டத எழுதி இருக்கேன். அதாவது என் காதில வரிகள் இப்டித்தான் கேட்டுது.

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்

நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே

பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே

அந்த நேரம் வரும்பொழுது என்னை வதைக்கின்றதே

--

சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை விழி பார்த்தேன்

நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப் பூவாய் நீ குறுக

எனை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி

நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன்

காதல் ஞாபகங்கள் தினம் தினம்..

அப்படியே கண் மூடி ரசிச்சுட்டு இருக்கும்போது மியூசிக் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இல்லாமலே போயிடுது. இது காதல் தோல்வியில பாடினதா இல்லை காதலிகிட்ட தன் காதலோட ஆழத்தை சொல்ற மாதிரி பாடினதா தெரில. ஆனா வரிகள் மனதில பதிஞ்சு போகுது. பாடகரோட குரல் கொஞ்சமே உன்னி கிருஷ்ணன நினைவுபடுத்தும் விதமா இருக்கு. எனக்கென்னமோ இது காதலி நினைவில காதலன் பாடினதாத்தான் இருக்கும்னு தோணுது. ஏன்னா கேக்கும்போது ஒரு விதமான வலி  தானா உருவாகுது. அப்டியே ஒரு ஜோடி மைண்ட்ல நிழலா வராங்க. அவங்களுக்கு இடையிலான காதல், பிரிவு, வேதனைனு காட்சிகள் ஆட்டோமேட்டிக்கா பிளே ஆகுது.. நின்று போகும் இசையோடு சேர்ந்து காட்சிகளும் கலைஞ்சு போகுது.. எனக்குள்ள.. ஆவ்வ்வ்..

அவங்களுக்கு என்ன ஆயிருக்கும்னு தெரிஞ்சுக்க மீதியும் கேட்டே ஆகணும்னு மனசு அடம்பிடிக்குதுங்க.. எங்கு போவேன்.. யாரைக் கேப்பேன்னெல்லாம் தவிக்கலைங்க நானு. அதான் நீங்க இருக்கிங்களே.. யாராவது இந்த பாட்டு முன்ன பின்ன கேட்டிருந்தா சொல்லுங்க. நீங்க.. உங்க குடும்பம்.. உங்க நட்பு.. உங்க தெரு.. உங்க ஊர்.. ஏன் உங்க நாடே நல்லாருக்கும். நீங்களும் பாருங்க, கேளுங்க மக்கள்ஸ்..

வர்ட்டா..