Pages

  • RSS

21 August, 2011

எங்க ஊர் கோமாதா.

tine இங்கு வந்ததில் இருந்து நான் பாவிக்கும் dairy products எல்லாமே Tine என்கிற ஒரே ப்ராண்ட்தான். எனக்குத் தெரிந்து அநேகமானவரின் தேர்வும் இதுவே.

skolemelk பள்ளியில் பிள்ளைகளுக்கு பணம் கட்டிவிட்டால் பால் கிடைக்கும். அதனால் லஞ்ச் சரியாக சாப்பிடவில்லையே என்ற கவலை பாதி குறையும்.

 

 

 

003 - Kopi ஒவொரு வருஷமும் Tine யினால் 7 – 14 வயது வரையான பிள்ளைகளுக்காக football school காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடாத்தப்படுகிறது. இம்முறை நாடு முழுவதும் 403 கிளப்கள் பங்கேற்றிருக்கின்றன. இடத்துக்கு இடம் நேரம், நாள் வேறுபடும். பள்ளி விடுமுறையின் கடைசி வாரத்தை சதுரின் கிளப் தேர்வு செய்வது எல்லாருக்கும் வசதியான ஒன்று. கட்டணம் ஒரு பிள்ளைக்கு 900குரோனர். இங்கே பொதுவாகவே சம்மர் கேம்ப்/ஆக்டிவிட்டீஸ் குறைவு. இருக்கும் சிலவற்றுக்கும் கூட அனுப்ப முடிவதில்லை. ஆனால் சது ஃபுட்பால் ட்ரெய்னிங் தொடங்கியதில் இருந்து இதை மட்டும் தவற விடுவதில்லை. இரண்டு தடவை அம்முவும் போனார்.

006 - Kopi வீட்டின் முன்னே இருக்கும் கிரவுண்டில் நடப்பதால் தனியாகப் போய் வருவார். காலை அல்லது மதிய உணவு, ஜூஸ், ball, bag, டீஷர்ட்டோடு கடைசி நாள் பீஸா பார்ட்டியில் முடிப்பார்கள்.

 

 

 

013 - Kopi டெக்னிக்ஸ், ட்ரிக்ஸ் என்பதோடு நிறைய நிறைய ஜாலியையும் இந்த ஒரு வாரத்தில் சேர்த்துக்கொண்டு வருவார். இம்முறை முதல் நாள் சோ மழையும் கடைசி நாள் தூறலும் என ஜாலி இன்னும் கூடி இருந்தது.

 

 

 

Christian Kalvenes இடையில் ஒரு நாள் Brann என்ற ஃபுட்பால் டீம் வீரர் ஒருவர் வந்து அவர்களின் அனுபவங்கள்/ஆட்டோகிராஃப் பகிர்ந்து கொள்வதுதான் ஹைலைட். இம்முறை வந்தவர் Christian Kalvenes.

 

 

அப்படியே Tine யின் விளம்பரங்கள் சில. இவர் கவசகுண்டல கர்ணன்போல காலில் ski யோடு பிறந்தவராம். இந்த விளம்பரம் எனக்குப் பிடிக்க இதுவும் ஒரு காரணம்.

இது மிகவும் பிரபலமானது. அம்மு, சதுவுக்கும் பிடித்தது,

வாழ்க்கையில் சில சின்ன விஷயங்கள் பெரிய்ய்ய்ய மாறுதலை தருமென்று சொல்லும் தத்துவ விளம்பரம் இது.

11 July, 2011

ஆத்தா எனக்கு லீவ் விட்டாச்சேய்ய்..

j 049

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுவிஸ் மண்ணே.. காத்திரு.. இன்று இரவு என் பொற்பாதம் உன்னை மிதிக்கும்..

இன்னமும் மூட்டை கட்டும் வேலை + வீட்டை ஒதுங்கக் கட்டும் வேலையை முடிக்காததால் இப்போதைக்கு எல்லாருக்கும்

டாட்டா.. பை பை.. சீ யூ..

08 July, 2011

யூவு டெல்லு மீயு??

என்னோட ஒரு கஸின். கனடால இருக்கான். தந்தையர் தினத்தன்று அக்காச்சி வீட்டுக்கு போயிருக்கான். கதவு திறந்ததுமே அக்காச்சியின் மூன்று கண்ணன்களும் கோரசாக ’happy father’s day சித்தப்பா’ என்று வாழ்த்தி இருக்கிறார்கள். ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு இருந்தவனுக்கு வந்தது அடுத்த சோதனை. என் இன்னொரு கஸினின் பிள்ளைகள் அப்பாவுக்குப் பரிசு கொடுக்கப் போனவர்கள் அவனுக்கும் மறக்காமல் பரிசு கொடுத்து வாழ்த்தி இருக்கிறார்கள். ஸ்கைப்பில் ‘ஒரு பேச்சிலருக்கு நேர்ந்த கொடுமைய பாத்திங்களா அக்கா’ என்றவனை வருங்கால அப்பாவுக்கான வாழ்த்தாக எடுத்துக் கொள்ளச் சொன்னேன். பயபுள்ள சோகத்தை மறந்து வெக்கப்படுது.

@@@@@

Voss cup. 6-12 வயதுக்கு உட்பட்ட பசங்களுக்கான ஃபுட்பால் திருவிழா. இம்முறை வெள்ளி ஒரு மேச்சும், சனி மூன்றும் சது டீமுக்கு இருந்தது. என்னால் போக முடியவில்லை. தவிர அத்தனை அடுக்குகளும் செய்து வண்டிக்குள் எல்லாரும் ஏறி டாட்டா காட்டியதும் ’அம்மா எனக்கு இன்னொரு ஹக் வேணும்’ என்றபடி சது கதவைத் திறந்தார். இறுக்கிக் கட்டிக்கொண்டு ’மிஸ் யூ அம்மா’ என்றார். துளிர்த்த கண்ணீரை மறைத்தபடி மீண்டும் கை அசைத்தேன். அவர்கள் திரும்பி வரும் வரை மனம் அலைந்து கொண்டே இருந்தது. நடந்த அத்தனையும் அப்டேட் பண்ணிவிட்டு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னார். இம்முறை பச்சை கலர் டீஷர்ட் கிடைத்தது.

 074 058

@@@@@

Prince of Persia - The sands of time படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அதற்கு இரண்டு நாட்கள் முன்னர் பார்த்த பொன்னர் சங்கர் நினைவுக்கு வந்தது. குறிப்பாக கோட்டைச் சுவரில் எய்யப்பட்ட அம்பைப் பிடித்து மேலே ஏறும் காட்சி வந்தபோது சிரிப்புத் தாங்கலை. ஏன்னா ஒரு ஆர்வக்கோளாறில ‘அடப்பாவி.. பிரசாந்து படத்தை சுட்டுட்டானே வெள்ளைக்காரன்’னு நினைச்சிட்டேன்.  Brokeback Mountain க்குப் பின்னர் Jake Gyllenhaal நடிப்பில் நான் பார்த்த படம் இது. அவரோட மூதாதையர் நம்ம பக்கத்து நாடாம். அவர் நடித்த மீதிப் படங்களும் பார்க்க வேண்டும்.

@@@@@

’இருக்கும்போது தெரியலங்க.. நடக்கும்போது தெரியுது..’

‘நீங்க உயரம்ன்றதால தெரியல. ஆனா..’

’அவர் அப்போ பாத்தாப்லயே இருக்கார். நீங்க..’

இப்படிப் பலவாக ஆரம்பித்து ‘..வெயிட் போட்டிங்களா என்ன??’ என்ற ஒரே கேள்வியில் முடிக்கும் அனைவருக்கும் இதையே சொல்லிக் கொல்கிறேன். யாரோ ஒரு நல்லிதயம் அனுப்பி வச்சது. டிலீட் தட்டாம வச்சது நல்லதாப் போச்சு.

HEALTH MESSAGE:

1. If walking/cycling is good for your health, the postman would be immortal. (Not Malaysian Postmen !)
2. A whale swims all day, only eats fish, drinks water and is not thin BUT fat.
3. A rabbit runs and hops and only lives 15 years.
4. A tortoise doesn't run, does nothing ..yet lives for 450 years.
AND
YOU TELL ME TO EXERCISE!

@@@@@

இந்த பாடல் எல்லாரும் கேட்டிருப்பிங்க. இருந்தாலும்  இப்போவும் கேளுங்க. காமகோடியன் வரிகள் உருக்குகிறது. யுவன் இசையில் சங்கர் மகாதேவன் அசத்துகிறார். படம் மௌனம் பேசியதேவாய் இருந்தாலும் மௌனமாகக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இருக்கிறேன். வரிகள் கூகிளாண்டவர் குடுத்தார். பிழை திருத்த நேரமும் மனமும் இடம் கொடுக்காததால் அப்படியே சேர்க்கிறேன்.


என் அன்பே! என் அன்பே!
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி!
என் அன்பே! என் அன்பே!
என் நெஞ்சுக்குள் காதல் வலி!
என் உடலின்று கடலானதே!
என் உயிருக்குள் அலையாடுதே!
இந்தப் பாறைக்குள் பனி பாய்ந்ததே!
என் விரதத்தில் விளையாடுதே!
ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!
(என் அன்பே............)


விழி பட்ட இடம் இன்று, உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்று அறிந்தேனடி
புது பார்வைப் நீ பார்த்து, புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாறச் செய்தாயடி
மெல்லிடை கொண்டு நடைகள் போடும்
அழகான பெண்ணே
முப்படை கொண்டு எனைச் சுற்றி வளைத்தாயடி!
என் உறக்கத்தைத் திருடிச் சென்று
உறவாடும் பூவே!
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்!
அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வாட்டினாய்!
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்!
இதயத்தின் மறுபக்கம் நீ காட்டினாய்!
இனி என்ன சொல்லுவேன் இன்று?
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே...!
ஓ சகி.....! ஓ சகி! பிரியசகி....! பிரியசகி!
(என் அன்பே...........)

02 July, 2011

வாழ்த்தலாம் வாங்க!

இசை தெய்வத்தின் பக்தன். அவர் பற்றிய தகவல்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளும் என் அன்புத் தம்பி கோபிக்கு இன்று பிறந்தநாள்.

pillaiyaar ஓடியாந்து ஆசீர்வாதத்தை வாங்கிட்டு போங்க கோப்ஸ். இன்று போல் என்றும் இன்பமோடு வாழ்க வளமுடன்.

என் அப்பன் துணை என்றும் உங்களுக்கு இருக்கட்டும்.

 

 

 

 

 

 

 

உங்களுடைய பதிவின் முகவரி உங்களுக்கே மறந்து போயிருக்கும். இங்கே போய்ப் பாருங்கள் கோப்ஸ்.

இசை தெய்வத்தின் அட்டகாசமான ஒரு தொகுப்பு. தென்பாண்டிச் சீமையிலே பாடல் தேடியபோது கிடைத்தது. மீண்டும் பாருங்கள்.

தென்பாண்டிச் சீமையிலே பாடலின் ஆடியோ இங்கே கேளுங்கள். அவர் குரலில் மூழ்கிப்போய்விடாமல் ஒழுங்காகப் பார்ட்டியைக் கவனியுங்கள்.

அப்படியே கலைஞானியின் இந்தப் பாடல் வாழ்த்தும்.

முழுப் பாடலும் இங்கே. 

முக்கியமான குறிப்பு - பரிசுத் தொகையில் என் பங்கை மறக்காமல் அனுப்பி வைத்துவிடுங்கள்.

மீண்டும் அக்கா, மாமா, மருமக்களின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கோப்ஸ்.

30 June, 2011

உன்னுள் வாழ்கிறேன்..

எங்கிருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் பாட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆஃபீஸில் என் காதுகளுக்கு மட்டும். ’சீக்கிரமே உனக்கு காது அவுட்டாகப் போது பாரு` என்று சக ஊழியர்கள் கிண்டல் செய்தாலும் ஐபாட், இயர்ஃபோன் மறந்து போகும் நாள் எனக்கு சாபக்கேடு. என் நண்பர்களுக்கும். நல்லதா ஒரு பாட்டு சொல்லு என்று அடம்பிடிப்பேன். அவர்கள் சொல்லும் பாட்டின் வரிகள் மறந்துவிட்டால் கூகிளாண்டவர் துணையோடு மனதுக்குள்ளும், தனியாக இருக்கும்போது முணுமுணுத்தும் பாடிக்கொண்டிருப்பேன். என்னை எங்கோ இழுத்துச்செல்லும் பாடல்களில் ஒன்றை இன்று எஃப் எம் உதவியோடு கேட்க நேர்ந்தது. இன்னமும் வெளிவர முடியாமல் அதற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். அல்லது வர விரும்பாமல் உள்ளேயே இருக்கிறேன் என்றும் சொல்லலாம்.

முதல் முதல் கேட்டபோதே மனதை அழுத்திய பாடல் இது. அதன் பின் எப்போது கேட்டாலும் கனம் குறைவதில்லை. எதுவோ ஒரு சோகம், பாரம், தவிப்பு இப்படிக் கலவையாய் ஒரு உணர்வு வந்து போகும். காலையிலிருந்து இப்போது இந்தக் கணம் வரை திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.  கொஞ்சம்  தனிமை.  நிறைவாய்க் கண்ணீர். இந்த மன அழுத்தம் போக தேவையாய் இருக்கிறது. உடனேயே உனக்கென்ன இப்போ என்று கேட்காதீர்கள். எனக்கு எதுவும் இல்லை. சில நேரங்கள் அப்படித்தான். ஏதோ ஒன்று எதுவோ ஒன்றின் காரணமாய் தேவைப்படுகிறது. தேவைப்படுத்திக் கொள்கிறேன். தொடர்பே இல்லாமல், என்னவென்றே புரியாமல். சிரிப்பும், அழுகையும் எதுவோ ஒன்றின் நினைவுபடுத்தலாய் வருவது வாழ்வில் இயல்பே.

பாடலைக் கேளுங்கள். யுவன், நா.முத்துக்குமார் சேர்ந்து படைத்த அற்புதம். ஷ்ரேயா கோஷலின் குரல். இது தமிழில் அவரின் ஆரம்ப காலப் பாடலாக இருக்க வேண்டும். எனக்கு சரியாகத் தெரியவில்லை. உச்சரிப்பைக் கவனியுங்கள்.  7G, ரெயின்போ காலனி படத்திலிருந்து என்னைத் தின்றுகொண்டிருக்கும் பாடல்.

நினைத்து நினைத்துப் பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்.. ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்..

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு..

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன்..

26 June, 2011

சிங்கம் ஒன்று புறப்பட்டதே..

மாம்ஸ் லண்டன் போயிருக்கிறார். ஃப்ரெண்ட்ஸ் வாலிபால் விளையாடலாம் வாடா மச்சான்னு கூப்டிருக்காங்க. நேற்று ஈவ்னிங் போனவர் நாளை நைட் வருவார். கிளம்பும் சமயம் கால் செய்த உள்ளூர் ஃப்ரெண்டுக்கு அவர் சொன்னது.

‘ஆமா. சிங்கம் கிளம்பிட்டே இருக்கு. என்னமோ பழைய ஃபார்ம்ல இருப்பேன்னு நம்பி வரச் சொல்லி இருக்காங்க. அங்க போய் பார்த்தாத்தானே தெரியும். வின் பண்ணா ட்ராஃபியோட வரேன். இல்லேன்னா டியூட்டி ஃப்ரீல வாங்கற டாஃபியோட வரேன்’

நான் நினைச்சேன். அவர் சொல்லிட்டார். அவரை பஸ்ஸேத்தி விட்டு வரும் வழியில் மாம்ஸ் ஃப்ரெண்ட் பசங்களோடு விளையாட அம்மு, சதுவை ட்ராப் பண்ணினேன். அதே அபார்ட்மெண்டில் இருக்கும் இன்னொரு குட்டிப் பையன் ஓடி வந்து சதுவின் காலைக் கட்டிக்கொண்டார். இவர் அப்படியே அவரைத் தூக்கி ஒரு தட்டாமாலை சுற்றி இறக்கினார். குட்டிப் பையன் கையில் இருந்த ஸ்வெட்டரை கொடுத்து போட்டு விடச் சொல்லிக் கேட்டதும் இவர் போட்டுவிட்டார். நன்றியாக அவர் மீண்டும் காலை இறுக்கிக்கட்டிக் கொள்ள சது என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு விட்டார் பாருங்க. எப்போதும் அவர் கேட்பது போல ஒரு குட்டித் தம்பி இருந்திருக்கலாமோ??

உடம்பு சரியாக இல்லாவிட்டாலும் ஏர்போர்ட்டுக்கு நானே வரேன்னு மாம்ஸ்ட்ட சொல்லிட்டேன். என்னவோ இம்முறை மாம்ஸ் என்னை பரிதாபமாகப் பார்க்கும் அளவுக்குப் பிரிவுத் துயர் கண் நிறைத்தது. அதற்கும் அவரே தீர்வொன்று செய்துவிட்டார். அவரின் நண்பர் ஒருவர் புது வீடு வாங்கி இருந்தார். வீடு கைக்கு வருமுன்னர் பழைய வீடு விற்று குறித்த தேதிக்குள் கொடுக்கும்படி ஆயிற்று. ஒரு மாத வாடகைக்கு வேறு ஒரு வீடு எடுத்திருந்தார்கள். அதற்கும் உரியவர்கள் வந்துவிட பகலில் அவரின் மாமனார் வீட்டில் தங்குவதும், இரவில் மனைவி தவிர அவரும் 3 பிள்ளைகளும் வேறு உறவினர் வீட்டில் தங்குவதுமென்ற முடிவில் இருந்தார்கள். மாம்ஸ் பிள்ளைகளை இரவில் எங்கள் வீட்டில் தங்கச் சொல்லி இருக்கிறார். இதோ நேற்றே வந்துவிட்டார்கள். ஹாலில் தூங்க அடம்பிடித்தவர்களை ரூமில் தூங்கச் சொன்னேன். நாங்க தூங்கிடுவோம் உங்களால தனியா, பயமில்லாம தூங்க முடியுமான்னு பயமில்லாம வில் அழுத்தம் கொடுத்து அம்மு கேட்டபோது வேறு வழியில்லாமல் ஹாலில் 2 air mattress போட்டு அதில் நால்வரும், சோஃபாவில் நானும் அவர்களில் ஒருவரும் எனப் படுக்கையை ஒழுங்கை செய்தோம். 

010 016 k

22 ஆம் தேதியில் இருந்து பள்ளி மூடியாயிற்று. எங்களுக்குத் திண்டாட்டம் தொடங்கியாயிற்று. நேற்று காலிங் பெல் கேட்டு பால்கனிக் கதவு வழியாக ஹலோ என்றால் யாரையும் காணோம். பக்கத்திலே படி வழியாக மேலே ஏறிக் கொண்டிருந்த பையன் அதோ அந்தாள் தான் பெல் அடிச்சார் என்று பக்கத்து வீட்டை நோக்கிக் கையில் காகித அட்டைகளோடு போய்க் கொண்டிருந்த ஒருவரைக் கைகாட்டினார். நான் பெல் அடிச்சியான்னு கேட்டும் அவர் திரும்பிப் பாராமல் போய்க் கொண்டிருந்தார். எனக்குப் பகீரென்றது. ஆள் வேறு ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக இருந்தார். இது திருடர்களின் ஒரு தந்திரம். அட்டைகளில் வரைந்த ஓவியங்களோடு கூடவே படிக்க வந்திருக்கேன், பண உதவி செய்ங்கன்னு ஒரு கடிதமும் வச்சிட்டு பள்ளி விடுமுறை காலத்தில வீடு வீடாகப் போய் நோட்டம் விடுவது. எங்கோ ஓரிரண்டு திருட்டுத்தான் நடந்திருக்கிறது என்றாலும் பயமே. எங்கள் அயலில் பெரும்பாலானவர் வெக்கேஷன் போய்விட்டார்கள். மீதி எம்மைப் போல வேலைக்குப் போனால் மூன்று மணிக்கு மேல்  திரும்பிவருபவர்கள்.   பகலில் வெளியே பறவைகளும், வீடுகளில் பிள்ளைகளும் தவிர யாரும் இல்லை.  அவர்கள் தைரியமாய் இருக்கிறார்கள். எமக்குத்தான்.. பிள்ளையாரப்பா பாத்துக்கோ.

என்னமோ எனக்கு பிடிச்சவங்க சந்தோஷமா இருந்தா நான் சோகாச்சியாவோ இல்லை சுகக்கேடாவோ இருக்க வேண்டியதா இருக்கு. இந்த வருஷம் விஜய்க்கு வாழ்த்துப் பதிவு போட முடியாத அளவுக்கு  ஆகிப்போச்சு. பல்லுல ஆப்பரேஷன். 5 ஸ்டிச்சஸ். அதுவும் அவர் பர்த்டே அன்னைக்கே. ஆனா அவர் பர்த்டேக்கு முதல் நாள் எங்க வீட்ல நடந்தது இது. சது ரூம்ல அவருக்கு போன வருஷம் வாழ்த்தாக கிடைச்ச விஜய் படம் ஒட்டி வச்சிருக்கார். முதல் தடவையா வீட்டுக்கு வந்த அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் இது உன்னோட அப்பா டீனேஜ்ல எடுத்த ஃபோட்டோவான்னு கேட்டாராம். இவர் இல்லைன்னு சொல்லி தான் அவரோட ரசிகன்னு சொன்னாராம். வாழ்த்து அனுப்பி வச்ச நட்புக்கு நன்றி.

sathu 

எனக்குப் பிடித்த விஜயின் பாடல் மாம்ஸ்க்குப் பிடித்த ஷ்ரேயாவோடு.

15 May, 2011

உங்களுக்கு 4. எங்களுக்கு 8.

அன்னையர் தினம் கனடாவிலும் வந்து போனது. ஸ்கைப்பில் என் அன்னையிடமும் கூடவே அய்யனிடமும் ஆசீர்வாதம் வாங்கினேன். அண்ணா ஸ்கைப்பிலும், ரஜி ஃபோனிலும் அதையே செய்திருக்கிறார்கள். அக்காச்சி எங்கள் நால்வருக்குமாக 4 தடவைகள் அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாளாம். அடிப்பாவி.. இதே சாக்கா அரைக்கிலோ வெயிட்ட குறைச்சிட்டியா என்று சொன்னாலும் என் கண்ணீரை மறைக்கவென்று பரிசுகளைக் காட்டச் சொன்னேன். அதில் ஒரு body cream. அக்காச்சிக்குக் கிடைத்தது. அதன் விலை 20 கனேடியன் டாலர்ஸ் என்றதும் அதுக்கு வேறு எதாவது மாற்றி வாங்கலாம் என்று கடைக்குப் போனார்களாம். எதற்கும் ஒரு தடவை வாசனை எப்படி என்று பார்க்க சாம்பிள் கிரீமை திறந்தார்களாம். கூடவே வந்த கருண் சொன்னாராம்.

‘ம்ம்.. நல்ல வாசம்.. அம்மா.. இதையே யூஸ் பண்ணுங்க.. McDonald’s வாஷ்ரூம்ல இருக்கிற hand soap மாதிரியே மணக்குது’

(((((

அதிக நாள் ஆகிவிட்டது ரெஸ்டாரண்டில் போய் சாப்பிட்டு. முன்பெல்லாம் வெளியே சாப்பிடுவதென்றால் அது மாக்டொனால்ட்ஸ் பர்கராகவோ இல்லை பெப்பர்ஸ் பீஸாவாகவோ தான் இருந்தது. பிள்ளைகள் வளர்ந்ததும் ரெஸ்டாரண்ட் போவது பிடித்துப்போனதால் வாரம் ஒரு தடவை போய் வந்த வழக்கம் ஊர்ப் பிரச்சனையோடு இல்லாமல் போய் மீண்டும் ஆரம்பித்தது. அம்முவின் ஃப்ரெண்டி ’நீங்க லக்கி அதான் ஒவொரு வாரமும் ரெஸ்டாரண்ட் போறிங்க’ என்று சொன்னதன் பின் மீண்டும் குறைந்து போனது. காரணம் தெரியாமல். வெட்டிங் டே அன்று சைனா பாலஸ் என்ற ரெஸ்டாரண்ட் போனோம். அம்முவின் விருப்பம். தங்கா அக்கா வீட்டுக்குப் போய் அவர் அம்மா அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கிப் போனதில் லேட்டானதால் ஸ்டார்ட்டர் கூட ஆர்டர் பண்ணவில்லை.

037 3 ஃபாண்டா, ஒரு சைனீஸ் பியர். நான் பறக்கிறது, ஓடுறது, நீந்துறது எல்லாம் கலந்த ஒரு மெனு (Kamkon pot), கண்ஸ் நீந்துறது மட்டும் (sea delicasy), பிள்ளைகள் பீஃப், ஃப்ரைட் நூடில்ஸ்.

 

 

 

 

041 அப்படியே ஃப்ரைட் பனானா/பைனாப்பிள் வித் வனிலா ஐஸ்க்ரீம்.

 

 

 

 

 

 

048

பில் வந்தது. பக்கத்திலேயே சுடுநீரில் முக்கிய குட்டி டவல்களை வைத்து விட்டுப் போனார்கள். பில்லைப் பார்த்த பின்னர் கண்ணீரைத் துடைக்கவும் பயன்பட்டது.

(((((

First_Communion ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கிறிஸ்தவ நண்பர்கள் முதல் நன்மை என்ற ஒரு சமயச் சடங்கை செய்கின்றார்கள். 9 வயதான பிள்ளைகள் முதன் முதலாக ஆசீர்வதிக்கப்பட்ட அப்பம் உண்ணும் நாளாம். நாங்கள் இருக்கும் இடத்தில் இந்துக்களை விட கிறிஸ்தவர்களே அதிகம். போன சனிக்கிழமை மொத்தம் 4 ஃபங்க்‌ஷன். இந்த வருடம் ரெக்கார்ட். ஆனாலும் தெரிந்தவர் ஒருவர் ’4க்கே அலுத்துக்கறிங்க. எங்களுக்கு 8’ என்று சொன்ன போது அப்பாடா என்று இருந்தது. ’உங்களுக்கென்ன பசங்க வளந்திட்டாங்க. நாங்க இவங்களையும் இழுத்திட்டு அலையிறத நினைச்சுப் பாருங்க’ என்று வேறு சிலர் அங்கலாய்த்தபோது அச்சச்சோ என்றிருந்தது.

டென்மார்க்கில் இருந்து ஒரு நண்பியின் உறவினர்கள் வந்திருந்தார்கள். அங்கே எல்லாம் குறிக்கப்பட்ட நாளில் சர்ச்சில் இந்த நிகழ்வு முடிந்ததும் பின்னொரு நாளில் ஜூன் வரை ஃபங்க்‌ஷனை வைப்பார்களாம். இங்கே சனி அல்லது ஞாயிறு மட்டும்தான் வைக்கின்றார்கள். எந்த ஒரு ஃப்ங்க்‌ஷனிலுமே கலந்து கொண்ட உணர்வு வரவில்லை. ஒரு இடத்தில் சாப்பாடு, அடுத்த இடத்தில் டெசர்ட், அடுத்த இடத்தில் டீ, பலகாரம், கடைசியாகப் போன இடத்தில் ஃபோட்டோவுக்கு போஸ் மட்டும். பார்க்கிங் தேடி அலைந்ததிலும், நாலு திசைக்கும் ஓடியதிலுமே.. உஸ்ஸ்ஸ்ஸ்..

இதெல்லாம் கூட பரவாயில்லை. 4 ஃபங்க்‌ஷனும் ஒரே நாளில் நடந்ததால் 3 ஸாரி கிடைக்காம போச்சேன்றதுதான் எனக்கு மிகப் பெரிய்ய்ய கவலை. இப்போ நீங்க உஸ்ஸ்ஸ் சொல்றத்துக்குள்ள நான் எஸ்ஸ்ஸ்ஸ்..

வர்ட்டா..

01 May, 2011

ஒன்றாய்ச் சேர்த்(ந்)தவன்!!

நான்

மழை நின்று வெகு நேரம்

இலை சொட்டும் நீரும்

சடசடத்த ஓசையும்

இன்னமும் அடங்கவில்லை

வான் நிறைந்த கருமுகில்

குடையோடு காத்திருக்கிறேன்

மழை வராமலும் போகலாம்.

 

நீ

உன் மேல் இருப்பதால் தான்

சட்டையே அழகு என்றாய்

பாக்கெட்டில் நிறைத்து வைத்த

முத்தங்களை என்ன செய்தாயென்று

இது வரை சொல்லவில்லை.

 

நாம்

என்னுள்ளே வந்தாய்

எதற்காக வந்தாய்

விழிவழி நுழைந்து

உதிரத்தில் கலந்து

உயிர் பறித்தாய்

உனக்குள்ளே வந்தேன்

உயிர் கொண்டு வந்தேன்

உன்னையும் என்னையும்

ஒன்றெனச் சேர்த்து

காதல் செய்தேன்

kjærlighet

23 April, 2011

எப்படி மறந்தேன்??

’எல்லாம் எடுத்து வச்சிட்டியா?’

கிளம்பும்போதும் அக்காச்சி நினைவாகக் கேட்டாள்.

‘வச்சிட்டேன் அக்காச்சி. கொஞ்சம் இருட்டா இருக்கு தனியா போறது பயமில்லையா’

1998. இதே திகதி. அதிகாலையில் ப்ரசிடண்ட் ஹோட்டல் நோக்கிப் போய்க் கொண்டிருந்த காருக்குள் நான் கேட்ட கேள்விக்கு ஒரு சிரிப்பையே பதிலாய்த் தந்தாள். அங்கே ஹோட்டலில் எங்களுக்காக புக் செய்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அறை எண் நினைவில்லை. ஒரு காஃபி ஆர்டர் செய்து குடித்து முடிக்கவும் மேக் அப் உமன் வரவும் சரியாக இருந்தது. படபடவென்று அவர் மேக் அப்பை ஆரம்பிக்கப் பொழுதும் புலர்ந்தது.

இமை த்ரெட்டிங் செய்த போது பாதியிலேயே அழ ஆரம்பித்து அக்காச்சியிடம் கெஞ்சினேன். ’கொஞ்சம் பொறுத்துக்கடி’ என்றாள். முதல் நாள் மேக் அப் பற்றிப் பேச்சு வந்தபோது நடுவில் சேர்ந்திருக்கும் என் இமைகளை ஒரு கணம் பார்த்துவிட்டு ’அதை ஒண்ணும் பண்ணாதிங்க’ன்னு அவர் சொன்னதையும் சொல்லிப் பார்த்தேன்.’இப்டி பாதி இமையோட நீ இருக்க முடியாது’ என்று கண்ணாடியில் காட்டி சமாதானம் செய்தாள். இதைச் சொல்லி இப்போதும் சிரிக்கத் தவறுவதில்லை அவள். என் வாழ்க்கையில் நான் செய்த முதலும் கடைசியுமான த்ரெட்டிங் அதுதான்.

மீண்டும் காஃபி ஆர்டர் செய்தோம். புதியதான ஓர் உணர்வுப் பிசையல் வயிற்றுக்குள். பசித்தாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை. சாப்பிடச் சொல்லி அவளும் அடம்பிடிக்கவில்லை. இடைப்பட்ட நேரத்தில் தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் மேக் அப் உமன். நாள் போதாமல் இருந்ததால் எல்லா டிங்கரிங் வேலைகளும் அப்போதுதான் செய்தார். அவருக்கு ஒத்தாசையாக இருந்ததிலும், என் பதட்டத்தைக் குறைப்பதிலும் நேரம் போனதில் அக்காச்சி ரெடியாகவில்லை. எட்டு மணிக்குள் மணப்பெண் தயார்.  நல்ல நேரம் வந்ததும் அவர்கள் வந்து கூப்பிடும் வரை அறையிலேயே இருக்கச் சொல்லித்தான் காலையிலேயே அனுப்பி இருந்தார்கள். ஏன் இன்னும் யாரும் வரவில்லை என்ற பயமும் சேர்ந்து கொண்டது.

எட்டு மணி கடந்த சில நிமிடங்களில் தானும் ரெடி ஆகலாம் என்று அக்காச்சி சூட்கேஸைத் திறக்க கதவு தட்டப்பட்டது. மணப் பெண்ணை அழைத்துப் போகவென பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் மேக் அப் உமனின் திறமையை சரி பார்த்த நேரத்தில் நீ போ நான் இதோ வரேன் என்ற அக்காச்சி மீண்டும் சூட்கேஸ் பக்கம் திரும்பினாள். உடனேயே நான் எழுந்து இரண்டடி வைப்பதற்குள் ’அடியேய் எங்கடி என் ட்ரஸ்லாம்’ என்றவள் சூட்கேஸை கவிழ்த்துத் தேடியும் அதற்குள் அவளின் புடவை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. பரவிக் கிடந்த என் உடைகள் என்னைப் பார்த்துச் சிரிக்க, மலங்க விழித்த என்னை ’நீ போ நான் எப்டியாச்சும் வரேன்’ என்று விரட்டினாள்.

அக்காச்சி.. கல்யாண மேடை கண்ணில் படும்வரை எனக்கு நீ என்ன செய்யப் போகிறாயோ என்று அழுகையாய் வந்தது. பதிவுலகம் மேல் சத்தியமாகச் சொல்கிறேன்.. இது உண்மை. நான் ஒன்றும் உன்னை அடியோடு மறந்துவிட்டு அவரிடம் ஓடவில்லை. அதன் பின் சடங்குகளுக்கிடையே தலை உயர்த்தி உன்னைத் தேடியபோது, உன் வழக்கமான சிரிப்போடு என் கண்ணில் நீ பட்ட பின்னர்தான் எனக்கு முழுமையான சந்தோஷம் வந்தது. மேக் அப் லேடியும் லேட்டாகிவிட்டதால் அடுத்த வேலை என்று போய் விட கூறைப் புடவையை எனக்கு நீயே கட்டிவிட்டு, தலை அலங்காரம் எல்லாம் மாற்றிவிட்டாய். அதுவும் அவர்கள் கொடுத்த பத்தே நிமிடத்துக்குள். ’ஏண்டி என் பொட்டைக் கூடவா மறந்துட்டு வருவே’ என்றபடி காஜலால் பொட்டு வைத்துக் கொண்ட உன்னைப் பார்த்து மறுபடி அசடாகச் சிரித்தேன்.

கல்யாணம் என்று முடிவாகியும் கண்ஸ் நோர்வேயில் அகதியாகத் தஞ்சம் புகுந்து இருந்ததால் இலங்கை வர முடியவில்லை. இந்தச் சிக்கல் உள்ள எல்லோருக்கும் இருந்த ஒரே தீர்வு இந்தியா அல்லது சிங்கப்பூர் சென்று கல்யாணம் செய்வதுதான். எங்களுக்கு இந்தியா தேர்வானது. நாட்டிலிருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக இலங்கையிலிருந்து வரவே மாட்ட்ட்டோம் என்று நினைத்துக் கடைசி நேரத்தில் எல்லாம் சரியாகி ஏப்ரல் 19ஆம் திகதி மாமியார், மச்சினர்கள் சகிதம் இந்தியா வந்து சென்னையில், பாலவாக்கத்தில்  ஒரு தூரத்து உறவினர் வீட்டில் தங்கி இருந்தோம். 21ஆம் திகதி கண்ஸ் நோர்வேயிலிருந்து வந்தார். நாள் பார்த்து, தாலிப் பொன்னுருக்குவது தொடங்கி, கல்யாணத்துக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளும், ஷாப்பிங்கும் அன்று மாலையே ஆரம்பித்து 23ஆம் திகதி மாலைக்குள் முடித்தோம். மாலை ஐந்து மணிக்கு அக்காச்சி, அம்மா, அப்பா வந்து சேர்ந்தார்கள். அண்ணா, ரஜி வரவே முடியவில்லை. நாங்கள் கடைசிக் கட்ட ஷாப்பிங் முடித்து வர அவர்கள் வந்து பசியாறிக் காத்திருந்தார்கள்.

கல்யாணப் பொண்ணு பர்த்டேப் பொண்ணுக்கு என்ன பரிசு வாங்கி வந்தீங்க என்று யாரோ கேட்டதும்தான் எனக்கு அன்று அவளின் பிறந்த நாள் என்பதே நினைவு வந்தது. ‘அட.. ஏன் நீங்கள் சொல்லேல்ல’ என்ற கண்ஸை அசட்டுச் சிரிப்போடு பார்த்தேன். உடனேயே எனக்கென வாங்கிய புடவைகளில் ஒன்றை அவளுக்குக் கொடுக்கச் சொன்னார். சாம்பல் நிறத்தில் வானவில் வண்ணங்களோடு இருந்த பனாரஸைக் கொடுத்தேன். அதையே கல்யாணத்துக்கும் கட்டலாம் என்று வீட்டுக்கார அக்காவோடு உடனே போய் ரெடிமேட் பிளவுஸ் வாங்கி வந்தாள். என் சூட்கேஸில் அவளதையும் வைக்கச் சொல்லிக் கொடுத்தாள். எப்படி மீதியெல்லாம் மறந்து, புடவையை மட்டும் மறக்காமல் வைத்தேனென்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை.

என்னை மணவறைக்கு அனுப்பிவிட்டு, அவள் யாரையோ கடைக்கு அனுப்பி, ஒருவழியாக ரெடியாகித் தானும் வந்து கலந்துகொண்டாள். இன்று வரை அவளின் பிறந்தநாளோடு ஆரம்பிக்கும் கிண்டல் எங்கள் திருமண நாள் வாழ்த்தில் முடியும்.

’அண்ணா இவள் என் பர்த்டேவ மறந்தா கூட பரவால்லை. பொண்ணு வாங்கன்னு சொன்னதும் என்னையும் மறந்துட்டு எடுத்தா பாருங்க ஒரு ஓட்டம்’

’அதில்லைங்க.. அவளுக்கு பயம். எங்க கடைசி நேரத்திலை பொண்ண மாத்திடுவாங்களோன்னு. அதான் வேணும்னே மறந்திருக்கா’

‘அது மட்டுமில்லைண்ணா. அவ ரொம்ப ஆசப்பட்டு வாங்கின புடவையாம் அது. அத எனக்கு குடுக்க வேண்டியதாச்சேன்னு வேணும்னே செய்த சதி இது’

இப்படியாக வருஷா வருஷம் அலுக்காமல் அந்த நினைவுகளை மீட்டெடுப்போம். 1998 இல் இதே நாட்களில் நாம் இந்தியாவில் இருந்தது. குடும்ப நண்பர்களாய் இருந்தவர்கள் கல்யாண பந்தத்தாலும் இணைக்கப்பட்டது. இன்று நினைத்தாலும் என்றுமே திரும்பக் கிடைக்க முடியாத நாட்கள் அவை. கிண்டலும் கேலியுமாய்ப் பறந்தோடிய பொன்னான நாட்கள்.

꽃배경04 உனக்காக வந்த ஸ்பெஷல் வாழ்த்து.

பாசக்கார உறவுக்கு நன்றிகள்.

 

 

 

 

என் ச்செல்ல அக்காச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் நாங்கள் உன்னோடு. உன் வீட்டில் நீ ராணியானாலும் நம் வீட்டின் இளவரசி இன்றும் நீதான். குட்டிப் பெண்ணாய் உன்னை அண்ணாந்து பார்த்து அன்று மலைத்தது போலவே இன்றும் இருக்கிறேன். உன் வழிநடத்தல் என் பலம். எனக்கு எது நல்லது என்று என்னைவிட உனக்குத் தெரியும். எதுவாக இருந்தாலும் உன்னிடம் பகிர்ந்த பின் தான் அது முழுமை பெறும். எதையும் இலகுவாகப் பார்க்கப் பழகும்படி எனக்கு எப்போதும் நீ சொல்வாய். இந்தப் பாடல் கேட்டிருக்கியா?

..உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம் கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்..

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்..

இனியாவது ஊரில் வசந்தம் வரட்டும். எல்லார் வாழ்வும் செழிக்கட்டும். லவ் யூ அக்காச்சி.

 

par j இப்போதும் அநேகமானவர்கள் நம்பாத ஒரே விஷயம் எங்கள் திருமணம் பெற்றவர்களால் முடிவு செய்யப்பட்டது என்பது. கண்ஸிடம் சொல்லி இருக்கிறேன். அடுத்த பிறவியில் எப்படியாச்சும் காதலிச்சுத்தான்பா நாங்க கல்யாணம் பண்ணிக்கணும். அண்ணன்கள் தடுக்க, மச்சினர் கொதிக்க, பெற்றவர்கள் திட்டித் தள்ள ஓர் அதிரடிக் கல்யாணம் பண்ணணும். ஒரு திருட்டு முத்தமாவது காதலர்களாய் நாம் கொடுக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் ஒரு நாளாவது அழ வேண்டும். கல்யாணத்தின் பின் காதல் என்பதைவிட கல்யாணத்தின் முன்னும் காதலித்துப் பார்க்க வேண்டும். அவர் ஒரு சிரிப்போடு அடுத்த பிறவியலும் எனக்குத் தண்டனையா என்றாலும் எனக்கு என்னவோ அந்த ஆசை இப்போதும் இருக்கிறது. இருக்கும்.

எங்கள் பத்தாவது திருமண நாளுக்கு நண்பர்களுக்குப் பெரிதாக விருந்து வைத்தோம். கேக் கட் செய்யும் முன்னர் எங்களை பார்ட்டி ஹாலில் இருந்த மாடிப்படி வழியாக இறங்கி வரச் சொல்லிக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். முன்னே அம்மு, அடுத்து அவர், நான், கடைசியில் சதுவென்று கை கோர்த்தபடி இறங்கி வந்தோம். கிட்டத்தட்டப் பதினைந்து படிகள் இறங்கி வரும்போது, நண்பர்களின் வாழ்த்துப் பாடல்களோடு பத்து வருட மண வாழ்க்கையைப் பட்டென்று திரும்பிப் பார்த்து வந்த உணர்வு, உறவென்று ஒருவரும் இல்லாத இடத்தில் அத்தனைக்கும் உடன் வரும் நண்பர்கள். அத்தனை பேருக்கும் கண்ஸ் மனதார நன்றி சொன்னபோது அதிகம் பேர் கண்கள் கலங்கிப்போய் இருந்தது.

வாழ்த்திய கையோடு என்ன விசேஷம் இன்னைக்கு என்று கேட்பவர்களுக்கு எதுவுமே இல்லை எல்லாம் வழக்கம் போல்தான் என்று பதில் சொன்னாலும் இந்த நாள் தரும் புத்துணர்வுக்கு இணையேதும் இல்லை. என் அன்புக் கண்ணாளா.. என் காதல் கணவா.. நீங்களில்லாது நான் வாழ்ந்திருப்பேன்.. ஆனால் இப்படி வாழ்ந்திருக்கமாட்டேன். லவ் யூ கண்ணா.

என் பிள்ளையாரப்பா.. எல்லோரையும் இன்பமாய் வாழ வை!!

18 April, 2011

அப்பப்போ நினைச்சும் பார்க்கணும்!!

ஆஃபீஸ்கு லேட்டாக எழுந்து அரக்கப் பரக்க.. இங்கே ஒரு வழக்கம் போல் சேர்த்துக்கொண்டாலும் தப்பில்லை. ரெடியாகிக் கொண்டிருந்தபோது அளவுக்கு அதிகமாக கிரீமை கையில் கொட்டி விட்டேன். பூசியது போக மீதியை அருகில் ப்ரஷ் செய்துகொண்டிருந்த சது மீது பூசிவிட்டேன். ‘அஷ் (அய்யே) என்னம்மா நீங்க.. என்மேல பொண்ணு வாசம் வரப்போது’ என்று சொல்லியபடி தேய்த்துக் கழுவியும் சந்தேகத்தோடு என்னை மோந்து பார்க்கச் சொன்னார். பாடி க்ரீமுக்கு இந்த அலப்பரையா என்று கேட்டு அம்மு எண்ணையை ஊற்ற, சமாதானம் செய்து கிளம்பினேன். ஆஃபீஸில் Fund Department கலீக் ஒருவன் என் hand cream எடுத்துப் பூசிக் கொள்வான். முதல் முதல் அவன் க்ரீம் கேட்டு வந்தபோது சூட் போட்டு மீட்டிங் போக ரெடியாக இருந்தான். கேலியாய் பார்த்த இன்னொரு கலீகுக்கு ’என் மேல எப்போதும் பெண் வாசம் இருக்கணும். அதான் பெண்கள் க்ரீம்’ என்று காரணம் சொன்னான். ’ஆமா பார்த்தேன்.. மீட்டிங் ரூம்ல அத்தனையும் சூட்டு போட்ட ஆம்பளைங்கதான் இருக்காங்க. பெண்வாசனையோட போற.. இன்னைக்கு நீ காலி பாரு’ என்று நான் வாரிவிட சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாலும் இன்னமும் அவனுக்கும் சேர்த்து தண்டத்துக்கு hand cream வாங்கிக் கொண்டிருக்கிறேன். ஹிஹிஹி.. சதுவும் வருங்காலத்தில் என்ன செய்வாரோ என்று நினைத்துப் பார்த்தேன்.

@@

ரஜி வயல் அறுவடை செய்து வழக்கம்போல என் மாமியார் வீட்டுக்குக் குடும்ப சமேதராய் போய் புத்தரிசி கொடுத்துவிட்டு வந்தானாம். மாமியார் பெருமையாகச் சொன்னார். ‘என்னடா.. மாமியாரை வசியம் பண்றியா. எனக்குத்தான் தங்கச்சியே கிடையாதேடா’ என்று கண்ஸ் கிண்டல் செய்தார். புத்தரிசி வீட்டுக்கு வந்ததும் கோயிலில் பொங்குவதும், பெரியவர்களுக்கு கொடுத்து ஆசீர்வாதம் வாங்குவதும் எங்கள் வழக்கம். புத்தரிசிப் பொங்கல்.. ஹூம். புத்தரிசிச் சோறு.. ஹூம். ’கண்ணு வைக்காத இப்போதான் சாப்டேன்’ என்று ஃபோனில் சொன்னதால் அவனுக்கு எதுவும் ஆகவில்லை. ஹிஹிஹி.. என் மருமகள் சைடு ஆளுங்க வருங்காலத்தில் எனக்கு என்ன வசியம் செய்வார்களோ என்று நினைத்துப் பார்த்தேன்.

@@

பெரிய கிளாஸ் ஒன்றை எடுத்துத் தரச் சொன்னார் சது. எதுக்கென்று கேட்டு பதிலுக்குக் காத்திருந்த என்னைத் தவிர்த்து அவரே எட்ட்ட்டி எடுக்கப் பார்த்து முடியாமல் பதிலினார். ஜூஸ் குடிக்கவாம். அதுக்கு எதுக்கு அவ்ளோ பெரிய கிளாஸ். சின்னதிலை குடிங்க போதும் என்று சிறியதொன்றை எடுத்துக் கொடுத்தேன். கிளாஸை ஜூஸால் நிறைத்து மடமடவென்று குடித்துவிட்டு மீண்டும் கிளாஸை நிறைத்தார். ‘எதுக்கு இப்..’ என் பாதிக் கேள்வியிலேயே பதில் வந்தது. ‘முதல்ல டேஸ்ட் பார்த்தேன். ம்ம்ம்ம்.. ரொம்ப நல்லாருக்கு. இனிமேலதான் குடிக்கப் போறேன்’ ஹிஹிஹி.. அவர் வயசில் கடந்த காலத்தில் நான் எம்புட்டு அறிவோடு இருந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன்.

012

@@

‘இத்தக்குக்கு பித்தாக்கு குதாங் இஞ்கா உவ்வி உவ்வி காவா கவ்..’

அட்ஷகி சொன்னதை அப்படியே திருப்பிச் சொன்னேன்.. விழுந்து புரண்டு சிரித்தார். ‘என்னடி நிலா.. அவங்க பாஷேல இது என்னமோ செம காமடி மாட்டர் போல இருக்கே’ ன்னேன். இப்படியாகத்தான் அட்ஷகி பேசுகிறார். இடையில் நாங்கள் சிரித்தால் புரிந்ததுபோல் அவரும் கைகொட்டிச் சிரிப்பு வேறு. குழந்தைப் பேச்சுக்கு என்ன அர்த்தம் என்று ஒரே சொல்லை அவர்கள் அடிக்கடி சொல்வதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். எதை வைத்து அப்படி ஒரு சொல்லை உருவாக்குகிறார்கள் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு சம்பந்தமே இல்லாத ஒலிகளை/சொற்களை சில பொருட்களுக்குக் கொடுப்பார்கள். அதில் அலோ என்றால் ஃபோன் போன்ற இலகுவான சொற்களும் இருக்கும். அம்மா, அப்பாவுக்கு அடுத்து அம்மு சொல்லியது அக்கா என்ற சொல். அந்த அக்காவின் தொனியை வைத்து என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியும். அடுத்து கடாபுடாவென்று அவர் பேசத் தொடங்கியபோது.. அவளவு சரளமாக எனக்குப் புரியும் என்பது போல் பேசிக்கொண்டே போவார். இடையிடையே என்னிடம் பதில் வேறு எதிர்பார்ப்பார். ‘என்னவாம்டி’ என்று கேட்கும் கண்சுக்கு மொழிபெயர்ப்பது நான் தான். சது அவளவாகப் பேசியதில்லை. சிரிப்பும், தலையசைப்பும், அம்மா என்பதுமாகவே காலத்தைப் போக்கிவிட்டார். ஹிஹிஹி.. வருங்காலத்தில் வரப் போற மாப்பிள்ளை, மருமகள் நிலமை பற்றி நினைத்துப் பார்த்தேன்.

@@

கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால் இம்புட்டு அப்பாவியாவா இருந்திருக்கேன்னு தோன்றுகிறது. வருங்காலம் ரொம்பவே மிரட்டுகிறது. அட உங்களை இல்லைங்க. என்னை..

வர்ட்டா..

10 April, 2011

என் கண்ணன்..

சீடன். எதிர்பார்க்கவே இல்லை இப்படிப்பட்ட ஒரு படமாக இருக்குமென்று. விமர்சனங்கள் படிக்காமல், கேட்காமல் படம் பார்த்து மலைப்பதும் வித்தியாசமான அனுபவம்தான். எனக்குப் பிடித்த காதல். எனக்குப் பிடித்த வலியோடான காதல். அடுத்து நடக்கப் போவதை மட்டுமில்லாமல் முடிவைக் கூட முன்னாடியே ஊகிக்க முடிந்தது. எந்த திடீர்திருப்பங்களும் இல்லை. இருந்தாலும் ஏனோ மென்மையாய்.. மயிலிறகாய் வருடியது கதை.. படம்.

எங்கள் வீட்டில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரு கண்ணன் படம் எப்போதும் இருந்தது. செப்பு வாயும், வட்டக் கண்களும், அலை அலையாய் கருமுடியும், எதையோ சொல்வதாய்/எதிர்பார்ப்பதாய் அந்தக் கண்களில் வழியும் கருணையும்,  பஞ்சுக் கை உயர்த்தி வெண்ணெயை எமக்குத் தருவதாய் இரு கால் நீட்டி உட்கார்ந்திருப்பான் குறும்புக்காரன். என் பொல்லாத போக்கிரிக் கண்ணன் என்னைக் கை நீட்டி  அழைப்பதாகவே என் கண்ணுக்குத் தெரியும். அப்போதிருந்து அவனுக்குத் தனியாகப் பூ வைக்க ஆரம்பித்தேன். காதல் என்றால் கண்ணன் என்று புரியத் தொடங்கியதில் இருந்து அவனோடான என் உறவும் நெருக்கமாய் ஆனது. நாங்கள் இடம்பெயர்ந்து எங்கு போனாலும் அங்கே அவன் வந்துவிடுவான். அவனில்லாத இடத்தில் மயிலறகில் அவன் உருவம் பொருத்தி வணங்கிய நாட்களும் உண்டு.

012 இங்கே வந்த புதிதில் பூஜை அறையில் அவன் இல்லாத கவலையை அடுத்த வருடமே காலண்டர் வடிவில் வந்து போக்கினான். கன்சீவ் ஆகி இருந்த சமயங்களில் அந்தக் குழந்தைக் கண்ணனின் குறும்பு முகத்தைப் பார்க்கத் தெவிட்டுவதே இல்லை. இப்போது போலவே.

 

மீண்டும் சீடன். மனதை அழுத்திய வலியோடு அசையாது பார்த்துக்கொண்டிருந்தேன். ’நீயும் நானும் மட்டும்தான் இங்க இருக்கோம்னு நினைச்சுப்பாடு’ என்று பாட்டிம்மா சொல்ல மகா பாடத் தொடங்கியதும் கண்ணீர் கட்டுக்குள் இருக்கவில்லை. சுகமான அழுகையோடு இன்னொன்றும் தோன்றியது. சித்ரா அற்புதமாகப் பாடி இருந்தாலும் அனன்யாவுக்கு அவரின் குரல் கொஞ்சமாய் பொருந்தவில்லை. நன்றாக நடித்திருக்கிறார் அனன்யா. தனுஷ் முருகனாய் காட்சி கொடுத்த இடத்துக்குப் பக்கத்தில் சேவல் காணிக்கை செலுத்துமிடம் என்று எழுதப்பட்டிருந்தது சின்னதாய் ஒரு சிரிப்பைத் தந்தது.

தினாவின் இசையில் பா.விஜயின் வரிகள் காதலின் வலியை அழகாய்ச் சொல்கின்றன. முருகனிடம் பாடலைக் கேட்கும் நானும் வேண்ட ஆரம்பித்துவிட்டேன். நீங்களும் கேட்டு, பாருங்க.

--

ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்
மறுநாள் அந்த செடியில் 
அந்த மலர் வாடிய பொழுதில்
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்..

(ஒரு நாள்..)

கண்பார்வை பறித்து எனை காண சொல்கிறாய்
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்கச் சொல்கிறாய்
ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய்
நான் சரியா இல்லை தவறா
நான் கனவு எழுதி கலைந்து போன கதையா..

(ஒரு நாள்..)

உன் மீது சிந்தும் நீர் தீர்த்தமானதே
உனைச் சேரும் சாம்பல் திருநீறும் ஆகுதே
உருகியே கேட்கிறேன் அடுத்த என் பிறவியில்
மனம் இரங்கி அருள் வழங்கி
உன் கோயில் படிகள் ஆகப் பிறக்கும் வரம் தா..

முருகா என் சலனம் சலனம் தீர்க்க வேண்டும் முருகா
இந்த ஜனனம் ஜனனம் போதும் போதும் முருகா
உன் சரணம்.. சரணம் முருகா..


02 April, 2011

எல்லோரும் கொண்டாடுவோம்!!

அண்ணா, ரஜி, அப்பா, அவர்களின் ஃப்ரெண்ட்ஸ் கை தட்டும்போது என் கையும் சேர்ந்து தட்டும். அவர்கள் இருக்கை விட்டு எழுந்து  ஆரவாரிக்கும்போது நானும் குதிப்பேன். அடச்சே/ஐயோ என்று தலையில் கைவைத்தால் சிரிப்பு வந்தாலும் சோகமாய் இருப்பதாய் காட்டிக் கொள்வேன். வீட்டிலுள்ள அத்தனை கதிரைகளையும் வரிசையாக அடுக்கி, பாய் கொண்டு தரை டிக்கட்டும், மேஜை வைத்து பால்கனியும் என ஒரு தியேட்டர் எஃபெக்ட் இருக்கும். வெளியே சைக்கில்களும், ஓரிரு பைக்குமென இலவச பார்க்கிங். இடையிடையே வறுத்த கடலை, லெமன் ஜூஸ், கூல்ட்ரிங்க்ஸ் என அம்மா என்னைக் கூப்பிட்டுக் கொடுத்தனுப்புவார். எனக்கும் சேர்த்து. முதல் வரிசைக் கதிரையில் ஆரம்பித்த என் கிரிக்கெட் (பார்வையாளர்) பயணம் காலப்போக்கில் மேஜை பால்கனிக்குப் பின்னே நின்று எட்டிப் பார்க்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டது. நான் வளர்ந்துவிட்டேனாம்.

நானும் ரஜியும் தென்னை மட்டை வைத்து எப்போதும், அண்ணா பேட் திருடி சிலசமயமும் கிரிக்கெட் விளையாடுவோம். கிச்சன் பக்கமா அடிச்சா ஃபோர். வேலில, கிணத்துப் பக்க மதில்ல பட்டா சிக்ஸர். அப்புறம் அவன் ஆறாம் வகுப்பு போனதும் ஸ்கூல் கிரவுண்ட் போயிடுவான். எனக்கு பர்மிஷன் கிடைக்கல. அத்தோடு ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் திறமை உலகுக்குத் தெரியாமல் போய்விட்டது.

அப்பா கிரிக்கெட் விளையாடி நான் பார்த்ததில்லை. அம்பயராய் இருப்பார். அவர் ஒரு வாலிபால் ப்ளேயர். அவர் உயரம் அதுக்கு ஒரு பிளஸ். இப்போதும் நேரம் கிடைத்தால் கனடாவில் விளையாடுவார்.

அண்ணா, கண்ஸ் ஸ்கூல் டீமில் இருந்தார்கள். கண்ஸ் பேட்டிங்கில் அசத்துவார். அவர் பேட்டிங் பார்க்கவே பக்கத்து ஸ்கூல் பொண்ணுங்கல்லாம் அலை மோதுவாங்க. என் காதில் இப்போதும் புகை.

இடப் பெயர்வுகளால் கிரிக்கெட் போகப் போகக் குறைந்து போய் ஃபுட்பால், வாலிபால் அதிகமாகியது. அண்ணா வேறு ஊரில் இருந்ததால் ரஜி, கண்ஸ், இரண்டு மச்சினர்கள் ஒரே டீமில் விளையாடுவார்கள்.

என்னதான் போரும் சாவுமாய் நாட்கள் கழிந்தாலும் கிரிக்கெட், ஃபுட்பால், வாலிபால் டோர்னமெண்ட்ஸ் நடப்பதும், கண்ஸ் பக்கத்து ஊர்க்காரருக்கு கும்மிவிட்டு வருவதும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருந்தது. மாவீரர் பெயரில் போட்டிகள் நடந்தால் மட்டும் சண்டை இழுக்கமாட்டார்கள்.

பொருளாதாரக் கட்டுப்பாடு விதித்து இராணுவம் எங்களை முடக்கிய காலங்களில் கூடசெய்திக்கு அடுத்து கிரிக்கெட் கமண்ட்ரி கேட்கத் தவறியதில்லை. உயிரே இல்லாத பாட்டரி. காதோடு ரேடியோவை அழுத்தி வைத்து ஸ்கோர் கேட்டுச் சொல்வார் அப்பா.

இங்கு வந்த பின் கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் ஃபுட்பால், வாலிபால் தொடர்கிறது. சிக்ஸரும், ஃபோரும் மட்டும் தெரிந்த நான் கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத நார்வேஜிய அப்பாவி மக்களுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறேன். கலீக்ஸில் ஒரு வங்களாதேசத்தவரும், ஒரு தென் ஆபிரிக்கரும் இருப்பதால் ஸ்கோரும் வேலையுமாய் டீம் லீடரை கடுப்பேற்றிக் கொண்டிருந்தோம். போன வருடம் முதல் முதல் தமிழர்கள் ஒரு கிரிக்கட் டோர்னமெண்ட் வைத்தார்கள். கண்ஸ் கிளப்பும் கலந்துகொண்ட வகையில் நான் பார்க்கப் போயிருந்தேன். வந்திருந்தவர்களில் இங்கே பிறந்த பல தமிழ்ப் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் புரியவில்லை. சிலர் கூகிளாண்டவர் துணையோடு வந்திருந்தனர்.

வெகு காலம் பார்க்காததாலோ என்னவோ அன்று அவளவு சந்தோஷமாக இருந்தது. கண்ஸ் டீம் பிராக்டிசே இல்லாமல் களமிறங்கி போட்டிகளிலேயே பிராக்டிஸ் செய்து காலிறுதிவரை வந்தனர். அண்ணனாய் இருந்தபோது அவர் விளையாடியதை பார்த்தவளுக்கு கண்ணனாய் ஆனதும் பார்ப்பதென்றால் கேட்க வேண்டுமா. விசில் தெரியாததால் அதை விட்டு கைதட்டல், கூக்குரல், ஓ போடுதல் என நான் போட்ட அலப்பறையில் எல்லோரும் கொஞ்சம் அரண்டுதான் போனார்கள். ‘என்னப்பா.. நீங்க இவ்ளோ சத்தம் போடுவிங்கன்னு இவ்ளோ நாள் எங்களுக்குத் தெரியாம போச்சேன்னு’ தெரிந்த அக்கா ஒருவர் மலைப்போடு சொல்லும் அளவுக்கு சவுண்ட்.

அதற்குப் பிறகு இந்த வருஷம்தான் முதல் தடவையாக வீட்டில் கிரிக்கெட் அதுவும் உலகக் கோப்பை மேச்கள் பார்த்தோம். கண்ஸ்க்குப் பிடித்த Man U மேச்கள் அவரோடு சேர்ந்து பார்ப்பேன். ஆனால் இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் முழுவதும் இருவரும் சேர்ந்து பார்த்தோம். இருவரும் ஒன்றில் உறுதியாக இருந்தோம். இலங்கை தவிர எந்த நாடும் ஜெயிக்கட்டும்.

சது முதற்கொண்டு எல்லோருக்கும் இந்த எங்கள் உணர்வு ஆச்சரியம். நாட்டுப்பற்று இல்லையா என்று இமை தூக்கினர். இது எங்களைப் போல் நாடிழந்த, உறவுகள் இழந்த பலரின் ஆதங்கம். இலங்கை அணி பாவமே. அதுவும் 48 ரன்ஸில் சங்கக்கார அவுட்டானபோது ‘பாவமா இருக்குப்பா, ஐம்பதாவது அடிச்சிருக்கலாம்’ என்று நான் அங்கலாய்க்க, ‘ம்ம்.. என்னதான் இருந்தாலும் அவன் நல்ல ப்ளேயர்டி’ என்று கண்ஸ் ஆமோதித்தார். ஆனால் இந்தியா ஃபைனல்ஸ் வந்ததில் எங்களுக்கு எக்கச்ச்ச்ச்சக்க சந்தோஷம். கடைசி நொடி வரை இந்தியா வெல்லவென்று பிரார்த்தனையோடு பார்த்தேன். அதுவும் சிரித்துக் கொண்டு இருந்த மஹிந்தவின் முகம் பார்த்ததில் இருந்து இந்தியா வெல்ல வேண்டுமென்று வெறியே வந்துவிட்டது.

இடையில் இன்று Man U மேச் இருந்ததால் கண்ஸ் எஸ்ஸாக சது வந்து எனக்குக் கம்பனி குடுத்தார். எனக்குத் தெரிந்ததைச் சொல்லிப் புரியவைத்தேன். மலிங்கா தலை மட்டும் அல்ல, பந்து வீசும் விதமும் பயங்கரமாக இருக்கும் என்பதால் ‘இவன் கொஞ்சம் ஆபத்தானவன்’ என்றேன். உடனேயே ‘ஏன்மா அவர் கொலை செய்வாரா’ என்று சது கேட்டார். சிங்களவர் என்றால் கொலைகாரர் என்ற எண்ணத்தை பிள்ளை மனதில் இருந்து மாற்ற வேண்டும். உடனேயே அவருக்குப் புரியும்படியாய் மீண்டும் நான் ஏன் இலங்கை அணியை எதிர்க்கிறேன் என்று சொன்னேன். அத்தோடு இந்தியா அவருக்கும் பிடிக்கும் என்பதால் அவரும் இந்திய அணிக்கு ஆதரவை அள்ளி வழங்கினார்.

the cup of joy இந்திய வீரர்களுக்கு எனது மரியாதை கலந்த வாழ்த்துகள். கடைசியில் ஆனந்தக் கண்ணீரோடு எழுந்து நின்று என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். நன்றி இந்திய வீரர்களே.

 

 

இந்த மேச்சுகளுக்கிடையே Sky sports காரர்கள் போட்ட விளம்பரங்களில் தமிழ்ப்பட ஹீரோ ரேஞ்சுக்கு அடாவடியாய் ரசிக்க வைத்தது இந்த NISSAN QASHQAI விளம்பரம். பாருங்கள்.

 

27 March, 2011

வெற்று வார்த்தைகள்..

writing அறியாமல் வந்தது காதல்

உன்னைப் பற்றி

உன் மேல்

 

 

--

வலைகள் வேறு

ஆண் வேடர்கள்

பெண் மான்கள்

--

 

glemt உண்மைதான்

உன் போல் நான் இல்லை

இதில் கூட

 

 

 

--

கிணற்று நீர்

வெள்ளம் அள்ளாது

வற்றிப் போகும்

 

--

 

jeg savner deg உன் பெயர்

பேச்சில் அனிச்சையாய் வருகிறது

உன்னவள் பெயரும்

23 March, 2011

வேண்டும்போது வராத மழை..

ஊரில் எல்லாத் தொல்லையும் ஓய்ந்தாலும் மழை விட்டபாடாய் இல்லை. ஊரே வெள்ளக்காடாய். கடல் மட்டமும் உயர்ந்து உள்ளதால் ஆற்று நீர் கடலுக்குள் கலக்க முடியாமல் ஊருக்குள்ளேயே நிறைந்துவிட்டது. கொடும் குளிர். ரஜி வீடு கொஞ்சம் உயரமான இடத்தில் இருப்பதால் வீட்டுக்குள் தண்ணீர் வரவில்லை. அண்ணா முன் பக்கத்துக்கு சுற்று மதில் கட்டிவிட்டதால் வயற் பிரதேசமான இடத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குள் தண்ணீர் குறைவாகவே புகுந்துள்ளது. பலர் பாடசாலைகளில் தஞ்சம். சொந்த நாடு மட்டுமல்ல, சொந்த வீடு கூட தமிழனுக்கு..

DSC05448 DSC05449

அண்ணா ஐந்து மாடுகள் வாங்கினார். சீமைப்பசுக்கள். எங்கள் ஊரில் கேப்பை மாடு என்பார்கள். அத்தனை அன்பாகப் பார்த்துக்கொண்டார்கள். போன வாரம் அண்ணா ‘வெள்ளை மாடு படுத்திட்டுது அப்பா’ என்று ஸ்கைப்பில் சொன்னபோது கூட இருந்து கேட்டுக்கொண்டு இருந்த அம்மு கேட்டார் ‘மாடு படுத்தா தப்பாம்மா.. தூங்கிறதுன்னா அது படுத்து தானே ஆகணும்’ கவலை மீறி அண்ணா சிரித்தார். மாடுகள் சீக்காகிப் போவதை அப்படிச் சொல்வது எங்கள் வழக்கம் என்று அவளுக்குப் புரிய வைத்தேன். இரண்டு நாள் முன்னர் எந்த வைத்தியமும் சேராமல் செத்துவிட்டது. டவுன் கவுன்சிலில் சொல்லி, ட்ராக்டரில் வந்து, புதைந்து, மதில் சுவரையும் சற்றே இடித்து, ஏற்றிக் கொண்டு போனார்களாம். இப்போது அடுத்த மாடுகளும் வரிசையாய் நோயில்..

பொங்கல் சமயமே பெருவெள்ளம். அண்ணா, ரஜி, மச்சினர், மாமியார் உட்பட பலர் வீட்டுக்குள்ளேயே பொங்கி வராத சூரியனுக்கு சம்பிரதாயமாகப் படைத்தார்கள். வெடி கூட வீட்டுக்குள்தான். அதிலும் எங்களுக்காக, ஒற்றை மத்தாப்பு கூட சுட்டுப் போடாத துர்ப்பாக்கியசாலிகளுக்காக முதல் நாள் இரவே சக்கரவாணம் வெடித்துக் காட்டினார் அண்ணா. எத்தனையோ வருடங்களின் பின் பட்டாசுச் சத்தத்தோடு பொங்கல். இந்த மழை மட்டும் அன்று நின்றிருந்தால்..

DSC05400 DSC05422

பயிர்கள் எல்லாம் அழிந்துபோய், அழுகிப்போய், குளம்போல் தோன்றும் வயல்கள், எப்போதும் உடைப்பெடுக்கும் என மிரட்டும் குளங்கள், பாடசாலைகளுக்கு மூடுவிழா. பள்ளிப் பருவத்தில் அவ்வளவு ஆனந்தம் தந்த மழைக்கால விடுமுறை. இன்னமும் ஊரோடு அதே பள்ளிப் பிள்ளையாய் இருந்திருந்தால்..

90ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து கிராமம் ஒன்றில் இருந்தோம். வீட்டின் பின் பக்கம் குளம். பெரிய குளம். ஊரில் எப்போதாவது குளங்கள் வான் பாய்வதை வேடிக்கை பார்த்தபோது இருந்த சந்தோஷம் அப்போது இருக்கவில்லை. சில இடங்களில் உடைந்துவிடத் தயாராய் இருந்த குளக்கட்டு ரொம்பவே மிரட்டியது. அரிசி மூட்டைகளை உயரமாக அடுக்கி வைத்து அதன் மேல் ஏறி விழிப்போடு கழித்த இரவு. வீட்டுப் படி மேவி நில்லாது ஓடிய வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் பாம்புகள், தேள்கள். நீர் வடிந்து போக வழியில்லாத களிமண் பூமி. இருந்த அரிசியையும், ஈர விறகையும் வைத்து பசி போக்கியதோடு இரவில் குளிரும் விரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த அகதிகளிடம் குளிர்ச்சட்டை ஏது. அம்மம்மாவின் காட்டன் சேலையால் சுற்றிக் கொண்டு சுருண்டு போய் இருப்போம்.

அப்போது எங்களிடம் மாமாவின் மாடுகள் இரண்டும், முன் வீட்டுப் பாட்டி தந்த மாடு ஒன்றும் இருந்தது. மழையில் அவை பட்ட அவஸ்தை. அந்த மழையிலும் விறகு தறித்து வந்து இரவில் இரண்டு விறகை அவற்றுக்கும் எரித்துவிட்டுக் கூதல் விரட்டுவான் ரஜி. மாடு மீட்கப் போய் புதைகுழியில் மாளப் பார்த்த அக்காச்சி நேற்று ஸ்கைப்பில் சொன்னாள் ’உடம்பெல்லாம் மூழ்க ஆரம்பிச்சு கடைசில கண் வரைக்கும் சேறு மூடினப்போ சிவப்பியோட கண்ல தெரிஞ்சுதே ஒரு மரண பயம்.. என் வாழ்க்கேல மறக்கமாட்டேன்பா’

hund 94இல் இருந்த வீட்டின் பின்பக்க ஒழுங்கை மழை பெய்யும் நாட்களில் ஆறு. இல்லாத நாட்களில் மறுபடி ஒழுங்கை. எங்கிருந்துதான் அவளவு வெள்ளம் வருமோ. மாரிகாலம், தொடர் மழை தவிர மீதி நாளில் வந்த வேகத்திலேயே வடிந்து விடும் மணல் பூமி. அப்போது நாங்கள் வளர்த்த செல்லம் லஸி. Alsatian நாய். ஆனந்தமாய் குளியல் போடும். வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்படும் தடிகளையும், நாங்கள் தூக்கிப் போடும் பந்துகளையும் நீந்தியபடியே தேடி எடுத்து வரும். உபரியாய் தேங்காய்களும் கவ்வி வரும். நாங்களும் சேர்ந்து நனைந்தபடி வெள்ளத்தில் விளையாடிய நாட்கள் இன்னமும் ஏங்க வைப்பவை.

சின்ன மச்சினர் புகுந்த ஊரில் அவளவு சேறாக இருக்கும். நிலத்தில் கால் வைத்தால் சர்ர்ர்ர். ஸ்கேட்டிங் தான். நடை கிடையாது. அப்பாவின் கிராமத்துக்கு மழைக்காலத்தில் போவதென்றால் எங்களுக்கு அவளவு கொண்டாட்டம். காடும், மழையும், புதுவிதமான பூச்சிகளின் ஒலியும், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சமும் இரவில் ஒரு பயம் கலந்த தூக்கத்தைத் தரும். போர்க் காரணத்தால் தார் ரோடே இல்லாத காலத்தில் மண் ரோடுகளும், வண்டிகளும், நாங்களும் போக்குவரத்தில் பட்ட அவஸ்தைகள்.. அப்பப்பா..

வேண்டுமென்றே மறந்த குடை, மழை வெள்ளத்தில் ஆட்டம், பல் கிட்டும் குளிர்,  போர்வைக்குள் ஒளிந்தபடி கால் மடித்து அமர்ந்து, அம்மாவின் திட்டோடு ஈரத் தலை உலர, கை சுடும் தேநீர் இதமாய் குளிர் விரட்ட.. ஹூம்.. இங்கேயும் எல்லாம் உண்டு. என்ன இருந்து அனுபவிக்க நேரம்தான் இல்லை. அப்படியே இருந்தாலும் இங்கே பெய்யும் மழை மட்டும் ஏன் தான் அநியாயத்துக்குக் குளிர்ர்ர்ர்ந்து தொலைக்கிறதோ தெரியவில்லை. மழைக் காதலனான என் நண்பனுக்கு அடிக்கடி சொல்வேன் ‘இங்க வந்து இந்த மழையில நனைஞ்சிட்டு அப்புறமும் சின்ன சின்ன மழைத் துளிகள்னு பாடு.. அப்போ ஒத்துக்கறேன் உன் மழைக் காதலை’ என்று.

21 March, 2011

கலந்துகட்டிய தமிழ்.

என் நண்பி வந்திருக்கிறார். ஒரு வாரம் எங்களோடு இருப்பார். அந்த ஒரு வாரத்திலும் இன்னும் இரண்டே நாட்களே மீதம் இருக்கிறது. ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு உள்ளே வந்ததுமே படி இறங்கி வந்த அம்மாவின் கால் தொட்டு அவர் ஆசீர்வாதம் வாங்கியபோது கலங்கிய என் கண்கள் அடிக்கடி கலங்கிப் போகும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. அவர் அன்பால் அவ்வப்போது கண்கலங்குவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ‘நான் காஃபி சாப்ட போறேன். யாருக்கெல்லாம் வேணும்’ என்று உரிமையோடு வீட்டுப் பெண்ணாக ஆகிவிட்டார். எங்கள் அன்பில் அவருக்கு அந்நிய உணர்வே தோன்றவில்லையாம். அது உண்மை என்பதை அவரின் சிரித்த முகமும், பேச்சும் உறுதிப்படுத்துகிறது. பிள்ளைகளை தட்டித் தூங்க வைக்கும் அளவுக்கு அவர்களோடு ஒன்றிவிட்டார்.

நாடு கடந்த நட்பு இப்போது என்னை அக்காச்சி என்று அழைக்கும் அளவுக்குப் பாசமாக வடிவம் கொண்டுள்ளது. லீவு கிடைக்காத கவலையோடு நேரத்தை நெட்டித் தள்ளிவிட்டு வீட்டுக்கு ஓடி வருகிறேன். இங்கே சுற்றிப் பார்க்க எதுவும் சிறப்பாக இல்லையென்றாலும் பேசித் தீர்த்துக் கொள்கிறோம். இலங்கைச் சமையலை அம்மாவிடம் கற்றுக் கொள்கிறார். ’பப்பிம்மா.. அக்காச்சி கிட்ட பொட்டுக்கடலை இருக்குமா தெரியலை கேட்டுப் பார்த்து நீங்க சொன்ன மாதிரியே தேங்கா சட்னி செஞ்சுகுடுக்கறேன்’ என்று அவர் அம்மாவிடம் கேட்டு இந்தியச் சமையல் செய்து தருகிறார்.

‘நீயே ஒரு திருடி. உன்னை நம்பி இந்தப் பொண்ணை இங்க அனுப்பி வச்சாங்க பாரு.. அவ அம்மா அப்பாவுக்கு பூப் போட்டு கும்பிடணும்’னு கண்ஸ் சொல்லும் அளவுக்கு அன்பான பெண். வேகத்தோடு தூய இலங்கைத் தமிழ் பேசும் கண்ஸின் பேச்சு சட்டென்று புரியாமல் அவர் முழிக்கும்போதும், இவரின் இந்தியத் தமிழ் புரியாமல் கண்ஸ் முழிக்கும்போதும் நான் தமிழுக்கே மொழிபெயர்ப்பாளராக மாறி இருவரையும் கலாய்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போது எங்கள் வீட்டில் கலந்து கட்டிய தமிழ் துள்ளி விளையாடுகிறது. உதாரணத்துக்கு சில..

நுளம்புன்னா என்னக்கா?? ஒரு வகை இன்செக்டா??

நுளம்புன்னா கொசு.

--

இதில என்ன சேர்த்திருக்குன்னு சொன்னிங்க..

கறுவாவும், சீனியும், பட்டரும்.

கறுவான்னா??

பட்டை.

--

ஃப்ரெண்ட்ஸ் கூட கதைச்சேனான்னு கேட்டிங்களே.. கதைக்கிறதுன்னா??

பேசுறது.

--

பேசிப்போடுவன்னு சொன்னிங்களே.. பேசுறதுன்னா??

திட்றது.

இன்று Aquarium போய் வந்தோம். சில படங்கள் உங்கள் பார்வைக்கும்.

083 முட்டையை அடைகாக்கும் ஒரு பென்குயின் பார்த்து நெகிழ்ந்து போய்விட்டோம்.

 

 

 

 

 

126 பேய் போல இருந்தது கண்ணாடியோடு ஒட்டியபடி பயமுறுத்திய திருக்கை வகை மீன். பயத்தில் பெயர் மறந்துவிட்டது. இரவுத் தூக்கம் சந்தேகமே.

 

 

 

163 அழகாய்த்தான் இருக்கு அனகொண்டாவும்.

 

 

 

 

 

158 கொடுத்து வச்ச மனுஷன்/ஷி.

 

 

 

 

 

172 Green tree python ன்னு போட்டிருந்தது. எங்கடா காணம்னு தேஏஏஏடிப் பார்த்தா ஒற்றைக் கொம்பில ரெண்டு பச்சைக் கலர் ஜாங்கிரி.

 

 

 

அப்படியே மீன்களையும் சுட்டுத் தள்ளினோம்.

090  110 113 116 125 134 025 040