எல்லாரும் நலமா மக்களே!
ஓகே. அப்டீன்னா அப்டியே பதினேழாம் தேதி வெள்ளிக் கிழமைய நோக்கி ரிவர்ஸ்ல வாங்க.
வந்திட்டீங்களா? இப்போ மணி நாலு முப்பது. பொட்டிய மூடி வச்சிட்டு வீட்டுக்கு கிளம்பறேன். கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் கழிச்சு வீட்டு முன்னாடி வண்டிய நிறுத்தி ரிமோட் எடுத்து garage கதவ திறக்கிறேன். ஒரு வழியா
லாரிய நண்பர்கள் எங்க வண்டிக்கு வச்ச செல்லப் பெயர் உள்ள ஏத்தினதும்தான் ஞாபகம்
வந்திச்சு. அடடா நாளைக்கு barbecue party க்கு நண்பர்கள கூப்ட்ருந்தோம், எதுவும் வாங்கலையேன்னு. சரி இப்பவே அதையும் முடிச்சிரலாம்னு ரிவர்ஸ போட்டு பின்னாடி எடுத்.. டமார் படார்னு கலவையா ஆனா பயங்கரமா ஒரு சவுண்டு. சுருக்கமா #"@#$%^&*@#$$%!@#$%^&*இப்டி.
ஒண்ணும் இல்லீங்க உள்ள வந்ததுமே வழக்கம்போல ரிமோட்ட அழுத்திட்டேன். கதவு அதுங் கடமைய செய்றதுக்காக மூட ஆரம்பிச்சிருக்கு. நான் ரிவர்ஸ்ல வர்றேன்னு அதுக்கு தெரியுமா என்ன! உடனடி நடவடிக்கையா ரிமோட்ட மறுபடி அழுத்தினதால லாக் ஆகி கதவு நின்னிடுச்சி. நல்லவேள ஸ்டெப்னிக்குள்ள கதவு மாட்டிக் கிட்டதால சேதாரம் கொஞ்சம் கம்மி. மிட்சுபிஷி பஜீரோ இப்போ பிஞ்சரோ ஆய்டிச்சு. சம்பவ நேரம் குணாவும் பசங்களும் வீட்ல இல்ல. இவ்ளோ பெரிய சமாசாரத்த சூ மந்த்ரகாளி போட்டா மறைக்க முடியும்? வந்ததும் குணா பாத்திட்டாரு. கதவுதான் மறுபடி மூட மாட்டாம நிக்குதே.கேள்வி நம்பர் ஒண்ணு.
ஏய் என்னடி ஆச்சு? அது வந்துப்பான்னு ஆரம்பிக்கும்போதே கேள்வி நம்பர் ரெண்டு
நெனப்ப எங்க வச்சிட்டு வந்தே? ..................................................................................................................... இருங்க, குணா திட்டும்போது சுசி எதுவும் பேச மாட்டா. அவர் திட்ற டைம்ல நாம நெனப்ப நான் எங்க வச்சேன்னு பாத்திர்லாம். 15 min. ரிவர்ஸ்ல வாங்க.
புறப்படறதுக்கு சற்று முன் அக்கா கிட்ட இருந்து ஒரு மின்னஞ்சல். மவளே இன்னிக்கும் நீ எனக்கு கால் பண்ணலன்னு வச்சுக்கோன்னு ஆரம்பிச்சு
தங்கச்சீங்கிரதினால கெட்ட வார்த்தை எதுவும் போடலை எக்கச்சக்கமா எழுதி இருந்தா. கட்டாயம் கால் பண்ணனும்னு நெனச்சேன். படிச்ச பதிவுக்கெல்லாம் மறக்காம பின்னூட்டம் போட்டேனான்னு நினச்சேன். அப்போ பாத்து Byonce Knowels பாடின Halo ப்ளே ஆச்சா அப்புறம் எந்த நினைவும் இல்ல.
எத்தன வாட்டி சொல்றது பாட்ட போட்டுக் கிட்டு டிரைவ் பண்ணாதேன்னு. அது அலறலேன்னா இசை ரசிகர்கள் குணாவை மன்னிக்கட்டும் கதவு மூடுற சத்தம் கேட்டிருக்கும் இல்ல. சின்னதா ஒரு பாயின்ட் இருக்குதோ?
நான் ஏன் குணா திட்டும்போது கம்னு இருக்கேன்னு நீங்க கேக்கலேன்னாலும் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?
கேட்டுக்குங்க. ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு அவர் சந்தோஷப்படுவார். ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி
அவரே ஆஃப் ஆயிடுவார். மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு எனக்கும் ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.
இவ்ளவுக்கும் சுசி ஸ்டேடியாதான் இருந்தா. கடைசீல ஒண்ணு சொன்னார் பாருங்க. அப்போதான் லைட்டா கண்ல தூசி. மத்தபடி தப்பு பண்ணினா சுசி அழமாட்டா.
லண்டன் போம்போது நகைக்கடைக்கு போணும்னு சொல்லிட்டிருந்தே இல்ல ன்னு மனச் சாட்சியே இல்லாம சொல்லிட்டாரு. ரெண்டு நாளா நான் அவர்கூட பேசல. நீங்க நினைக்கிறாப்லையே அவர் ஓவர் நிம்மதியா இருக்காரேன்னுட்டு மறுபடி பேச ஆரம்பிச்சிட்டேன். அதுவும் இன்னைக்கு பன்றிக் காய்ச்சலோட அறிகுறி என்னன்னு பன்றிக்கறி சாப்டுக் கிட்டே அவர் கேட்டப்போ நான் சொன்ன பதிலோட லைஃப் பழைய ஃப்ளோல போக ஆரம்பிச்சிடிச்சு.
அப்டியே நீங்க நிம்மதியா இருக்கிறதா பதிவாண்டவர் சொன்னாரா அதான் மனசு கேக்கலை. என் பதிவ போட்டுட்டன்.வரட்டுமா உறவுகளே!