எல்லோருக்கும் எங்களோட இனிய சித்திரைப் புது வருட வாழ்த்துக்கள்.
சித்திரை வருஷம் தடல் புடலா கொண்டாடினதெல்லாம் ஒரு காலம். நான் அது பத்தி சொன்னாலும் பசங்கள பொறுத்த வரைக்கும் தை முதலாம் தேதிதான் புது வருஷம். இங்க வந்த புதுசுல சில ஃப்ரெண்ட்ஸ் வருவாங்க. இப்போ எல்லாரும் பசங்க, வேலைன்னு பிஸி ஆயிட்டாங்க. நினைவிருந்தா வாழ்த்துவாங்க. அவ்ளோதான். இதுவே ஊர்லன்னா.. அவ்வ்வ்.. இன்னைக்கு வேணாம். வருஷத்தன்னிக்கு சந்தோஷமா இருந்தாத்தான் வருஷம் பூரா சந்தோஷமா இருப்பேன்னு நம்புறவ நான். (அச்சச்சோ.. அப்போ இந்த வருஷம் உனக்கு அம்புட்டுதானா?? ) அதனால எங்க ஊர்ல புது வருஷம் கொண்டாடுறது பத்தி வேற ஒரு நாளைக்கு எழுதறேன். ஆவ்வ்வ்.. (அதுக்கேண்டி நீ அழறே.. அவங்க இல்ல அழணும்)
சரி அத விடுங்க. இந்த ஊர்ல 86/87 ஆண்டுப் பகுதியில வந்த விண்டர் சீஸன் 62 நாட்கள் தொடர்ச்சியா ஸ்னோ இருந்த வருஷம்னு ரெக்கார்ட் பதிவாச்சு. அதாவது ஸ்னோ தொடர்ந்து கொட்டும்னு இல்லை. ஆனா மழைக்குப் பெயர் போன எங்க ஊர்ல மழை பெஞ்சு கரைஞ்சு போகாம இருந்தது. இந்த சீஸன் 2009/2010.. மொத்தம் 98 நாட்கள். புது ரெக்கார்ட். இடையில ரெண்டு நாள் மழைன்னாலும் ஸ்னோ கரையல.
இனிமே போதும். முடியலங்கிர ரேஞ்சுக்கு ஸ்னோல பிறந்து, தவழ்ந்து, அள்ளித் தின்னு வளர்ந்தவங்களே வந்திட்டாங்கன்னா, வந்தேறு குடிகளான நம்ம நிலை?? மழை பெய்து கரைஞ்ச ஸ்னோ கண்ணாடியாட்டம் ஃப்ரீஸ் ஆகாம இருந்ததால வழுக்கி விழுந்து டேமேஜ் ஆன மக்கள் + வாகனங்களோட எண்ணிக்கை இந்த வருஷம் குறைவு. நானும் இந்த வருஷம் சாதனை செஞ்சாச்சு. ஒரு நாள் கூட ஆஃபீசுக்கு கண்ணாளன் கூட்டிப் போல. பஸ்லவும் போல. (சில பல நாட்கள் பரவால்ல நீயே தைரியமா போனு அவர் சொல்லிட்டார்னு பயத்தில நடுங்கி கிட்டே அவர திட்டிக்கிட்டு ட்ரைவ் பண்ணது யார்டி சுசி?? நீயா என்ன??)
அதையும் விடுங்க. தலைப்பு பத்தி சொல்லணும்ல. கண்ணன் மேல கோவம் எனக்கு. ஒரு கட்டத்தில இனிமே என்ன செருப்புன்னு கூப்டுன்னு சொன்னேன். சொன்னது தப்புனு உணர்ந்து சாரி சொன்னேன். சிரிச்சுக்கிட்டே எதுக்கு சாரின்னிச்சு. இல்ல நான் அப்டி சொன்னது உனக்கு வருத்தமா இருந்திருக்கும்னு நினைச்சு சாரி சொன்னேன். ஆனா இப்போ உன் சிரிப்பு பாத்தா அப்டி இல்லைன்னு தோணுது. அப்பப்போ ஒரு சேஞ்சுக்கு சப்பல்னும் கூப்டுன்னேன். நான் சொன்னது சரிதானுங்களே.. செருப்பு.. சப்பல்.. இதில எந்தப் பெயர் எனக்கு நல்லா இருக்கும்??
ரெக்கார்ட் வச்ச ஸ்னோவ ஊரெல்லாம் அமர்க்களமா படம் பிடிச்சாங்க. நானும் எங்க வீட்ல இருந்த ஸ்னோவ படம் பிடிச்சிருக்கேன். ராமலக்ஷ்மி அக்கா மன்னிச்சிடுங்க.. உங்கள மாதிரி முத்து முத்தா கவிதையா எடுக்க தெரியல எனக்கு. வெயில் பட்டு இறுகிப் போன ஸ்னோ அப்டியே டைமன்ல கம்பளம் செஞ்சு விரிச்சு வச்சா மாதிரி ஜொலிச்சுது பாருங்க.. அப்போ உங்கள நினைச்சேன்.
பால்கனில இருந்து பாத்தா முன்னாடி இருந்த எதையும் காணோம்.
பின் பக்கம். இதுக்கு மேல கதவு திறக்க முடியல.
இன்னொரு பால்கனி.. கதவே திறக்க முடியல.
வீட்டோட முன்பக்கம். பசங்க உழுது வச்சிருக்காங்க.
அநாதரவா புதைஞ்சு போய் இருக்கிற பேப்பர் ரீசைக்கிள் பின். நல்ல வேளை குப்பை போடற பின்ன முன்னாடியே எடுத்து கராஜ்ல வச்சிட்டோம்.
வீட்ல இருந்து ரோடுக்கு போம்போது வழுக்கிச்சுன்னா ஒண்ணு எதுக்க இருக்கிற பள்ளத்தில குபீர். இல்ல ரெண்டு பக்கமிருந்தும் வர வண்டி மேல டமார்.
சைட்ல.. மேல இருக்குற வீடுகளுக்கு போறத்துக்கான படிக்கட்டு. நடக்க இல்லை. சறுக்க மட்டும்.
ரோட்ல, நடைபாதையில இருக்கிற ஸ்னோவ அள்ளிக் கொண்டு போய் பள்ளத்தில கொட்டறாங்க.. வசதி இல்லாத இடங்கள்ல லாரில அள்ளிட்டுப் போய் குளங்கள்ல கொட்டினாங்க.
இப்பவே படங்கள் ஜாஸ்தி ஆயிடுச்சு. அதனால இப்போ ஸ்னோ விட்டுப் போயிருக்கிற மிச்ச சொச்சங்கள இன்னொரு பதிவில பார்க்கலாம்.
மீண்டும் புது வருஷ வாழ்த்துக்கள்.
வர்ட்டா..

